காதலை 💞 தேடி....#KM Stories

By swarnasenthil

6.4K 1.1K 303

காதலின் 💞தேடலில் நிகழும் தவிப்புகள்..... More

காதலை 💞தேடி....
2
3
4
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
km

5

266 59 7
By swarnasenthil

💛💛💛 காதலை 💞தேடி....💛💛💛

K💞M Part -5

என்னடா...செந்தில்
இன்னைக்கு லீவ் போட்டுட்டியா???
Office-க்கு...

ஆமா...டா... பத்மா ஷாப்பிங் போகணும்னு சொல்லிட்டே இருந்தா.. எனக்கும்... கொஞ்சம் Stress-a இருந்துச்சு...அதான் இன்னைக்கு லீவ் போட்டேன்...

பத்மா டீ எடுத்துட்டு வா.. என்றான் செந்தில்...

அப்புறம் என்ன??டா விஷயம்
ஆளே பாக்க முடியல...

வேலையே சரியா இருக்குடா... நானும் உன்ன பாக்கணும்னு நெனச்சேன்....

நீயே காலையில போன் பண்ணிட்ட என்றதும்...
கதிர் cell phone ஒலித்தது...

யாரு??டா....

தனம் அக்கா... டா ஈரோடுல இருந்து...
ஒரு நிமிஷம் டா....

ஆஹான் சொல்லுக்கா என்றவன்..

எப்படி??டா இருக்க கதிர்..

நல்லா இருக்கேன் க்கா...
நீ..மாமா.. பசங்க எல்லாம் சௌக்கியமா???

எல்லாரும் நல்லா இருக்காங்கடா...
அப்புறம்.. என் மாமியாரோட..
பெரிய அண்ணன் பொண்ணுக்கு அடுத்த வாரத்துல கல்யாணம் வச்சிருக்காங்க டா..

Invitation Courier la அனுப்பிருக்கேன்.. அம்மா கிட்ட சொல்லிடு..

ஆஹான் சரி...க்கா..

என்றவன்... போன் வைத்து விட்டு செந்திலை பார்க்க....

அவனும் யாரிடமோ போன் பேசி விட்டு வைத்தான்...

வைத்தவன்.... கதிர் தோளை தட்டி வாழ்த்துக்கள் டா மச்சான்...என்றான்.

எதுக்கு???டா...

உன் wife எங்க இருக்காளோ..னு அடிக்கடி சொல்லுவியே...
சேலத்துல இருக்காங்க... என்றான்..

ஹேய்!! புரியிற மாதிரி சொல்லுடா...

உங்க அப்பா தான் இப்போ phone பண்ணாரு உன் நம்பர் busy-a இருந்துச்சாம்... அதான் எனக்கு கூப்டாரு...

உன்ன உடனே அவருக்கு call பண்ண சொன்னார்..

குழப்பதுடன்...
அப்பாவிற்கு Dial செய்தான்...

கதிரு.. உனக்கு ஏதாச்சும் வேலை இருக்கா???..

இல்ல..ப்பா... படத்துக்கு தான் போகலாம்னு இருந்தோம்.

சரி அத அப்புறம் பாத்துக்கோ...
நான் ஒரு Address சொல்றேன் Note.. பண்ணிக்கோ....

செந்திலிடம் Paper வாங்கி எழுதி கொண்டான்...

இந்த ஹோட்டல் Address la ஜனார்த்தனன்..னு ஒருத்தர் இருப்பார்...

அவர போய் பாரு..

யாரு??..ப்பா அவர்...

போன மாசம் சேலத்துல ஒரு Relation Marriage க்கு நானும் அம்மாவும் போய்ட்டு வந்தோமே.. நியாபகம் இருக்கா???..

ஆமாம் ப்பா சொல்லுங்க..

அந்த function la இவர பாத்தேன் ப்பா... இவரோட பொண்ணுக்கு மாப்ள பாத்துட்டு இருக்குறதா சொன்னாரு...

படிச்ச பொண்ணு... நல்ல குடும்பம் உனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும்னு தோணுச்சு..

2 பேருக்கும் ஜாதக பொருத்தம் இருந்தா... மேற்படி உன்கிட்ட சொல்லலாம் னு இருந்தேன்...

பொருத்தம் 10 ம் சரியா இருக்கவே...
அவரு மேற்கொண்டு பேசலாம் னு சொல்றாரு..

திடீர்னு பிசினஸ் விஷயமா சென்னை வந்துருக்காரு...

உன்ன ஒரு தடவ பாக்கணும் னு பிரிய படறாரு...

அதான் நீ கொஞ்சம் அவர...

அப்பா எனக்கு ஒண்ணும் புரியல
நாம இப்போ காயத்ரி.. க்கு தானே மாப்ள பாத்துட்டு இருக்கோம்..

திடீர்னு எனக்கு ஏன்?? ப்பா..

அப்டி தான்..... கதிர் நெனைச்சோம்...

