1

792 64 96
                                    

(முதலில் முக்கியமான ஒரு விடயம்.
இந்த கட்டுரையின் சொந்தக்காரர் நிச்சியாமாக நான் இல்லை. இந்த எழுத்துக்களின் சொந்தக்காரர் யார் என்பதையும் நான் அறியேன்.

ஆனால் என் வார்த்தைகள் சிலதை நான் இக்கட்டுரையில் சேர்த்துள்ளேன்.

வாசித்த போது பிரயோசனமான இருந்தது. அதனால் இதைப் பகிர்ந்துகொள்கிறேன்)

ஆண்ணும் பெண்ணும் சமமானவர்களல்லர் – ஒரு உளவியல் பார்வை

وَلَيْسَ الذَّكَرُ كَالْأُنثَى
ஆண், பெண்ணைப் போன்றவனல்ல. (அல்குர்ஆன் 3:36)

(இதைப்பார்த்ததும் பெண்ணடிமைத்தனம் என்று எண்ணிக்கொள்ளாதீர்கள். சிறிதே பொறுமையாக வாசித்து விட்டுச்செல்லுங்கள். உள்ளே பொது விடயங்கள் தான் இருக்கின்றன.)

ஆணையும் பெண்ணையும் படைத்த இறைவன் திருமறையில் ஆணும் பெண்ணும் சரி சமமானவர்கள் அல்லர் என்று கூறுகின்றான். இந்த வசனம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருக்கும் அடிப்படை வித்தியாசங்களைக் வேறுபிரித்துக் காட்ட விளைகின்றது.

அத்தோடு இந்த வித்தியாசத் தன்மைதான் இருவரும் சேர்ந்து வாழ வழியமைக்கின்றது. ஆண் பெண்ணின் மீதும் பெண் ஆணின் மீதும் தேவையுடையவர்கள் என்பதை உண்ர்த்துகின்றது.

ஆணோ, பெண்ணோ இருவரும் அரைகுறையானவர்கள். இருவரும் இணையும்போதுதான் அங்கு பூரணத்துவம் ஏற்படுகின்றது.

திருமண வாழ்க்கையில் இந்த ஆண் பெண் வித்தியாசத்தை விளங்கியிருக்கும்போது பிரச்சினைகள் ஏற்படுவது மிகவும் குறைவு. இதனை விளங்காதிருக்கும்போதுதான் “என்னால் முடியும் என்றால் ஏன் உன்னால் முடியாது? உன்னால் முடியுமென்றால் ஏன் என்னால் முடியாதா?” என்ற வெடுக்குத்தனமான கேள்விகளெல்லாம் எழுகின்றது. அதன் தொடராக பிரச்சினைகளும் வெடிக்கின்றன.

எனவே இல்லறத்தில் இணைந்தவர்களும் குறிப்பாக இணையவிருக்கின்றவர்களும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உள்ள உளவியல் மற்றும் பண்பியல் ரீதியான வித்தியாசங்களை அறிந்துகொள்வது மிக முக்கியமானதாகும்.

ஆணும் பெண்ணும்Where stories live. Discover now