எங்க குழந்தய அன்னைக்கு சரியா பார்க்கமகூட வந்துட்டேன்....
என் ரியாகிட்ட பேசாமகூட வந்துட்டேன்.... ஏன் என்ன இப்படி எல்லாரும் ஏமாத்துனாங்க... நா உலகமுனு நெனச்ச தாத்தா பாட்டி... என் பூர்வி என் நண்பன் எல்லாருமே....
பின் தாத்தா பாட்டி பூர்வி, சுரேஷ், லோகேஷ் அனைவரையும் அழைத்து அவர்கள் முன்பிருந்த வீட்டிற்கு வரவழைத்தான்.
அனைவரும் அங்கு வந்தனர்.
ச்ச நீங்க என் லைப்ல இப்டி விளையாடுவிங்கனு நெனைக்கல... என் ரியாவ விட்டு வேற ஒருத்திய நா எப்படி ஏத்துபனு நினச்சிங்க...
உங்களுக்கெல்லாம் மனசாட்சி இல்ல.... எனக்கு எந்த நியாபகமும் இல்லாதப்ப... என் ரியாவுக்கும் எனக்கும் எப்படி இந்த அநியாயத்த பன்னமுடிஞ்சது.. ச்ச உங்கல என் பேம்லினு நினைக்க எனக்கு வெட்கமா இருக்கு... - நவீன்.
பின் அனைவரும் அவனிடம் சாரி கேட்டு.. நடந்த அனைத்தையும் கூறினர்.
ஆனால் அவன்
நிஷாவை பற்றி எதும் யாரிடமும் கூறவில்லை. அனைவரிடமும் பேசாமல் ஒதுங்கியே இருந்தான். தன் தோழி எப்படிபட்டவள் என அறிந்தாள் தன் ரியா அவனை விட்டு போனதற்கு அவள்தான் காரணம் என குடும்பத்தினர் அறிந்தால்.... செய்யாத தவற்றிற்காக அவளை வெறுத்ததை எண்ணி அனைவரும் மேலும் மன உலச்சலுக்கு உண்டாவர், வருந்துவர் என குடும்பத்தின் மீது யாரும் அறியா வண்ணம் நிஷாவின் பிரச்சனையை தீர்க்க எண்ணினான்.
அவனுக்கு தெரியும் ரியா இந்நிலையில் இருந்திருந்தால் அவளும் இவ்வாறுதான் செய்திருப்பாள் என அறிவான்.
விக்கியை அழைத்து நடந்தவற்றை கூறினான்.. ஆனால் நிஷா பற்றிய உண்மையை அவனிடமும் கூறவில்லை.
நவீன் டெல்லி சென்றபோது ரியாவை பார்த்ததையும் அவன் குழந்தையை பற்றி கூறியதையும் கேட்டு விக்கி ஆனந்தத்தில் ஆழ்ந்தான்.
நவீன் நிஷாவை தனியாக வரவழைத்து பேசினான்.
நிஷா... எனக்கு தெரியும் நீ என்ன லவ் பன்னனு... ஆனா நா உன்ன அப்படி எப்பயும் பார்த்ததில்ல... அது உனக்கே தெரியும்.
என்ன அப்படி பார்க்க.. தெரியுமா? தெரியாதா? - நவீன்.
நவீன்... அது... - நிசா.
ச்ச என்ன பொன்னு டி நீலாம்... சாரி நா மத்த பொன்னுங்கல டி போட்டா என் ரியாவுக்கு பிடிக்காது... அதனால உன்ன அப்டி சொல்லமாட்டேன்.
என் லைப்ல நீ இவ்ளோ ச்சீப்பா... நடந்துக்குவனு நெனைக்கல... என் ரியாவ என்கிட்டருந்து பிரிச்சுட்ட... நீ எவ்ளோ என் ரியாவ டார்சர் பன்னிருந்தா... அவ அப்படி ஒரு முடிவ எடுத்துருப்பா...
ச்ச நீ என் உயிர் தோழியா இருப்பனு நெனச்சுருந்தேன்... ஆனா என் உயிர என்கிட்டருந்து பிரிப்பனு நினைக்கல.... ச்சி உன்ன என் பிரண்டுனு சொல்லிக்க கேவலமா இருக்கு.... நீயெல்லாம் மனுச ஜென்மம் இல்ல... கல்யாணம் ஆனவன் தெரிஞ்ஞசும் பின்னாடியே சுத்துன சூர்பநகை மாதிரி அரக்கி... ச்ச அதெல்லாம் உனக்கெங்க தெரிய போகுது... அதெல்லாம் படிச்சிருந்தா... நீ இப்படி கே வளமான வேலைய பன்னிருக்கவே மாட்டயே- நவீன்.
