👩❤️💋👨நீ தீயாய் இரு💜எனை திரியாய் தொடு 👩❤️💋👨
🤗 பகுதி 24
கமலேஷ் - உன்னோட மனசு,உன்னோட உடம்பு, உன்னோட திமிரு, உன்னோட காதல், உன்னோட காமம்,இப்படி உன் சம்மந்தப்பட்ட எல்லாமே இனி என் ஒருவனுக்கு மட்டும் தான்...Because.... I....
என்றவனின் வார்த்தை முற்று பெறும் முன்பு....
காமினி - I hate you... என்றவளின் இதழ்களில் மீண்டும் அழுத்தமாக தன் அதரங்களை பதித்தவன்...
Same too you... என்றவன்.... அடுத்த சுற்றுக்கு தயாரான நிலையில்....
கமலேஷ் காதில்... காமினி ஏதோ சொன்னவளின் சொல்லை கேட்டு கமலேஷ் கண்கள் கலங்கி அவள் வசமிருந்து எழுந்தவன்.... அவளை தன் வெற்றுடல் மேனியில் கட்டிக்கொண்டு கதறி அழுதவன்..
கமலேஷ் - என்ன டி சொல்லுற...
என்றவனின் வார்த்தை நடுக்கம் கூட்டியது...
காமினி - ஆமா டா.... உன்னை மாதிரி ஒரு வாலு பொண்ணோ, இல்ல என்னை மாதிரி ஒரு சமத்து பையனோ நமக்கு பிறக்க போறான்.... என்றவளின் முகத்தில் வெட்கம் கூடி இருந்தது....
அவளை அப்படியே அள்ளி தன் இதயத்தோடு அணைத்து கொண்டவன்.. அவள் முகம் எங்கும் முத்தமிட்டு.... தன் கண்ணீரால் அவளை மூழ்கடித்தான்....
அழாத கமல்.... இந்த நேரம் நம்ம ஹாப்பியா இருக்கணும்... Pls அழாத... என்றவள் அவனின் கண்ணீரை துடைக்க...
இந்த விஷயத்தை ஏன்? டி நீ முன்னாடியே சொல்லல.... எதுக்காக என்னை இப்படி அழ விட்ட... நீ மட்டும்... நான் அப்பாவாக போறேன்னு சொல்லிருந்தா... நான் உன்னை பிரிந்து போகணும்னு நினைச்சு இருக்கவே மாட்டேன் டி... என்றவன்...பொய்யான கோபத்துடன் அவளை முறைக்க...
ம்... அதுக்காக தான் சொல்லல... நம்ம பிள்ளையை காரணம் காட்டி உன்னை நான் கட்டிக்கிட்டா.... நான் உன்னை பிளாக் மெயில் பண்ற மாதிரி இருக்கும்... எனக்கு அப்படி பட்ட உறவு வேண்டாம்.... உண்மைக்கே என் மேல உனக்கு இருக்குற காதலை நீ புரிஞ்சிக்கணும்னு நினைச்சேன்... அதுக்காக தான் உன்னை உசுப்பேத்த ஸ்டீபன் கூட க்ளோஸ் ஆகுற மாதிரி ட்ராமா பண்ணேன்... என்றவள் அவனை பார்த்து அழகாக கண் சிமிட்டினாள்...
அடி லூசு.... நான் உன்னை கல்யாணம் பண்ணி, உன் கூட வாழ முடியாதுனு சொன்னதுக்கு காரணம், உன்னை எனக்கு பிடிக்காம இல்ல.... நான் இந்த உலகத்துக்கு வர காரணமா இருந்த அந்த வாசுதேவனை நான் போட்டு தள்ளிட்டு, இந்த ஊரை விட்டு போறது தான் என் பிளான்... எங்க நான் அந்த மாதிரி பண்ண போயி, கடைசில மாட்டிக்கிட்டா,உன் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விடும்னு தான், உன்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னேனே தவிர,உன் கூட ஆசை தீர வாழணும்னு எனக்கும் நிறைய ஆசை இருக்குடி...என்றவன் அவளை அள்ளி தன் மடியில் அமர வைத்து கொண்டவன்... தன் கரங்களை கொண்டு அவள் வயிற்றை வருடினான்...
