இரவு ஆண்கள் வீடு 🏘வந்ததும் நந்தினியை பற்றி பேசி கொண்டே இரவு உணவை முடித்து விட்டு அனைவரும் படுக்க சென்றனர். நள்ளிரவில் கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்தனர்.
யார் இந்த நேரத்தில் என எண்ணியபடி அனைவரும் hallலின் கதவை திறந்து பார்த்த போது அனைவரும் சந்தோசத்தில் உறைந்தனர். "கண்ணா ப்ரித்வி... என்ன பா நாளைக்கு தா நீ வருவனு சொன்னாங்க, உடம்புக்கு ஒன்றுமில்லையே.. " என மீனு பாட்டி கேட்க.
"பாட்டி நா ரொம்ப நல்லா இருக்கேன்... உன்ன ரொம்ப மிஸ் பன்னேன் னா அதான் ஓடி வந்துடேன், அது மட்டும் இல்லாம இங்க மூன்று👹👹👹 ராச்சசிகளை உன்னால தனியா சமாளிக்க முடியாதுல.. அதான்.. " என கூறி கொண்டே அவர்கள் மூவரையும் பார்க்க, அவர்கள் இவனை அடிக்க துரத்தும் போது அவர்களுக்கு போக்கு காட்டி பின் அவர்களிடம் செல்ல அடிகளை பெற்றுக் கொண்டான்.
தாத்தா "போதும் உங்க விளையாட்டு, எல்லாரும் போய் படுங்க.. காலைல பேசிகளாம்... "என்று கூறி தன் அறைக்கு சென்றார்.
இளையவர்கள் அனைவரும் ப்ரித்வி அறைக்கு சென்றனர். (இன்னும் ப்ரியா ஹனி,அம்மு இருவரிடமும் பேசவில்லை)
சில நிமிடம் ப்ரித்வியிடம் பேசி விட்டு "ok படிப்ஸ் நான roomக்கு போரேன் நீ rest எடு" என்றுக் கூறி தன் பார்வையை அம்மு மற்றும் ஹனியிடம் 'வரிங்களா' என்பது போல் ப்ரியா பார்க்க, அவள் கண் அசைவுகளை புரிந்து கொண்ட ஹனி, தன் அண்ணனிடம் "டெய் buff.. அர்ஜூன் அண்ணாவும் ஊருக்கு வந்துருக்காங்களா??!!.." எனக்கேட்டு பின்னர், ஆர்வமாக ப்ரியாவை பார்க்க அவள் முகத்தில் வந்து போன களைவையான உணர்ச்சியை பார்த்து அம்முவை இடித்து அவளை காணுமாரு சைகை செய்தாள்.
ப்ரித்வி "இல்ல.. அவன் Bangaloreல ப்ரண்டு வீட்டுக்கு போயிருக்கான்.. " என கூறியவுடன் ப்ரியாவின் முகம் ஒரு நிமிடத்துக்கு வாடியதை கண்ட ஹனியும் அம்முவும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டு, சிறிதுநேரம் பேசி விட்டு ப்ரியாவுடன் அவர்கள் அறைக்கு படுக்கச் சென்றனர்.
காலையில் ப்ரியா எழுந்ததும் அவளது இருபுறமும் அம்மு மற்றும் ஹனி இரு கைகளால் தங்களது காதுகளை பிடித்துக் கொண்டு "sorry ப்ரி.. இதுக்கு மேல நீ எங்கள மன்னிக்கல!!.." என்று இருவரும் இழுக்க, ப்ரி "மன்னிக்கலை னா என்ன செய்வீங்க???" என்று கேட்டவுடன் அவர்கள் இருவரும் " ATTACKKK!!..." என்று கத்திக் கொண்டு அவளுக்கு சிரிப்பு மூட்டயபடி அவளை சமாதானம் செய்தனர்.
மறுநாள் ப்ரியா விற்குப் பிறந்த நாள் என்பதால் அன்று இரவு 12மணி அளவில் அவளது பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று அனைவரும் முடிவு செய்தனர். மதிய வேளையில் ப்ரியாவின் அம்மா அப்பாவும் வந்துவிட, ப்ரியாவுக்கு supriseயா இருக்கட்டும் யாரும் கூறவில்லை. பெரியவர்கள் அனைவரும் அதற்கான வேலையில் ஈடுபட, சிரியவர்கள் தோப்புக்கு சென்றனர்.
அன்று மதியம் தோப்பிலே அவர்கள் உணவை சமைத்து கைத்துகட்டிலில் படுத்து கொண்டு தங்களது result டை பற்றிக் கதை பேசியபடி இரவு வீடு திரும்பினர்.
இரவு 9மணி அளவில் அம்மு எண்ணுக்கு நந்து அழைக்க. "அம்மு ஜெய் என்ன phoneன எடுக்கல." அக்க்ஷரா "என்ன அண்ணி அவன கிட்ட பேசரதுக்கு இவலோ அவசரம்"என கிண்டல் அடிக்க ஐயோ இவ வேற எண்ணியபடி"இல்ல அம்மு அவனுக்கு 6,7 தடவ phone பன்னேன் எடுக்கல" என கூற.
