💛💜💛 காதலை💞தேடி... 💛💜💛
K💞M Part - 17
முல்லை💞 தன் கையில் பிடித்த ஸ்வேதாவின் புகைப்படத்தை சலனமின்றி பார்த்தாள்...
கேட்டேன்...நீங்க..
பதிலே சொல்லலையே!
என்ன கேட்ட...?
ஸ்வேதா ரொம்ப அழகா
இருக்காங்க இல்லையா..?
ஆமா..
இப்போ சொல்லுங்க..
இவ்ளோ அழகான பொண்ண..
எங்க அண்ணன் ஆச பட்ட விஷயம் அத்தனையும் இருக்குற பொண்ண அவருக்கு எப்படி..?பிடிக்காமல் போகும்..
நிச்சயம் பிடிக்கும் என்ற முல்லை💞 தன் ஏமாற்றத்தின் சாயலை இம்மி அளவு கூட வெளியே தெரியாதபடி பேசினாள்...
அதனால தான் நிச்சயம் ஆகுறதுக்கு முன்னாடியே இவங்கள அண்ணின்னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன் கொடுங்க...
என்று போட்டோ வை வாங்கி தன் புத்தகத்தின் நடுவே வைத்து கொண்டு...
மீண்டும் அடுத்த அட்டை பெட்டியை பிரித்து வேலை செய்ய தொடங்கினாள்...
ஏங்க முல்லை💞 உங்களுக்கு
எப்போ?? கல்யாணம்..
என்ன..சொல்வதென்று தெரியாமல் தடுமாறி.. நான் இன்னும் அதை பத்தி யோசிக்கல என்றாள்..
பொய் சொல்லாதீங்க...
நிஜமா தான்...
கடைக்கு போனப்போ Aunty சொல்லிட்டாங்க...
வரன் பாக்க பேப்பர்ல Add கொடுத்துட்டாராமே உங்க அப்பா..
நீ சரியான வாலா இருப்ப போல..
எங்க அம்மா மூலமா விஷயம் தெரிஞ்சிகிட்டு அப்புறம் என்னையும் ஆழம் பாக்குறியா..??
ஒரு ஆர்வம் தான்... தப்பா...??
இல்லை..
எங்கம்மா கிட்ட இருந்து வேற என்ன தெரிஞ்சிகிட்ட...
உங்களுக்கு சாப்பிட என்ன ஐட்டம் பிடிக்கும்... என்ன மாதிரி Dress பண்ண பிடிக்கும்.... இதெல்லாம் கேட்டேன்...
ஒரு நாள் எங்க வீட்டுக்கு சாப்பிட கூப்பிடலாம்னு இருக்கேன்.. அப்போ உங்களுக்கு பிடிச்ச ஐட்டம் சமைச்சி வைக்கலாம்ல அதுக்காக கேட்டேன்..
வருவீங்க தானே...
கண்டிப்பா வரேன்..
ஐயோ!! எவ்ளோ பாப்புலர் நீங்க...
இப்டி பந்தாவே இல்லாம பேசுறீங்க..
முல்லை💞 புன்னகைத்து கொண்டாள்..
----------------------
----------------------
ஆட்டோ விலிருந்து இறங்கி லக்கேஜ்களை எடுத்தவாறு கதிர் கேட்டை திறந்தான்..
சத்தம் கேட்டு வாசலுக்கு வந்தவள் அண்ணா என்ன? Train லேட்டா.. என்றவாறு Suitcase- ஐ வாங்கினாள்..
ஆமா....
அப்புறம் வீட்ல வேறென்ன? விஷேஷம்..
என்றவாறு நடந்தான்...
பிரம்மாதமான விஷேசம் இருக்கு...
நீ குளிச்சிட்டு வா.. அப்பா சொல்லுவாரு... என்றாள்..
அறைக்கு வந்து..பெட்டியை திறந்து
Paste Brush எடுக்க...
Shirt-க்கு அடியில் வைத்த JewelBox கண்ணுக்கு தெரிய வெளியே எடுத்தான்...
திறந்து பார்க்க மெல்லிய இசை பாடியது....மிக நேர்த்தியாக வடிவமைக்க பட்டிருந்தது.....
முல்லை💞ய நேர்ல பாத்து இத கொடுத்து எப்படியும் நேரடியாவே சொல்லிடணும்... உங்கள கல்யாணம் பண்ணிக்க ஆச படறேன்னு...
சொன்னதும் என்ன செய்வாள்...
ம்ம்ம் என்று கண்ணாடியை பார்த்தவாறு கற்பனை செய்து பார்த்தான்.....
சிறிது தடுமாறலாம்...
வெட்கம் கலந்த புன்னகையுடன் சம்மதம் தெரிவிக்கலாம்...
நீங்க எப்போ சொல்லுவீங்கனு எதிர்பார்த்துகிட்டு இருந்தேன்னு சொல்லலாம்...
இல்லனா... என்ன? இப்டி திடீர்னு.. நீங்க எதுனாலும் என் Parents கிட்ட பேசுங்கனு சொல்லலாம்..
இப்டி தான் ஏதாச்சும் ஒரு Reaction இருக்கும்.. இத தாண்டி..
ச்சே!! உங்ககிட்ட இத நான் எதிர்பார்க்கல அப்டினு கோவப்பட போறதில்ல...
இப்டி சொல்லிடுவாளோனு ஏன்? கற்பனையா நினைச்சி தயங்கணும்...
இனியும் பயந்துகிட்டே இருந்தா வேலைக்கு ஆகாது...
என்று மனதில் நினைத்த வாறு Jewel Box எடுத்து மீண்டும் அதே இடத்தில் வைத்து விட்டு குளிக்க சென்றான்...
குளித்து விட்டு அறைக்கு திரும்பிய போது நகைபெட்டியை திறந்து பார்த்து கொண்டிருந்தாள் காயத்ரி..
அண்ணா Jewel box சூப்பரா இருக்கு
எனக்கு தானே வாங்கிட்டு வந்தே..
என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் தடுமாறினான்..
பின்ன..உனக்கா வாங்கிட்டு வந்துருப்ப முட்டாள் மாதிரி கேக்குறேன் பாரு..
எவ்ளோ..?விலை ண்ணா... இது ரொம்ப Costly போல... பாக்க ரொம்ப ரொம்ப அழகா இருக்கு...
என்ன??விலையா இருந்தா என்ன என்றான் சலிப்புடன்...
ஒண்ணு தான் வாங்கிட்டு வந்தியா..?
2 வாங்கிட்டு வந்துருக்கலாம்ல.. இப்போ இத பாத்தா.. தனம் அக்கா என் கூட சண்ட போடுவா..
அவளுக்கும் வேணும்னு..
அதை உனக்கு வாங்கிட்டு வரலனு சொல்ல நுனி நாக்கிற்கு வார்த்தை வந்துவிட்டது... அடக்கி கொண்டான்...
அப்புறம்.. முல்லை💞க்கு அந்த வீடு ஏற்பாடு பண்ணி கொடுத்தாச்சு...
முல்ல💞 இப்போ உன்ன விட எனக்கு பயங்கர Friend ஆயாச்சு தெரியுமா..?
அப்டியா...!!
ரொம்ப ரொம்ப நல்ல டைப்...அவங்க கொஞ்சம் கூட ஈகோவே இல்லாம பழகுறாங்க தெரியுமா...??
ஒரே ஒரு விஷயம் தான் வருத்தமா இருக்கு..
என்ன..?
ரொம்ப நாள் அவங்களோட friend -a இருக்க முடியாது...
ஏன்..???
அவங்களுக்கு கல்யாண ஏற்பாடு பண்ணிகிட்டு இருக்காங்க... கல்யாணம் பண்ணி போய்ட்டா அப்புறம் எப்படி...?பழகுறது...
என்ன.? சொல்ற நீ!! என்றான் அதிர்ச்சியாக...
அவங்க நல்ல டைப் னு சொன்னேன்...
என்று நகைபெட்டியை திறந்து திறந்து மூடுவதுமாகவே இருந்தாள்...
அதில்லை... கல்யாணம்னு ஏதோ
அது நிஜமா...?
ஆமா... நான் எதுக்கு?பொய் சொல்ல போறேன்....
அப்டி எதுவும் இருந்தா என்கிட்ட சொல்லி இருப்பாங்களே...
கல்யாணம் விஷயம் பத்தி உன்கிட்ட சொல்ல தயக்கமா இருந்து இருக்கலாம்...
ஏற்பாடுனா.. என்ன? மாதிரி...
அதான் சொன்னனே பேப்பர்ல வரன்கள் விளம்பரம் கொடுத்து இருக்காங்க.. ஏகப்பட்ட application வந்து இருக்காம்.. அவங்க அப்பா வந்ததும்....மேற்கொண்டு அடுத்த வேலையில இறங்கிடுவாங்களாம்...
இதெல்லாம் உனக்கு யாரு?? சொன்னது...
முல்லை💞யோட அம்மா.. இப்போ அவங்களும் எனக்கு ரொம்ப பழக்கம்.....