ப்ச்... அதெல்லாம் எனக்கு தெரியாது... ஆனா நீ just for மேட்டர் க்கு தான் என்கூட இருக்கேனு என் friends எல்லாம் சொன்னாங்க.. ஏன்.. நீயே பல முறை அப்படி தான் சொல்லுவ... பட் எனக்கு தெரியும்... உனக்கு என்னை பிடிக்கும்.... நீ என்கூட பழக ஆரம்பித்த பிறகு.. உனக்கு என்னை மட்டும் தான் பிடிக்கும்.... நானும் அப்படி தான்... உன் மேல கண்மூடித் தனமா நான் காதலை வளர்த்துக்கிட்டேன்... என்ன தான் நம்ம மாடல் world ல வாழ்ந்தாலும்... Sex உணர்வு தோன்றும் போது..friends with benifit... and one stand ன்னு bed share பண்ண ஆயிரம் பேர் வந்தாலும், போனாலும்....அதெல்லாம் நிரந்தரம் இல்ல கமல்........ நம்ம life ல கடைசி வரை நமக்குனு ஒருவர் வேணும்.... என்றவள் அவன் நெற்றியை செல்லமாக முட்டினாள்...
அப்போ... கடைசி வரை நீ என்னை விட்டு போக மாட்ட தானே..
நான் போக மாட்டேன் டா... ஆனா உன்னை தான் நம்ப முடியாது.... அதனால உனக்கு நான் ஒண்ணு பண்ணலாம்னு இருக்கேன்....
நீ இப்போ மாசமா இருக்கடி... so அடிக்கடி எதுவும் பண்ண கூடாது...
டேய்... நான் அத சொல்லல டா... நான் உனக்கு அந்த ஒன்றை cut பண்ணலாம்னு இருக்கேன்....
என்ன...!?
நாக்க சொன்னேன் டா.... அத வச்சிக்கிட்டு தான் நீ எல்லோரையும் பேசி பேசி கரெக்ட் பண்ற...
No No.. அப்படி எல்லாம் சொல்லப் படாது... நீ வேணும்னா பாரு... நம்ம பிள்ள பிறக்க போற நேரம்... நான் என்னை எப்படி எல்லாம் மாத்திக்க போறேன்னு நீ வெயிட் பண்ணி பாரு....
ம்.... பாக்க தானே போறேன்..
சரி.. நாளைக்கு தீரன் mrge முடிஞ்சதும்..செக் up போயிட்டு வரலாமா...
நான் next week appointment வாங்கி இருக்கேன் கமல் .
இனி நீ work போகாத...என்றவன் மேலும் அவளை இறுக்கமாக அணைத்து கொண்டான்.
ம்... போகல...
full ரெஸ்ட் ல இருக்கணும்...
அதுக்கு நீ என்னை ரெஸ்ட் எடுக்க விடணும்...
நான் என்ன பண்ணேன்.. நீ தான் என்னை எதாவது பண்ணுவ... நான் ரொம்ப நல்ல பையன் டி...
ஐயோ ஆமா ஆமா... சொன்னாங்க...
ஏய் மினி..
ம்...
உண்மையாவே நீ மாசமா இருக்கியா டி...
ஏன் டா.. சந்தேகமா இருக்கா.
இல்ல... ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கு... நமக்கு ஒரு குழந்தை பிறக்க போகுதுன்னு நினைச்சா செம்ம ஹாப்பியா இருக்கு டி...
ம்.... ஆமா கமல்... எனக்கும் ரொம்ப ஹாப்பி ...எங்க நீ கடைசி வர உன் மனசுல என் மேல இருக்குற உன் காதலை என்கிட்ட சொல்லாமலேயே என்னை avoid பண்ணிடுவியோன்னு நான் பயந்துட்டேன்.... அப்படி மட்டும் நீ பண்ணிருந்தா.. நானும் நம்ம பிள்ளையும் உன் முகத்துலேயே விழிக்காம இந்த ஊரை விட்டே போய் இருப்போம்..
ஏய்.. ஏன்டி நடக்காததை எல்லாம் பேசுற.. நான் அந்த மாதிரி பண்ணா என்னை பெத்தவனுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் சொல்லு...
