ஊருக்குள் சென்றதும் அங்காங்கே பெண்களும் பெரியவர்களும் இவர்களை பார்த்து நலம் விசாரித்தபடி ஒரு புறம் இருக்க, "ஓஓ!!.. லீவுக்கு ப்ரியாவும் ஹாசினியும் வந்துருக்காங்க போலவே.. இனி இவுங்கள கைலையே பிடிக்க முடியாது..." என்று சலசலத்தபடி மற்றொரு புறம் இருந்தது.
அவர்கள் நால்வரும் செல்லும் வழியில் "முலுசா மணி 10 கூட ஆகல அதுக்குள்ள Hottnews ஆகிடுச்சே!!... நான் எப்படி டி வீட்டுக்குள்ள வரது, இவங்கள (ஊர்க்காரர்கள்) பாத்தா அந்த ஹிட்லர் பொண்டாட்டி ஊர் முழுக்க தம்பட்டம் அடிச்சுடுச்சுனு நினைக்கிறேன்🤦♀️, ஹிட்லர் கிட்ட நா செத்தென்!! தாத்தா என்ன தண்டனை குடுக்க போராங்கனு தெரியலையே😓.. ஐயோ!!.. இப்ப என்ன பன்றது" என்று புலம்பிக் கொண்டே நடந்தாள் அக்க்ஷரா.
ஜெய் "இப்ப புலம்பி என்ன பண்றது, அதுக்கு நீங்க சுவர் ஏறிருக்க கூடாது மேடம், நல்லவேளை நாங்க மூனு பெரும் great escape😉" என்று பெருமூச்சு விட்டு 'ஹாசினிக் கூட சேர்ந்து என்ன ஆட்டம் ஆடுன நீ😝... இப்போ நல்லா அனுபவி😂...' என்று அக்க்ஷராவை திட்டியவாரு 'அத வேற வெளியே சொல்லி யார் இவுங்க கிட்ட அடி வாங்குகிறது' என்று மனதிற்குள் நினைத்தான்.
(ஜெய் அருவியில் தனியாக இருந்த நேரத்தில் அவனுக்கு phone வர, யார் என்று பார்க்கையில் அது அவனது சித்தப்பா வெங்கட்ராமன், "ஹலோ ஜெய்!!.. இங்க வீட்டில no problem டா கண்ணா... தாத்தா மட்டும் கொஞ்சம் கோவமா இருக்காரு... so நீங்க சிக்கிரமா வந்திடுங்க.. " எனக் கூறி வைத்தார். ஜெய்யோ, அவர்கள் என்ன செய்கிறார்கள் என பார்க்க, இதை அவர்களிடம் இருந்து மறைத்தான். )
ப்ரியா "ஜெய் அவளே தாத்தாவ நினைச்சு பயந்துகிட்டு இருக்கா நீ வேற என் டா🤦♀️... அமைதியா வா🤫.. " என்று செல்லமாக கண்டித்தாள்.
" பயமா? எனக்கா... no no... தாத்தானா மட்டும் கொஞ்சம் பயம்🥺... அவர எதுத்து பேச யார் இருக்கா நம்ம வீட்டில??.. , ஏதோ இரண்டு மூணு தடவை நீ Bold ஆ அந்த ஹிட்லர எதுத்து பேசிருக்க. அதுனால தான் ப்ரி நான் உன்ன நம்பி இருக்கேன் என்ன எப்படியாச்சும் காப்பாத்திடு டார்லிங்... " என்றாள் அக்க்ஷரா.
ப்ரியா "நா பாத்துகிறேன் விடு, ஆமா என்ன ஹாசினி silent ஆ வர... எதாச்சும் ப்ளான் இருக்கா?? " என புருவத்தை உயர்த்த அவளோ ஆமாம் என கண்ணைச் சிமிட்டிய😉 வாரு தனது திட்டத்தை கூற, அக்க்ஷராவின் முகம் பிரகாசமாக அனைவரும் அதற்கு சம்மதித்தனர்.
இவர்களின் திட்டம் என்னவென்றால், அக்க்ஷரா பின் வாசல் வழியாக வீட்டிற்குள் நுழையவும், முன் வாசல் வழியாக அவர்கள் மூவரும் உள்ளே சென்று தாத்தாவிடம் பேசி சமாளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அக்க்ஷரா தனது அறைக்கு சென்று விடுவது தான். ஆனால், நடந்ததோ ?????
அவர்களின் திட்டப்படி அக்க்ஷராவோ, தன்னை யாராவது பார்க்கிறார்களா என சுற்றும்முற்றும் திரும்பிப் பார்த்துக் கொண்டே, பின் வாசல் வழியாக உள்ளே செல்ல முற்பட்ட போது, யார்மீதோ மொதி நின்றாள். 'செத்தடி அக்க்ஷரா நீ!!.. ' என்று நினைத்தபடி யார் என இரண்டு அடி தள்ளி நின்று பார்த்தாள்.
Please comment &vote பன்னுங்க என் தவர்களை திருத்திக்கொள்ள முடியும்.