இன்று கதையில் ஒவ்வருவரின் உணர்வையும் தனித்தனியாக சொல்லி இருப்பேன்.....அவர்களின் உணர்வோடு இணைந்து படியுங்கள்🙏🙏🙏
கார் கிளம்பும்போது சரியாக வண்டியில் வந்து இறங்கினாள் தீ....ஜெனி அதிர்ச்சியாக பார்க்க,அக்னி வேகமாக இறங்கினான்.....
எப்போதும் இங்கு வர மாட்டாள்....இருவரும் பேசுவது ஃபோனில் அல்லது ஒரு பொது இடத்தில் தான்...
தீ.....
வா..போகலாம்...
இல்ல... ஜெனியோட அம்மா அப்பாவை கடத்தி வச்சுருக்காங்க...இடம் கண்டு பிடித்தாயிற்று...அங்க போய் அவுங்களை காப்பாற்ற வேணும்....
ஜெனியை ஒரு பார்வை பார்த்தவள்.... ஏடன் லேப் எரிஞ்சு போய்டுச்சு...எல்லா ஆதாரமும் அழிஞ்சு போச்சு.... என் கூட வா...
சொல்றேன்ல ரதி....அவ அம்மா அப்பாவயும் அந்த ஏடன் தான் கடத்திருப்பான்...நான் போய் அங்க பாக்குறேன்...நீ போய் அந்த லேப் பாரு....
அவுங்களை அப்புறம் காப்பாத்தாலாம்....இப்போ நீ அவ கூட போக வேண்டாம்...
போச்சு..எல்லாத்தையும் கெடுத்துடுவா போலயே என ஜெனி நினைத்து கொண்டு இருக்கும் போதே...😠😠
ஷட் அப்...தீ....😠😠..உனக்கு ஏன் ஜெனியை பிடிக்கலனு எனக்கு இப்போ வர தெரியல...ஆனா...அவ என் பொண்டாட்டி..😓😓..அவ என்கிட்ட எல்லா உண்மையும் சொல்லிட்டா...அந்த DNA report மட்டும் தான் அவ மாத்திருக்கா...அவ பாவம்...😠😠..இப்போ அவுங்க அம்மா அப்பாவை காப்பாத்தனும்னு சொல்றேன் அது கூட விட மாட்டிங்குற???? This is the limit... நமக்கு தான் யாரும் இல்லாம அனாதையாக நிக்குறோம் அவளும் அப்படி நிக்கணுமா??அப்படி தான் நினைக்குரியா??😠😠😠
போதும்....நான் அனாதை தான்....அப்படியே இருந்துக்குறேன்.....இதுக்கு மேல பேசாத...இதுவரை நான் அனாதை என நினைத்தது இல்லை..நீ இருந்தாய்....இனி நான் பார்த்து கொள்கிறேன் 😐😐...
இவளை பற்றி தெரிந்ததும் அதிலிருந்து உன்னால் மீளவே முடியாது😐😐😐😐😐
அதை பற்றி நீ கவலை படாதே...உனக்கு எப்போதும் யாரை பார்த்தாலும் சந்தேகம் தான்😠😠😠..எனக்கு யாரை நம்ப வேண்டும் ..வேண்டாம் என தெரியும்.நீ சொல்ல தேவை இல்லை..நீ கிளம்பு...🙏🙏
நெஞ்சு அடைத்தது..தீக்கு...😐😐ஒன்றும் பேசாமல் கிளம்பி விட்டாள்..போகும் முன் அவனை ஒரு பார்வை பார்த்தாள்..அந்த பார்வை அவன் உயிர் வரை சென்றது...சட்டென தலையை குனிந்து கொண்டான்...
ஜெனியைப் பார்த்தாள்...அவள் புருவத்தை தூக்கி வெற்றி சிரிப்பு சிரித்தாள்....😎..ஜெயித்து விட்டேன்...பிரித்து விட்டேன்..😎😎😠என்பது போல் இருந்தது அவள் பார்வை...
