சக்தி தன் வீட்டு முன்னாடி பைக்க நிறுத்திட்டு "இதான் நிவேதா வீடு.."னு சொல்றா.
நிரஞ்சன்.. "நான் கேட்டதுக்கு இன்னும் நீங்க பதில் சொல்லலையே.."னு சக்தியை பார்த்து கேட்கிறான்.
சக்தி நிரஞ்சனை பார்த்து சிரிச்சிட்டே.. "உங்க பாட்டி சொன்ன.. that காது வரைக்கும் வாய் நீளுற அந்தப் பொண்ணு நான் தான்.."னு சொல்றா.
"அப்ப என்னை தெரிஞ்சுகிட்டே தான் யாரோ மாதிரி பேசுனீங்களா.."
"நான் உங்க போட்டோ லாம் பாக்கலை.. but.. நீங்க பேச ஆரம்பிச்சதுமே guess பண்ணிட்டேன்.."னு சக்தி சொல்றா.
"உங்ககிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும் போல.."னு நிரஞ்சன் சொல்றான்.
சக்தி சிரிச்சிட்டே.. "உள்ள வாங்க.."னு கூப்பிடுறா.
சக்தி வீட்டுக்குள்ள வர்றதை பார்த்ததும் நிவேதா.. "எங்கடி நான் கேட்டது.."னு கேட்கிறா.
சக்தி கையில இருக்கிற கவரை காட்டுறா. நிவேதா சிரிச்சிட்டே அதை வாங்கப் போறா.
ஆனா சக்தி கொடுக்காம.. "இது எனக்கு.. நீ உன் ஆள்கிட்ட வாங்கிக்கோ.."னு சொல்றா.
அப்பதான் நிவேதா.. நிரஞ்சன் வர்றதை கவனிக்கிறா.
நிவேதா நிரஞ்சனை பார்த்து.. "வாங்க.. உட்காருங்க.."னு சொல்றா.
நிரஞ்சன் கவரை நிவேதா கிட்ட கொடுத்துட்டு.. "உங்களுக்கு பிடிக்கும்னு உங்க சிஸ்டர் சொன்னாங்க.."னு சொல்றான்.
சக்தி கிச்சனுக்குள்ள போயிடுறா நிரஞ்சன் வந்ததும்.. கீதா கிட்ட போய்.. "கீதா நீ இங்க என்ன பண்ணணிட்டு இருக்க.."னு கேட்கிறா.
"டீ போடுறேன்.. உனக்கு வேணுமா.."னு கீதா கேட்கிறாங்க.
"நீ இங்க டீ போடுற.. அங்க உன் பொண்ணு கடலை போடுறா.."னு சக்தி சொல்றா.
"என்னடி உளறுற.."னு கீதா அவளை முறைக்கிறாங்க.
"என் மேல நம்பிக்கை இல்லைனா.. நீயே போய் பாரு.."னு சக்தி சொல்றா.
கீதா ஹாலுக்கு வர்றாங்க. அங்க நிரஞ்சனும் நிவேதாவும் பேசிட்டு இருக்கிறத பார்த்துட்டு.. நிரஞ்சன் கிட்ட பேசுறாங்க.
"பேசிட்டு இருங்க.. டீ எடுத்துட்டு வர்றேன்.."னு சொல்லிட்டு கீதா கிச்சனுக்குள்ள போறாங்க.
சக்தியை முறைச்சிட்டு.. "ஏண்டி மாப்பிள்ளை வந்துருக்காருன்னு சொல்லலாம்ல.."னு சொல்றாங்க.
"ஈஈஈஈஈஈஈஈ...."னு சிரிக்கிறா சக்தி.
நிரஞ்சனும் நிவேதாவும்..
"எனக்கு உங்க போட்டோ பார்த்ததுமே பிடிச்சிடுச்சு.. எங்க வீட்டிலயும் எல்லாருக்கும் பிடிச்சிருக்கு.. உங்களுக்கு.."னு நிரஞ்சன் நிவேதா கிட்ட கேட்கிறான்.
"நீ.. வா.. போ.. னு உரிமையோட பேசுங்க.. அப்பதான் பிடிக்கும்.."னு நிவேதா சொல்றா.
"இரண்டு பேரும் அப்டியே opposite போல.."னு நிரஞ்சன் சொல்றான்.
நிவேதா.. "பாட்டி கிட்ட அன்னைக்கு சக்தி நடந்துகிட்டதுக்கு சாரி.."னு சொல்றா.
"பரவாயில்லை.. பாட்டு பாட சொன்னதெல்லாம் கொஞ்சம் டூ மச் தான்.."னு நிரஞ்சன் சொல்றான்.
