சரி. காணொளியை நோட்டம் விடுவோம் என்று பார்த்தேன். தமிழ் நாட்டைப் பற்றி இருந்தாலும் தமிழில் இல்லை. முழுக்கவே ஆங்கிலத்திலான சிறிய மீம் தான். கடலில் கவிழ்ந்த கப்பலையும் கச்சா எண்ணெயையும் அதிரடி முயற்சிகளால் நவீன கருவிகளைக் எவ்வளவு சாவகாசமாக அகற்றுகிறார்கள் என்பது போல் இருந்தாலும் இயல்பான ஒன்றாக இல்லை. மெட்ராஸ் சென்ட்ரல் கோபி சுதாகரிலிருந்து டப்ஸ் சிணுங்கல் தம்பி வரை சகலத்தையும் அலசி ஆராயும் எனக்கு இது வழக்கமானதாகத் தெரியவில்லை. தண்மதி தோசை ஊற்றச் சென்றுவிட்டாள்.
நான் டிவி பார்த்துக்கொண்டிருந்தேன். டங்காமாரி பாடல் ஓடிக்கொண்டிருந்தது. பாடலின் முடிவில் தனுஷ் அந்த பெண்ணை விரலில் துப்ப சொல்லிக்கொண்டிருந்தார். எச்சி தொட்டு காத்துல விட்டா தன்னால அதுவே ஆறிடும் என விளக்கிக்கொண்டிருந்தார். டிவியை ஆஃப் செய்துவிட்டேன்.
பசி நேரங்களில் மூளை வேலை செய்வதில்லை. முறுவல் வாசனை மூக்கின் வழியே நியூரான்களால் மூளைக்கு கடத்தப்பட்டுவிட்டது. மூன்றாவது தோசையைப் பிய்க்கும் போது மிஸ்டர். கதிர் வந்து அருகில் அமர்ந்தார். அவரைப் பற்றி அடுத்த பாராவில் பார்ப்போம். உன் வீட்டுக்காரி சரியான லூஸுப்பா என்ற அரதப் பழசான உண்மைத்தகவலோடு ஆரம்பித்தார்.
நீங்கள் நினைத்தது போலவே கதிர் எங்கள் பையன் தான். 5 வயது ஆனால் வயதுக்கு மீறிய ஐக்யூ. தமிழ் வெறியன். எங்கள் அப்பாவின் ஜீன் போலும். வழக்கமான ஆளெல்லாம் இல்லை. பொதுவாக பெண் குழந்தைகளுக்குத் தன் வயதை ஒத்த ஆண்குழந்தைகளை விட ஒரு 5 வருடம் அதிக மன முதிர்வு இருக்கும். திருமணம் வரை அது மிக அதிகமாக இருக்கும். 20 வயது ஆணை விட 20 வயது பெண்ணுக்கு அதிக எதிர்பார்ப்புகள், கனவுகள் உறவுகளைப் பற்றிய புரிதல் இருக்கும். ஆனால் நம்ம கதிர் இந்த வயதிலேயே நிதானமான, தீர்க்கமான தர்க்க ரீதியில் சிந்திக்கக்கூடிய பையன். சரி இருக்கட்டுமே. சோழர் பரம்பரையில் ஒரு ஐன்ஸ்டீனோ ஹாக்கிங்ஸோ.
“ஏன் அம்மாவை அப்டி சொல்றீங்க?” என்ற படியே அடுத்த தோசைக்கு காத்திருந்தேன். கதிரின் பதிலுக்கும்.
மீப்பேருயிரி- The Giant Creature..
Start from the beginning