இரத்த ஆற்றில் கிடந்தாள் சுமித்ரா ஓடி வந்த கயல் ஒரு நொடி அதிர்ந்தாளும் சுதாகரித்து
தொப்பென்று சுமியின் அருகில் விழுந்து
"அன்னி என்ன அன்னி இது"
"அன்னி பேசுங்கன்னி பயமுடுத்த வேண்டாமன்னி"
"அன்னி பேசு" என்று கொஞ்சம் சத்தமாக கூறியவள்
"அய்யோ சுமி பேசு என்ன பாரு" என்று கூறி கதறினாள்
"அய்யோ என்னால தான் எல்லாமே என்னால தான்" என்று கதறி அழுதாள்
கயலின் கதறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மூவரும் ப்ரீஸ் ஆகி இருந்தனர்
கயல் மட்டும் தான் அழுது தள்ளினாள்
சத்தம் கேட்டு ஓடி வந்த ஜகேந்திரன் சுமியை கண்டதும் நெஞ்சை பிடித்துக்கொண்டு அமர்ந்து விட்டார் யாருமே பேசவில்லை
கயல் அழுது அழுது தள்ளினாள் திடீர் என்று குணாவின் ஞாபகம் வர உடனே அவன் முகம் பார்த்தாள் அவன் மரம் போன்று கண் இமைக்காது பார்த்து நின்றான் உடனே எழுந்த கயல் அவனை கட்டி பிடித்து கொண்டாள்
"அண்ணா" என்று அவன் கன்னத்தை தட்டியதும் தொப்பென்று கீழே விழுந்து விட்டான்
ஜானகி தேம்பி தேம்பி அழுக ஆரம்பிக்க வரதன் கல் போன்று அழுகாது இவ்வளவு நாட்கள் இருந்தவன் அத்தையின் மருமகளுக்காக அழுதான்
அது அத்தையின் மருமகள் என்ற உறவே அவனுக்கு ஞாபகமில்லை அக்கா போன்று தான் நினைத்து இருந்தான்
"அய்யோ அக்கா என்னக்கா இது என் காதல என்கிட்ட கொடுத்து என்ன சிரிச்சி சந்தோசமா வாழுன்னு சொல்டு நீங்க இப்டி கிடக்குறீங்க நாங்க இனி எப்டிக்கா வாழ்வோம்" என்று கேட்டே விட்டான் வாய் விட்டு
ஜானகியை கட்டி கொண்ட கயல் தேம்பி தேம்பி கண்ணீரில் கரைந்தாள்
ஜகேந்திரன் எழுந்தூ சென்று சுமியின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தான்
அருகில் எழுந்து வந்த வரதன் "மாமா செலவுக்கு" என்கும் போதே அவன் மார்பில் தலை சாய்த்து விட்டார்
"அவ எனக்கு மருமகன்றதே அப்பப்போ மறந்து போயிடுது என்ன அவ அப்பாவ போல பார்த்தா எனக்கு மாத்திரய கைல கொடுக்காம தூங்க மாட்டாப்பா நான் பெற்று இருந்தா கூட இவ்ளோ தங்கமான ஒருத்திய பெத்து இருக்க முடியாது.... கடைஷி வரை என் பையன்கூட அவ சந்தோஷமா வாழவே இல்லப்ப....."
"மாமா கவலை படாதீங்க அக்கா கூட கொஞ்சம் நாள் பழகின எனக்கே உயிர் போன மாதிரி வலி அப்போ உங்க வலிய நான் கற்பணை கூட பன்ன முடியாது எனக்கு புரியுது பட் இப்போ நிறைய வேலை இருக்கு மாமா நான் போயி ஒரு கம்ப்லெய்ன்ட் குடுத்துட்டு வர்றேன் நீங்க காரியம் பன்னறதுக்கான வேலைய பாருங்க இப்போ குணா கிட்ட எதையும் எதிர்பார்க்க முடியாது ஸோ நானும் நீங்களும் தான் நம்ம உணர்வுகள ஒரு பக்கம் தூக்கி போட்டுடு அக்காவோட கடைஷி நிமிஷத்தயாவது சிறப்பா பன்வோம்"
"மாப்பிளை போலீஸ் ஸ்டேஷன் ஏன்ப்பா?"