அன்றொரு நாள்...
இதே வார்த்தைகளை அவள் வாய் சொன்னது...உன்னை அவனிடம் இருந்து பிரிப்பேன்..என் அக்னியை பிரிப்பேன்.. ஆனால் நீ என்னை பற்றி அவனிடம் சொல்ல கூடாது...
நான் சொல்ல மாட்டேன்..சத்தியம்..ஆனால் அவனுக்கு உன்னை பற்றி புறியவைப்பேன்😐😐👍நீ எப்படி பட்டவள் என்பதை...
பார்க்கலாம்👍👍 challenge..
தீயும் முழு நம்பிக்கையோடு challenge என்றாள்..
இன்று ஜெனி சொன்னதை செய்து காட்டி விட்டாள்...
என் நண்பனுக்கு ஒன்றும் ஆக விட மாட்டேன்...உன்னால் ஆனதை பார்..என கண்களால் தீ சவால் விட்டாள்..
பார்க்கலாம்.., ஜெனி அக்னியோடு கிளம்பினாள்....
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
எடுத்து வந்த கத்தியை அப்படியே ஏடன் நெஞ்சிலேயே இறக்கலாமா என யோசித்தாள்சஞ்சனா..😨😨
இரவு என்பதால் நர்ஸ் இல்லை..காவலர் தூங்கி கொண்டு இருந்தார்..
சற்று நிதானித்து அவனுக்கு ஆக்ஸிஜன் போகும் மாஸ்கை கத்தியால் அறுத்து விட்டாள்..😐..சற்றுநேரத்தில் மூச்சு திணற ஆரம்பித்தது ஏடனுக்கு....அவன் நெஞ்சில் காயம் பட்ட இடத்தில் கையால் அழுத்தினாள்...இரத்தம் ஒருபுறம் கசிய,,மூச்சு திணற ...அவன் உயிர் துடித்தது......😨😨😨
இப்படித்தானே வயிற்றில் குழந்தையோடு அந்த பெண்கள் துடித்து இருந்திருப்பார்கள்...😐😐😐😐சாவு..என துடிக்கும் அவனை கண்களில் கண்ணீர்😭😭,உதட்டில் சிரிப்புடன்,நெஞ்சமெல்லாம் காதல் மறக்கமுடியாமல்😖😖😖 அவனையே பார்த்து கொண்டு இருந்தாள் 😐😐😐
சற்று நேரத்தில் அவன் உயிர் பறவை பிரிந்தது..😐😐ஏடன்....என பெருங்குரலெடுத்து கதறினாள்....சத்தம் கேட்டு நர்ஸ்,காவலர் அனைவரும் ஓடி வந்து பார்த்து அதிர்ந்தனர்..😨😨
திவாரி குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்க பட்டது..... எலிசா,மனோஜ், பிரேம் மூவரும் ஓடி வந்தனர்.... எலிசா மகன் மேல் விழுந்து கதறி அழுதார்😭😭😭..மனோஜ் இறுகி போய் இருந்தார்😐😐...பிரேம் அப்படியே கண்ணீரோடு அமர்ந்து இருந்தான்....
பிரேத பரிசோதனை செய்ய உடல் எடுத்து செல்ல பட்டது...
அடுத்த நாள் செய்திக்கு எடிட்டிடருக்கு செய்திகளை வரிசை படுத்து கொண்டிருந்த தீ...ஃபோனில் செய்தியை கேட்டதும் ஓடினாள்.....
பிரேம் அமர்ந்து இருந்த நிலை அவளை உலுக்கியது...மெல்ல அவன் தோளை தொட்டாள்....
தொட்டது தன்னவள் என தெரிந்ததும்..
