காலங்காத்தால 5 மணிக்கு இவ எங்க கிளம்பிட்டு இருக்கா??என இருவரும் மனதில் நினைத்துக் கொண்டு கிளம்பி கொண்டு இருந்தனர்...தீயும்,விவியும்....
தீயின் முகம் இறுகி இருந்தது.....அவளிடம் கேட்க விவிக்கு பயம்... கேட்டால் நிச்சயம் சொல்ல மாட்டாள்....
ஆர்வம் தாங்காமல் கேட்டு விட்டாள்...எங்க போற தீ??
பீச்க்கு வாக்கிங்.....
நீ???
நான் ஜிம் போறேன்...
இருவரும் கிளம்பினார்....
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
பச்சை பட்டு சரசரக்க..... மணபெண்ணின் ஆபரரணங்கள் தரித்து முதல் முறையாக வெட்கம் என்னும் அணியையும் தரித்து.,...குனிந்த தலை நிமிராமல் மணமேடை நோக்கி வந்து கொண்டிருந்தாள் தீ......💑💑💑💑
மேடையில் அமர்ந்து ஐயர் சொல்லும் மந்திரங்களை கடமைக்கு உச்சரித்து கொண்டு நொடிக்கொரு முறை மணமகள் அறையை பார்த்து கொண்டே அமர்ந்து இருந்தான் பிரேம்....😀😀
அவள் வருவது அறிந்ததும் இமைக்க மறந்தான்.....😍😍...அக்னியில் அய்யர் கொடுப்பதை கையோடு சேர்த்து கொண்டு சென்றான்😨...திடீரென தண்ணீர் ஊற்றினா் அவன் மேல்...
ஆ..அய்யயோ.....மண்டபத்தில் மழை பெய்யுதே....என் தீ நனைய போகிறாள்..என கத்தி்கொண்டே எழுந்து அமர்ந்தான் பிரேம்😂😂😂😂😂😀😀😀😀😀😀
எதிரே அவன் அம்மா....
அம்மா...நீங்களா??எங்க மணமேடை?எங்க ஐயர்??? எங்க என் தீ??😂😂😂😨😨😳😳😳
அப்படியே ஒன்னு விட்டேனா??பாரு??காலங்காத்தால வாக்கிங் போனும் 5 மணிக்கு எழுப்பி விடுனு உயிர வாங்கிட்டு... எழுப்புனா எந்திக்காம தீ வேணும் கல்யாணம் பண்ணனும்னு கதை சொல்லிட்டு இருக்க... போடா எரும👿👿👿👿
ஐயோ...இதுவும் கனவா???தலையில் அடித்து கொண்டு கிளம்ப சென்றான்...
என்று அவளை முதலில் பார்த்தேனோ அன்றிலிருந்து எனக்கு என்ன தான் ஆனதோ??
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
இது என்னடா சோதனை..எங்க பாத்தாலும் இவளே தெரியுறா???கண்ணை கசக்கி கொண்டு பார்த்து கொண்டு இருந்தான் பிரேம்....
அவள் கனவில் வரும் காரிகை பீச்சில் அமர்ந்து இலக்கற்று வெறித்து கொண்டு இருந்தாள்😐😐😐😐......
மெதுவாக அவள் அருகில் சென்றான்....
ஏங்க.....
திரும்பியவள் அவனை ஒரு முறை பார்த்து விட்டு மீண்டும் கடலை வெறித்தாள்...
இவ ஒருத்தி ஒன்னுக்கும் பதில் சொல்ல மாட்டா..இந்த பாழா போன மனசு இப்படியே இவள விட்டுட்டு போகவும் கேக்க மாட்டிங்குது....
அவள் அருகிலேயே அமர்ந்தான்.....மனசு ரொம்ப துக்கத்துல இருக்கும் போது யாருக்கிட்டயாவது நம்ம துக்கத்த சொன்னா கொஞ்சம் relax ஆகும்....ஒரு நண்பனா என்ன நினைச்சுக்கோங்க.......