"மாமா இது கொலை உங்களுக்கு பார்த்தா தெரியலையா"
"தெரியுதுப்பா பட் எங்க சுமிய யாருப்பா கொல்லுவா அவ தங்கமில்லயா"
"யாரோ பன்னிறூக்காங்க யார்ன்னு பார்த்து தண்டிக்க வேணா அவ மரணத்துக்கு நாமலே நியாயம் தேடி கொடுக்க வேண்டாம்"
"நீ படிச்ச பய ஸோ பார்த்து பன்னுப்பா" என்று விட்டு அமர்ந்து விட்டார்
சுமியின் கைகள் ஒரு துப்பட்டாவை இருக்கி பிடித்து இருந்தது அதை கண்ட கயல் அதை கையிலிருந்து எடுக்க முயற்சித்தாள்
"இளாவோட துப்பட்டாவ எப்டி இருக்கி பிடிச்சி இருக்கான்னு பாரு குணா அவ சாகும் போது கூட அத விடல எவ்ளோ துடிச்சிருப்பா... அய்யோ அவளுக்கு பதில வாழ்ந்து கெட்டு போன என்னயே எடுத்து இருக்கலாமே இறைவா"
என்று கூறி அழுதாள் ஜானகி
இளாவின் துப்பட்டா என்றதும் கயலின் மண்டையில் பலமாக இடித்தது
"இளா எங்கம்மா"
"ஜானகி பதில் பேசவில்லை"
"அம்மா இளா எங்க?"
"இது தான்டி அவ ரூம் இப்போ அதுவா முக்கியம்" என்று அவளை கத்திவிட்டு தேம்பி அழுதாள்
'இதுவா அப்போ அன்னி சாகும் போது இளா எங்க.... அன்னியின் கண்கள் ஜன்னல் வழியை வெறித்து பார்த்து இருந்தது ஓடி சென்று ஜன்னல் வழியாக எட்டி பார்த்தாள் மல்லிகைப்பூ அடுத்த வீட்டு கூரையில் விழுந்து இருந்தது'
'ஆக இது இளா பன்ன வேலையா வாடாத மல்லிகை இன்னக்கி வைத்தது போல. இருந்தது'
'அய்யோ இளாவாக இருக்கா கூடாது' என்று வேண்டினாள்
கொஞ்சம. நேரத்தில் சுமியை ஹாஸ்பிடல் கூட்டி சென்று வயிற்றுக்குள் சென்று இருந்த கண்ணாடி துண்டுகளை எடுத்து அவள் உடம்பில் இருத்த இரத்தத்தை எல்லாம் சுத்தம் செய்தைர்
போலீஸ் வந்து வீட்டை செக் செய்ததில் கண்ணாடி போத்தலை எடுத்து கொண்டு சென்றனர் பிங்கர் மார்க்கை கண்டு பிடிக்க...
சுமியின் உறவினர்கள் வந்து விட ஊரே ஒன்று கூடினர்.... அன்று இரவே அடக்கம் செய்யப்பட்டது இது வரை குணா அழுகவுமில்ல ஒரு துளி நீர் குடிக்கவோ பேசவோயில்லை பேயரைந்தாற் போல் தான் நின்றான்
அடுத்த நாள் ஆகும் வரை இளா வீட்டில் இல்லாததை ஜானகி ஜகேந்திரன் உணரவேயில்லை காலையில் தான் கயலீடம் வந்து
"இளா எங்கடா?"
"தெரியலைம்மா நேற்று கடைஷியா எனக்கு தாலி ஏறும்போது பார்த்தேன் அப்பறம் காணலை"
"என்ன கயல் சொல்ற?" என்று பதறினாள் ஜகேந்திரனும் பதறினார்
"ஆமாப்பா நிஜமாகவே"
பதறிய பெற்றமனம் "வாங்க போலீஸ்க்கு போலாம்" என்றது
"மாமா பொறுமையா இருங்க இளா வந்துறுவா பதற வேண்டாம் பொண்ணு விவகாரம் போலீஸ்க்கு போனா அவ்வளவு நல்லா இருக்காது ஸோ பேசாம இருங்க நான் கண்டு பிடிக்கிறேன் நாளை வரை டைம் கொடுங்க"
"இல்ல மாப்பிளை அது"
"சொல்றத சொல்டேன் நீங்க உங்க விருப்பத்த பன்னுங்க மாமா"
"இல்ல மாப்பிளை சரி நீங்க கண்டுபிடிங்க"
"டேய் வரூ பயமா இருக்குடா அவள சீக்கிரமாக கண்டு பிடிப்பா"
"என்ன நம்புங்க அத்தை"
அந்த நாளே இன்வெஸ்டிகேஷன் என்ற பெயரில் போலீஸ் வந்துவிட ஜானகி பதறினாள்
"அம்மாடி நம்ம இளாவ காணலைன்னு சொல்வோமா"
"அம்மா பொறுமையா இருங்கம்மா எதுவா இருந்தாளும் நாங்களா பேச தேவையில்ல அவங்க கேட்க்க போறதுக்கு பதில் மட்டும் சொல்வோம்" என்று விட மவுனித்தாள்
கயலை முதலில் அழைத்தவர் வீட்டில் வசிப்பவர்கள் எண்ணிக்கையை எடுத்து கொண்டார்
பின்பு நடந்த கொலை பற்றி கேள்வி கேட்டனர் இளா பற்றி கேட்டதற்கு
'அவ நேத்தைல இருந்து வீட்ல இல்ல சார்' என்றாள்
பின்பு குணா வரதன் ஜகேந்திரன் என்று அனைவரிடமும் விசாரித்தார் ஜானகி சென்றதுமே
"அய்யா நேத்துல இருந்து என் பொண்ண காணலை அவள கண்டு பிடிச்சி கொடுங்க" என்று ஆரம்பித்தாள்
கடைஷியில் கொலை விசாரணை மிஸ்ஸிங் கேஸாக மாறியதூ
"அவங்கள எப்போல இருந்து காணலை"
"டைம் தெரியலை பட் நேத்துல இருந்து காணலை"
"காதல் எதுவும்?"
"அய்யோ இல்லங்கய்ய ஓடி போறவ கிடையாது அவ"
"ஒகே இதூக்கு முன்னாடி சொல்லாம போயிருக்காவா?"
"அப்டி போனதில்லய்யா"
"அவ நம்பர்க்கு கால் பன்னலையா"
"ஸ்விட்ச் ஆப்ங்கய்யா"
"உங்க மருமகள் சுமித்ராவுக்கு மகள் இளநகைக்கும் வாக்குவாதம் ஏதும் நடந்தது உண்டா?"
"ச்சி இல்ல இல்ல ஏன் கேட்குறீங்க...."
"அவங்க சுமித்ராவ கொலை பன்னி இருக்க சான்ஸஸ் இருக்கே"
"அய்யோ இல்ல இல்ல அதுக்கான வாய்ப்பே இல்ல என்ன பேசுறீங்க"
"எங்களுக்கு அப்டி தான் தோனுது சரி இந்த வீட்ட விட்டு கேஸ் முடியும் வரை யாரும் வெளிய போக கூடாது அப்டி போன அர்ரெஸ்ட் பன்ன வேண்டி வரும்" என்று விட்டு சென்று விட
"என்னம்மா நீ இப்டி பன்னிட்ட சும்மா இருக்க வேண்டியது தானே வரதா தானே கண்டு பிடிக்குறதா சொன்னாரு"
"பெற்ற மனம் டி இது"
"இப்போ அவள தேட போறது ஒன்னும் மிஸ்ஸிங் கேஸா இல்லம்மா கொலை காரின்னு அவங்க கண்டு பிடிச்சிறுவாங்க" என்று கூறி விட்டு நாக்கை கடித்து கொண்டாள்
சட்டென்று பேச்சை மாற்ற முயற்சித்து தோற்றாள் ஜானகிக்கு எதுவும் மென்ஷன் ஆகவில்லை என்பதால் அவளும் மவுனமாகினாள் ஆனால் குணாவுக்கோ....