இல்ல நவீன் எனக்கு நீ வேனும்.... அவ உனக்கு செட் ஆக மாட்டா..எப்படி சந்தேகபட்டு விட்டுபோனா பாரு உன்ன??? - நிஷா.
அதுவரை அமைதியாக இருந்தவனால் ரியாவை பற்றி பேசியவுடன் பொறுத்துகொள்ள இயலவில்லை அவள் ரியாவை பற்றி பேசிமுடிப்பதற்குள் நவீனின் கைதடங்கள் நிஷாவின் கன்னத்தில் பதிந்தது....
ச்ச்சி... நீயலாம் ஒரு பொன்னா... என் லைப்ஸ இனி உனக்கு எந்த இடமும் இல்ல... நீ எப்படியோ போ... உன் நல்லதுக்காகதான்..நீ திருந்துவனு நெனச்சுதான் நீ எனக்கு இவ்ளோ துரோகம் பன்னதுகப்பறமும் பொறுமையா பேசுனேன் உன்ன பார்க்க கூட எனக்கு பிடிக்கல... கெட்லாஸ்ட்..... என கூறிவிட்டு அவனே கிழம்பி சென்றுவிட்டான்.
பின் விக்கியும் நவினும் நண்பர்களுடன்... டிடக்டிவ் ஏஜென்சியை அணுகி அவளை தேட ஆரபித்தனர் டெல்லியில்.....
இவர்கள் அங்கு சென்றால் அதை அவள் அறிந்தால் பிரச்சனையாகும் என அவர்கள் நேரடியாக அங்கு செல்லவில்லை.
இச்சமயத்தில்தான் நவீன் ஒருநாள் ரியாவின் வீட்டிற்கு பழைய நியாபகத்தில் தன்னையும் அறியாமல் சென்றான்.
அதன்பின் உள்ளே விக்கி அழைத்து சென்றான்....
(Big flashback ends here..... oru valiya mudinjathupa)
கதவு தட்டும் சத்தம் கேட்டு தன் நினைவுலகிற்கு வந்தான் ..... கண்களை துடைத்துக்கொண்டு கதவை திறந்தான்.
வாங்க மாமா சாப்டலாம்..- விக்கி
பின் அனைவரும் லன்ஜ் முடித்து விக்கியும் நவீனும் வெளியில் கிழம்பினர்.
மாமா.... நீங்க சொன்ன ஏறியாவுல... ரியா இல்ல போல மாமா.... அப்றோம் ஹாஸ்பிட்டல டீடய்ல்ஸ் கூட பார்தாச்சு..... ரியான்ற பேர்ல இருக்கற டாக்டர்ஸெல்லாம் நம்ம ரியா இல்ல...
அவ இப்போ டாக்டராதான் வொர்க் பன்றாளான்னுகூட தெரியல... - விக்கி.
ஓகே விக்கி.... பட் அவ போட்டோ வச்சுதான் புல்லா தேடனும்.. எதும் செட்டாகலனா கடைசியா போலீஸ்ட போகலாம்..... - நவீன்.
ஹிம் ஓகே மாம்ஸ்.
இதற்கடுத்து.... அணுவும் கௌதமும் அவர்கள் ஆறு மாத குழந்தை ரிகானாவுடன் இந்தியா வந்தனர்.... ஆம் அவர்கள் கான்பிரன்ஸ் சென்று வந்த பிறகு சிறிது நாட்கள் வெளிநாட்டிற்கு பணிபுரிய சென்றனர். அவர்களும் யி யாவை பற்றி விசாரிக்க நாள் இல்லை..
வீட்டிற்கு சென்று லக்கேஜ் வைத்தவர்கள் முதலில் கிழம்பியது நவீனின் வீட்டிற்குதான்.
உள்ளே சென்றவர்களை அனைவரும் வரவேற்றனர்.
ஆனால் யார் முகத்திலும் கலையே இல்லை....
அப்போது கீழே இறங்கிவந்தான் நவீன்.
கௌதம் அது வந்து உங்ககிட்ட பேசனும் என உள்ளே இருவரையும் அழைத்துச்சென்றான் நவீன்.
நடந்த அனைத்தையும் கூறினான்.
இருவரும் நிஷாவின் மீது பொங்கி எழுந்தனர்.
ஆனால் நவீன் அவள் யூ . எஸ் சென்றுவிட்டாள் என்றபின்தான் அமைதியாகினர்.
ஆம் நிஷா நவீனின் வார்தைகளால் அதிச்சியுற்றாள்.
எப்போதும் அவளுக்காக இருந்த அவன் அவளை அடித்து கண்டபடி திட்டியதால் அவள் செய்த தவறை உணர்ந்தாள்.
பின் அவனிடம் எவ்வளவு மன்னிப்பு கேட்டும் பிடிகொடுக்கவில்லை.
