💜💜💜 காதலை💞தேடி... 💜💜💜
K💞M Part-2
சிறிய ஓசையோடு அறையில் மின்விசிறி ஓடி கொண்டிருந்தது....
ஜன்னல் வழியே வந்த காற்றில்... திரைசீலை லேசாக அசைந்தது....
வெளியே இன்னும் விடியவில்லை என்று வானம் அறிவுறுத்தியது...
கனவிலிருந்து கலைந்தவன்..
சிறிது பதற்றம் விலகியதும்...
அவன் உதட்டில் வெட்க புன்னகை வெளிப்பட்டது...
கொட்டாவி விட்டபடி மெதுவாக எழுந்தான்....
தன் போன் எடுத்து Time பார்த்தான்...
மணி 4:50 காட்டியது...
வழக்கமாக 5 மணிக்கு Walking செல்வது வழக்கமாக கொண்டவன் ஆதலால்... வேகமாக எழுந்து முகம் கழுவி..Track Pant, T-shirt உடன்
Ready ஆனவன்...தன்
அறையிலிருந்து வெளிப்பட்டான்.
இன்னும் அம்மா அப்பா ஹாலில் தூங்குவதை பார்த்து... அவர்களுக்கு தொந்தரவு தராமல்.... சத்தமிடாமல்... கதவை சாத்தியபடி....Sports Shoe -வுடன் சாலையில் இறங்கினான்...
தெருவில் இறங்கி நடந்தவனை லேசான குளிர் காற்று அணைத்து கொண்டது..
கோவிலில் சுவாமி பாடல் சத்தமாக ஒலித்தது.... ஒரு சிலரே தெருவில் தென்பட....
மெதுவாக நடந்தவன் சற்று முன்பு கண்ட கனவை நினைத்து.... தனக்கு தானே சிரித்து கொண்டான்..தாடியை தடவி...
மீண்டும் அந்த பெண் முகத்தை நினைத்து பார்த்தான்...
கனவில் அவ்வளவு துல்லியமாக தெரிந்த முகம் இப்போது அவனுக்கு நினைவில்லை....
இந்த கனவெல்லாம் மறுநாள் வீடியோ ல பாக்குற Technology எல்லாம் Future கண்டு பிடிச்சா... எவ்வளவு நல்லா இருக்கும்..
என்று நினைத்து கொண்டான்..
கனவில் அந்த பெண் Love❤️ சொன்னதும் நான் அப்டியே சிலிர்த்து தானே போனேன்..
அப்புறம் ஏன்?? பேயோட்டம் ஓடி போய் மலையில இருந்து விழுந்தேன்...
ஒரு வேளை 2-ம் வேற வேற கனவோ!!ரெண்டும் Merg ஆகி ஒரே கனவா நமக்கு தெரிஞ்சிதோ.. என்று நினைத்தவாறு....
காற்றில் இரு கைகளையும் வீசி...
தன் நடையை வேகமாக்கினான்.....
1 மணி நேரம் Walking முடித்து வீட்டுக்கு வரும் தருவாயில்...
தன் அப்பாவிற்கு தெரிந்த பெரியவர் ஒருவர்...
கதிர் தம்பி... எப்படி??ப்பா இருக்க என்றார்..
ஆஹான்.. நல்லா இருக்கேன் அங்கிள்....
அப்பா பாண்டியன் எப்டி?இருக்காரு.. இப்போ எல்லாம் பாக்கவே முடியல...
Retired ஆகிட்டாருல....
ஆஹான் Retired ஆகிட்டாரு.. அங்கிள்...
15 நாளு இருக்கும்.. ஏதோ வேலைக்கு போற மாதிரி வேகமா போய்கிட்டு இருந்தாரு... பேச முடியல...அதான் கேட்டேன்..
வீட்ல ரெஸ்ட் எடுக்க சொன்னா கேக்காம..
அவரோட friend Construction Company la Consultant -a போய்கிட்டு இருக்காரு...
Ohh அப்படியா!!??
சரி சரி அவருக்கும் வீட்ல இருக்குறது bore அடிக்கும்ல...
சரி..ப்பா அப்புறம்.. உங்கப்பாவ பாத்து தான் கேக்கணும்னு நெனச்சேன்... உன்கிட்ட கேக்கலாம்ல.. உனக்கு ஒண்ணும்..
சொல்லுங்க அங்கிள்.. ஒண்ணும் பிரச்சனை இல்ல
அது...ப்பா எனக்கு தெரிஞ்சவங்க... ஒருத்தவங்க...
புருஷன் பொண்டாட்டி 2 பேர் தான் வயசானவங்க....வீடு ஏதாச்சும் காலி இருக்குமான்னு கேட்டாங்க.
எனக்கு உங்க வீடு மாடி Portion நியாபகம் வந்துச்சு.... அது வாடகைக்கு விடற ஐடியா இருக்காப்பா..
இல்ல அங்கிள்....
ஆல்ரெடி வாடகைக்கு இருந்தவங்க சரி இல்ல.. அவங்க காலி பண்ண வைக்க ரொம்ப கஷ்டபட்டுட்டோம்....
Future la ஏதாச்சும் Business க்கு தேவப்படும் அப்பா வச்சி இருக்காரு..
வாடகைக்கு விட்டா..
தேவைப் படும்போது கிடைக்காதுனு அப்பா அந்த ரூம்..ம
சும்மா பூட்டி தான் வச்சிருக்காரு அங்கிள்...
Ohh அப்டியா!!.. கதிர்.
என்றவர் சிறிது யோசித்து....
சரி...ப்பா... நான் அவங்க கிட்ட வேற ஏதாச்சும் சொல்லிக்கிறேன்...
அப்பாவ விசாரிச்சதா... சொல்லிடுப்பா..
கண்டிப்பா அங்கிள் என்றவன்...
அவரிடம் விடை பெற்று...
தன் வீட்டை நோக்கி நடந்தான்.
கடையில் பால் பாக்கெட் வாங்கி கொண்டு... அவன் வீட்டு பக்கம் திரும்பியவன்...
வீட்டு வாசலில்...
தன் தங்கை காயத்ரி கோலம் போடுவதை...பார்த்தான்.
சற்று தள்ளி கதிருக்கு முதுகை காட்டிய படி... Sports சைக்கிளில் அமர்ந்து.....
காயத்ரி-யை வைத்த கண் வாங்காமல் ஒருவன் பார்த்து கொண்டிருப்பதை கவனித்தவன்... நடையில் சற்றே வேகத்தை காட்டி..
கோபமாக அவன் பின்புறம் தோளை தொட்டான்...
தொடரும் 💞
💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