டிங் டாங் - 5

Začít od začátku
                                    

அதே சுபத்திரை தான் தன்னை போல் வீட்டில் பொழுது போகாமல் வெட்டியாய் இருக்கும் சுபத்ராவை அழைத்துக்கொண்டு ஷெர்லினுடன் ஊர் சுற்றச் சென்று விடுவாள். வெளியில் சுற்றச் சாக்காய் வந்தது சுபத்ராவின் வரவு. அன்னை கேட்டால் சுபத்ராவை கை காட்டிவிடுவாள். 

கார்த்திக் கடந்த நான்கு நாட்களாக மதுரையில் ஏதோ வேலை இருப்பதாகக் கூறிவிட்டு அங்கையே தாங்கிக்கொள்ள இன்று மதியம் இரண்டரை போலத் தான் வீடு வந்து சேர்ந்திருந்தான். 

வந்தவன் உணவைக் கூட உண்ணாமல், "கார் வெளிய நிக்கிதுமா அப்பாவை உள்ள எடுத்து வைக்க சொல்லிடுங்க... எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு நான் தூங்க போறேன்" என்று மாடி நோக்கிச் சென்றுவிட்டான். மாடியில் ஏறி அறைக் கதவைத் திறக்கும் நேரம் எதிர் வீட்டின் மாடியைப் பார்த்தவன் அங்கு ஆள் இல்லை என்று அறிந்த பின்னரே நிம்மதியாக உறங்கினான். 

மாலை மணி ஆரை தொட இன்னும் பத்து நிமிடங்களே இருக்க அது வரை கைப்பேசியில் படம் பார்த்துக்கொண்டிருந்த வைஷ்ணவி வேக வேகமாக எழுந்து குளித்து ராமர் பச்சை நிற பாவாடை, சிகப்பு நிற தாவணியும் மாற்றி வந்தவள் வெளியில் இருக்கும் சில்லென்ற காற்றில் கூந்தல் பறக்கக் காயவைத்து, தலை வாரிப் பட்டு தாவணி மொத்த படிக்கட்டையும் சுத்தம் செய்யத் தாய்க்கு வேலையே வைக்காமல் வந்தாள். 

"மகேஷ் மம்மி" வைஷ்ணவி கத்திக்கொண்டே அடுக்களைக்குள் நுழைந்தாள். 

"எதுக்குடி இப்டி பரபரப்பு? சப்பரம் இன்னும் ஆரமிக்கல" அவள் கையில் அவன் விரும்பி குடிக்கும் இஞ்சி காபியைத் திணித்து பிரிட்ஜில் வைத்திருந்த மல்லிகை சரத்தை எடுத்து வைத்துவிட்டார். 

"வேற நல்ல தாவணியைப் போட வேண்டியது தான?" இதுவும் அழகாக தான் இருந்தது ஆனாலும் இதை சில முறை வெளியில் போட்டு சென்றது உண்டு. 

"நானும் அந்த மஞ்ச தாவணி தான்மா போடணும்னு நெனச்சேன். இந்த ஷெரூ கேட்டுட்டு அதையே அப்ப நானும் போடுறேன்னு சொல்றா... அது தான் இத போட்டேன்" 

டிங் டாங் காதல்Kde žijí příběhy. Začni objevovat