முழு தொகுப்பு..இரட்சகியே திம...

By thabisher

16K 575 116

a suspense police love story ..read பண்ணி பாருங்க😊 More

திமிர் 1💓
திமிர் 2💓
திமிர் 3💓
திமிர் 4💕
திமிர் 5 💕
திமிர் 6 💕
திமிர் 7 💕
திமிர் 8❣️
திமிர் 9 ❣️
திமிர் 11😎
திமிர் 12😎
திமிர்13😎
திமிர் 14😎
திமிர் 15😎
திமிர் 16😎
திமிர் 17 😎
திமிர் 18😎 pre final
திமிர் 19😎final and epilogue

திமிர் 10😎

642 29 7
By thabisher

அவளது அழுது வீங்கிய முகத்தை பார்த்து பிரேமுக்கு மனம் வலித்தது....மெதுவாக அவள் கரங்களை பிடித்தான்....

அவளுக்கும் ஆறுதல் தேவை பட்டது போலும்....அவன் தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்......

என் அம்மா..அப்பா..இறந்ததற்கு அப்புறம் என் அப்பாவின் அப்பா அதாவது என் தாத்தா வீட்டுக்கு அனுப்பி வைச்சாங்க..😖.அங்க ஏற்கனவே என் அப்பா மேல இருந்த கோபம் என்மேல திரும்புச்சு...😖..தாத்தா பாட்டி கொஞ்சம் பாசம் காட்டினாலும் சித்தப்பா - சித்தி,அத்தை - மாமாவ மீறி அவுங்களாள ஒன்னும் பண்ண முடியலை 😖😖😖....சித்தப்பவுக்கும் அத்தைக்கும் எங்க எனக்கும் சொத்துல பங்கு போட வேண்டுமோனு நினைச்சுகிட்டு என்ன பாடா படுத்துனாங்க 😭😭😭😭...
வீட்டு வேலை செய்வது மட்டும் கொடுமை இல்லை பிரேம்...வார்த்தைகளால் வதை படுவது கூட கொடுமை தான்😭😖😖...

ஆனால் ....அதை விட கொடுமை ....😭😭அந்த வயதில் எந்த குழந்தைக்கும் வர கூடாத கொடுமை😖😖 என சற்று நிறுத்தினாள்....
பிரேம் கையின் அழுத்தம் கூடியது....பின் மீண்டும் தைரியம் வந்தவலாக பேசினாள்....

என் மாமா...அதாவது என் அத்தை வீட்டுக்காரன்😖...என்னை பார்க்கும் பார்வை 😐😐 அருவெறுப்பின் உச்சம்...ஒரு 12 வயது குழந்தை என்று கூட பாராது கண்ட இடங்களில் தொடுவான்... முதலில் அது  ஏன் அப்படி செய்கிறான் என்று கூட தெரியவில்லை...நான் வயதுக்கு வந்த பிறகு அவன் தொல்லை அதிகமானது.😓😓😓அந்த நாய்....அங்கிருந்த 6 வருடங்களில் அந்த நாயிக்கு பயந்து எத்தனையோ இரவுகள் தூங்காமல் இருந்துள்ளேன்....திடீரென இரவில் காலில் எதோ ஊர்வது போல் இருக்கும்...விழித்து பார்த்தாள் கால் மாட்டில் அவன் அமர்ந்து இருப்பான்..சத்தமாக கத்தி விடுவேன்...அவன் பயந்து ஒடி விடுவான்..அதன் பின் நடு இரவில் கத்தியதற்காக அடி விழும்...எனக்கென அந்த வீட்டில் தனி அறை எல்லாம் இல்லை😓😓😓😓..இங்கு இடம் உள்ளதோ அங்கு தூங்குவேன்....

ஒரு நாள் வீட்டில் அனைவரும் கோவிலுக்கு சென்று விட்டனர்.....அந்த சனியன் மட்டும் வீட்டில் இருப்பது தெரியாமல் நான் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றேன்..😓😓😓

உடை கூட மாற்றாமல் கிட்செனில் காஃபி போட்டு கொண்டு இருந்தேன்😓😓பின்னால் வந்தவன் என் தோளை தொட்டான்....சட்டென விலகினேன்...அதை எதிர்பார்த்தான் போலும் அவன் பிடி இறுகியது😐😐....பக்கத்தில் இருந்த கரண்டியை எடுத்து தலையில் நன்றாக அடித்தேன்...சட்டென அவன் பிடி தளர்ந்தது....உடனே ஓடினேன்...ஆனால் .. கிட்சென் கதவை தாழ் போட்டு இருந்தான்😓😓...

