"என்னங்க என்னன்னமோ சொல்றிங்க... உங்களுக்கு எப்படி இதெல்லாம்..." கல்யாணி கணவனின் முகத்தை தெளிவில்லாத பாவனையில் பார்க்க,
" எனக்கும் முழுசா விவரம் தெரியலை கல்யாணி... ஆனா கார்த்திக்கின் நடவடிக்கையை பார்க்கும் போது நாம தப்பு பண்ணிட்டோம்னு மட்டும் தெரியுது... ஒருவேளை அவனுக்கு இதுல விருப்பம் இல்லையோ!!" அவர் வருத்ததுடன் கூறினார்....
"இல்லங்க நம்ம பையன் அப்படியெல்லாம் செய்ய மாட்டான்...இதுல அவன் வாழ்க்கை மட்டும் இல்லையேங்க... நீங்க கண்டதை போட்டு குழப்பிக்கிறிங்கன்னு நினைக்கிறேன்... நா... நான் நம்ம கார்த்திக் கிட்ட பேசுறேன்.." அவர் உடனே அலைபேசியை எடுத்தார்...
"பச் கல்யாணி உடனே எதையும் பண்ணாதே... என்னோட யூகம் தான் ஒருவேளை தப்பாக் கூட போகலாம் நீயா எதுவும் கேட்காத புரியுதா.." சற்று கண்டிப்புடன் கூறினார் தேவராஜ்.
மனமே இல்லாமல் அலைபெசியை வைத்தவருக்கு முகமே சரியில்லை தேவராஜின் மனதிலோ ரேவதி அடிபட்ட தினத்தன்று மகன் நடந்து கொண்டதற்கும், இப்போது நடந்துக் கொண்டிருப்பதற்கும் முடிச்சை போட்டது.
தேவராஜ் கார்த்திக்கின் மனதினை கண்டறிவாரா...? இல்லை கல்யாணியின் கூற்றுப்படி மூவரின் வாழ்க்கைக்காக தன் காதலை கார்த்திக் விட்டுக் கொடுப்பானா ???? வரும் நாட்களில் பார்க்கலாம் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை....
...
வலி என்றால் காதலின் வலி தான்
வலிகளில் பெரிது
அது வாழ்வினும் கொடிது
உன்னை நீங்கியே உயிர் கரைகிறேன்
வான் நீலத்தில் எனை புதைக்கிறேன்
இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும் முன்னே கண்ணே காண்பேனோ
இலை மேலே பனி துளி போல்
இங்கும் அங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம்
YOU ARE READING
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...
Romanceஇது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்
அலை 🌊 19
Start from the beginning