வீழ்ந்து விடாதே பெண்ணே....

En başından başla
                                    

5. வேலை வாய்ப்பில் ஆண் மற்றும் பெண் பாகுபாடு இன்றி வேலைக்கு ஏற்ப சம ஊதியம் அளிக்கப்பட வேண்டும்(சரத்து 39(d))

6. எந்த ஒரு பெண்ணும் பொருளாதார மற்றும் பிற காரணிகள் மற்றும் காரணங்களுக்காக நீதியை பெறுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது, சம வாய்ப்பின் அடிப்படையில் இலவச சட்ட உதவி அளிக்கப்பட வேண்டும் -சரத்து 39(a)

7. பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு பிரசவ விடுமுறை மற்றும் சுகாதாரமான சூழ்நிலை பெற உரிமை உண்டு -சரத்து 42

8. பெண்களுக்கு சுகாதாரம், வாழும் நிலை, உணவு முறை இவற்றின் தரத்தை உயர்த்தவும் அரசின் கடமையாகும் - சரத்து 47

9. கிராம பஞ்சாயத்து தேர்தலில் மொத்த எண்ணிகையில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்- சரத்து 243 ட

10. ஒவ்வொரு நகராட்சியிலும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் சுழற்சி முறையில் நேரடி தேர்தல் மூலம் நிரப்பப்பட வேண்டும் - சரத்து 243 D

கல்வி கற்பதற்கான உரிமை:-

வறுமை ஒழிக்கவும், வேலையின்மை, சமூக ஏற்ற தாழ்வு முதலிய சமூக அவலங்களை களைய கல்வி ஒரு கருவியாக செயல்படுகிறது, மேற்குரிய சமுக பிரச்னைகளை களைய அரசாங்கம் 5 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாய கல்வி திட்டத்தை 2010 ஆம் ஆண்டு கொண்டு வந்தது.

பெண்களின் மனித உரிமைகளை பாதுகாக்க ஊக்குவிப்பதற்கும், தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள இந்திய தண்டனை சட்டம் குறிப்பிட்டப்படுள்ள சட்ட பிரிவுகள்:-

1. ஒரு பெண்ணுடைய மண்புக்கு குந்தகம் விளைவிக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தெளிவுடன் அவளை வன்முறையில் தாக்குவது, தாக்க முனைவதும் குற்றமாகவும். இந்த குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். -பிரிவு 354

2. பதினாறு வயதுக்கு குறைந்த ஓர் ஆணை அல்லது பதினெட்டு வயதுக்கு குறைந்த பெண்ணை அல்லது சித்தசுவாதீனம் இல்லாத ஒரு நபரை அவர்களை காக்க கடமைப்பட்ட பாதுகாவலரின் சம்மதம்பெறாமல், ஆசை காட்டி இழுத்துக்கொண்டு அல்லது தூக்கிக் கொண்டு போவதைச் சட்டப்பூர்வமான பாதுகாப்பில் இருந்து கவர்ந்துசெல்லுதல் என்று கூறப்படும். விளக்கம்: -பாதுகாவலர்- என்ற சொல் அத்தகைய நபரைப் பராமரிக்கும் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள எவரையும் குறிக்கலாம். விதிவிலக்கு: முறைகேடாகப் பிறந்த குழந்தைக்குத் தான்தகப்பன் என்ற நல்ல எண்ணத்துடன் அந்தக் குழந்தையை எடுத்துச் செல்வது, இந்த பிரிவின்பால் படாது. ஒரு நபரைப் பராமரித்துப் பாதுகாக்கும் பொறுப்பு தனக்கு இருக்கிறது என்ற நல்லெண்ணத்துடன் அப்படி செய்வது குற்றமாகாது. பிரிவு 354 -A

சட்டங்கள் அறிவோம் சரித்திரம் படைப்போம்Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin