பேறு கால பயன்கள் சட்டம் 1961 (the Maternity Benefits Act 1961)
கர்ப்ப காலத்தில் மற்றும் பிரசவத்திற்குப் பிறகு பெண் ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, பெரும்பாலான சட்டங்கள் மகளிர் ஊழியர்களுக்கு மகப்பேறு சலுகைகளை வழங்குவதை இந்த சட்டம் கட்டாயமாக்குகிறது. இது பத்து அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட அனைத்து கடைகளுக்கும் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
இச்சட்டம் செயல்வடிவம் பெறுவதற்கு முன்பு தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு 1948 ஆம் ஆண்டு ஊழியர்களின் மாநில காப்பீட்டுச் சட்டத்தின் கீழ் மகப்பேறு சலுகைகள் வழங்கப்பட்டன
பிரிவு 1: இச்சட்டம் இந்தியா முழுமைக்கும் பொருந்தும்.
பிரிவு2:
A. அரசாங்கத்திற்கு சொந்தமான
தொழிற்சாலை மற்றும் சுரங்கம் உட்பட அனைத்து தொழிற்சாலை மற்றும் சுரங்கம் அல்லது நிறுவனங்களுக்கும்,
2.பத்து அல்லது பத்துக்கு மேற்பட்ட நபர்கள் வேலை பார்க்கும் கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு இச்சட்டம் பொருந்தும்
3. அரசு காப்பீட்டு சட்டம் பொருந்தக்கூடிய தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள் அந்த சட்டத்தின் கீழ் பேறுகால உதவி வகை பெற தகுதியற்றவர்களாக இருந்து இச்சட்டத்தின் முக்கிய பேறுகால பயன்களை பெற தகுதியுடையவர்களாக இருந்தால் அவர்களுக்கு இச்சட்டம் பொருந்தும்.
4. மாநில அரசாங்கம் மத்திய அரசின் ஏதேனும் ஒரு பகுதியை மட்டும் வேறு நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலைகளுக்கு பொருந்தும் வகையில் நீட்டிக்கலாம்.
5. மத்திய அல்லது மாநில அரசின் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு இச்சட்டம் பொருத்தும்.
பெண் தொழிலாளர்கள் சில காலங்களில் வேலை செய்ய தடை:பிரிவு (4)(1):
எந்த ஒரு முதலாளியும் நன்கு தெரிந்துகொண்டு ஒரு பெண் தொழிலாளி அவருக்கு குழந்தை பிறந்த நாளிலிருந்து அல்லது கருச்சிதைவு நிகழ்ந்த நாளிலிருந்து அல்லது கருக்கலைப்பு செய்த நாளிலிருந்து ஆறு வாரங்களுக்குள் தொழில் நிறுவனங்களில் வேலை செய்ய அனுமதிக்க கூடாது என பிரிவு 4 கூறுகிறது.
கடினமான வேலைகள் எப்பொழுது தரக்கூடாது(பிரிவு 4(3):
பெண் தொழிலாளி எதிர்நோக்கும் பிரசவ நாளிலிருந்து முந்தய 6 வாரங்களுக்கு முன்னால் நல்ல ஒரு மாத காலத்தினுள் அல்லது பிரசவ நாளில் இருந்து முந்தைய ஆறு வாரங்களில் அப்பெண் பெண் தொழிலாளியை
1. கடினமான வேலை
2. நீண்ட நேரம் நின்று கொண்டே செய்ய கூடிய வேலை
3. ஏதேனும் ஒரு வகையில் கருவை யோ அல்லது கரு வளர்ச்சியை பாதிக்கும் வேலைகள் கருச்சிதைவிற்கு வழிவகுக்கும் வேலைகள் அல்லது தொழிலாளியின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் வேலைகளை செய்யுமாறு கூறுவதோ செய்வதற்கு அனுமதிப்பது கூடாது என இப்பிரிவு கூறுகிறது.
பேறுகால பயன்கள்:
பேறுகால பயன்கள் சட்டத்தின்கீழ் பெண் தொழிலாளி ஒருவர் தன் பேறுக்காலத்தில் பிரசவத்திற்கு முன் ஆறு வாரம் பிரசவத்திற்குப் பின்னர் ஆறு வாரம் மொத்தம் 12 வாரங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு மருத்துவ செலவுத் தொகையும் அதனுடன் தொடர்புடைய அனைத்து சலுகைகளையும் பேறுகால பயன்களாக பெறமுடியும்.
பிரிவு 5 (1)ன் படி ஒவ்வொரு பெண் தொழிலாளிக்கும் பேருகால பயன்களை கோரி பெரும் உரிமையும் நிர்வாகத்திற்கு அதனை தர வேண்டிய கடமையும் உண்டு.
அவை
1. பேருகால பயன் தொகை,
2. மருத்துவ மீதூதியம்,
3.கருச்சிதைவிற்கான விடுப்பு
4. பேறுகால விடுப்பு
5.