காதலை 💞 தேடி....#KM Stories

By swarnasenthil

6.4K 1.1K 303

காதலின் 💞தேடலில் நிகழும் தவிப்புகள்..... More

காதலை 💞தேடி....
2
3
4
5
6
7
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
km

8

252 49 5
By swarnasenthil

💛💚💛 காதலை💞 தேடி..💛💚💛

K💞M Part -8

காற்றின் இசைக்கு பச்சை வயல்வெளி தலையசைத்து கொண்டிருந்தது.....
சூரியன் சிவப்பு நிற மேகங்களுக்கு இடையே மறையும் தருவாயில் இருந்தது....

கரையேறிய பெண்கள்.. மரக்கிளைகளில் கட்டிய புடவை தொட்டில்களில் உள்ள தங்கள் குழந்தைகளை தூக்கி கொண்டார்கள்...

மண்சாலையில் வந்து கொண்டிருந்த
டிராக்டரில்... கதிர் வேட்டி கட்டி....
துண்டு போட்டு இருந்தான்...
காதில் சிறிய கடுக்கண்....
புஜத்தில் தாயத்து கட்டிருந்தான்...
டிராக்டரின் பின்புறம் சிறிய ட்ரைலரில்... உரமூட்டைகள் இருந்தன..

திடீரென்று ஒரு புளியம்பழம் கதிர் மீது விழுந்தது... அந்த சாலையில் புளிய மரமே இல்லாததால்.....
மேலே பறவை ஏதாச்சும் போட்டிருக்குமோ???என்று நிமிர்ந்து பார்ப்பதற்குள் மீண்டும் ஒரு பழம் வந்து விழுந்தது...

பழம் வந்த திசை புரிய... வண்டியை ஓரங்கட்டினான்... அகன்ற ஆலமரத்தின் அடியில் கல்லுப்பிள்ளையார் வீற்றிருக்க...

வீசிய காற்றில்...மரத்தின் பின்னால் தாவணியின் முனை பார்வையில் சிக்க... வண்டியிலிருந்து குதித்து இறங்கி வேட்டியை மடித்து கட்டினான்..

மெதுவாக மரத்தை நெருங்கி பிள்ளையாரை சுற்றி கொண்டு.. அந்த பக்கம் வர.. இவனுக்கு முதுகு காட்டிக்கொண்டு ஒரு பெண் ட்ராக்டரை எட்டி பார்த்து இவனை தேடி கொண்டு இருந்தாள்..

ஹேய்!! நீதானே என் மேலே புளியம் பழத்த தூக்கி போட்ட...

இவன் குரலில் திடுக்கிட்டு திரும்பி... நாக்கை கடித்து கொண்டாள்.... அதில் இன்னும் அழகாய் தெரிந்தாள்...

ஹேய்!! சொல்லு நீதானே..

முகத்தில் வெட்க ரேகையுடன்... தலையசைத்தாள்..

ஏன்??? அப்டி பண்ண...

உங்களுக்கு தெரியாதாக்கும்...
என்று கிசுகிசுப்பாய் பேசினாள்..

எனக்கு எப்படி?? தெரியும் உன்ன இப்போ தான்....முதல் தடவ பாக்குறேன்..

நான் உங்கள மறைஞ்சி நின்னு
பல தடவ பல நாள் பாத்து
இருக்கேன் மச்சான்..

மச்சானா!!!?...

சரியான விவரம் தெரியாத புள்ளையா இருக்கியே...

அப்டி கூப்பிட்டா என்ன அர்த்தம் தெரியுமா??..

எனக்கு தெரியும்..
உங்களுக்கு தெரிஞ்சா சரி...
சாயந்திர நேரம்....
ஆள் அரவம் இல்லை...
சில்லுனு காத்து...

உன்ன கட்டிக்க போற பொண்ணு பிடுங்கி எடுத்த கிழங்கு மாதிரி பக்கத்துல இருக்கேன்.... சும்மா பாத்துகிட்டே இருக்கியே...

என்னது கட்டிக்க போற பொண்ணா???...

ஏன்??? எனக்கு என்ன குறைச்சல்....
என்று அவள் நெருங்கி வர...

இவனுக்கு உள்ளுக்குள்ளே..
பதற்றம் தொற்றிக்கொள்ள....

பின்னாடி இருக்குற ஆட்டு குட்டி உன்னோடதா??... என்றான்...

அவள் திரும்பிய சமயம்... ஓட்டமெடுத்தான்..

யோவ்!!..ஓடாதய்யா... பயந்தாங்கொள்ளி....இன்னைக்கு
உன்ன விடறதா இல்ல..
என்று அவனை துரத்த தொடங்கினாள்...