சற்று நேரம் பலத்த அமைதி......கடலை பார்த்தே பேச துவங்கினாள்.....
16 வருடங்களுக்கு முன்... இதே நாளில் தான். என் வாழ்வின் மொத்த சந்தோஷமும் இருண்டு போனது....இன்று... என் அம்மா அப்பா இறந்த நாள்😓😓...கண்களில் கண்ணீர் இல்லை ஆனால் அவள் குரலில் வலி இருந்தது..😐😐
ரெண்டு பேரும் ஒரே நாளில் இறந்தாங்களா????எப்படி??
ஆமா...... கொன்னுட்டாங்க......
என்ன???😨😨😨யாரு?? எதுக்கு???
அவனை ஒரு முறை பார்த்தவள்....ஏனோ மனம் அவளையும்
நான்,அம்மா,அப்பா...எங்க குடும்பம் சின்னதா அழகான குடும்பம்..😳😳அம்மா அப்பா காதல் திருமணம்...ரெண்டு வீட்லயும் பேச மாட்டாங்க...அம்மா ஓடி வந்து கல்யாணம் பண்ணிகிட்டதால அம்மாவோட அப்பா அவமானத்துல தூக்கு போட்டு இறந்துட்டாரு.... அதை பார்த்த அதிர்ச்சியில் பாட்டி பைத்தியம் ஆகிட்டாங்க...😐😐😐😐
ஆனாலும் அப்பா...அம்மாவுக்கு எந்த குறையும் இல்லாம ரொம்ப சந்தோஷமா வச்சுருந்தாரு....அப்பா ஒரு sub inspector.. அம்மா ஒரு private hospital நர்ஸ்....ரெண்டு பேரும் ரொம்ப நேர்மை...பாரதி கண்ட புதுமை பெண்ணாக நான் வளர வேண்டும் என நினைத்து என்னை வளர்த்தனர்..பயம் எதற்கும் கூடாது...நான் journalist ஆக வேண்டும் என்பது அப்பாவின் கனவு..எனவேதான் இந்த துறைக்கு வந்தேன்😲😑😑...
அம்மாவோட ஆஸ்பத்திரியில அன்னிக்கு ஆபரேஷன் எதுவும் appointment இல்ல....ஆனா ஆபரேஷன் தியேட்டர்ல புதுசா வந்த டாக்டர் யாருக்கோ ஆபரேஷன் பண்ணிட்டு இருந்துருக்காரு.....அது நைட் நேரம்..அம்மாவுக்கு night ஷிஃப்ட்...அப்போதான் அம்மாவுக்கு தெரியவந்தது அங்க இல்லீகல் ஆபரேஷன் அதாவது.....அனாதைங்க,ஆதரவற்றோர் இவுங்கலை கூட்டிட்டு வந்து அவுங்களோட parts எடுத்து நல்ல விலைக்கு வித்துடுவாங்க..😨😨
அம்மா அதை அப்படியே வீடியோ எடுத்து chief டாக்டர் கிட்ட அனுப்பிட்டாங்க....chief டாக்டர் உடனே நடவடிக்கை எடுத்து அதுக்கு துணை போனவங்களையும் சஸ்பென்ட் பண்ணிட்டாரு.....😐😐.. ஆனா அம்மாவுக்கு தெரியாத ஒரு விஷயம் இதுகேல்லாம் காரணம் chief டாக்டர் தான்😠😠...அவன் நேர்மையானவன் அப்படினு பேரு எடுத்து இப்படி பன்னிருக்கான் 😠😠....
இதனால hospital பேர் கெட்டு போச்சு...அந்த சமயத்துல 10 years கழிச்சு அம்மா மறுபடியும் கர்ப்பமானாங்க😐....தொண்டை அடைக்க சற்று நிறுத்தினாள்.....தீ....
பிரேம் கரம் அவனையும் மீறி அவள் தோளில் படிந்தது.....