திக் திக் திக்...
மெதுவாக அவளருகில் வந்தவன்
பளார் என்று எதுவும் பேசாது கன்னத்தில் அறைந்தான்
"அண்ணா" என்று கதறினாள்...
"டேய்.... என்று ஜானகி பதற
"உண்மைய சொல்லு இளா சுமிய என்ன பன்னா"
"அண்ணா ஒன்னும் பன்னலைன்னா...எனக்கெங்க தெரியும்"
"ஆமா குணா அவளுக்கு எதுவும் தெரியாது... சும்மா அவ கிட்ட கேட்காம" என்று வரதன் தொடங்கியதும்
"எதுவும் தெரியாதுன்னா என்ன தெரியாது"
"அதுவா நீ கேட்க்குற எதுவும் தெரியாதுன்னு சொன்னேன்"
"சரி இப்போ எனக்கு கயல் உண்மைய சொல்லலைன்னா சத்தியமா நாளைக்கு எனக்கு காரியம் பன்ன எல்லாரும் ரெடியா இருங்க"
"உண்மையா எதுவுமே இல்லண்ணா நீ சும்ம இப்டி பேசாத"
"என் சுமி அவ என் சாமி டி அவ இல்லாம நான் எப்டியும் வாழ்றதா இல்ல நான் நாளைக்கு தற்கொலை பன்னிப்பேன் ஆனால் நீ சொல்லாம என்ன கொலை பன்னிறாத" என்றான் அழுகையுடன்
"வேண்டாம்ண்ணா இப்டி பேசாத"
குணா அருகில் இருந்த கத்தியை எடுத்து தன் கையை வெட்டி கொண்டு "நீ சொல்லலைன்னா வெட்டிகிட்டே இருப்பைன்" என்றான் கோவமாக பதறிய அனைவரும் கயலை நச்சரித்தனர்
"சரி சொல்றேன் பட் போலீஸ் மீதிய பார்த்துக்கட்டும்ன்னு இருப்பியா"
"ம்ம"
"வரதன் மேல் இளாவுக்கு காதல் என்று முதல் முதலில் சொன்னதில் இருந்து சுமி சாகும் முன்பு இளாவை சமாதானப்படுத்த சென்றது இளாவின் துப்பட்டாவை இறுக்கி பிடித்து இருந்தது மற்றும் ஜன்னல் வழியாக பார்த்த போது கிடந்த மல்லிகைப்பூ வரை சொன்னாள்"
அன்றூ ஹாஸ்பிடலில் எடுத்த ஓடியோவை போட்டு காட்டியதும் ஜகேந்திரன் அவமானத்தில் தலை குனிந்து விட்டார் ஜானகி தலையை கீழே போட்டு தொப்பென்று அமர்ந்து விட்டாள் குணா இரத்த நிற கண்களுடன் முறைத்து கொண்டு நின்றான்
"அண்ணா காம்டவுன் கோவப்படாத புரியுதா நாம இரண்டு கேஸயும் போட்டு கன்பியூஸ் பன்னி விட்டா அவங்க சப்போஸ் வேற யாராச்சும் கொலை பன்னி இருந்தா கூட கண்டு பிடிக்காம ஈஸியா நம்ம இளா தலையிலயே வைப்பாங்க"
"நோ அதுலாம் நடக்காது நான் கமிஷ்னர் கிட்ட பேசிட்டேன் அவள தேட ஆரம்பிச்சிட்டாங்க"
"இல்ல மாப்பிளை அவ கொன்னாலும் கொன்று இருப்ப இல்லேன்னா ஏன் போகனும்... ஹாஹ் அவ கேரக்டருக்கு இங்க இருந்தே உங்களுக்கு டார்சர் தரனும்ன்னு தான் நினைப்பா ஷோ அவ ஓடி போக காரணம் சுமிய கொலை பன்னது தான்"
"அத்தை நம்ம வீட்டு பொண்ணு அத்தை ஸோ அவள காப்ப" என்று வரதன் கூறும் போதே
"யாரு நம்ம வீட்டு பொண்ணு எப்போ அக்கா கட்டிக்க போறவன தப்பான பார்வைல பார்த்தாலோ எப்ப தாய் மாதிரி இருந்த என் சுமிய கொன்னாலோ அப்பவே அவள நான் தலை மூழ்கிட்டேன் இனி அவ பெயர் இந்த வீட்டுல வந்துச்சி அப்பறம் நானும் சுமி கிட்டவே போயிடுவேன் .."