புழுதி சாலையை கடந்து ஓடினான்...

சாலையை கடந்த ஆடுகளின் கூட்டத்தின் நடுவே புகுந்து ஓடினான்....

வைக்கோல் நிறைந்த களத்து மேட்டில் புகுந்து ஓடினான்..

விடாமல் அவளும் தூரத்தினாள் ...

வாய்க்காலில் தண்ணீர் சிதறடிக்க ஓடினான்..

அவளும் விடாமல் நனைந்த படி விரட்டினாள்....

ஒரு அகலமான கிணற்றின் விளிம்புக்கு வந்தவன் மூச்சிறைத்து... திரும்பி பார்த்தான்...

அவள் தூரத்திலிருந்து இவனை நோக்கி ஓடி வந்து கொண்டு இருந்தாள்....

கிணற்றின் அடியில் படிக்கட்டுகள் வளைந்து வளைந்து சென்று இறுதியில் கருப்பாய் தண்ணீர்.... தவளைகளின் சத்தம் காதை பிளந்தது...

ஒரு வினாடி யோசித்தவன் கண்களை மூடி கிணற்றில் குதித்தான்...

சுவற்றில் மோதிய பந்தாய்... மறுபடியும்...
கனவிலிருந்து விழித்தான்....
மணி அதிகாலை 4:10 காட்டியது...

அதே கனவு.... அதே கிளைமாக்ஸ் ...
இடம் தான் வேறு வேறு..ஆனால் முடிவு ஒன்று...

எண்ணங்களின் பிரதிப்பலிப்பு
தான் கனவு என்ற கருத்து உண்டு...
ஆனால் என் கனவு இப்படி முரண்படுகிறதே....என்ற குழப்பதுடன் அன்றைய நாளை தொடங்கினான்...

------------------------------
------------------------------

வாய் விட்டு சத்தமாக சிரித்தான்.... செந்தில்.

மெரினா உள் சாலையில்...
செந்தில் காரின் பானெட் மேல் அமர்ந்த கதிர்...
இப்போ எதுக்கு சிரிக்கிற...என்றான்.

இல்ல..டா.. உன்ன காதுல
கடுக்கண்.. வேட்டியோட..
கிராமத்தான் மாதிரி நெனைச்சி பார்த்தேன்.. சிரிப்பு வந்துருச்சு..

சரி டா... என் கனவ பத்தி சொல்லு ஒண்ணுமே எனக்கு புரிய மாட்டேன்குது...என்றான் சுண்டலை வாயில் போட்டபடி...

நம்ம மனசு குப்பை தொட்டி
மாதிரி டா.....குப்பை தொட்டியில..எப்போ எந்த Smell
வரும் னு தெரியாதுலையா!!.. அந்த மாதிரி எத்தனையோ நினைவுகள்... நம்ம மனசுக்குள்ள...இருக்கும்...

எது எது எப்போ வரும்னு யாருக்கு தெரியும்....நமக்கு வர கனவுல கொஞ்சம் லாஜிக்கும் இருக்கும்.. கொஞ்சம் அபத்தமும் இருக்கும்...
ஆனா உன் கனவு ரொம்ப intresting -a இருக்கு கேட்க.. என்று சொல்லி மறுபடியும் சிரித்தான்...

அதெல்லாம் சரிதான்.
நான்தான் காதல்ல ஆர்வமா இருக்கேனே...
அப்புறம் ஏன் டூயட் பாடாம..
இப்படி ஓடி போய் எதுலயாவது குதிக்கிறேன்.....

அதான் சொல்றேனே...
எத்தனையோ நினைவுகளின் கலவையா இருக்கலாம்...

சரி நீ என்ன கனவுக்கெல்லாம் இப்டி கவலை படற...

ஆனா ஒண்ணு இந்த மாதிரி ஓடறது எல்லாம் கனவோட நிறுத்திக்க... நிஜத்துல யாராச்சும் லவ் சொன்னா இப்டி ஓடிடாதே...என்றான் செந்தில்...

காருக்குள் இருந்த கதிர் போன் ஒலித்தது....

கண்ணாடி இடைவெளி வழியே போனை எடுத்த...செந்தில்
ஏதோ No வருது..டா

எங்க கொடு...
என்று வாங்கியவன்... நம்பரை பார்த்ததும்... வேகமாக பானெட் மீது இருந்து குதித்து......

ஹலோ!!! Good Evening
சொல்லுங்க முல்ல 💞என்றான்.. குரலில் ஆர்வம் தொற்றிக்கொண்டு..

