“அப்புறம் இன்னொரு விஷயம்... மாப்பிள்ளை துவங்கும் போதே கிருஷ்ணா.

“சரிங்க கிளம்புங்க... நாங்க சொல்லி அனுப்பறோம்” விட்டா பேசிட்டே இருப்பானுங்க போல மனதில் வைத்துக்கொண்டு கிருஷ்ணா சிரித்த முகமாக சொல்ல.

“என்ன வெளியே அனும்புவதில் குறியாக இருக்கிங்க? மரியாதை தெரியாத குடும்பம் போல” கூட்டத்தில் ஒரு தலை சொல்ல.

அடக்கி வைத்திருந்த கிருஷ்ணா பொங்கி எழுந்தான்.

“அதான் தெரியுமில்ல முன்னவே குடும்பத்துக்கு மரியாதை தெரியாதுன்னு, அப்போ எதுக்கு இப்படி தயாராகி வாசப் படி ஏறி வந்திங்க”

பக்கம் இருந்த பிரோக்கரை கிருஷ்ணா முறைக்க.

அவரோ, “அம்மா அமைதியா இருங்க எதுக்கு தேவை இல்லாதது பேசிட்டு இருக்கிங்க”

“எதுங்க தேவை இல்லாதது, மரியாதை தெரியாத குடும்பத்தில் மாட்ட வச்சிட்டு நீ போயிடுவ, என் பையன் வாழ்க்கை பாலாகி இருக்கும் நல்ல வேலை தப்பிச்சோம்” மாப்பிள்ளை அம்மா சிலாகிக்க.

“ஓனான் மாதிரி பையனை பெத்துட்டு தங்க புள்ளையாம்ல… தங்க புள்ளையா, திமிரு பிடிச்ச குடும்பம். காசுனா வாயை பிளந்துகிட்டு வந்துட்டு, அதிகாரம் வேற வெளியே போங்கடா கேடி பசங்களா”

“யாரை பாத்து ஓனான் சொல்லுற” இந்த முறை மாப்பிள்ளை எகிறிக் கொண்டு வந்தவன் கிருஷ்ணா சட்டையை பிடிக்க.

“யாரு வீட்டுக்கு வந்து யார் சட்டையை பிடிக்கிற” ஓங்கி ஒரு அறை விட்டவன்.

அந்த கிறுக்கு ஓனான் கீழே விழுந்தான்.

“ஏய் பிரோக்கர் இவன் எங்கே வேலை செய்யறான்னு சொன்ன?”

“***** கம்பெனியில் மேனேஜர்” என்று புரோக்கர் சொல்ல.

“ஏன்டா பரதேசி நாயே மேனேஜர் வேலையில் இருக்க உனக்கு இவ்வளவு திமிரா, என் கீழ நூறுக்கணக்கான மேனேஜர் இருக்காங்க. என் முன்னாடி நிக்க கூட உனக்கு தகுதி இல்லை சட்டைய பிடிக்கிறியா, எங்க வீட்டு பெண்ணை குறை சொல்ல உனக்கு எவ்வளவு திமிர் இருக்கு பரதேசி பயலே”

மனைவியின்...காதலன்!Where stories live. Discover now