அதை திறப்பதற்குள்....மீண்டும் எனை நெருங்கி விட்டான்...அவனிடம் போராடினேன்...அந்த போராட்டத்தில் என் ஆடைகளும் ஆங்காங்கு கிழிந்தன 😭😭😭😭....வலுக்கட்டாயமாக என்னை.....என்னை........ 

போதும் வேண்டாம் ....நிறுத்து பாரதி....😐😐பிரேம் கத்தினான்....சஞ்சனா அவள் கதையை கேட்டு ஒரு புறம் அழுது கொண்டு இருந்தாள்....அந்த பிஞ்சு மனதில் ஏற்பட்ட காயம் பெரிதல்லவா???

பாரதி பாவம்...அவளுக்கு ஏன்??என கேட்கலாம்???இன்று இதே போல் பாரதிகள் அதிகம் உள்ளனர் ..வீட்டுக்கு வெளியே பாதுகாப்பு இல்லை என நினைக்கிறோம்😓😓ஆனால் வீட்டுக்குள் நடக்கும் கொடுமைகள் அதிகம்...இதனால் மனஉளைச்சல் அதிகமாகி யாரிடம் சொல்வதென கூட தெரியாமல் பித்து பிடித்த நிலைக்கு போகும் குழந்தைகள் இந்த இரு வருடத்தில் 27% உயர்ந்துள்ளது..என PIB REPORT சொல்லுகிறது...சட்டங்கள் சரி இல்லை தண்டனைகள் சரி இல்லை என சொல்வதை விட...அப்படி செய்ய நினைக்கும் கயவர்களுக்கு தாமே தண்டனை தரும் கலைகளை பிள்ளைகளுக்கு கற்று கொடுக்கலாமே🤔🤔(இது என் தனிப்பட்ட கருத்து))உங்கள் கருத்துக்களை சொல்லலாம்...

அந்த வயதில் அதற்கெல்லாம் அர்த்தம் கூட தெரியாத வயதில் பலாத்காரம் செய்யபட்டேன்....ஆடைகள் கிழிந்த நிலையோடு இருந்தேன்..எனக்கு வந்த ஆத்திரத்தில் அங்கிருந்த கத்தியை எடுத்து அவன் உடல் முழுதும் கீறினேன்.....ரத்த வெள்ளத்தில் கிடந்தான்....ஒரு போர்வையை போர்த்தி கொண்டு ஓடினேன்.,ஓடினேன்....ஒரு பஸ் ஸ்டாண்டில்  ஒரு பெண் காவல் அதிகாரி இருந்தார்....

அவரிடம் என் கதையை கூறினேன்...அவர் உடனே என்னை ஒரு ஹோமில் சேர்த்தார்.....பின் வேறு எதையும் யோசிக்காதே நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்றனர்.......கிட்ட தட்ட பைத்தியம் ஆகும் நிலையில் இருந்தேன்.....இரவெல்லாம் தூக்கம் வராது...எழுந்து கத்துவேன் 😭😭😭யாராவது ஒரு பெண் என் அருகில் வந்தாள் கூட வெறி பிடித்து கத்துவென்... மன நல மருத்துவர் வைத்து எனக்கு கவுன்சிலிங் கொடுக்க பட்டது....1 வருடம் படிப்பு கூட நிறுத்தி விட்டு எனக்கு கவுன்சிலிங் கொடுத்தனர்....

பின் சிறிது சிறிதாக நார்மல் ஆகினேன்....எந்த பையன்களிடமும் பேசமாட்டேன்...எனக்குள்ளேயே இருக ஆரம்பித்தேன்😐😐....