ஆமா... உன் அப்பாவை என்ன டா பண்ண... நாளைக்கு வேற தீரன் தியா mrge ஏற்பாடு பண்ணிருக்க... அப்போ உங்க அப்பா.. வால எதுவும் பிரச்சனை வராதா...
அதெல்லாம் அந்த ஆளால எதுவும் பண்ண முடியாது...
அந்த ஆளுக்கு நான் ஒரு செக் வச்சிட்டேன்...
ம்... என்னவோ பண்ணிருக்க... என்னனு தான் சொல்ல மாட்டுற...
அதெல்லாம் அப்புறமா சொல்லுறேன்... நீ ஜூஸ் குடிக்கிறியா,நான் போய் எடுத்துட்டு வரவா...
ம்ஹூம் அதெல்லாம் வேணா...
ம்... உன் வயித்துல எத்தன பாப்பா இருக்கு...
இது என்னடா கேள்வி... ஒண்ணு தான் இருக்கும்..
இல்ல இல்ல ரெண்டு, அப்படி இல்லைனா மூணு இருக்கும்னு நினைக்கிறேன்..
ஏன் அப்படி சொல்லுற...
எனக்கு நீயும்.. உனக்கு நானும் இந்த விஷயத்துல சளைத்தவர்கள் இல்ல..நம்ம தீயா வேலை செய்து இருக்கும் போது... எப்படியும் நமக்கு ரெண்டு புள்ள தானே பிறக்கும்..
ச்சீ வாய்யா டா உனக்கு....ஆளை பாரு... போ.. நான் இங்க இருந்தா நீ இப்படி தான் என்னை வம்பு பண்ணுவ... எனக்கு நேரம் ஆகுது...நான் கிளம்புறேன்..
ஏய் எங்க போற.
என் வீட்டுக்கு..
நீ நம்ம வீட்டுக்கு மூவ் on ஆகிடு... இனி நீ அங்க இருக்க வேணா..
நான் ஏன் உன் வீட்டுக்கு வரணும்.... எனக்கு என்ன உரிமை இருக்கு உன்கிட்ட..
எல்லா உரிமையும் உனக்கு இருக்கு.. உனக்கு மட்டும் தான் இருக்கு...
இல்ல... நான் வரல.... நான் என் வீட்டுலேயே இருக்கேன்...
சரி.. அப்போ நான் உன்கூட வந்துடுறேன்..
உண்மையாவா..
நீ வரலைனா.. நான் தானே வரணும்...
அப்போ வா போகலாம்..
இன்னைக்கு வேணா.. நாளைக்கு வரேன்..
ஏன்.. இன்னைக்கு ஏன் வேணா..
நாளைக்கு ரத்தனுக்கு கல்யாணம் முடியட்டும்... அவனை இங்க செட்டில் பண்ணிட்டு... நாளைக்கு நான் உன்கூட வந்து செட்டில் ஆகிடுறேன்...
ம்....
சரி... அப்போ நான் கிளம்பவா..
மினி..
ம்...
நான் தூங்கி ரெண்டு வாரம் ஆச்சு டி..
ஏன்...
ஏன்னு உனக்கு தெரியாதா..
நீ தான் நல்லா துங்குவியே டா... என்ன திடீர்னு தூங்கல ன்னு சொல்லுற...
நீ என் பக்கத்துல இல்லாம தான் நான் தூங்கல.. So நான் இப்போ உன்கூட நிம்மதியா தூங்க போறேன்.. நாளைக்கு நீயும் நானும் சேர்ந்து தீரன் தியா கல்யாணத்தை முடிச்சிட்டு.. அப்படியே உன்.. இல்ல இல்ல நம்ம வீட்டுக்கு போயிடலாம்....
என்றவன்... காமினியை கட்டிக்கொண்டு கட்டிலில் படுத்து.. அவள் அருகாமையில் நிம்மதியாக கண்கள் மூடினான்...
இவர்கள் இருவருக்குள் இருந்த பனிப்போர் விலகி....ஒருவர் மேல் ஒருவருக்கு இருக்கும் காதலை உணர்ந்து... காமம் என்பது வாழ்க்கைக்குத் தேவைதான்..காமம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை அறிந்துகொண்ட நிலையில்,கமலேஷ் தந்தையாகப் போகிறான் என்ற மகிழ்ச்சியோடு.. காமினியுடன் அன்றைய இரவை நிம்மதியாக கடக்க...