ஆனா நல்ல இடம் இது...
இது செட் ஆகிட்டா....
தங்கச்சிக்கு பாத்துட்டு இருக்கோம்னு சொல்லி...கொஞ்சம் time கேட்டு 2 கல்யாணம் கூட சேர்த்து ஒண்ணா வச்சிடலாம் கதிர்...

அய்யோ அப்பா.. எனக்கு என்ன ப்பா இப்போ அவசரம்..

இங்க பாரு கதிர்... First ஒரு மரியாதைக்காக.... அவர போய் பாத்துட்டு வந்துடு...

1 மணி நேரத்துல நீ அவர் முன்னாடி இருப்பேன்னு சொல்லி இருக்கேன்..

பொண்ணு உனக்கு பிடிச்சாதான் மத்தது எல்லாம் சரியா.... நாம அப்புறம் பேசிக்கலாம்...

முதல்ல போய்ட்டு வா என்று போனை cut செய்தார்...

செம்ம... கடுப்புடன் போனை வைத்தான்...

இந்தாங்க டீ எடுத்துக்கோங்க பத்மா நீட்டினாள்...

என்னடா?? யோசிக்கிற மாப்ள...

இந்தா...டீ குடி அப்புறம் தெம்பா யோசி...

என்ன Time ஆகிடுச்சு...
தியேட்டர் போகலையா?? என்றாள் பத்மா...

Program cancelled..
மாப்ள பையன்... வருங்கால மாமனார மீட் பண்ண போறாரு...

கதிர் அண்ணா நிஜமாவா!??

அதெல்லாம் ஒண்ணும் இல்லமா...
அவன் ஏதோ உளர்றான்..... என்று பால்கனி க்கு வந்தவன் சாலையில் செல்லும் வண்டியை பார்த்து யோசனையில் ஆழ்ந்தான்....

கதிரின் தோளை தொட்டான்...செந்தில்

கதிர்... உங்க அப்பா சொல்றதும் நல்ல choice மாதிரி தாண்டா...
எனக்கு படுது... நீ ஒத்துக்குறது தான் Better னு சொல்லுவேன்..

எனக்கு னு கல்யாணத்துல எந்த ஐடியா வும் இருக்க கூடாதா??? டா

யாரு சொன்னது..தாராளமா இருக்கலாம்....

என்ன?? ஐடியா சொல்லு..

என்ன??டா புதுசா கேக்குற மாதிரி கேக்குற பல்ல உடைச்சிடுவேன்.

என்ன லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும் னு சொல்லுவ..அதானே

ஆமா டா...
காதல் ஒரு அருமையான விஷயம்! நீயும் பத்மாவும்... லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டவங்க தானே...

உனக்கு காதலை பத்தி தெரியும்...என் கல்யாணம் ஒரு காதல் கல்யாணமா இருக்கணும்னு நான் ஆச படறத நீ தப்புனு சொல்லுவியா??....

நீ இப்போ யாரையாவது லவ் பன்றியா கதிர்....

இல்ல...

ஒருத்தன் காதலிக்காக காத்திருக்கிறது நியாயம்... காதலுக்காக காத்திருக்கிறது சரியா கதிர்..

காதல் ஒரு அருமையான விஷயம் னு சொன்ன... அது அருமையான அனுபவமும் கூட.. எல்லா அனுபவமும் எல்லாருக்கும் கிடைக்கிறதில்ல டா...

இவனுக்கும் இவளுக்கும் இத்தனாம் தேதி கல்யாணம்னு சொல்லலாம்...

இத்தனாம் தேதி காதல் வரும்னு சொல்ல முடியுமா??..

அது ஒரு Accident மாதிரி.... திடீர்னு பூக்குற பூ மாதிரி... திடீர்னு தெரியிற வானவில் மாதிரி..காதல் தானா அமையிற விஷயம் மெனக்கெட்டு அத அமைச்சிக்க முடியாது கதிர்...

நீ சொல்றது எல்லாம் சரி தான் செந்தில்...

அதே இனிமையான விபத்து எனக்கு ஏற்படணும்னு விரும்புறேன்... எதிர்பார்க்குறேன்....அது நடக்கும்னு நம்புறேன் அதுக்காக காத்திருக்கிறேன்...

இப்போ திடீர்னு கல்யாணம் ஏற்பாடு பண்ணா எப்படி??..

கல்யாணம் பண்ணிட்டு காதலிக்க கூடாதா???

அது ஏற்படுத்திக்கிற காதல்...
தீர்மான..மான பொண்டாட்டிய நேசிக்கிறதுக்கும்...

நேசிச்ச பொண்ண பொண்டாட்டியா தீர்மானிக்கிறதுக்கும் நெறைய வித்யாசம் இருக்கு....

நீ லவ் Marriage பண்ணிக்கிறதுல எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல எங்க கல்யாணத்துல சாட்சி கையெழுத்து போட்டவன் நீ... உனக்கு எல்லா விதத்துலயும் Help பண்ண நான் எப்பவும் ரெடியா இருப்பேன்...

லவ் Marriage பண்ண முதல்ல லவ் வேணும்.. தானா அமையும்னு எவ்ளோ? நாள் காத்திருப்ப..

