சட்டங்கள் அறிவோம் சரித்திரம்...

By saranyavenkatesh

371 33 49

பெண்களுக்கு எதிராக சமூகத்தில் நடக்கும் குற்றங்கள், தீமைகளை, அநீதிகளை எதிர்த்து தங்களை பாதுகாக்க கொள்ள தேவையான... More

பணியிடத்தில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் குறைத்தல்)
பிரிவு 2 (a)
sexual harrasment at the workplace prevention , prohbition and redressal Act
வீழ்ந்து விடாதே பெண்ணே....
வரதட்சணை தடுப்பு சட்டம்
பெண்களுக்காக எச்சரிக்கை பதிவு
பதிப்புரிமை சட்டம்(copy right act)1957
copy right
posco act
தொழிலாளர் இழப்பீடு சட்டம் (the workmens comensation act )
பிரிவு 2
தொழிலாளர் இழப்பீடு சட்டம்
maternity benefit act

சட்ட விளக்கம்

45 5 16
By saranyavenkatesh

பணியிடத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, தடை மற்றும் குறைத்தல் சட்டம் 2013 (sexual harassment at the workplace prevention, prohibition and redressal act 2013)

பணியிடத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகவும், பாலியல் புகார்கள் தொடர்பான விசாரிக்கவும், புகார்களை நிவர்த்தி செய்யவும், பணியிடத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகளில் இருந்து பாதுகாக்கவும் உருவாக்க பட்டது தான் இந்த சட்டம்.

பாலியல் துன்புறுத்தல் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டம் சரத்து 14 மற்றும் 15 கீழ் சமத்துவதற்கான ஒரு பெண்ணின் அடிப்படை உரிமை ஆகும். இதில் அவளின் வாழ்க்கைக்கான உரிமையும் அடங்கி உள்ளது.

பாலியல் துன்புறுத்தல் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டம் சரத்து 21 கீழ் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை அல்லது எந்த ஓரு தொழிலையும் செய்யும் அடிப்படை உரிமை மீறுவது ஆகும்

சட்டத்தில் பின்னணி:

1992 ஆம் ஆண்டு பவனரிய தேவி எனும் பெண் ராஜஹஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் உள்ள அங்கன் வாடி மையத்தில் கடை நிலை ஊழியராக பணி புரிந்து வந்தார், ஒரு நாள் மாலை வேளையில் அவளின் மேல் அதிகாரி மற்றும் இன்னும் சில கயவர்கள் இணைத்து காமவெறியில் அவளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகினர், இந்த வழக்கு நீதி மன்றத்திக்கு விசாரணை செல்லும் பொழுது ராஜஹஸ்தான் உயர் நீதி மன்றம் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சட்டத்தினை உருவாக்கும் படி அரசுக்கு பரிந்துறை செய்தது அதனை ஓட்டி உருவானது தான் இந்த சட்டம்.

பிரிவு 1:

இந்த சட்டம் இந்தியா முழுமைக்கும் பொருத்தும், இந்த சட்டத்தின் அடிப்படை நோக்கம் பணிபுரியும் ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பான மற்றும் பயம் இல்லாத பணிபுரியும் சூழல் கிடைக்க வேண்டும் என்பதே ஆகும், மேலும் பாலியல் வன்புணர்ச்சி தடுத்தல், தடை செய்தல் மற்றும் குறைத்தல் ஆகியவை இதில் அடங்கும்.

பிரிவு 2:

பணி புரியும் பெண்கள் விளக்கம்:

ஓவ்வொரு பெண்ணுக்கும் பாதுகாப்பாக மற்றும் பயம் இல்லாத பணிபுரியும் சூழல் கிடைக்க வேண்டும் என்பது இந்த சட்டத்தின் அடிப்படை நோக்கம்.

ஒப்பந்த அடிப்படையில் அல்லது நிரந்த அடிப்படையில் வேலை செய்யும் பெண்கள், முதலாளியின் அறிவிற்கு உட்பட்டு அல்லது அப்பாற்பட்டு தினக்கூலி அல்லது மாத சம்பளம் என்ற நிலையில் பணி புரியும் பெண்கள், பயிற்சி நிலையில் பணி புரியும் பெண்கள், விட்டு வேலை செய்யும் பெண்கள், உதவியாளர் என்ற நிலையில் பணி புரியும் பெண்கள் என அனைத்து பெண்களும் இதில் அடக்கம்.

பிரிவு 2(அ):

வேலை செய்யும் இடம் விளக்கம்:

1.பணியாளர்கள் வருகை புரிகின்ற எந்த ஒரு இடம்

2. இதில் இந்திய நிறுவனம் மற்றும் அயல் நாட்டில் உள்ள நிறுவனங்களின் இந்திய கிளை,

3. அரசு நிறுவனம்

4. அரசு சாரா நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், சேவை வழங்கும் எந்த ஒரு நிறுவனம் இதில் அடங்கும், அதாவது வணிக, தொழில், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, பொழுது போக்கு இடங்கள் வேலை செய்யும் பெண்கள், சுகாதாரம் தொடர்பான நிறுவனங்கள் முதலியவை இதில் அடங்கும்

எ.கா. மருத்துவமனை, நர்சிங் ஹோம், விளையாட்டு தொடர்பான நிறுவனங்கள் இதில் அடக்கம்.