தொந்தரவு பண்றேன்னு நெனைக்காதீங்க Sir... உங்க ப்ரோக்ராம் நாளைக்கு காலையில
10 மணிக்கு fix ஆகி இருக்கு...
வர முடியுமா?? Sir..

நாளைக்கு எனக்கு ஆபீஸ் இருக்கே...

நான் சொன்னேன்னு சொல்லுங்க உங்க MD ஒண்ணும் சொல்ல மாட்டார்..

மக்கள் டிவி ஆபீஸ் தெரியும்லையா??

ஆஹான் தெரியும்....

செக்யூரிட்டி கிட்ட சொல்லி வச்சிடறேன்.. Pass வாங்கிட்டு உள்ள வர ஈஸியா இருக்கும்..
Third floor..ல Reception la Wait பண்ணுங்க... நான் வந்துடுவேன்..

சரிங்க வந்துடுறேன்..

பீச் ல ஜாலியா Relax பண்ணும் போது தொந்தரவு பண்ணிட்டேனா?? ... என்றாள்..

அதெப்படி நான் பீச் ல இருக்கேன்னு உங்களுக்கு தெரியும்....

நாளைக்கு மீட் பண்ணும்போது சொல்றேன்.... அதுவரைக்கும் யோசிங்க... Have a Nice Evening
Bye என்று Cut செய்தாள்...

நாம பீச்ல இருக்கோம்னு....
முல்ல 💞எப்படி??டா கண்டுபிடிச்சாங்க...

அது இருக்கட்டும் முல்ல💞 யாருடா!!!???..

அவங்க கிட்ட பேசும்போது 1000 வாட்ஸ் Bulb எரிஞ்சிதே உன் முகத்துல...

அது Just இப்போ தான் ஒரு 3 நாள் முன்னாடி அறிமுகம் என்று... அறிமுகமானதிலிருந்து அவளுக்கு உதவியது வரை.... சொல்லி முடித்தான்...

So..... என்று அர்த்ததோடு பார்த்தான்... செந்தில்...

என்ன?? So...

எந்த பொண்ண பத்தி பேசினப்பவும் நீ இத்தனை வெட்க படலியே கதிர்..
கைய கொடு வாழ்த்துக்கள்..

அட நீ வேற என்று நெளிந்தவன்.. உன்கிட்ட நான் எத மறைச்சிருக்கேன்....
ஒரு தடவ தான் மீட் பண்ணேன்.. இப்போ பேசினதோட 3 தடவை
போன் ல பேசியிருக்கேன்..
அவ்ளோ தான்....

ஆனா என்னமோ அவ எனக்கு ரொம்ப உரிமை உள்ளவ மாதிரி ஒரு Feeling...

Yessss!!!! பெரிதாய் கத்தினான்...
செந்தில்...ஒரு வழியா உன் ஆள கண்டுபிடிச்சிட்ட.. All the Best.

ஒரு விதை துளிர் விட்ருக்கேன்னு சந்தோச படறதுலயே நின்னுட கூடாது... அத எப்படி செடியாக்கி மரமாக்கணும்னு யோசிக்கணும்..

இப்போ நான் என்ன??
பண்றது...டா...

இப்ப ஒண்ணும் பண்ணாத...

நாளைக்கு அவள மீட் பண்ணும்போது அவ மனசுல நீ அழுத்தமா பதியிற மாதிரி நடந்துக்கணும்...
அதுக்கு ஒரு ஐடியா சொல்றேன்...

அவன் சொன்ன ஐடியாவை கேட்டு...
ஏய்!! என்ன விளையாடுறியா??... எனக்கு அவ்ளோ எல்லாம் தைரியம் இல்ல... என்ற கதிர்...

ரொம்ப நேர வற்புறுதலுக்கு பிறகு தயக்கமாக தலையசைத்தான்...

தொடரும் 💞...

💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛

Continue Reading

You'll Also Like

71.7K 6.1K 35
Kovakkara Kathir, Pasakkara ponnu Namma mulla, this is a beautiful strange and love story
55.3K 3.6K 27
New story for km , just different plot our fictional couples....
339K 29.5K 73
Ashaangi story💜☃️❄..... plѕ ѕuppσrt🤝 ít rєαdєrєччччѕѕѕѕ.... ungαlσdα ѕuggєѕtíσnѕ solunga.commєnt your víєwѕ αвσut thíѕ plσt whєthєr should í cont...
104K 3.9K 25
This ff is also being shared in my Instagram account Ratings 23/5/2020 - No. 1 #kathir