கேட்டை அடைந்து ஹாரனை அடித்தபோது, சத்தத்தில் தாராவும் விழித்துவிட, கண்களைக் கசக்கிக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள் அவள். அதற்குள் போர்டிகோவில் காரை நிறுத்தியிருந்தான் ஆதித்.

"நான் தூங்கல.. சும்மா கண்ணைத் தான் மூடியிருந்தேன்" எனத் தூக்கக்கலக்கம் அப்பட்டமாகத் தெரிந்த குரலில் அவள் விளக்கம் தந்துகொண்டே எழுந்து வீட்டினுள் நுழைய, ஆதித் தன் உதட்டில் படர்ந்த குறுநகையை அடக்க முடியாமல் தோற்றான்.

தூக்கத்தில் வெகுவாகத் தள்ளாடிக்கொண்டே அவள் தன்னறைக்கு நடப்பதைப் பார்த்தவன், சரியாக அறைக்குள் செல்வதை உறுதிசெய்துகொள்ள அவளைப் பின்தொடர்ந்தான்.

மஞ்சள் விளக்குகளின் அரை வெளிச்சத்தில் விருந்தினர் அறையின் கதவைத் திறந்து அவள் உள்ளே செல்ல, அறையினுள்ளே பாய் விரித்து யாரோ படுத்திருந்ததைக் கண்ட ஆதித் திடுக்கிட்டான். சட்டென அறைக்குள் நுழைந்து குழல்விளக்கை முழு வெளிச்சத்தில் ஒளிரவிட்டவன், தாராவின் முன்னால் பாதுகாப்பாக வந்து நின்றான்.

"ஈதா கே? உடே பார்!"

தாரா அவளது உதட்டில் விரல் வைத்து 'ஷ்ஷ்' என்றாள் அவனிடம். "ராணி அக்கா முழிச்சுக்கப் போறாங்க"

மேலும் சில கொட்டாவிகள்.

ஆதித்தின் குழப்பம் தீரவில்லை. ஆனால் விசாரிக்க இது சமயமில்லை என்பதை அறிந்தவன், விளக்கை நிறுத்திவிட்டு வெளியேற, புடவையைக்கூட மாற்றாமல் அப்படியே கட்டிலில் விழுந்து தூங்கிப்போனாள் தாரா.

ஆதித் தன்னறைக்கு வந்து உடைமாற்றித் தூங்கச் செல்லும் வேளையில் கோயமுத்தூரிலிருந்து கைபேசியில் அழைப்பு வந்தது. பர்வதத்தின் பெயரைப் பார்த்தவன் சற்றே அலுப்பாக எடுத்தான் அதை.

"சொல்லுங்க பாட்டி."

"என்னடா கண்ணா.. குரல் ஒருமாதிரி இருக்கு..? என்ன ஆச்சு?"

"ஒண்ணுமில்ல. கொஞ்சம் டையர்டா இருக்கேன்.. இன்னிக்கு ரிசெப்ஷன் பார்ட்டி நடந்தது, விவாண்ட்டா ஹால்ல."

காதல்கொள்ள வாராயோ...Where stories live. Discover now