5.ஒரு குடியிருப்பு இடம் அல்லது வீடு, உற்பத்தி ஈடுபட்டுள்ள தனிநபர் அல்லது சுய தொழில் புரிபவர்கள், 10 மேற்பட்ட நபர்கள் வேலை செய்யும் இடமும் இதில் அடங்கும்.

பிரிவு 3:

பணிபுரியும் இடத்தில் பாலியல் வற்புறுத்தல் என்றால் என்ன....

1. நேரடியாவோ அல்லது மறைமுமாகவோ உடல் ரீதியாக துன்புறுத்தல்

2. பாலியல் உறவுக்கு அழைப்பு விடுதல் அல்லது கோரிக்கை வைத்தல்

3. பாலியல் வன்புணர்ச்சி தொடர்பான படங்கள் அல்லது சைகைகள் செய்வது

4. ஆபாச படங்கள் காண்பித்தல்

5. பாலியல் இயல்புடைய விரும்ப தகாத சொல்களை வாய் மொழியாகவோ அல்லது உடல் மொழி மூலமாக வெளியிடுதல்....

பணிபுரியும் இடத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படும் பொழுது வேலைத்திறன் குறைதல், மன அழுத்தம், தூக்கம் இன்மை, பாதுகாப்பு இன்மை, பயம், பதற்றம், தலைவலி, தன்னம்பிக்கை இன்மை, பிரச்சனைகள் எதிர்கொள்ள தயங்குதல், முதலிய உணர்வுகள் உட்பட்டு உயிர் துறக்கும் முடிவை நோக்கி தள்ளப்படுகின்றனர்...

பாலியல் துன்புறுத்தல் வேலை செய்யும் இடங்களில் வெளிப்படையவோ அல்லது மறைமுகமாகவோ அச்சுறுத்தி, மிரட்டி, பணியவைத்தல் மூலமாவோ, வேலையில் முன் உரிமை அளிக்க படும் என்ற கோரிக்கை அடிப்படையாக கொண்டோ, தனிமையை காரண கரியத்துடன் உருவாக்கி நெருக்கடி அளிப்பதால் மூலம் ஏற்படுகிறது.

எ.கா

அ என்னும் பெண் ஒரு தனியார் அலுவலகத்தில் பணி புரிகிறாள் என்னும் நிலையில், ஒரு நாள் அவளின் உயர் அதிகாரி அலுவலகத்தில் அனைவரும் சென்ற பின்பும் வேலை தொடர்பான விளக்கம் கேட்க அவளை தனது அறைக்கு அழைத்து அவளை பாலியல் ரீதியாக உடல் மொழியால் தன் விருப்பத்தை வெளிப்படுத்துகிறார் எனில் அவர் இந்த சட்டத்தின் மூலம் தீர்வு பெற முடியும்.

பிரிவு 3(அ):

ஆங்கீகரிக்கப்பட்ட அரசு...

1. தொழில் சாலை அடங்கி உள்ள மாநில அரசு

2. தொழில் சாலை அல்லது பணிபுரியும் இடத்தின் எல்லைக்கு உட்பட்ட மாநில அரசு அல்லது மத்திய அரசு

3. தொழில் சாலை அல்லது பணிபுரியும் இடம் அடங்கியுள்ள மாவட்டம்

பிரிவு 3(ஆ):

அதிகாரம் பெற்ற அதிகாரி விளக்கம்:

1.மாநில அரசினால் பெண்களின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்ட அலுவலர்

2. மத்திய அரசினால் பெண்களின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்ட அலுவலர்

3. மாநில நீதிபதி

4. மாவட்ட நீதிபதி

5. மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆட்சியர்

மாவட்டத்தின் அதிகாரம் பெற்ற நபர் இந்த சட்டத்தின் கீழ் அதிகாரங்கள் மற்றும் புகார்கள் தொடர்பான செயல்பாட்டினை நிறைவேறுவார், பாலியல் ரீதியாக பாதிக்க பட்ட பெண்கள் இவர்களிடம் தங்களுக்கு இழைக்க துன்பம் மற்றும் அநீதி குறித்து புகார் அளிக்கலாம்.

இந்த சட்டத்தின் மீதி உள்ள பிரிவுகள் வரும் வாரம் காணலாம்....

இதில் சந்தேகம் உள்ளவர்கள் தங்களது கேள்விகளை கேட்கலாம்.....

Continue Reading

You'll Also Like

48.9K 1.1K 40
♥️___ தன் வாழ்வில் காதல் மற்றும் கல்யாணத்திற்கான பக்கங்களே இல்லை என்று முடிவோடு பயணிக்கும் பெண்ணவளுக்கும்.. ஒருத்தியிடமே தன் காதலை உணர்ந்து அவளையே க...
80.3K 10.1K 52
Peep in peep in , You are already in . This is a general fiction and the protagonists can be of your own choice .
219K 9.3K 57
அஸ்ஸலாமு அலைக்கும் வணக்கம் வந்தனம் இக் கதை நான் தமழில் எழுதும் (TAMIL FONT) முதல் கதை... எனக்கு தமிழ் பொன்ட் இல் எழுத ஆர்வமூட்டிய சக சகோதரிகளுக்கு நன...
457K 15.1K 50
மணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படிய...