டிங் டாங் - 12

Start from the beginning
                                    

"என் அண்ணன் பொண்ண வேணாம்னு சொன்னா அவனை நான் விடுவேனா என்ன?" வைஷ்ணவியை வம்பிற்கு இழுக்க முயன்றார். 

"என்ன பண்ணுவிங்க? என் அவரு மேல கை வச்சிங்க ஒரு பிரளயமே வெடிக்கும் சொல்லிட்டேன்" 

"ம்ம் உன் அவுரு அப்டியே எனக்கு பயந்துட்டாலும்" என மாமியார் சிரித்தவர், 

"நாளைக்கே உனக்கு ரிசல்ட் சொல்றேன்டா" என்றவர் இணைப்பை துண்டித்துவிட்டார். வைஷ்ணவியோ அவனின் இந்த திடீர் முடிவிற்கு என்ன காரணம் இருக்குமோ என்ற யோசனையிலே மஞ்சத்தில் வீழ்ந்தாள்.

மறுநாள் சனிக்கிழமையாக போக வைஷ்ணவிக்கும் ஷெர்லினுக்கும் சுந்தர் விடுமுறை தந்துவிடுவான். காலையில் மெதுவாக சோம்பலுடன் எழுந்து பல் துலக்கி கீழே வந்த வைஷ்ணவியின் காதுகளில் எதிர் வீட்டில் இருந்து வழக்கத்தை விட அதிகமாக வந்த சத்தம் புருவத்தை உயர்த்த செய்தது. 

மாடியை பார்த்தவள் அவன் வீட்டின் வாயிலையும் பார்த்து கீழே செல்ல அவளுடைய தந்தை வழக்கத்தை மாற்றாமல் செய்தித்தாளை வாயிலில் அமர்ந்து பிடித்தபடியே மகளை பார்த்தார். 

ஒரு மாதமாகவே அவளை பார்க்கும் அதே கேள்வி பார்வை தான். திடீரென இவளுக்கு எப்படி வேலைக்கு செல்லும் அளவிற்கு பொறுப்பு வந்தது என்று. 

"என்ன வாத்தி, பார்வை எல்லாம் பலமா இருக்கே" தந்தையை சீண்ட அவர் கையிலிருந்த நாளிதழை பிடிங்கி வாசல் படியில் அமர்ந்து பார்க்க, "என்ன நேத்து போட்ட அதே நியூஸ் மாதிரி இருக்கே" சந்தேகமாய் தாழை கீழிறக்கி தந்தையை பார்த்தாள். 

மகளை பார்த்து வெற்றி சிரிப்போடு, "நீ கதவை தொறந்த ஒடனே நான் நேத்து நியூஸ்பேப்பர் மாத்தி வச்சிட்டேன் திடீர் என்ஜினீயர் அவர்களே" தன்னுடைய முதுகிற்கு பின்னால் இருந்து இன்றைய நாளிதழை எடுத்து மகளுக்கு காட்டினார். 

தந்தையின் சிரிப்பில் கோவமாக சுளித்தவள், "பேரு தான் எ.ஹச்.எம் ஆனா பண்றதெல்லாம் இந்த நாய் மாதிரி" அமைதியாக தனக்கு இரண்டடி தள்ளி படுத்திருந்த அந்த வாயில்லா ஜீவன் வயிற்றை பிடித்து வைஷ்ணவி நசுக்க கதறிக்கொண்டு அது அடித்து ஓடியது. 

டிங் டாங் காதல்Where stories live. Discover now