மறுநாள் காலை கமலேஷ் திட்டப்படி.. முருகன் கோவிலில் தியாழினி தீரத்தன் ஆகிய இருவருக்கும் திருமண ஏற்பாடு நடந்து கொண்டு இருக்க..
கமலேஷும் காமினியும் அவர்கள் நண்பர்களை வரவேற்றபடி இருந்தனர்...
காமினி பட்டுப்புடவையில் வலம் வந்து கொண்டிருந்தவளை அவ்வப்போது கண்களால் தீண்டிக்கொண்டிருந்த கமலேஷ்.. "மினி நீ புடவை கட்டினாலும் அழகாய் இருக்க.. புடவை கட்டாம இருந்தாலும் அழகா இருக்க.... அது எப்படினு நான் வேணா ஒரு பட்டிமன்றம் வைக்கவா"
காமினி - டேய் கோவில்ல வந்து என்ன பேசணும்னு தெரியாம பேசிக்கிட்டு இருக்க.. அங்க பாரு...ஐயரு மாப்பிள்ளையையும் பொண்ணையும் மணவறைக்கு வர சொல்றாரு...ஆனா இந்த தியாவும் ரத்தனும் மேடைக்கு போகாம பேசிக்கிட்டு நிக்கிறாங்க.. என்னன்னு கேளு...
என்று காமினி கோபமாக சொன்னதும்...கமலேஷ் காமினியின் கையைப் பிடித்து சபைக்கு அழைத்துச் சென்றவன்...
கமலேஷ் - அண்ணன் நான் இருக்கும்போது முதல்ல அவன் எப்படி கல்யாணம் பண்ண முடியும்.... ஐயர்...மாப்பிள்ளை பொண்ணுன்னு கூப்பிட்டது உன்னையும் என்னையும் தான்.. வா வந்து உட்காரு..
என்று கமலேஷ் சொல்ல...காமினி இன்ப அதிர்ச்சியில் மெய் மறந்து நின்றிருந்தவள் தோள்களை கட்டிக்கொண்ட தியாழினி..
என்ன காமு அப்படி பார்க்கிற.. முதல்ல உனக்கும் கமலேஷ் அத்தானுக்கும் தான் கல்யாணம்...அதுக்கு அப்புறம் தான் எனக்கும் தீரனுக்கும் கல்யாணம்...
என்று சொன்னவள் காமினியின் கன்னத்தில் முத்தமிட்டதும்.. காமினியின் கண்கள் கலங்கியது...
என்ன.. இந்த இம்சையை கல்யாணம் பண்ணிக்க போறோமே..இவன் கூட எப்படிடா குப்பை கொட்டுறதுன்னு நெனச்சு இப்பவே அழறியா காமு....
என்று தீரத்தன் கிண்டலாக கேட்க... கமலேஷ் அவனை முறைத்தவன்...
கமலேஷ் - டேய்... எத்தனை தடவை சொல்றது,அவ உனக்கு அண்ணி, காமு ராமுனு இனிமேல் கூப்பிடக்கூடாது.. அண்ணி அம்மாவுக்கு சமம்.. மரியாதையா அவளை அண்ணின்னு கூப்பிடு... என்றவன் தீரனை பொய்யான கோவத்தில் முறைத்தான்...
காமினி - ரத்தா..நீ என்னை அசிங்க அசிங்கமா கூட கூப்பிடு, இந்த அண்ணி பன்னி எல்லாம் வேண்டாம்...I hate that word
என்று சொன்னவள்,கமலேஷை செல்லமாக கிள்ள...
பொம்மி இவர்கள் நால்வரையும் பார்த்து மனம் நிறைந்த மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டார்...
ஐயர் - பேசிக்கிட்டே இருக்காதீங்கோ, சட்டுபுட்டுன்னு தாலிய கட்டுங்கோ, உங்க கல்யாணம் முடிஞ்சா தான் உங்க தம்பிக்கு கல்யாணம் முடியும், சீக்கிரம் வந்து மணமேடையில் உட்காருங்கோ
என்று ஐயர் சொல்ல...காமினியும் கமலேஷும் அருகருகே அமர்ந்த நிலையில்..ஐயர் மாங்கல்யம் எடுத்துக் கொடுக்க... கமலேஷ் அவன் கரங்களால் காமினியின் கழுத்தில் தாலி அணிவிக்க...
