சரிபோ... நான் போகிறேன்.... காலையில் பார்க்கலாம்... பை...

    டாடா... டா

      ம்... டாடா... டி..

வெகு நேரமாய் உறங்காமல் படுக்கையில் புரண்டாள். சிவ் மீது எனக்கிருக்கும் காதல் அளவில்லாமல் இருக்க.. அவன் மீது கோபம் ஏன்?? அந்தக் கோபத்தின் காரணம் என்ன?? அடிக்கடி என் கண்முன் தோன்றும் காட்சிகள் ஏன்... அது உண்மையில் நடந்துவிடுமோ?? அவ்வாறு ஏன் நடக்கப் போகிறது.. தந்தை மிகவும் நல்லவர்... அத்தோடு நான் சிவ்வை காதலிப்பதாகக் கூறினாலும் தடுப்பவரும் கிடையாது... பிறகு எப்படி அவர்களுக்கு இடையே சண்டை நடக்கும்? கேள்விக்கு மேல் கேள்வியாய் மனம் அடுக்கிக் கொண்டே போனது... மூளையோ விடை தெரியாமல் திணறியது....

      சூரியன் தன் ஒளிக் கற்றையால் தீண்டி, நான் வந்துவிட்டேன் இன்னும்மென்ன தூக்கம் என்பதைப் போல அவளைச் சுட்டது.. எப்பொழுது தூங்கினோம் என்பதே தெரியாமல் அதற்குள் விடிந்துவிட்டாதா என்று சலித்துக் கொண்டாள்.

    மட்சியா.... என்ன இன்று இவள் இவ்வளவு நேரம் தூங்குகிறாள்? அலுவலகத்திற்கு விடுப்பேனும் சொல்லிவிட்டாளா? மட்சியா... என உரக்க அழைத்தார் அவர் அம்மா.

     ம்.. இதோ வரேன்மா...

   என்னம்மா... இவ்வளவு நேரம் தூங்கியிருக்கிறாய்?? அதுவும் நேற்று மாலையிலும் தூங்கினாயே... உடம்பிற்கு ஏதும் சரியில்லையா??

    அதெல்லாம் ஒன்றுமில்லையப்பா... இரவு தூங்குவதற்கு லேட் ஆகிவிட்டது. மாலை தூங்கியதாலோ என்னவோ இரவு சீக்கிரம் தூக்கம் வரவில்லை. அதனால் தான்...

   சரிடா... நீ சிக்கிரம் அலுவலகம் கிளம்பு நான் வந்து பஸ் ஸ்டாப்பில் விட்டுச் செல்கின்றேன்...

   ம் சரிப்பா.... அரைமணி நேரத்தில் கிளம்பிவிடுகிறேன்.

     முதலில் இந்த டீயை குடித்துவிட்டு செல்... என்று அவள் தாயார் கூறினார்.

    அம்மா.. காலை உணவையும் பாக்ஸில் வைத்துவிடு. நான் அலுவலகம் சென்று சாப்பிட்டுக் கொள்கிறேன்.

    சரிம்மா...

    தேநீரை குடித்து முடித்து, நான் கிளம்பிவிட்டு வருகிறேன் என்று அறையை நோக்கி ஓடினாள்.

  
      சொன்னதுபோல் அரைமணிக்கு முன்னதாகவே வந்தாள். எப்பொழுதும் மட்சியா அதிகம் ஒப்பனைகள் செய்ய மாட்டாள். அவள் சாதாரணமாய் பார்ப்பதற்கே மிக அழகாகத் தெரிவதால் ஒப்பனைகள் மிகையாகத் தெரியுமோ என்று மிகவும் சிம்பிளாகவே கிளம்புவாள்.

        இன்றும் அப்படித்தான். வெகு சாதாரணமாய் கிளம்பியும் கூட அழகு தேவதையாய்த் தெரிந்தாள்.

உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....Where stories live. Discover now