முல்லை💞யோட சம்மதத்தோட தான் இந்த ஏற்பாடு நடக்குதா..??
ஆமாம்.. அவங்களையே கேட்டேனே... அவங்களும் ஆமா தான் சொன்னாங்க...
அது சரி நீ என்ன..??
இதையே திருப்பி திருப்பி கேக்குற...
இல்ல பல தடவ பேசிருக்கோம்.... கல்யாணம் பத்தி எதுவும் பேசல..
நீ சொன்னது ஆச்சர்யமா இருந்துச்சு...
சரி உன் கல்யாணம் ஏற்பாட்ட மட்டும் முல்லை💞கிட்ட சொன்னியா...??
இல்லை...
ஏன்...??
பொண்ணு பாத்து நிச்சயம் ஆகிடுச்சா சொல்றதுக்கு..
அதே மாதிரி அவங்களும் முடிவானதும் சொல்லிக்கலாம் னு நெனைச்சி இருப்பாங்க..
ஏன்..? சொல்லல னு சண்ட
போடாதே அப்புறம் நீ தான் மாட்டிக்குவே....
எப்படி...??
பதிலுக்கு உன்னை கேப்பாங்க... உங்க கல்யாண விஷயத்த சொல்லலையேனு அப்புறம் அசடு வழிய வேண்டி இருக்கும்...
அதெப்படி?அவங்களுக்கு தெரியும்..
நான் தான் சொல்லிட்டேனே...
என்ன?சொல்லி தொலைச்ச என்றான் எரிச்சலுடன்...
ஏன்?உனக்கு இப்டி கோவம் வருது.. எனக்கு சந்தோசமான விஷயம் மனசுல நிக்காது... உடனே எனக்கு பிடிச்சவங்க கிட்ட சொல்லிடுவேன்.... சேலத்துல இருந்து.... ஸ்வேதாவோட போட்டோ வந்துச்சா அதை...
இரு... போட்டோ எப்போ வந்துச்சு...
அச்சோ உளறிட்டேனா!... அப்பா இப்போ சொல்ல வேண்டாம் னு சொன்னாரு...
பாதி சொல்லிட்ட முழுசா சொல்லிடு...
அவங்க எல்லாருக்கும் ஓகே இந்த மாசமே நாள் நல்லா இருக்கு நிச்சயம் பண்ணிக்கலாம் னு லெட்டர் எழுதி இருந்தாங்க.. போட்டோ வும் அனுப்பி இருந்தாங்க...
ஸ்வேதா போட்டோல எவ்ளோ அழகு தெரியுமா..????
இதெல்லாம் முல்லை💞கிட்ட சொன்னியா..?
பின்ன.. போட்டோ வையும் காமிச்சுட்டேனே...
அறிவு இருக்கா உனக்கு... எத சொல்லணும் எத சொல்ல கூடாது னு தெரியாதா உனக்கு.....
ஏன் இப்டி திட்ற..
போட்டோ வ உனக்கு காட்றதுக்கு முன்னாடி முல்லை💞க்கிட்ட காட்டிட்டேனேனு உனக்கு கோவமா... அப்பா கிட்ட இருக்கு போட்டோ அவரே கொடுத்து பேசுவாரு...
என்று அவள் நகைப்பெட்டியை எடுத்து சென்று விட...
தளர்ந்து போய் கட்டிலில் அமர்ந்தான்..
காயத்ரி மேல் அடக்க முடியாத கோவம் வந்தது...
மனது ஏதோ செய்தது....
திருமண ஏற்பாடுகள் நடக்கிறதா..?
முல்ல💞சம்மதத்துடனா...??
அப்படியென்றால்.. என்னோடு பழகிய பழக்கம் வெறும் நட்பு தானா..??
என்னை நேசித்தால் பேப்பரில் விளம்பரம் கொடுக்க சம்மதித்திருப்பாளா....??
தன் வீட்டில் தன் வார்த்தைக்கும்.. முடிவுகளுக்கும் பரிபூரணமான சுதந்திரம் இருப்பதாக சொல்லியிருக்கிறாளே...
அவளின் உரிமையான பேச்சும் புன்னகையும் உணர்த்தியதெல்லாம் நட்பை தானா...?காதலென்று நானாக கற்பனை செய்து கொண்டேனா..?
இதயத்தில் வலி அதிகரிக்க தொடங்கியது...கதிருக்கு....
கதி......ர்!!
என்னப்பா...??
ஏதாச்சும் வேலையா
இருக்கியாப்பா...??
இல்லப்பா...
சும்மா தான் இருந்தேன்... சொல்லுங்க..
காயத்ரி எல்லாம் சொல்லிட்டாளாமே
வர்ற 27 தேதி நாள் நல்லா இருக்கறதா எழுதி இருக்காங்க.... இந்தா இதுல போட்டோ இருக்கு...
நீ சம்மதம் சொல்ல வேண்டியது தான் பாக்கி...
அவர் நீட்டிய கவரை மௌனமாக வாங்கி கொண்டான்...
எதுக்குப்பா? இவ்ளோ அவசரம் காட்றீங்க...
பொண்ணு வீட்ல தான் ப்பா அவசரபட்றாங்க...
அவங்களுக்கு நம்ம family -a
ரொம்ப பிடிச்சி போய்டுச்சு...
எங்களுக்கும் ரொம்ப பிடிச்சி இருக்குப்பா...
அது மட்டும் இல்ல உனக்கும் அந்த பொண்ணு பொருத்தமா இருக்கும்...
கல்யாண வயசுல தங்கச்சி வச்சிட்டு எனக்கு...முதல் லனா...
அதான் கொஞ்சம் தயக்கமா இருக்கு...
அவளுக்கும் தீவிரமா தான் பாக்குறோம்...
இந்த வருஷத்துக்குள்ள அவளுக்கும் அமைஞ்சிடும் னு சொல்றாங்க...
அப்பா அப்டி விட்ருவேனா சொல்லு..
இது ரொம்ப நல்ல இடம் அதான்..
நீ போட்டோ பாத்துட்டு சாய்ந்திரம் கூட சொல்லு ஒண்ணும் அவசரம் இல்ல....என்றார்....
மௌனமாய் இருந்தவனிடம் இருந்து கவரை வாங்கியவள்...
இன்னும் பிரிச்சு கூட பாக்கலையா...?? இப்டி
என்கிட்ட கொடு என்று வாங்கியவள்..
கவரில் இருந்து எடுத்து
இந்தா பாரு ண்ணா...என்றாள்.
தயக்கமாய் போட்டோவை பார்த்தான்...
என்ன..?அண்ணா மயக்கம் வருதா.. எப்படி அப்பா Selection..
சரிப்பா...
நான் ஆபீஸ்க்கு கிளம்புறேன்...
அண்ணா சொல்லிட்டு போ..ண்ணா..
காயத்ரி சும்மா இரு.. அவன் சாயிந்திரம் சொல்லட்டும் என்று... நாற்காலியில் அமர்ந்தார்....
---------------------------
---------------------------
ஏய்!! என்னாச்சு...??? என்று...
முல்லை💞யின் முகத்துக்கு நேராக சொடுக்கு போட்டான் ஜீவா...
ம்ம்ம்...
என்ன..?
Game Show எடிட் செய்த Pendrive எங்கே வச்சிருக்கனு 4 தடவ கேட்டேன்...
புதுசா கண்ண தொறந்துட்டே தூங்க கத்துக்கிட்டிருக்கியா..??
பதில் சொல்லாமல் அவன் கேட்ட Pendrive மேஜை ட்ராயரில் இருந்து எடுத்து கொடுத்துவிட்டு அமைதியாக இருந்தாள்...
மூட் அவுட்டா முல்ல💞என்றான்...
ம்ம்ம்...
ஏன்??
கதிர் வீட்ல அவருக்கு பொண்ணு பார்த்திருக்காங்க ஜீவா என்றவள்..
நைந்து போன குரலில் அனைத்து தகவலையும்..
மனதின் கவலைகளையும் சொன்னாள்...
ஓகே நீ என்ன? நினைக்கிற..
கதிர் என்னோட பழகினதெல்லாம் Friendly -a தான்னு புரியுது...
இருக்கலாம்... ஆனா வெளிப்படையா பேசி அதை தெரிஞ்சிக்க... அப்புறம் அவஸ்தை படேன்.. ஏன்?கற்பனையா யோசிச்சு மனச வருத்திக்கிற...
என்ன??னு..கேக்க சொல்ற...
உங்களுக்கு பாத்து இருக்க பொண்ணு ரொம்ப அழகா இருக்கா..னு பேச்சை ஆரம்பி...
அவன் என்ன?பதில் சொல்றான்னு கேளு அப்புறம் ஒரு முடிவுக்கு வா... என்றான்...
ம்ம்ம் என்று தலை ஆட்டியவள்... கதிர் ஆபீஸ் நம்பருக்கு Dial செய்து... அவனின் குரலுக்கு காத்திருந்தாள்...
தொடரும் 💞...
💛💜💛💜💛💜💛💜💛💜💛💜💛💜💛