தேவதையே நீ தேவையில்ல (complet...

By RamaAnand123

144K 4.3K 208

Hero - Arunprasad Heroine - visalini ... ..... ......... ............ ................. Ivanga... More

💜D-1💜
💜D-2💜
💜D-3💜
💜D-4💜
💜D-5💜
💜D-6💜
💜D-7💜
💜D-8💜
💜D-9💜
💜D-10💜
💜D-11💜
💜D-12💜
💜D-13💜
💜D-14💜
💜D-15💜
💜D-16💜
💜D-17💜
💜D-18💜
💜F-ud💜
💜D-20💜
💜D-21💜
💜D-22💜
💜D-23💜
💜D-24💜
💜D-25💜
💜D-26💜
💜D-27💜
💜D-28💜
💜D-29💜
💜D-30💜

💜D-19💜

4K 133 2
By RamaAnand123


"ச்சே.... சொல்லி சொல்லி வாய் தான் வழிக்கிது. நீ சுயநலம் பிடிச்சவன் தான். ஆனா அதுக்காக நானும் அப்படி இருக்க முடியாது."

"சரிங்க தியாக செம்மலே"

"நவீன் - எயினி வாழ்க்கையில எனக்கு அக்கறை இருக்கு"

"ஓஓஓ.... சரி... சரி... உன் இஷ்டம்... உனக்கா எப்போ தோனுதோ அப்போ சொல்லு. நா உன்னோட வாழ தயாராயிருக்கேன், அப்பறம் நீ டிவோர்ஸ் கேட்டாலும் தர தயார் தான். ஏன்னா தப்பு என்மேல தான். நீ என்ன முடிவு பண்ணாலும் என் கிட்ட சொல்லு. ஆனா என் வாழ்க்கையில மனைவி 'னு ஒரு இடம் இருந்தா கண்டிப்பா அந்த இடம் உனக்கு தான். நீ மட்டும் தான் என்னவள். நீயா என்னை புரிஞ்சிக்கற வரை உன்கிட்ட என்னை வெளிப்படுத்த கூடாது'னு நினைச்சேன். ஆனா உன்கிட்ட என்னை புரியவைக்கனும்'னு மட்டுமே தோனுது. ஆனா நீ என்னை புரிஞ்சிக்க மாட்ற, கொஞ்சமும் புரிஞ்சிக்கனும்'னு முயற்சி கூட பண்ண மாட்றிய'ன்னு வருத்தம் இருக்கு. பரவாயில்லை. அப்பறம் பார்க்காம எல்லாம் இருக்க முடியாது. அது எல்லாருக்கும் கேள்வியா அமையும். அதனால தான் சொல்றேன் புரியுதா??? ஆனா இனி உன்ன கஷ்டப்படுத்த மாட்டேன். இதுவரை கஷ்டப்படுத்தினதுக்கு Sorry."

சொல்லிட்டு திரும்பி கூட பார்க்காம அருண் வெளியே போயிட்டான். விசாலினி சிலை போல இருக்கா. இவனால எப்படி இப்படி பேச முடியுது. சரியான வளர்ந்து கெட்டவனா இருக்கானே.... அவன் தான் சொன்னான். எல்லாம் செஞ்சான். இப்போ சீன் போட்றான்.

"Noooooo சாலி... அவனை பத்தி யோசிக்காத... அவன் உன் உணர்வுக்கு மதிப்பு கொடுக்காதாவன்." நு புத்தி சொல்றதை கேட்டு ஆமா இனிமே இவனை பத்தி யோசிக்க கூடாது. முடிவெடுத்துட்டு அவனை வெளில அனுப்பின சந்தோசத்தில, அமைதியா படுத்து தூங்கறா.

"ஏய் என்னடா...??? இப்போ வந்திருக்க???? இது உன் வீடு தான் டா. இங்க இருக்கறது எல்லாம் உன்னுடைய பொருள் தான். உனக்கு இங்க வர எல்லா உரிமையும் இருக்கு. ஆனா அதுக்காக இப்படியா நடுராத்திரில வருவ. பாவம்டா விசாலினி."

"வீணா என்கிட்ட வாங்கி கட்டிக்காத. அப்பறம் அவ பேசினதெல்லாம் இப்போ சொல்ற நிலமையில இல்ல. ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கோ. அவளுக்கு என்னை பிடிக்கலயாம். பார்த்தாலே எரிச்சல் வருதாம். போதுமா??? இன்னொரு தடவை அவளை என்கிட்ட பாவம்'னு சொன்னேன்னுவை... மவனே நீ காலிடா..."

"என்னடா மச்சான் ஆச்சி???? வீட்ல தெரியுமா????"