"ஆமா வரதா எங்களுக்கு சுமி ஒரு பொண்ணுக்கு மேல அவ இந்த வீட்டோட மஹாலக்ஷமி அவள கொலை பன்னிட்டு இளா வந்தா நாங்க சேர்த்துக்க மாட்டோம்"
"மாமா அவ கொலை பன்னதுக்கூ ப்ரூப் இல்லே இது எங்க சந்தேகம் தானே"
"ஏன் வரதா சுமித்ராவ கயல் கொன்றதா உன்னால சந்தேக பட முடியுமா"
"நோ வேய்ஸ்"
" முடியாதுல்ல... ஸோ சந்தேகம் கூட சும்மா வராது ப்பா அது கூட அவங்க குற்றவாளிய இருக்க சான்ஸ் இருந்தா தான் வரும்"
"அத்தை ப்ரூபில்லாம நாங்களே"
உச்ச கோவமடைந்த குணா "ஓஹ் உனக்கு ப்ரூப் தானே வேணும்" என்று கத்திவிட்டு மொபைலை எடுத்து போலிஸுக்கு கால் செய்து
"சார் சுமித்ரா கொலை சம்மந்தமா ஏதாச்சும்"
"யோவ் அதுக்கு ஒரு வாரமாகும் சும்ம போன வைய்யா" என்று போலீஸ் கத்திவிட
வரதன் "ஒகே நானே பேசுறேன்" என்று கமிஷனருக்கூ கால் செய்து "மிஸ்டர் அருண் நான் வரதா பேசுறேன் சுமித்ரா என்ற ஒரு பொண்ணோட கொலை கேஸ் சம்மந்தமா இன்னைக்கு விசாரணை பன்னாங்க அந்த கொலை பன்ன ஆளோட பிங்கர் ப்ரின்ட் இன்னக்கி நைட்க்குள்ள வேணும் எது பன்வீங்களோ என்ன பன்வீங்களோ தெரியாது எனக்கு டீடெய்ல்ஸ் வேண்டும்"
"கண்டிப்பா சார்" என்று விட அடுத்த மூன்று மணித்தியாளத்தில் "சார் லெப் ரிஸல்ட் வந்துறிச்சூ"
"இப்போ வீட்டுக்கு உங்க ஆளுங்கள அனுப்புங்க" என்று கூறி விட்டு
அரை மணி நேரத்தில் வந்ததும் இளாவின் அறையில் இருந்த அனைத்து பொருட்களினதும் பிங்கர் ப்ரின்டை எடுத்து கொண்டனர்
"இப்பவே போயி இரண்டும் பொருந்துதான்னு பார்த்து நைட்க்குள்ள எனக்கு இன்போமேஷன் கொடுங்க"
"கண்டிப்பா சார்" என்று விட்டு சென்றனர்
குணா இப்பொழுது வரை ஒரு துளி நீர் அருந்தவுமில்லை... அந்த இடத்தை விட்டு அசரவுமில்லை
இரவு ஒன்பது மணி கால் வந்தது "சார் இரண்டும் சுமூகமா பொருந்தது சார்"
"ஹம் அப்போ கொலையாளி எங்களுக்கு தெரிஞ்சவங்க தான் நீங்க கொஞ்சம் நேர்ல வாங்க" என்றதும்
குணா ஓடி வந்து "என்னாச்சி சொல்லு"
"இளா தான் இத பன்னிருக்கா..." என்றான் அமைதியாக....