கூடி இருந்த நண்பர்கள் அனைவரும்...கமலேஷுக்கும் காமினிக்கும்... அட்சதை தூவி ஆசிர்வாதம் செய்ய....தியாழினியும் தீரனும் மன நிறைவோடு அந்த காட்சியை பார்த்து ரசித்த தருணம்....இவர்களின் திருமணம் நல்லபடியாக முடிந்தது ...
இவர்களுக்கு அடுத்து...தீரத்தனும் தியாழினியும் ஜோடியாக மணவறையில் அமர்ந்ததும்.... தியாவின் கழுத்தில் தீரத்தன் மாங்கல்யத்தை அணிவிக்க.....இரண்டு ஜோடிகளுக்கும் சீரும் சிறப்புமாக நண்பர்களின் மத்தியில் திருமணம் நடந்து முடிந்தது....
கோவிலில் இரண்டு ஜோடிகளுக்கும் திருமணம் நல்ல படியாக முடிந்த நிலையில்...நண்பர்களிடம் இருந்து விடைபெற்று இவர்கள் தீரத்தனின் பங்களாவிற்கு செல்ல... அங்கே பொம்மி இவர்களை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றார்..
பொம்மி - காமினி, தியா.. நீங்க ரெண்டு பேரும் பூஜை அறையில போய் விளக்கு ஏத்துங்க மா....
கமலேஷ் - நான் எதாவது....ஏத்தணுமா..?
காமினி - நீ எ.... வர போதும்... கொஞ்சம் சும்மா இரு...
தீரன் - டேய் நீ அடங்கவே மாட்டியா...
கமலேஷ் - நான் அடங்குறது இருக்கட்டும்.. நம்ம Bet ல நீ தோத்துட்ட... So நீ இனிமே race போக கூடாது....
தீரன் - ம் போகல...
கமலேஷ் - அந்த பைக் இனி எனக்கு தான்..
தீரன் - ஏன் டா... நீ race போக போறியா..
கமலேஷ் - வேற வேல இல்ல... நான் அந்த பைக்கை சேல்ஸ் பண்ணிடுவேன்..
தீரன் - ம்... என்னமோ பண்ணு... ஆமா வருண் அருண் ஏன் நம்ம mrge க்கு வரல..
கமலேஷ் - last மினிட் flight cancel...
தீரன் - ம்....
காமினி - தியா.... நீ எப்போ இங்க தம்பியை அழைச்சிட்டு வர போற...
தியா - அது...அத்தான்...
தீரத்தன் - நாளைக்கு நானும் தியாவும் போய்... ஹாஸ்டல்ல formalities எல்லாம் முடிச்சிட்டு அவனை இங்க அழைச்சிட்டு வந்துடுவோம்...
காமினி - ஓ... spr...
பொம்மி - சரி... நான் போய் உங்க ரெண்டு பேர் room க்கும் பூ போட்டு decorate பண்றேன்...
கமலேஷ் - பொம்மு டார்லிங்.. நான் காமினி கூட போறேன்... நீங்க தீரன் ரூமை மட்டும் decorate பண்ணுங்க...
தீரன் - ஏன்... நீ எங்க போற...
கமலேஷ் - உன் mrge வரைக்கும் தான் நான் இங்க இருக்க பிளான்... அதான் இப்போ உனக்கு, உன்னோட மாமன் பொண்ணு வந்துட்டாங்களே... So enjoy your life... வருண் அருண் வராதனால Party cancel...... So அவங்க வந்ததும் chill பண்ணிப்போம்... இப்போ நீங்க உங்க வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ணுங்க... நான் மினி கூட கிளம்புறேன்...
தீரன் - டேய்... நீ எங்கேயும் கிளம்ப வேணா... நீ என்கூட இருக்கணும்னு தான் வித்தியா அம்மாவும் ஆசை பட்டாங்க... So நீயும் காமினியும் இங்கேயே இருங்க...
காமினி - இல்ல ரத்தா.... நீயும் தியாவும் இங்க ஹாப்பியா இருங்க...நாங்க வீட்டுக்கு போறோம்... நாளைக்கு meet பண்ணலாம்..