தினம் எவ்ளோ பொண்ணுங்களை சந்திச்சாலும்... உள்ளுக்குள்ளே நூறு வயலின் வாசிச்சு.. ஜிவ்வுனு ரத்தம் பாயுற.. Feeling வர மாட்டேன்குதுனு அடிக்கடி சொல்றியே...

எப்போ நீ ஒரு பொண்ண பாத்து... உள்ளுக்குள்ள வயலின் வாசிச்சு...

சட்டென்று கதிருக்கு காலையில் சந்தித்த முல்லை💞யின் முகம் மனதில் தோன்றியது..

அந்த மன பிம்பத்தின் மேல்...
அதே புன்னகை முகம்.....
வேறு கோணத்தில்...
வேறு கோணத்தில்....

ஜிவ்வென்று புது ரத்தம் பாய்ந்தது போல் உடம்பெங்கும் இனிய நமைச்சல் பரவி.. நூறு வயலின்கள் இணைந்து வாசிக்க பட்ட... உணர்வில்....

கைப்பிடி இரும்பு பைப்பை பிடித்த அவன் பிடியில்.. அழுத்தம் சேர்ந்து... உதடுகள் லேசாக துடித்தன....

கதிர் உன்னோட feelings புரியுதுடா...

நானும் பத்மாவும் லவ் பண்ணப்போ நாங்க தனியா சந்திக்க நீதான் பல தடவ Help பண்ணியிருக்க...

உன் மனசுல இப்படி ஒரு பிடிவாதமான எண்ணம் உருவாக நாங்க கூட காரணமா இருக்கலாம்...

நாங்க சந்தோசமா இருக்குறத பாத்துட்டு லவ் Marriage மட்டும் தான் Best-னு நினைக்கிற....

லவ் Marriage பண்ணிகிட்டவங்க எத்தனை பேரு....ஒரு வருஷம் கூட ஒண்ணா வாழாம... Divorce பண்ணிக்கிறாங்க தெரியுமா??...

அதே மாதிரி Arranged Marriage la எவ்ளோ பேர் Made for Each others -a இருக்காங்கனு உனக்கு காட்டட்டுமா???...

Arranged marriage la அவஸ்த்தை படறவங்கள நான் காட்ட...வா...
எந்த முறையில கல்யாணம் நடக்குறதுங்கிறதை விட எப்டி 2 பேரும் புரிஞ்சி வாழுறாங்கன்றதுல தான் இருக்கு தாம்பத்தியத்தோட சந்தோசம்...

அப்புறம் என்ன??...

அப்படி புரிஞ்சிக்கிறதுக்கான அதிக வாய்ப்பு கொடுக்குறது காதல்...

போச்சு..டா.!!!!!..

உன்கிட்ட பேசி என்னால ஜெயிக்க முடியாது.....

இப்போ உங்கப்பா சொன்ன அந்த ஜனார்த்தனன் sir-a போய் பாக்க போறியா இல்லையா???..

நீயும் துணைக்கு வாடா..

நான் எதுக்கு டா..

வந்து பாரு நான் என்ன?? பண்ண போறேன்னு...

என்ன?? பண்ண போற...

அவருக்கு என்ன பிடிச்சா தானே இந்த விஷயம் அடுத்த கட்டத்துக்கு போகும்...

டேய் ஏதாச்சும் விளையாட்டா...
பண்ணி Serious -a ஏதாவது ஆக போகுது டா கதிர்..

அதெல்லாம் நான் பாத்துக்குறேன்...
நீ வா... என்ற கதிர்...
படியிலிருந்து வேகமாக இறங்கினான்...

பத்மா.. கதவு lock பண்ணிக்க...சீக்கிரம் வந்துடுறோம்....
என்றான் செந்தில்.

தொடரும்💞....

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

Continue Reading

You'll Also Like

72.1K 4K 21
Thi story is all about the famous misunderstanding track of KM...
14.5K 1.3K 21
பணத்தால் கிட்டும் பெண்களின் உறவே நிரந்தரம் என்று என்னும் இளைஞன் oru பக்கம் ...ராமனை போன்ற கணவன் வேண்டும் என்ற இதயத்துக்கு சொந்தமான நம் தேவதை மறு பக்க...
31.3K 3.8K 34
"𝐒𝐨𝐦𝐞𝐭𝐢𝐦𝐞𝐬 𝐌𝐞𝐞𝐭𝐢𝐧𝐠 𝐀𝐧 𝐒𝐭𝐫𝐚𝐧𝐠𝐞𝐫 𝐔𝐧𝐞𝐱𝐩𝐞𝐜𝐭𝐞𝐝 𝐌𝐚𝐤𝐞 𝐓𝐡𝐞𝐦 𝐋𝐢𝐤𝐞 𝐓𝐨𝐦 𝐀𝐧𝐝 𝐉𝐞𝐫𝐫𝐲 𝐚𝐧𝐝 𝐭𝐡𝐢𝐬 𝐚�...