"அவள போலீஸ்ல பிடிக்க சொல்லு மரண தண்டனை கொடுக்க சொல்லு நீ சொன்னா கேப்பாங்கல்ல"
"இல்ல வேண்டாம்"
"வேண்டாம்" என்று கத்தினாள் ஜானகி
"அவ இனி எனக்கு வேண்டாம் அவ இந்த வீட்ல இருந்தா நான் துரோகி ஆயிறுவேன் என்ன குழந்தை மாதிரி பார்த்துகிட்ட என் மக சுமித்ராக்கு நான் துரோகி ஆயிறுவேன் வரதா அவள பிடிச்சி கொடூ"
"அத்த கமிஷனர் எனக்கு ப்ரன்ட் தான் இப்போ வீட்டுக்கு வர்றார்"
கமிஷனர் வந்ததும் குணா இளாவின் புகைபடத்தினை நீட்டி "இவ தான் கொலை காரி அர்ரெஸ்ட் பன்னுங்க என் சுமிய கொன்னுட்டா அர்ரெஸ்ட் பன்னுங்க"
கமிஷ்னர் வரதனை பார்க்க "வாங்கிக்க சொல்லு வரதா" என்று கத்தினான் குணா
"வரதா நியாயத்த பெரிய மனுஷங்களே தவற விட்டதால தானே நம்ம கனி இறந்து போனா... இப்போ நாங்களே நம்ம வீட்டு பொண்ணுன்னூ நியாயத்த தவறவிட்டா நாமளும் தப்பான்ங்க தானே சமூகத்துக்கு இல்லேன்னாலும் நம்ம மனசுக்காவது" என்று கயல் கூறினாள் மறு பேச்சின்றி
"வாங்கிக்கங்க அருண்" என்றதும் வாங்கி கொண்டான்
"சீக்கிரமா அவங்கள கண்டு பிடிச்சி சட்டத்துக்கு முன்னால நிறுத்துங்க அதுக்காக என்ன வேண பன்னுங்க....
அதன் படி அவளை கண்டு பிடிக்க சீரி பாய்ந்தனர்....
இளாவை இனி இறைவனால் கூட காப்பற்ற முடியாது ஏன் என்றால் இது அவன் இட்ட முட்டு கட்டை தானே...
#வாழ்க்கையின் அர்த்தம் தேடலாகியே போனது-கயல்
#குற்றம் செய்தவர் தன் இரத்தமாக இருந்தாளும் தண்டிப்பதே மனிதநேயம்...-ஜானகி,ஜகேழ்திரன்
#வீம்பும் திமிரும் யாரையும் காயப்படுத்தாது இருக்கும் வரை அது அழகானது ஒருவரை கூட காயப்படுத்தி விட்டாள் அதன் விபரீதம்
ஆழமானது-இளநகை
#உறவுகளுக்கு உண்மையாக இருக்கவே மறுக்கும் சிலருல் உயிராக இருந்து உயிரையே விட்டதை எப்படி சொல்வேன் வார்த்தையில்-சுமித்ரா
#மரண பிடியில் சண்டையிட்ட என்னை மறுபக்கப் கிடந்த வாழ்க்கையை காட்டி அனைத்தையும் மறக்க செய்தாயே-வரதன்
Zahra Naseer
......முற்றும்.....