👩❤️💋👨நீ தீயாய் இரு💜எனை திரியாய் தொடு 👩❤️💋👨
🤗 பகுதி 22/23
கமலேஷ் வீட்டில் இருந்து.... தியாவை அழைத்து கொண்டு வெளியே வந்த தீரத்தன்.... Cab மூலம் தன் பங்களாவிற்கு சென்றான்...
வழியெல்லாம் தியாழினியின் கண்களில் கண்ணீர் வந்தபடியாக இருந்தது.... அவளை சமாதானம் செய்ய வழியின்றி தீரத்தன் அமைதியாக காரின் முன் இருக்கையில் அமர்ந்து இருக்க...
சில நிமிடங்களில் Cab.... தீரத்தன் வீட்டு வாசலை சென்றடைந்தது....
வாசலில் தவிப்புடனும் கண்களில் கண்ணீருடனும் நின்று இருந்த பொம்மி..... இவர்களை பார்த்ததும் வேகமாக அவர்கள் ஓடி வந்தவள்....
தியா தியா உனக்கு ஒன்னும் ஆகலையே.... தம்பி... உங்க அப்பா... உங்க அப்பா வந்து.. இங்க ஒரே பிரச்சனை பண்ணிட்டாரு ப்பா...அவரு இங்க வரும் போது தியா இங்க இருந்தாளா.... இவளை பார்த்ததும்...
"உன்னை அழைச்சிட்டு வந்து.... உன்கூட தீரத்தனுக்கு கல்யாணம் பண்ணி வச்சு.. அந்த கமல் என் கனவை தரைமட்டமாக ஆக்க திட்டம் போட்டு இருக்கானா....அவன் எதிரிலேயே இவள என்ன பண்ணுறேன்னு பாரு"..ன்னு சொல்லி உங்க அப்பா தியாவை எங்கேயோ கோவமா இழுத்துட்டு போனாரு ப்பா..... நல்ல வேள தியாவுக்கு ஒண்ணும் ஆகலையே, அதுவே எனக்கு போதும்...
என்று பொம்மி பெருமூச்சுடன் கண்கள் கலங்கினார்......
தீரன் - அம்மா.... தியாவுக்கு ஒண்ணும் இல்ல.... இவளை இழுத்துகிட்டு நேரா அப்பா கமல் வீட்டுக்கு தான் வந்தாரு...
பொம்மி - அவன் வீட்டுக்கு ஏன் போகணும்.... இங்க என்ன தம்பி நடக்குது...
தியா - அதே தான் ம்மா நானும் உங்ககிட்ட கேக்குறேன்... இங்க என்ன தான் நடக்குது... நான் உங்கள என் அம்மாவா தானே நினைச்சேன்... ஏன் என்கிட்ட இப்படி ஒரு பொய்யை சொன்னிங்க...
தீரன் - தியா.... இந்த பொய்களுக்கும், பொம்மி அம்மாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல.... நான் உனக்கு எல்லாத்தையும் விவரமா சொல்லுறேன்.... நீ கொஞ்சம் பொறுமையா இரு......
பொம்மி - என்னை மன்னிச்சுடு தியா...
தியா - ☹️
தீரன் - அம்மா... நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க.... இதுக்கு மேலயும் நான் உங்கக்கிட்ட உண்மையை மறைக்க விரும்பல.... கமல் வேற யாரும் இல்ல.
அவன் என் அண்னன்.
பொம்மி - எ... என்ன பா சொல்லுற...
தீரன் - ம்... என் அப்பாவோட முதல் மனைவியின் மகன் தான் கமல்.....
என்றவன்....கமலேஷின் பிறப்பை பற்றி பொம்மியிடம் சொன்னதும்.... பொம்மியின் மனம் கமலேஷின் கடந்த கால கஷ்டங்களை நினைத்து வருத்தம் அடைந்தது...