"வேணாம் மிது. விடுடா. நீ தூங்கு. காலையில பேசிக்கலாம்." சொல்லிட்டு அவன் தனியா ரூம்ல போயி படுத்திட்டு யோசிச்சிட்டு இருக்கான். தூக்கமே வரலை. என்னெல்லாம் பேசிட்டா?????? என்னை ரொம்ப கீழ்தரமா நினைச்சிட்டா. எவளோ கேவலப்படுத்திட்டா??? எவனும் முத இராத்திரில இவ்ளோ கேவலப்பட்டு இருக்கமாட்டான். ச்சே.... அவளை சொல்லி என்ன பிரோஜனம்??? எல்லாம் உன்னாலே தான். நீ எடுத்த முடிவு என்ன????? நீ செஞ்சது என்ன???? முட்டாள்... சரியான முட்டாள். அவ என்மேல கோவப்படுறது சரிதான். அதனால அவமேல கோவப்படாம நாம அவளை மாத்த முயற்சிப்பண்ணனும்.

எப்படி பண்றது??? அவதான் உன்னை பிடிக்கல... உன்னை பார்த்தாலே எரிச்சல் வருதுன்னு சொல்றாலே...

சொன்னா என்ன??? அவ சொன்னா நாம கேட்கறதா??? புதுசா யோசிக்க தேவையில்ல. அவகிட்ட நாம போககூடாது. அவ நமக்கிட்ட வரனும். அப்பறம் முதல அவௌன்னை புரிஞ்சிக்கனும். அப்பறம் பார்த்துக்கலாம்'னு ஒருவழியா தன்னை தானே சமாதானம் பண்ணிட்டு தூக்கறான்.

"வாடா விசாலி. சந்தோசமா இருடா. ஒரு நிமிஷம், இதோ வரேன்." அனு அவசரமா ரூம்க்கு போறாங்க. அப்போ அருணாச்சலபிரசாத்(ஏ.பி),

"எங்க அவன்???? தூங்கறானா???? இன்னைக்கு ஆபீஸ் போக வேணாம். உங்க வீட்டுக்கு போயிட்டு வாங்க. அப்பா வர சொல்லி இருந்தாங்க. எதோ கோவில் போகனுமாம். நீயே அவன்கிட்ட சொல்லி அழைச்சிட்டு போடா. பாத்து பத்திரமா போயிட்டு வாங்க."

"............." அமைதியா இருக்கறதை பார்த்து கொஞ்சம் யோசனையோட அவளை பார்த்துட்டு இருக்கும் போதே அனு வராங்க.

"இந்தாமா... இது உனக்காக.... அருணுக்கு இனிமேல் நீ தான் எல்லாம். உன்மேல கொஞ்சம் கோவம் இருந்தது. அருண் பண்ணது தப்பு தான். ஆனா அவன் ரொம்ப நல்லவன். அவன் எயினியால தான் இப்படி பண்ணிட்டான். அவன் எது செஞ்சாலும் நியாயமா தான் இருக்கும். அவன் வாழ்க்கையிலயே தப்பு'னு அவன் பண்ணியிருக்கான்'னா அது உன்னோட சம்மதம் இல்லாம செஞ்சது மட்டும் தான். ஆனா இப்போ அவனை பத்தி புரிஞ்சிருக்குமே. அவனுக்கு ஒருதரை பிடிச்சா அவங்களுக்கா என்ன வேணுனாலும் செய்வான்." சொல்லி அவ தலையை வருடி தராங்க.

விசாலி யோசனையோட இருக்கா.

"என்னடா யோசனை??? இங்க கொடு நா போட்டு விடுறேன்'னு சொல்லி அவங்க அவளுக்காக வாங்கின நகையை போட்டு பார்க்கறாங்க.

"ரொம்ப அழகா இருக்க விசாலி. அவனையும் எழுப்பி உங்க வீட்டுக்கு கிளம்புங்க. பாட்டி வேற நல்ல நேரத்தில கிளம்பி வர சொன்னாங்க. அருண் கார் ஓட்ட வேணாம். மிதுனை அழைச்சிட்டு போங்க." எல்லாத்தையும் கவனிச்சிட்டு இருக்கார் ஏ.பி. ஏதோ நெருடலா இருக்கே'ன்னு யோசிக்கும் போதே அருண் வெளியே இருந்து உள்ள வர்றான்.  😎

Continue Reading

You'll Also Like

355K 11.2K 48
"புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாத...
65.2K 1.2K 53
பெயரின் தலைப்பிலேயே புரிந்திருக்கும் என நினைக்கிறேன், இதற்கு மேல் அவளின் வாழ்க்கையை கதையாக காணலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் இமோஷனலாக இருக்கும், உண்மை என்...
379 87 23
குறிப்பிட்ட காலம் கடந்தும் தன் வாழ்வின் இலக்கினை அறியாமல் விளையாட்டு பிள்ளையாகவே வளம் வரும் நாயகன்... புவியின் ரட்சகன்.. அவனது பிறப்பின் நோக்கத்தை அ...
39.7K 2.2K 25
கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உ...