தியா - என்ன காமு... சட்டுன்னு இப்படி பாதிலேயே விட்டுட்டு போற..
கமலேஷ் - மினி.... நீ தியா கூட பேசிட்டு இரு... இதோ நான் வரேன்... என்றவன் தீரனை அழைத்து கொண்டு அருகில் உள்ள அறைக்கு சென்றவன்....
கமலேஷ் - இங்க பாருடா.... இன்னைக்கு நைட் உன் வாழ்க்கையில முக்கியமான நாள்... அதனால எப்போவும் போல இன்னைக்கும் நேரத்துக்கு டயட் சாப்பாடு சாப்பிட்டு கவுந்து அடிச்சு தூங்காம....தீயா வேலை பண்ணி அண்ணன் பேரை காப்பாத்தணும்
புரியதா..
தீரன் - 🙆
கமலேஷ் - என்னடா...
ஏன் முகம் மும்பை வர போகுது..போ... போய் முதல் இரவை சீரும் சிறப்புமா முடிச்சு.... வெற்றி கொடியை நடு..
தீரன் - ப்ச்.... இந்த First night process எல்லாம் நினைச்சாலே எனக்கு பயமா இருக்கு டா...
கமலேஷ் - அட பாவி... நீயெல்லாம் வாசுதேவன் பையன்னு சொல்லிக்க உனக்கு அருகதையே இல்ல டா....
தீரன் - டேய்...
கமலேஷ் - பின்ன என்ன...உன் அப்பன் ஒரு தில்லமாரி... உன் அண்ணன் ஒரு..
தீரன் - Cap மாரியா...
கமலேஷ் - இல்ல டா... நான் ரோமியோ..
தீரன் - ஆமா ஆமா நீ ரோமியோ தான்... சரி சொல்லு... இப்போ நான் என்ன பண்ணுறது...
கமலேஷ் - டேய் அதெல்லாம் நான் சொல்ல கூடாது டா...
தீரன் - அப்போ...
கமலேஷ் - ம் இரு.... நான் உனக்கு book link அனுப்புறேன்... அத டச் பண்ணி படி...அப்புறம் பாரு.... எப்படி தீயா வேலை செய்ய போறேன்னு...
தீரன் - அப்படி என்னடா link...
கமலேஷ் - "பத்து நிமிடத்தில் பரவசமாவது எப்படி...!?"...ன்னு ஒரு link....அது மாறனின் அற்புதமான படைப்பு... நான் சின்ன வயசா இருக்கும் போது அந்த link ஐ படித்து தான் வளர்ந்தேன்...So நீயும் Try பண்ணு Bro... என்றவன்... தன் செல்ஃபோனில் இருந்து.. தீரனின் கைபேசிக்கு ஒரு link send பண்ணவன்... ஆறுதலாக தீரனை கட்டிக்கொண்டவன்...
கமலேஷ் - நம்ம குடும்ப பெயர காப்பாத்தனும் ok வா.... நம்ம நாளைக்கு meet பண்ணலாம்.... பொம்மு.... உன் மவனுக்கு அந்த மேட்டர் பால் ready பண்ணி கொடுத்துடுங்க...
பொம்மி - என்ன பால்..
கமலேஷ் - Sorry...பாதாம் பால்..
பொம்மி - ஒ.....
காமினி - உன் தம்பிக்கும் அவன் பொண்டாட்டிக்கும் பாதாம் பால்.... அப்போ நமக்கு..
கமலேஷ் - நமக்கு தான் காமத்து பால் இருக்கே மினி.... You don't worry... மாமன் எல்லாத்தையும் பார்த்துப்பேன்... இப்போ நம்ம வீட்டுக்கு போகலாமா...
காமினி - வாய் டா மாமா உனக்கு...
கமலேஷ் - Danx....
சரி சரி வா கிளம்பலாம்... டேய் ரத்தா.. நாளைக்கு பார்ப்போம்.... தம்பி பொண்டாட்டி bye.... பொம்மு டாட்டா...
என்றவன்... காமினியை அழைத்து கொண்டு அவள் வீட்டிற்கு செல்ல...
இனி இவர்கள் வாழ்வின் அடுத்த கட்ட நிகழ்வை இறுதி பகுதியில் வாசிப்போம்..
.
.
லீலா சந்திரன் 💜