தீரன் - என் அம்மா சொன்ன ஒரு வார்த்தைக்காக தான் அவன் என்கூடவே இருக்கான்.... இன்னும் கேட்டால் அவனுக்கு race எல்லாம் பிடிக்காது... எனக்காக... என் கூட துணையா வர்றதுக்காக தான் அவன் race ஓட்டவே வருவான்.... என் அம்மா ஸ்தானத்துல நீங்க என் பக்கத்துல இருந்து பண்ணது எல்லாம் எவ்வளவு உண்மையோ... அதே மாதிரி தான் கமலேஷ் என் எதிர்ல இருந்து எனக்காக நிறைய பண்ணிருக்கான்... ஏன் தியாவோட அப்பா தான் என் தாய் மாமன் என்பது கூட அவனுக்கு தெரியும்...
பொம்மி - என்ன ப்பா சொல்ற..
தீரன் - நான் தியாவை கல்யாணம் பண்ணிக்கணும்னு தான் அவன் இந்த bet எல்லாம் கட்டினான்...
என்றவன்.... கமலேஷ் போட்ட பிளானையும் சொல்லி முடித்தான்...
பொம்மி - ஐயையோ.... இது தெரியாம ஆரம்பத்துல இருந்தே நான் அவனை தப்பாவே நினைச்சிட்டேன் ப்பா...
தீரன் - மனிதன் வாழ்க்கையில ஆரம்பம், மத்திமம், முடிவுனு மூணு காலகட்டம் இருக்கு மா... எனக்கு இந்த மூணு காலகட்டத்திலும் கமலேஷ் என்கூட இருப்பான்னு என் அம்மா என்கிட்ட சொன்னது எனக்கு இன்னும் நினைவு இருக்கு...
பொம்மி - எல்லாம் சரி தான் தம்பி... அப்போ உங்களோட அப்பாவுக்கு.... தியா பற்றி எல்லாம் உண்மையும் தெரிந்துடுச்சா...
தீரன் - ம் தெரிஞ்சிடுச்சி ம்மா...
பொம்மி - அப்போ வர நாட்களில் அவரு நம்மகிட்ட மறுபடியும் சண்டை போட வருவாரா..
தீரன் - அவரு இப்போ கமல் வீட்டுல இருக்காரு.. So இனி அவரு திரும்ப வரதும்.... அப்படியே சுடுகாடு போவதும் கமல் கையில தான் இருக்கு...
பொம்மி - ஐயையோ...என்ன ப்பா நீ என்னென்னமோ சொல்லுற... எனக்கு ரொம்ப பயமா இருக்கு தம்பி..
தீரன் - நீங்க பயப்புடாதீங்க மா... அவன் எல்லாத்தையும் பாத்துப்பான்....
பொம்மி - தம்பி... தியாவை உங்க அப்பா கோவமா இங்க இழுத்துட்டு போனதும் நான் ரொம்ப பயந்து போய் ஊருல இருக்குற எல்லா கடவுளையும் வேண்டிக்க ஆரம்பிச்சிட்டேன் ப்பா.... சரி.... நீங்க இருங்க நான் கோவிலுக்கு போய்ட்டு வரேன்... அம்மாடி தியா... உன் முகமெல்லாம் அழுது வீங்கி இருக்கு பாரு.... போ..
போய் முகத்தை அலம்பிட்டு போய் காபி போட்டு குடி ம்மா.... அப்படியே தம்பிக்கும் உன் கையாள ப்ளாக் டீ கொடு... என்றவள்.... இவர்களை தனிமையாக இருக்க ஏற்பாடு செய்த நிலையில் கோவிலுக்கு சென்றார்...
தியா ஏதும் பேசாமல் சமையல் அறைக்குள் நுழைய போனவளின் கரங்களை பிடித்த தீரத்தன்....
தியா.... நான் உன்கிட்ட பேசணும்...
என்று சொன்னவனின் கரங்கள் தன் மீது பட்டதும்.... தியாவின் கண்களில் கண்ணீர் பெருகி...வேகமாக தீரத்தனை கட்டிக்கொண்டவள்...