ரொம்ப சந்தோஷாக இருந்துச்சு.....ஏற்கனவே அம்மா மேல கோவமா இருந்த ஹாஸ்பிடல், case வாபஸ் வாங்க சொல்லி எவ்வளவோ மிரட்டல் வந்துச்சு...ஆனா..அப்பா அம்மாவுக்கு துணையா நின்னாங்க...😐😐😐😖😖
சரியா 16 வருஷத்துக்கு முன்னாடி ..இதே நாள்..நான் school போய்ட்டு வீட்டுக்கு வரும் போது வீடு திறந்து இருந்துச்சு.....😐😖😖
உள்ளே போய் நான் பார்த்தது......தூக்கில் தொங்கி கொண்டு இருந்த அப்பாவைதான்.....பக்கத்தில் அம்மா ....அம்மா...,😲😲😲😭😭 இரத்தம் வடிய மயங்கி இருந்தார்.....
அம்மா....அம்மா.....என எவ்வளவோ முயச்சு செய்து..சற்று நேரத்தில் கண் விழித்தார்...
பாரதிமா....என் அம்மாவும் அப்பாவும் என்னை அப்படித்தான் கூப்பிடுவார்கள்....
நீ...தைரியமான பெண்....இதே தைரியம் எப்பொழுதும் உன்னிடம் இருக்க வேண்டும்....அம்மாவும் அப்பாவும் எப்பொழுதும் உன்னோடு தான் இருப்போம்....என்று சொல்லி உயிரை விட்டார்.....
சற்று நேரம் பலத்த அமைதி.....
பின் அவளே மறுபடியும் ஆரம்பித்தாள்....
இன்று வரை அவர்களை எப்படி கொன்றார்கள் என தெரியாது......
அப்புறம் எங்க வளர்ந்த??
அதுக்கு அப்புறம் தான் என் வாழ்வின் கருப்பு பக்கங்கள் ஆரம்பம்....😲எந்த குழந்தைக்கும் வரகூடாது என் கஷ்டம்.....
அவள் ஆரம்பிப்பதற்குமுன்னால் ஃபோன் வந்தது....சொல்ல பட்ட விஷயத்தில் சட்டென எழுந்தவள்....
வேலை உள்ளது... கிளம்பனும்......பை....
சொல்லி விட்டு சென்றவள்..சற்று நின்று திரும்பி அவனை பார்த்து மெதுவாக புன்னகைத்தாள்....மொத்தமாக விழுந்து விட்டான் பிரேம்....
தாங்க்ஸ் பிரேம்...மனசு கொஞ்சம் relax ஆ இருக்கு.....இந்த விஷயம் உங்களையும் இன்னொருத்தர் தவிர யாருக்கும் தெரியாது....
தாங்க்ஸ் வேணாம் அதுக்கு பதிலா????
ஃப்ரெண்ட்ஸ்?????
சிரிப்புடன் தலை ஆட்டினாள்.... ஹெய்....சீரியஸ்லி.... ஜாலி..என கத்தி கொண்டே ஓடினான்.....
அவன் சென்றதும் மறுபடியும் அவள் முகம் இறுகியது....
நான் பண்றது தப்புனு தெரியும் பிரேம்..ஆனா..எனக்கு வேற வழி இல்ல......
என தனக்கு தானே கூறியவள் சென்றுவிட்டாள்...
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
எதுக்குடி இவளோ வேகமாக வர சொன்ன??? விவி வந்ததும் ஏறினாள்😠😠..
அடுத்து ஒரு மரணம்..... ட்ரீட் பண்ணுன Dr. ஷைலஜா எங்க போனாங்கனு தெரியல....body போஸ்ட்மார்ட்டம் பண்ண GH போய் இருக்கு..வா போகலாம்.....
போகும் வழியில்....
இன்னிக்கு ஜிம்ல நான் யார பாத்தேனு தெரியுமா????
யாரு??
சஞ்சனா...,😳😳
அது யாரு??
ஏய்..சஞ்சனா டி..சஞ்சனா திவாரி...திவாரி குடும்பத்தோட மூத்த மருமகள்...
சட்டென சடன் பிரேக் போட்டாள் தீ... என்ன சொல்ற??