அப்படியே அவளை வயிற்றோடு கட்டி கொண்டான்...அவள் திகைத்தாள்😨ஆனால் விலக்க மனமில்லை😐😥...சற்றுநேரத்தில் வயிற்று பகுதியில் ஈரம் உணர்ந்தாள்..ஆம் அவன் அழுது கொண்டு இருந்தான்...
என் அப்பாவை விட என் அண்ணன்தான் எனக்கு நெருக்கம்..எனக்காக avn திட்டு வாங்குவான்...😥😥.
இப்படி ஒரு அன்பான குடும்பத்தை ஏமாற்றி தன்னையும் ஏமாற்றி வாழ்ந்த ஏடன் மேல் கோபம் பொங்கியது தீக்கு😠😠
காவல் துறை சஞ்சனாவை கைது செய்து அழைத்து வந்தது.....
வேகமாக அவளருகில் சென்றாள்....
என்னை நம்ப வில்லையா???😥
நீங்க பிரஸ் தான்...உங்களால் வேறு என்ன செய்ய முடியும்??அவரை பற்றி எழுத தான் முடியும்....அவர் சீக்கிரம் வெளியே வந்து விடுவார்..அதான்....😥😥
உன் வாழ்க்கையை பாழாக்கி கொண்டாயே???
இனி என்ன வாழ்க்கை எனக்கு??😏😏அது என் ஏடனோடு முடிந்து விட்டது....நான் இங்கு இருந்தால் மீண்டும் ஒரு திருமணம் என்று பேச்சு எடுப்பர்....அது அவர்களுக்கு சாதாரணமாக இருக்கலாம்...ஆனால் எனக்கு??? நான் போகிறேன்...😥😥.எனக்கு வெகு நாட்களுக்கு பின் ஒரு நல்ல தோழி கிடைத்தாள்...விவேகா..அவளையும் விட்டு செல்கிறேன்...
பிரேம் ஓடி வந்து சஞ்சுவை கட்டி கொண்டான்....😥😥😭😭..
பிரேம்..அழாதே....உன்னை இனி பார்த்து கொள்ளதான் உனக்கு ஆள் வந்து விட்டதே..😊😊என தீயை பார்த்து கண் சிமிட்டினாள்....அவள் நிலை அறிந்து அவளுக்காக இருவரும் புன்னகைக்க முயன்றனர்...
போலீஸ் அழைத்து சென்றது ..
ஏடன் உடலை பார்த்ததும் அவளுக்கு அவனை சுட்டது யார்??என்ற கேள்வி எழுந்தது ...அப்படியே கண்கள் சுழன்றதில் அவள் பார்வையில் விழுந்தது மனோஜ் திவாரி...ஒரு சொட்டு கண்ணீர் விட வில்லை..தேசத்துக்கு அவமானம் தருவது போல் செய்தவன் என் மகனே இல்லை..அவன் உடலையும் வாங்க மறுத்தார்.😐😐..அவளுக்கு அவர் மேல் தான் சந்தேகம்..எலிசா அழுது கரைந்தார்.😭😭.கணவனிடம் கெஞ்சினார்...😥😥.
செத்து போன பெண்களுக்கு நியாயம் என்ன??கர்ப்பிணி பெண்கள் இவனுக்கு சோதனை எலிகளா???முடியாது...
பின் ஏடன் உடல் அரசு மின் தகனத்தில் தகனம் செய்ய பட்டது....அந்த மூன்றாம் நபர் யார்??ஆதாரங்கள் அனைத்தும் அவனோடு சாம்பலாகியது😐😐😓😓😓😓...
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
ஆ..... ஆ....விட மாட்டேன்.....விடமாட்டேன்...யுக பாரதி... ஏடனை என் கையாலே சுட வைத்து விட்டாயே👿👿உனக்கு சாவு என்னால் தான்...என அங்கிருந்த அனைத்தயும் போட்டு உடைத்தது அந்த உருவம்.....
