***************************** என்ன தவம் செய்தனை... ***************************** பாலா சுந்தர் அத்தியாயம் 1 இன்று... ப்ரித்வியின் திருமணம் முடிந்த மறுநாள்... "நேத்து தான் கல்யாணம் முடிஞ்சது, இன்னிக்கு ரெண்டும் ஒவ்வொரு திக்குல நின்னுட்டு முழிச்சிட்டு இருக்கு. கல்யாணப் பொண்ணும் மாப்பிள்ளையும் நிற்குற நிலையைப் பார்த்தா மனசு பதறுது." என்றாள் ப்ரித்வியின் சரளா பெரியம்மா. இந்தக் காட்சியில் சரளா விவரித்த 'கல்யாணப் பொண்ணு' என்பது சுசி என்ற சுசித்ராவும் 'கல்யாண மாப்பிள்ளை' சரளாவின் தங்கை தேவியின் மகன் ப்ரித்வியும் தான். "இது கூடத்துல நின்னு பேசுற பேச்சா மதினி?" என்று ப்ரித்வியின் தந்தை சரளாவை அதட்டினார். "தேவி என்னைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னதும் நான் வீட்டுல போட்டதைப் போட்டபடி வந்து சேர்ந்துட்டேன் தெரியுமா?" சரளா அழுவதுபோலப் பேசினார். "ஓ?" என்ற ப்ரித்வியின் தந்தை ரவிசங்கர் த