வைஷ்ணவியோ மேலும், "நீ மட்டும் இல்ல மா... நம்ம வீடு செடி, நம்ம ஊரு மலை எல்லாமே இப்போ எல்லாம் எனக்கு அழகா தெரியாதே ம்மா" கண்களை மூடி புருவத்தை தேய்த்தவன் இதழ்களில் இருந்த விரிந்த புன்னகையே அவள் எதை கூற வருகிறாள் என்று புரிந்துவிட்டது.
'என்ன டிசைனோ இந்த பொண்ணு' குழப்பத்துடன் கேட்டவன் அதரங்களில் இன்னும் இதழ் மறையா புன்னகை.
நாளை இரவு சென்னை கிளம்ப வேண்டும் அவன்.
நேற்றே சுந்தரை பார்த்து அவன் பொறுப்பில் கட்டிடத்தை மொத்தமாய் ஒப்படைத்து பல நிமிடங்கள் பேசி தான் வந்தான். இன்றும் நாளையும் குடும்பத்தினருடன் இருக்க திட்டமிட்டு அத்தனை வேலைகளையும் நேற்றே முடித்துவிட்டான். தினம் ஒரு பாட்டு வைஷ்ணவியின் எழுதப்படாத விதி.
இன்னும் வெளியில் பாட்டின் ஓசை கேட்க அந்த பாடலை காதில் வாங்கியபடியே குளியலறை சென்றவன் தன்னுடைய கடமை அனைத்தையும் முடித்து வெளியில் வந்த பொழுது வைஷ்ணவி வீடு மாடி நிசப்தத்தை அமைதியோடு இருந்தது.
கீழே இறங்கி வந்தவன் இலகுவான த்ரீ பை போர்த் பாண்ட் அணிந்து வெள்ளை நிற பனியன் மட்டும் அணிந்திருந்தான். நேராக சமையலறை சென்று அன்னைக்கு உதவ போக, அவர் மகளை சமையலறை பக்கமே விடவில்லை. அவனுக்கு பிடித்த உணவு வகைகளை பார்த்து பார்த்து சமைத்து வைத்தார்.
சகோதரி சுபத்ராவுக்கு கூட பொறாமையாக தான் இருந்தது, "இதுக்காக ஆவது நானும் ஒரு ஆறு மாசம் பாரின் போகணும் ம்மா" என்றாள்.
"இப்போ கூட ஒன்னுமில்ல வர்றியா டா என் கூட?"
சகோதரன் பாசமாய் கேட்க உடனே அன்னை முந்திக்கொண்டார், "போ ப்பா நீ போறதும் இல்லாம என் பேச்சு துணைக்கு இருக்க இந்த புள்ளையையும் கூட்டிட்டு போக போறியா?"
"இந்த கதை தானே வேணாம்ங்கிறது... நான் இருந்தாலும் வைஷ்ணவி ஷெர்லின் வந்துட்டா என்ன மறந்துடுறது, இதுல நான் இருந்தா என்ன இல்லனா என்ன? நல்ல வேலை வைஷ்ணவி உங்க மருமகளா இல்ல"
![](https://img.wattpad.com/cover/264748091-288-k698257.jpg)
YOU ARE READING
டிங் டாங் காதல்
Romance"கார்த்திக்..." வைஷ்ணவி பதட்டத்துடன் தொடங்க, "அப்டி கூப்புடாதிங்க. கோவம் தான் வருது" எவ்வளவு தான் அவன் கோவத்தை கட்டுப்படுத்த முயன்றும் தோல்வியே சந்தித்தான். அவனது காட்டத்தை சிறிதும் எதிர்பார்காதவளுக்கு இது பெரிதும் கலங்கடித்தது. "உங்க கோவம் எனக்கு...
டிங் டாங் - 15
Start from the beginning