"அண்ணி உங்களுக்கு விசியமே தெரியாத. இன்னைக்கு ராத்திரி ப்ரியா birthday அதுக்கான celebration, suprise🍬🎊🎉🎂 எல்லாமே தயாராகிட்டு." என அவர்களின் கொண்டாடத்து கான திட்டங்களை கூறினால். பின் தன்னை அழைக்கிறார்கள் என தன் கைப்பேசியை அனைத்தால்.
நந்தினி வீட்டில்
"வீட்டு மருமக நா இல்லாம அவுங்க எப்படி பிறந்த நாள் கொண்டாடலாம்... its not fare!! " என புலம்பியபடி இருக்க. அவள் மனசாட்சியோ 'உனக்கும் ஜெயிக்கும் இன்னும் கல்யாணமே ஆகல.. ஏன் நந்து உனக்கே இது overa தெரியலை' என்று தன் தலையில் அடிக்க " ushh!!.. நீ அமைதிய போ உள்ள... நான இப்ப அங்க போயே ஆகனும், என்ன பன்னலாம்?? "என்று யோசித்து கொண்டிருக்க அவள் தந்தை அழைத்தார்.
சுரேஷ் "நந்துமா எனக்கு ராத்திரி வயல்ல வேலை இருக்கு, நான காலை தான் வருவேன், எப்பவும் போல பக்கத்து வீட்டு பங்கஜம் பாட்டியை உனக்கு துணையா இருக்க சொல்லிருக்கேன்... வந்துருவாங்க கதவை பூட்டிகோ" என்று கூறினார். அவளும் நல்ல பிள்ளை போல் "சரி அப்பா நீங்க பார்த்து போயிட்டு வாங்க.." என்று பதிலளித்து அவரை வழி அனுப்பினாள். அவர் தலை மறைந்தவுடன் "டன் டனக்க டன் டனக்க எங்க தலை" என குத்துப் பாட்டு கொண்டே ஆடினால்.
(சிறிது நேரம் கழித்து)
"ஏய்... வாயாடி எங்க இருக்க, என்ன ஓரே சத்தமா இருக்கு" என்று கூறியபடி வந்தார் பங்கஜம் பாட்டி. நந்தினி "ஒன்னும்மில்லை பாட்டி நா டிவி பார்த்துடு இருந்தேன், நீ பாக்குற serial தா.. வரியா பாக்கலாம்.. " என வேண்டும் என்று கேட்க, "அடியேய் என்ன கோலுப்பா... கண் ஆப்பரேசன் பண்ணிருக்கவல பார்த்து... வேனும்ன கேட்குறியா.. " என்று கத்தினார். "ம்ம்... சும்ம லுலு லாய்க்கு பாட்டி, சரி நீ போய் தூங்கு நா என் ரூம்ல டீவி பார்த்துட்டு தூங்கிக்றேன்... " என்று கூறியவள், 11.30 மணிக்கு அங்க போன சரியா இருக்கும் என்று எண்ணியபடி தனது அறைக்கு சென்றாள்.
ஜெய் இல்லம்
இங்கு அனைவரும் கதை பேசிய படி இரவு உணவை முடித்துவிட்டு உறங்கச் சென்றனர். இரவு 11.30 மணியளவில் ஜெயின் கைப்பேசியோ அலறியது. அவன் அழைப்பை எடுத்தவுடன் அவனை பேச விடாமல் நந்தினியோ "பட்டு வீட்டுக்கு வெளிய வா டா!!.. " என கூற, "நா!!.. எதுக்கு டி உங்க வீட்டுக்கு வரனும் அதுவும் இந்த ராத்திரில, அதலாம் தப்பு தப்பு.. "என அப்பாவியாக பதிலளித்தான்.
"ஐயோ பக்கி நா நம்ம வீட்டு பின்புற வாசல்ல இருக்கேன் வந்து கதவை திற... " என தலையில்🤦♀️ அடித்து கொண்டு கைப்பேசியை அவன் பேசு முன் அனைத்தாள். ஜெய், "என்ன?? வீட்டுக்கு வெளியவா!! " என்று அலறியபடி கீழே சென்றவன் கதவை திறந்து "எதுக்கு டி இந்த நேரத்தில இங்க வந்து இருக்க.. யாராச்சும் பார்த்தா அவ்வளோதான்... " என காட்டமாக கேட்க, அவளோ பதில் கூறாமல் உள்ளே நடைபோட்டாள்.. கீழே இருக்கும் அறைகளில் இருந்து வெளிச்சம் வந்ததும் 'அதுக்குள்ள எல்லோரும் எழுந்துரிச்சுடாங்க போலயே... ஜெய் நீ இன்னைக்கு சிக்கின தொல உரிச்சு உப்பு கண்டம் போட்டுருவாங்க டா...' என்று யோசித்து அவன்முன் சென்ற நந்துவின் கையை பற்றிக் கொண்டு பக்கத்தில் இருந்த அறைக்குள் புகுந்தான்.
Please comment &vote பன்னுங்க என் தவர்களை திருத்திக்கொள்ள முடியும்.