14 வயதில் எனக்கு அறிமுகமானவன் அக்னி தேவன்....அவன் அம்மா அவன் கண் முன்னே  தீ வைத்து தன்னை எரித்து தற்கொலை செய்து கொண்டார்...அதை பார்த்து அவனும் என் நிலையில் தான் இருந்தான்....கத்துவான்,அனைவரையும் அடிப்பான்..எனக்கு என்னயே பார்ப்பது போல் இருந்தது......நானே தான் என்னையும் அறியாமல் அவனருகில் சென்றேன்.....என்னை தலை முடியோடு பிடித்து சுவற்றோடு அடித்தான்....இரத்தம் பெருகியது...1 வாரம் கழித்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினேன்....அவனுக்கு குற்றவுணர்வு இருந்தது போலும்....என் அருகில் வந்தான் ....
அன்று ஆரம்பித்தோம்.....ஏனென்று தெரியவில்லை அவன் ஆண் என்ற என்னமோ அவனும் அந்த கயவனின் இனம் என்ற என்னமோ மட்டும்  எனக்கு தோன்றவில்லை 😐😐😐..

நான் இழந்த சொந்தங்கள் அவன் மூலம்
கிடைத்ததை போல் உணர்ந்தேன்....
அவனுக்கும் அதே தான்...சில நபர்கள் நம் மனதில் காரணங்கள் இன்றி நுழைவர்....ஆனால் என்ன ஆனாலும் அவர்களை விட்டு இருக்க முடியாது....
எங்கள் இருவருக்கும் எப்பொழுதும் தனி உலகம் இருக்கும்....அதில் யாரையும் நுழைய விட்டதில்லை......என் உலகம் அவனும் அவன் உலகம் நானும் தான்.....இன்று வரை....என் கண் அசைவை வைத்தே என் மனதில் உள்ளதை சொல்வான்....நானும் அப்படித்தான்.....

அவனுக்கு பிறகு என் வாழ்வில் சற்று வசந்தம் தர வந்தவள் தான் விவேகா.....😭😭....நான் சொல்வதை மறு வார்த்தை பேசாமல் செய்வாள்....நான் சிரிக்கிறேன் என்றால் அதற்கு பின் உள்ள காரணம் அவளாக தான் இருப்பாள்....என் சுயநலத்துக்காக இன்று அவள் உயிரை நானே பறித்துவிட்டேனே😭😭

அவள் மனம் மொத்தமும் கொட்டி விட்டாள்....ஏனென்று தெரியவில்லை .அவனிடம் அவளால் மறைக்க முடியவில்லை..மனம் அவனை நாடினாலும் பட்ட காயம் அவனை ஏற்க மறுக்கிறது 😐😐😐இந்நிலை மாறுமோ????

நேற்று என்னோடு தான் இருந்தாள்...பின் நேரமாகி விட்டதால் கிளம்புகிறேன் என்றாள்.....வீட்டுக்கு சென்றதும் ஃபோன் பண்ணி என்றேன்..ஃபோன் வர வில்லை...😖😖நான் அடித்தேன்...அவள் எடுக்க வில்லை..இன்று காலை செய்தி பார்த்து ஒடிவந்தேன்.....சஞ்சனா கூறி அழுதாள்....

இவளிடம் இங்கு சென்று சொல்வது...இதற்கு உன் கணவன் மேல்தான். எனக்கு சந்தேகம் என!!!!😐😐😐😐- தீயின் மனம்..

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

அக்னி...என அழுதுவிட்டாள்..ஜெனி....

ஜெனி..என்னாச்சு....அழாதே....சொல்லுமா...

அவர்கள் பிரேத பரிசோதனை அறிக்கையில் தவறு செய்தது நான் தான்😭😭😭😭😭....இல்லை என்றால் என் அம்மா அப்பாவை கொன்று விடுவதாக மிரட்டினர்....என் அம்மாவின் கழுத்தில் கத்தியை வைத்து ரிபோர்ட்டை மாற்றி எழுத வைத்தனர்....😭😭😭😭😭😭😭அதனால் தான் அன்று கூட நீங்கள் இன்னொரு முறை கூட பரிசோதனை செய்யுங்கள் என உன்னிடம் கத்தினேன்...அப்பொழுதாவது நீ உண்மையை கண்டு கொள்ளட்டும் என்று தான்....

இன்னும் என் அம்மா அப்பா அவர்கள் பிடியில் தான் உள்ளனர்😭😭😭😭😭உன்னோடு உள்ள பழக்கத்தை விட்டு விட சொல்லி மிரட்டினர்..இல்லை என்றால்...நான் உன்னிடம் உண்மையை சொல்லி விடுவேன் என பயந்தனர்...என் அம்மா அப்பாவுக்காக தான் உன்னிடம் சண்டை இட்டு சென்றேன்..😭😭ஆனால்....

என்னால் முடியவில்லை...நீதான் என் உயிர்...நீ இல்லாமல் என்னால் மூச்சு கூட விட முடியவில்லை அக்னி...என அழுது தீர்த்தாள்...அவன் அதிர்ச்சி மாறாமல் இருந்தான்....இப்பொழுது நான் உன்னிடம் வந்த விஷயம் கூட அவர்களுக்கு நிச்சயம் தெரிந்து இருக்கும்.....

என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை அக்னி😭😭என் அம்மா அப்பாவை எப்படியாவது காப்பாற்று...உன்னோடு வாழ நான் கொடுத்து வைக்க வில்லை..😭😭😭என அழுது கொண்டே...நான் கிளம்புகிறேன் அக்னி..என்னை தொடராதே..அப்புறம் உனக்கும் ஏதாவது என்றால் நான் உயிருடன் இருக்க மாட்டேன்..இது என் மேல் சத்தியம்....😐😐😐.

ஜெனி... ஜெனிமா...சொல்வதை கேள்...எங்கும் போகாதே......என்னிடம் சொல்லி விட்டாய் அல்லவா???என் மேல் நம்பிக்கை இருக்கிறது அல்லவா??அப்படியானால் இங்கிருந்து செல்லாதே...
விட மாட்டேன்...ஒருவனையும் விட மாட்டேன் 😈😈😈👿👿👿👿என கர்ஜித்தான்......

நீ இரு உனக்கு முதலில் உணவு எடுத்து வருகிறேன்....

அவன் சென்றதும்..... கண்ணிரை துடைத்தவள்....நானே என் அம்மா அப்பா கழுத்தில் கத்தி வைக்க சொன்னேன்😏..நானே அதை எனக்கு அனுப்ப சொன்னேன்😏😏...நானே என்னை கொல்ல ஆள் செட் செய்தேன்😏😏😏😏இதெல்லாம் உன்னிடம் சொல்லத்தான் ஆசை😂😂😂.....

அக்னி எப்படி போலீஸ் ஆனான்??இப்படி இருக்கானே??என அவனை திட்டலாம்...ஆனால் யோசியுங்கள்...மாம் ஒருவரிடம் அளவு கடந்த காதல்,அன்பு வைக்கும் போது சில நேரங்களில் அவர்களை கண் மூடி தனமாக நம்புவோம்😐😐😐உண்மையான அன்பிற்கு சந்தேகிக்க தெரியாது...அவள் பொய் என்றதும் அந்த அன்பு அவளுக்கு கொடுக்க போகும் தண்டனையும் பெரிதாக தன் இருக்கும்...அடி பட்டவர்கள் சீரும் போது அதை தாங்கவும் இயலாது..🙏😐😐

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

இன்னிக்கு கதை கொஞ்சம் ஓவர் கருத்தாக போய் விட்டது...ஆனால் பரவாயில்லை..என் கதைகளில் நிச்சயம் ஒரு கருத்து இருக்கும்!!😊😊உங்கள் கருத்துக்களை சொல்லலாம் 👍👍நான் உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து கொண்டு இருப்பேன்😊😊😊😊...

மறக்காமல் கமெண்ட் பண்ணுங்கப்பா 🙏🙏😊😊😊

Continue Reading

You'll Also Like

24.9K 1.3K 76
நான் விரும்பிடாத இன்பம் நீ ... உனை விரும்பும் துன்பம் நான்...!
153 12 3
💕எதிர்பாராமல் சேரும் பிரிந்த காதலர்களின் டாம் அண்ட் ஜெர்ரி லவ் ஸ்டோரி 'வித்' மகனுக்கும் தாயிற்க்குமான பாசப்போராட்டம்💕
20.1K 804 23
தன் திமிரினால் தொலைத்த வாழ்வை திரும்ப பெருவாளா நாயகி???💘💘இல்லை வாய்ப்பு ஒரு முறை தன் என தொலைத்து விடுவாளா???
20.9K 499 55
ஆன்ட்டி ஹீரோ வகை காதல் கதை..