அவளும் ரியாவை தேட உதவுவதாக கூறினாள்... அவளிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றாள்.. ஆனால் நவீன் அவள் முகத்தில்கூட விழிக்க விரும்பாததால் அவனைவிட்டு விலகிச் சென்றுவிட்டாள்.
பாஸ்கரும் நவீனிடம் மன்னிப்புக்கோரி அவளை கூட்டி சென்றுவிட்டார்.
அணுவிற்கோ கவலை சொல்லமுடியாத அளவிற்கு.... கௌதமிற்கோ தன்னிடம் அவள் அனைத்தையும் மறைத்து இவ்வளவு பெரிய விஷயம் செய்திருக்கிறாள் என்ற கோபமும்.... அவள் எவ்வளவு துயரத்தில் இம்முடிவை எடுத்திருப்பாள் என்ற கவலையும் இருந்தது.
பின் ரியாவின் வீட்டிற்கு சென்று அவள் பெற்றோருக்கு ஆறுதல் கூறிவிட்டு அன்று முழுதும் அங்கேயே தங்கிவிட்டு... இரவு வீடு திரும்பினர்.
கௌதம் இந்தியா வந்து ஒரு வாரம் கழிந்தது.
தன் வீட்டிற்கு வந்த வித்யா கௌதம் வீட்டிற்கு சென்றாள் அவர்கள் பாரினிலிருந்து வந்ததை அறிந்து.
அங்கு சென்றபின்தான் அவளுக்கு தெரிந்தது... ரியாவை பற்றி.
என்ன கௌதம் சொல்ற.. எனக்கு மண்டயே வெடுச்சுடும் போல இருக்கு.... நா பிசியா இருந்தததாலதான் அவட்ட பேச டிரைபன்னல... லாஸ்டா அவ கேரளால சக்திவீட்டுக்கு போயிருந்தப்போ பேசுனேன்.... ஆஆஆ கௌதம் எப்போ அவ வீட்ட விட்டு போனா சொன்ன ???- வித்யா.
ஒரு 18 மன்த்ஸ் இருக்கும்.... -கௌதம்.
அப்டினா கிட்டதட்ட அந்த டைம்லதான் ஏதோ கான்பிரன்சுக்கு கேரளா வந்தேன் சக்தி வீட்ல இருக்கனு சொன்னா..... - வித்யா.
கண்டிப்பா ரியாக்கு சக்தி ஹெல்ப் பன்னிருப்பானு தோனுது.. எதுக்கும் அவனுக்கு கால் பன்றேன்- கௌதம்.
சக்தி போன் அட்டன் செய்யவில்லை.
இந்த இடியட் இப்படிதான்... போன எங்கவச்சானோ- கௌதம்.
ஹே இல்ல கௌதம் அவன் மீட்டிங்ல இருப்பான்.. - வித்யா.
அட இத மறந்துட்டடேன் பாரு.... ஆமா ரியா போன் எடுத்துட்டு போகல.... சக்தி வீட்ல அவ இருந்தது எப்படி உனக்கு தெரியும்??
அவன் மீட்டிங்ல இருக்கறானெல்லம் சொல்ற ???? எலியும் பூனையுமா இருந்திங்க... சப்போர்டெல்லாம் பலமா இருக்கு சரி இல்லயே.... எங்கயோ இடிக்குதே?? - கௌதம்.
ரொம்ப திங் பன்னாத....நாங்க ரெண்டுபேரும் லவ் பன்றோம் போதுமா... இப்ப விஷயத்துக்கு வா.... - வித்யா.
சரி வா லன்ச் முடிச்சு அவனுக்கு கால் பன்னுவோம் - கௌதம்.
ஹிம் இருப்பா.... அதுக்குள்ள என்ன அவசரம் நா போய் குட்டிய பார்த்துட்டு வரேன் என ரிகானாவை எடுத்து கொஞ்சிவிட்டு மதிய உணவையும் அவர்களுடன் உண்டாள் வித்யா.
பின் அவனுக்கு கால் செய்தனர்... முதலில் மழுப்பியவன் பின் இவர்கள் கூறியவிஷயங்களை கேட்டு ரியாவை பற்றிய தகவல்களையும் ... அவள் போன் நெம்பரையும் தந்தான்.
பின் கௌதம் நவீனிற்கு கால் செய்து ரியாவை பற்றியவிரங்கள் கிடைத்ததை கூறி ரியாவின் வீட்டிற்கு அவனை வரசொல்லிவிட்டு இவர்களும் கிழம்பி அங்கு சென்றனர்.
ரியாவை பற்றி அறிந்த சந்தோசத்தில் நவீனும் ஆபிசிலிருந்து கிழம்பினான்.....