கீதா நிரஞ்சனுக்கு டீ கொண்டு வந்து கொடுத்திட்டு கிச்சனுக்குள்ள போயிடுறாங்க.
"நிவேதா.. எனக்கு வரப்போற wife இப்டிலாம் இருக்கணும்னு எந்த expectationம் எனக்கு இல்லை.. ஆனா என் familyல எல்லாரையும் புரிஞ்சு நடந்துக்கணும்.."
"ம்.."
"பாட்டி கொஞ்சம் அந்தக் காலத்து ஆளுங்கிறதால.. எதாவது பேசிடுவாங்க.. மத்தபடி மனசில எதும் வச்சிக்க மாட்டாங்க.."
"ம்.. புரியுது.."னு நிவேதா சொல்றா.
கிச்சன்ல.. சக்தி.. "என்ன கீதா.. உன் பொண்ணு இப்டி பண்றா.."னு கேட்கிறா.
"என்னடி பண்ணா.. மாப்பிள்ளை கூட தானே பேசுறா.."னு கீதா சொல்றாங்க.
"ஒரு குட்ட்ட்டி பாப்ப்ப்ப்பா என்னையும் வீட்டில வச்சிட்டு எவ்ளோ நேரமா கடலை போடுறா.. நீ என்னடான்னா.."னு சக்தி பேசிட்டே போறா.
"எரும மாடு.. வாயை மூடிட்டு பேசாம இரு.."னு கீதா சொல்றாங்க.
சுந்தரமும் வீட்டுக்கு வந்துடுறார். நிரஞ்சன் அவர்கிட்டயும் பேசிட்டு..
"நிவேதாவை எனக்கு பிடிச்சிருக்கு.. மத்த விஷயங்கல்லாம் பெரியவங்க நீங்க எல்லாம் பேசி முடிவு பண்ணுங்க.."னு சொல்லிட்டு நிரஞ்சன் கிளம்புறான்.
நிவேதாவுக்கும் நிரஞ்சனை பிடிச்சிருக்குன்னு சுந்தரத்துக்கும் புரியுது.
இருந்தாலும் நிவேதா கிட்ட "நிவி மா உனக்கும் மாப்பிள்ளையை பிடிச்சிருக்கா.. நான் அவங்க வீட்டில பேசட்டுமா.."னு சுந்தரம் கேட்கிறார்.
"எனக்கும் பிடிச்சிருக்கு ப்பா.."னு நிவேதா சொல்றா.
கீதாவும் சுந்தரமும் சந்தோஷமா இருக்காங்க. சக்தி நிவேதாவ கிண்டல் பண்ணிட்டு இருக்கா.
***
அர்ஜீன் தன் ப்ரெண்ட் கார்த்தியோட பேசிட்டு இருக்கான்.
"அதே பொண்ண இன்னைக்கு பாத்தேன்.."னு அர்ஜீன் சொல்றான்.
"எதே பொண்ணு.."
"ரெஸ்டாரண்ட்ல ஒரு பையன் லவ் சொன்னப்ப நீ எனக்கு ப்ரெண்ட்..னு சொன்னா..னு சொல்லிட்டு இருந்தேனா அந்தப் பொண்ணு.."
"சரி அதுக்கென்ன.."
"இன்னைக்கு வேற ஒருத்தனோட பார்த்தேன்.. ஏன் தான் இந்தப் பொண்ணுங்க லாம் இப்டி இருக்காங்களோ.."
"அர்ஜீன் நீ பார்த்ததை மட்டும் வச்சிட்டு பேசாத.. அந்தப் பொண்ண பத்தி உனக்கு வேற என்ன தெரியும்.."
"லவ் பண்ற மாதிரி கூட சுத்திட்டு கடைசியில ப்ரெண்டா தான் நினைச்சேன்னு சொல்றது.. இப்டி ஒருத்தியால தான டா நம்ம ப்ரெண்டை நாம இழந்தோம்.."
"அர்ஜீன் எல்லா பொண்ணுங்களும் அப்டி இருக்க மாட்டாங்க.."
"நான் பார்த்த எல்லா பொண்ணுங்களும் அப்டித்தான் இருக்காங்க.."
"உன்கிட்ட லாம் என்னால பேசமுடியாது.. ஆள விடு.."னு கார்த்திக் சொல்றான்.
"ஆனா உன்ன மாத்துறதுக்கும் இந்த உலகத்துல ஒருத்தி இருப்பா.."னு கார்த்திக் மனசுக்குள்ள நினைக்கிறான்.
#இருப்பா.. இருப்பா..