உனக்கு ஆதாரம் கிடைக்க கூடாதென நான் பார்த்து கட்டிய சாம்ராஜ்யம் என் lab.. அதையும் எரிக்க வைத்து விட்டாலே😠😠👿👿👿👿....இனி உன் நாட்களை எண்ணி கொள்.யுக பாரதி..👿👿 என பைத்தியம் போல் கத்தியது..
பின் ஜெனிக்கு message அனுப்பியது..அவன் வருகிறானா??😠😠
ஆம்...என அவளிடம் இருந்து reply வந்தது....😓😓
காரில் போகும் போதெல்லாம் அக்னிக்கு தீயின் நினைவுதான்...மனம் தவித்தது...வாய் விட்டு பேசி விட்டான்..ஆனால் வலி ஏனோ அவனுக்கு தான்...😖😖😖😖கண்கள் கலங்கியது😥😥... அவள் அவனை விட்டு எங்கும் போக மாட்டாள் தான்...ஆனால்...அவள் மனம் எவ்வளவு வலித்திருக்கும்...
ஜெனி அவனை ஓர பார்வை பார்த்தாள் 😏😏 ஃபீலிங் வேறயா???கொடுமை🤦🤦..
எப்படி இந்த நினைவுகளோடுஅந்த குடோன் வந்து சேர்ந்தான் என்று அவனுக்கும் தெரியவில்லை......
அந்த குடோன் பின்புறம் வழியாக அக்னி உள்ளே குதித்து..ஜெனியயும் இறக்கினான்...அவன் செய்வது அவளுக்கு சிரிப்பாக இருந்தாலும் என்ன தான் செய்கிறான் என பார்க்கலாமே என அவன் இழுத்த இழுப்புக்கு சென்றாள்😏😓😓..
ஜன்னல் வழியாக அவள் அம்மா அப்பாவை பார்த்து விட்டான்...விரைந்து செயல் பட்டான்... பின் புறமாக சென்று ஒவ்வருவரயும் தாக்கினான்...சிறிது நேரத்தில் சரியான ஃபைட் சீன் நடந்தது.....அடித்து துவைத்து விட்டான் எல்லாரையும் 👿👿👿👿👿.....ஜெனிக்கே உதறியது..😨😨
அவள் அம்மா அப்பாவின் கட்டுக்களை கழட்டினான்.....கட்டுகள் கழண்டதும்..ஜெனி அம்மா ஜெனியை நோக்கி வந்தார்....
அம்மா...என அவள் அவரை கட்டி கொண்டாள்😥😥..
அவளை தன்னிடம் இருந்து பிரித்து நிறுத்தியவர்...ஓங்கி அறைந்தார் 😨😨😱...
அக்னி பதறி அருகில் வருவதற்குள் அவன் பின் தலையில் கட்டையால் யாரோ அடித்தனர்.....கண்கள் இருட்டியது...அப்படியே மயக்கத்தில் சென்றான்.😱😱
இன்னொரு தடவை அம்மா என்று கூப்பிடாதே ...உன் வாயால் அதை கேட்பதே பாவம்😨😨..நீயெல்லாம் என் வயிற்றில் தான் பிறந்தாயா???😠😠உன்னை பெற்றதற்கு நான் மலடியாக இருந்து இருக்கலாம்😠😠👿👿 சீ...தூ...சே...
நீயெல்லாம் ஒரு பொண்ணா??
அக்னி மயங்கும் முன் கேட்டது இது தான்..அவர் ஏன் அவளை திட்டுகிறார் என தெரியாமலே முழுதாக மயங்கினான்..😱😱
ஆனால் அதற்கு பின்...
ஏய்...யாரை அடித்தாய்??என தாயையே தள்ளி விட்டாள்...ஜெனி..அவர் கீழே விழுந்ததில் நெற்றியில் அடி பட்டது...😭😭
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
இன்னிக்கு ud எப்படி இருந்தது??? த்ரில்லிங் இருந்ததா??மறக்காம கமெண்ட் பண்ணுங்கப்பா 🙏🙏😊😊😊