💚💚💚 காதலை💞 தேடி..💚💚💚
K💞M Part -3
தன் தோளில் யார் கையோ....
அமர்வதை உணர்ந்தவன் திரும்பி பார்த்தான்...
கோபத்தை அடக்கி கொண்டு கதிர் நின்றிருந்தான்...
திரும்பியவனிடம்.. என்ன?? பண்ணிட்டு இருக்கீங்க brother என்றான்...
தடுமாறியவன்...
நான் Cycling வந்தேன்... உங்களுக்கு என்ன?? பிரச்சனை..
Cycling போறது நல்ல விஷயம் தான்... ஆனா உங்க சைக்கிள் ரொம்ப நேரமா.. இங்கேயே நிக்குது போல...
Tire பஞ்சரா??. இல்லையே.... நல்லா தானே இருக்கு...
நான் நிப்பேன் போவேன்... அது எதுக்கு?? உங்களுக்கு...
இது என்ன உங்க ரோடா...வேலைய பாத்துட்டு போங்க sir..
நீங்க சும்மா நின்னா நான் ஏன்?? கேள்வி கேக்க போறேன்...
கோலம் போடற பொண்ண... முழுங்குற மாதிரி பாக்குறீங்க..
தேவ இல்லாம பேச்சு வேற குடுக்குறீங்க... இதெல்லாம் Decent-a இல்லையே!!...
யோவ்... வம்பு பன்றியா?? நான் யார் தெரியுமா என்றான்.. காட்டமான குரலில்...
பெரிய பிரச்சனை ஆகிடுமோ என்ற பதைபதைப்போடு... காயத்ரி நின்றிருந்தாள்..
திரும்பி தன் தங்கையை பார்த்தவன்...அன்னைக்கு ரோஜா பூவ தூக்கி போட்டுட்டு போனவன் இவன் தானா...என்றான் கதிர்...
மௌனமாக ஆமாம் என்று தலையசைத்தாள்...
சரி...நீ உள்ள போ என்றவன்...
இங்க பாருங்க தம்பி..
எனக்கப்புறம்.. எங்கம்மா வயித்துல பொறந்தவ.. எனெக்கென்னனு போக முடியாதுல அதான்...கேக்குறேன்... என்ன??? லவ்வா...
அய்யயோ..நீங்க அண்ணன்னு தெரியாம.. Sorry Sir.
இனிமே Disturb பண்ண மாட்டேன்.. என்றவன்.. சைக்கிளை விருட்டென எடுத்து கொண்டு சென்று விட்டான் ...
வாசல் கேட்டை தள்ளி கொண்டு வந்தவனிடம்.. என்னாச்சு அண்ணா என்றாள்...
ஒரு நாள் உன் தங்கச்சிய கடத்திட்டு போக போறேன் பாருன்னு சொன்னான்...
அச்சச்சோ என்று பதறினாள் நம்பி...
லேசாக சிரித்தபடி கதிர்
அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல... Sorry சொல்லிட்டு போய்ட்டான்...பயப்படாத..
நிம்மதி பெருமூச்சு விட்டவள்..
நான்...நீ எங்கே அவன அடிச்சிடுவியோ...னு பயந்துட்டேண்ண...
இந்த. மாதிரி விஷயத்துல மேல கை வச்சாதான் வேற மாதிரி Problem Create ஆகும்..
சரி இதெல்லாம் அம்மா கிட்ட சொல்லிட்டு இருக்காத..
இந்தா பால் பாக்கெட் அம்மா கிட்ட கொடுத்துடு.. என்றான்...
வீட்டின்னுள் நுழைந்தவன்...மேஜை மேலிருந்த செய்தி தாளை எடுத்து கொண்டு நாற்காலியில்... அமர்ந்தபடி... தலைப்பு செய்தியை ஒரு பார்வை பார்த்து கொண்டிருந்தான்...
பூஜை அறையிலிருந்த லட்சுமி அம்மாவின் குரல் வந்தது...
கதிரு... உன் phone ரொம்ப நேரம் Ring ஆகிட்டே.. இருந்துச்சுப்பா யாருனு பாரு...
ஆஹான் சரிம்மா என்றவன் தன் அறையிலிருந்த போனை எடுத்து பார்த்தான்.. அதில் செந்தில் இரண்டு முறை அழைத்திருந்தான்...
அண்ணா என்ற குரலுக்கு திரும்பியவன்... அவளிடம்... டீ டம்ளரை வாங்கி கொண்டான்...
செந்தில் நம்பரை dial செய்து காதில் வைத்தவன்.. அவனின் குரலுக்கு காத்திருக்கும் வேலையில் டீ பருகினான்...
எதிர் முனையில் பத்மா பேசினாள்...
கதிர் அண்ணா... எப்டி இருக்கீங்க... சொல்லுங்க..
செந்தில் தான்...மா Call பண்ணி இருக்கான்...
எதுக்குனு தெரியல...
அப்டியா!?? குளிக்க போய் இருக்கார் அண்ணா.. வந்ததும் கூப்புட சொல்றேன்..
சரிம்மா என்றவன்... போனை வைத்து...
அம்மா..... அப்பா எங்க??
கிணறு பக்கத்துல மோட்டார் ஏதோ சவுண்ட் அதிகமா வருதுனு Repair பாத்துட்டு இருக்காருப்பா..
சரிம்மா என்றவன் குளிக்க துண்டு எடுத்து கொண்டு சென்றான்...
அரைமணி நேரத்தில்.... ஆபீஸ் செல்ல தயாரானான்..
அம்மா அப்பாவிடம் சொல்லி விட்டு...
இன்னுமா அவ காலேஜ் ரெடி ஆகுறா என்றான்...
இன்னும் அவளுக்கு Time இருக்குடா...
சரிம்மா போய்ட்டு வரேன்... என்று... Bike start பண்ணும் தருணம்... செந்திலிடம் அழைப்பு வந்தது...
என்னடா கிளம்பிட்டியா???..
ஆமா டா... இன்னைக்கு மதியம் வரைக்கும் கொஞ்சம் வேலை அதிகம்டா.... சாயிந்திரம் free ஆகிடுவேன்..
சரி அப்போ Evening வீட்டுக்கு வா...
படத்துக்கு போலாம் என்றான்..
ம்ம்ம் சரி டா.. என்றவன்...
போனை வைத்து விட்டு பைக்கை சாலையில் விரட்டினான்...
Traffic சிக்னலில்...வண்டி நின்றது...
தன் அருகினில் ஒரு Bike -ல்... அவனும் அவளும் பசை போட்டு ஒட்டியது போல் இருந்தனர்...
காதோரத்தில் ஏதோ பேசி சத்தமாக சிரித்தனர்.... அந்த சந்தோஷத்தில் காரணமின்றி அவன் வண்டியை ஏகமாக திருகி சப்தமிட்டான்...
அதை பார்த்த கதிர்...
தன் வெறுமையான பின் சீட்டை பார்த்தான்...
இதே போல் என்னை அணைத்து கொண்டு வரபோகிறவள்... யார்?? காதோரத்தில் கிசு கிசுப்பாய் கொஞ்ச போகிறவள் யார்???....
முகம் தெரியாத...அவளை நான் நினைப்பது போல்... இந்நேரம் என்னை அவள் நினைப்பாளா???
என்ற கேள்வியோடு...
சிக்னலின் பச்சை நிறத்திற்கு....
அனிச்சையாய் கியர் மாற்றி புறப்பட்டான் கதிர்.
தொடரும் 💞...
💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