chapter 2

977 22 12
                                    


ரேவதிக்கிட்ட சொல்லிட்டு ப்ரியா வேகமா பாட்டிய சேத்துருக்குற ஹஸ்பிட்டலுக்கு போனா.....அங்க போனா அவ அம்மா துளசி வெளியில அழுதுட்டு நின்னுட்டு இருந்தாங்க....இவ வேகமா அவுங்க பக்கத்துல ஓடிப் போனா.....

"மா பாட்டிக்கு என்னாச்சு.....காலையில நல்லாதான என்கிட்ட பேசிட்டு இருந்தாங்க....அதுக்குள்ள என்னாச்சு....."

"தெரியலையே மா....நீ போனதுக்கு அப்புறம்கூட நல்லா தான் என்கிட்டையும் பேசிட்டு இருந்தாங்க....திடீர்னு கீழ மையக்கம் போட்டு விழுந்துட்டாங்க....."

"டாக்டர் என்ன சொன்னாங்க.....ஒன்னும் பயப்பட வேண்டான்ல....."

"இன்னும் எதுவும் சொல்லல மா....வந்து சேத்து ரொம்ப நேரம் ஆச்சு இன்னும் எதுவும் சொல்ல மாட்டேங்குறாங்க....."

"என்னமா நீ மொதல்ல அழுகறதை நிறுத்து பாட்டிக்கு ஒன்னும் இல்லை.....அவுங்க நல்ல மனசுக்கு எதுவும் ஆகாது.....நீ கவலைப்படாம தைரியமா இரு.....நான் போய் டாக்டர் பாத்துட்டு வந்துடுறேன்"னு ப்ரியா அவ அம்மாக்கு தைரியம் சொல்லிட்டு போய்ட்டா....

என்னதான் ப்ரியா அவ அம்மாக்கு தைரியம் சொன்னாலும் அவ மனசுக்குள்ள பாட்டிக்கு எதாவது ஆகிடுமோன்ற பயம் இருந்துட்டே தான் இருந்தது....

டாக்டர்ஸ்ட போய் கேட்டதுக்கு பாட்டிக்கு வயசாகிட்டதால அவுங்க அதிகமா எதை நினைச்சும் ஃபீல் பண்ணாம பாத்துக்கிட்டா அவுங்க நல்லா இருப்பாங்க அதுனால அவுங்க கேட்குறதை பண்ணிக்குடுங்க அவுங்கள சந்தோஷமா வச்சுக்கோங்கன்னு சொல்லிட்டு போய்ட்டாரு....ப்ரியாக்கு டாக்டர் இப்புடி சொல்லவும் பாட்டி காலையில ராம் நினைச்சு வருத்தப்பட்டுக்கிட்டு இருந்தது ஞாபகம் வந்துடுச்சு.....

"பாட்டிக்கு ஒரே கவலை அது அவுங்க பேரினம் பத்தின கவலை....ஆனா அது நல்லா ஹாயா சந்தோஷமா இப்ப எவக்கூட கூத்தடிச்சிட்டு இருக்குறானோ.....அவன் மட்டும் என் முன்னாடி வந்தான்....சீ சொந்த பாட்டிய விட அவன் சந்தோஷம் பெருசா போச்சுல...."னு ப்ரியா வாய்க்குள்ளையே மொனங்கிட்டே வந்தா....

You've reached the end of published parts.

⏰ Last updated: Oct 01, 2018 ⏰

Add this story to your Library to get notified about new parts!

நினைத்தாலே இனிக்கும்❤️❤️❤️Where stories live. Discover now