ஆமா...எவ்ளோ நல்லவங்க??பகட்டே இல்லாம பழகினாங்க...😊😊😊..
விவி...இது வரை நான் என்ன கேட்டாலும் செஞ்சுறுக்க...அதே மாதிரி ..இன்னும் 2 விஷயம் செய்யணும்...செய்வியா??
இதென்ன கேள்வி...செய்யாம எங்க போக போறேன்..
அப்போ கேட்டுக்கோ..அந்த சஞ்சனா கிட்ட நீ..இன்னும் close ஆகனும்....அவுங்க குடும்ப கதையே உன்கிட்ட சொல்ற அளவு.....ஓகேவா??
விவிக்கு ஏனென்று புரியவில்லை என்றாலும் சரி என்று தலையை ஆட்டினாள்...
இதனால் தான் விவியின் உயிரே போக போகிறது என தெரிந்து இருந்தால் நிச்சயம் தீ அவளை இந்த விஷ பரிட்சையில் இறக்கி இருக்க மாட்டாள் 😨😨😨😨😨😭😭😭😭😭😭........
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
அரசு மருத்துவமனை....
அனைத்து பிரஸும் வாசலில் தான் இருந்தது....
உள்ளே....
என்ன ஜெனி?? நார்மல் டெத்ஆ??ஒரே மாசத்துல 4 சாவு நாலும் கர்ப்பிணி பெண்கள்.... நாலும் natural மரணம் இத யாராவது நம்புவாங்களா??
நான் என்ன செய்ய??? உள்ளத தான் சொல்ல முடியும்....மூச்சு திணறல்.......குழந்தைய காப்பத்தியாச்சு.....
சார்...வெளிய பிரஸ் வெயிட்டிங்.....
செய்வது அறியாது திகைத்தான்...வெளியே வந்ததும் ....
மாறி மாறி கேள்விகள்.....
சார்....இதோட 4ஆவது மரணம்...போலீஸ் என்ன செய்றீங்க???
போலீஸ் அலட்சியமா??சார்..
சார்.. செத்தவங்க எல்லாம் கர்ப்பிணி பெண்கள்..நியாபகம் இருக்கா போலீஸுக்கு???
விசாரணை துரித படுத்த பட்டுருக்கு....சீக்கிரம் இதுக்கு பின்னாடி உள்ள மர்மத்தை உடைப்போம்....
அப்பொழுது விவி வாயை திறந்தாள்...
சார்...4 மரணமும் natural மரணம் அப்படினு போஸ்ட்மார்ட்டம் பண்ணுன டாக்டர் ஜெனி சொல்றாங்க....அவுங்க ஏன் உண்மைய மறைக்குறதுக்காக அப்படி சொல்ல கூடாது????
அனைவரின் பார்வையும் அவள் மேல் திரும்பியது....மனதுக்குள் தீயை வறுத்து😖😬 எடுத்து கொண்டே மேலே பேசினாள்..
வேற யாரையும் ஏன் டாக்டர் ஜெனி போஸ்ட்மார்ட்டம் செய்ய விட மாட்டிங்குறாங்க???போலீஸ் அவுங்களை விசாரிக்குமா???
ஜெனிக்கு கண்கள் கலங்கியது😵😵...அழுது கொண்டே உள்ளே ஓடினாள்.....
அக்னிக்கு அவள் பின்னால் கூட ஓட முடியவில்லை.. விவியை பயங்கரமாக முறைத்தான்..😬😬.. விவிக்கு உள்ளே குளிர் விட்டது....சட்டென பின்னால் நகர்ந்தாள்...
அப்படியே பின்னால் பார்த்த அக்னியின் கண்ணில் வெற்றி சிரிப்போடு இருந்த தீ பட்டாள்....
அவள் உதடுகள் அசைந்தன.... செக் .....இதை செக்மேட் ஆக்குறேன்.....
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
மறக்காம comment பண்ணுங்க 🙏🙏🙏🙏 கதை எப்படி போகுது????