டிங் டாங் - 25

Magsimula sa umpisa
                                    

மஹாலக்ஷ்மியை பார்த்தவர், "ஜாதகம் பாத்துப்போட்டு தான இந்த கலியாணம் நடந்துச்சா இல்ல உம்ம மருமவளுக்காக அதையும் பாத்தாச்சுன்னு என்ற காதுல நூலை சுத்துணியலா?" 

"அத்த என்ன அத்த இது? புள்ள மனசு நோகடிக்காதிங்க" 

அவர் வார்த்தைகளை கேட்ட மஹாலக்ஷ்மிக்கே கண்ணீர் பெருக்கெடுக்க வைஷ்ணவியோ பெருகிய அழுகையை சிரிப்பை வைத்து மறைத்து, "கிழவிக்கு குசும்பு ஜாஸ்தி" 

அவருக்காக வாங்கிய காட்டன் சேலையை அவர் கையில் கொடுத்து, "நான் அம்மாவை பாத்துட்டு வர்றேன்" பொதுவாக செய்தியை கூறி அன்னை வீட்டிற்கு ஓடினாள். அன்னையிடம் சம்ரதாயத்திற்காக பேசியவள் சில நிமிடங்கள் அங்கிருந்து கார்த்தியின் வீட்டிற்கு வந்த பொழுது சுப்பிரமணி இருந்தார் இல்லத்தில். 

"என்ன மாமா இன்னைக்கு ஏன் இவ்ளோ லேட்?" 

"ஸ்கூல்ல கொஸ்டின் பேப்பர் வந்தது ம்மா, அதான் சைன் போட்டு வாங்கி வைக்க போனேன், நீ எப்போ வைஷ்ணவி வந்த?" 

"அப்பயே வந்துட்டேன் மாமா அம்மாவை பாக்க போனேன்" மஹாலக்ஷ்மி மருமகளை உண்ண அழைத்தார். 

மருமகள் விரும்பி உண்ணும் உருளைக்கிழங்கு குருமாவுடன் தோசை செய்திருக்க அவளோ ஒரு தோசையோடு வயிற்று வலி என காரணம் கூறி மேலே சென்றதும் கணவனிடம் தன்னுடைய அத்தை வைஷ்ணவியிடம் பேசியதை கூற ஆத்திரப்பட்டவர் அன்னையை இது போல் பேசவே கூடாதென கடுமையாய் எச்சரித்து வைத்தார். அதன் பிறகு சேர்மத்தாய் வைஷ்ணவியிடம் பேசுவதே இல்லை. 

அவளும் மனதின் வேதனை அத்தனையும் மறைத்து ஷெர்லினுக்கு உதவி செய்கிறேன் என கூறி முக்கால்வாசி நேரம் அவள் வீட்டிலேயே இருக்க அதற்கும் ஜாடை மாடையாக சேர்மத்தாய் பேச தங்கள் அறைக்குள் சென்று கண்ணங்களை மூடி கணவனை முடிந்தமட்டும் திட்டி தீர்த்துவிடுவாள் அழுகையோடே. 

ஆறு மாதமாக கணவனின் கை சிறையில் இருந்தவளுக்கு இரவில் இருளும் தனிமையும் துணையாகி போக தலையணையை அணைத்து நடு நிசியை தாண்டிய பிறகும் தூக்கம் வராமல் திண்டாடிப்போனாள். 

டிங் டாங் காதல்Tahanan ng mga kuwento. Tumuklas ngayon