வேணா தீரா, நீங்க ஏதும் சொல்லாதீங்க.... just நீங்க என் கூட bet ல win பண்ண தான் பழகுனீங்களான்னு மட்டும் சொல்லுங்க.. என்று அழுது கொண்டே தியா கேக்க...
ம்.... என்று தீரத்தன் சொன்னதும்.... அவன் இதயத்தில் ஒட்டி இருந்தவள்... அவனை விட்டு விலக முயன்றவளின் கரங்களை பிடித்து வேகமாக இழுத்தவன் அவளை மேலும் இறுக்கமாக கட்டிக்கொண்டு அவள் கன்னத்தை மென்மையாக பற்றியவன்... அவள் கண்களை நேருக்கு நேர் சந்தித்து...
உண்மை தான் தியா... நான் உன்கூட bet ல win பண்ணனும் என்ற thoughts உடன் தான் பழகுனேன்...
but... போக போக எனக்கு உன் மேல காதல் இருக்குறத நான் உணர்ந்துட்டேன் தியா.... கமலேஷ் சொன்னது போல... உன் அப்பா என்னை பற்றி அரைகுறையா சொன்னத நம்பி தான் நீ இந்த ஊருக்கு கிளம்பி வந்தேன்னு எனக்கு இப்போ தான் தெரிய வந்துச்சு...
எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல... உண்மையிலேயே உன் அப்பா தான் என் தாய் மாமான்னு எனக்கு தெரியாமல் தான் நான் உங்க வீட்டுக்கு என் கைக்கு கட்டு போட்டுக்க வந்தேன்...
தியா - என்கிட்டயும் அப்பா உங்கள பற்றி முழுசா எந்த விவரமும் சொல்லல.... ஏன்னா அவருக்கு விபத்து நடந்ததும் அவரால ரொம்ப பேச முடியல... உங்க போட்டோ மட்டும் அவர் பாக்கெட்ல இருந்து எடுத்து கொடுத்து... நீ இவரை தான் கட்டிக்கணும்... அது தான் என் விருப்பம்னு சொல்லிட்டு கண்ணை மூடிட்டாரு...அவர் சொன்ன வார்த்தைக்கு இப்படி ஒரு கதை இருக்கும்னு எனக்கு தெரியாது...
தீரன் - ம் எனக்கும் தான்... ஏதோ நான் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டா என் லைப் நல்லா இருக்கும்னு கமலேஷ் ஆசை பட்டு என்னென்னமோ பண்ண போய்.. கடைசியில உன்னை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் Iam really sorry தியா... என்றவன் அவளை நெருங்கி வர....
தியா - அப்போ உண்மையிலேயே நீங்க என்னை நேசிக்கிறீங்களா... இல்ல இதெல்லாம் just for bet ன்னு சொல்லிடுவீங்களா....
தீரன் அவளை இறுக்கமாக கட்டிக்கொண்டு அவள் நெற்றியில் முத்தமிட்டான்.... தியாவின் முகம் வெக்கத்தால் சிவந்து போனது... அவள் அவனின் அணைப்பில் காதலை உணர்ந்து அவன் இதயத்தில் சாய்ந்து கொண்டாள்...
தீரன் - I 💞U தியா.... நீ என் மாமன் மகளா இல்லைனா கூட நான் உன்னை காதலித்து இருப்பேன்... because எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.... உன்கூட ஒரு நிம்மதியான வாழ்க்கையை நான் வாழனும்...எந்த ஒரு பிரச்சனையும் இல்லாம.... ரொம்ப ரொம்ப ஹாப்பியா வாழனும்... pls நீ என்னை marriage பண்ணிப்பியா...
என்றவன்.... அவள் பதிலுக்காக காத்து இருக்க.... அவளின் கண்ணீர் அவன் இதயத்தை ஈரமாக்கிய தருணம்.... அவள் கன்னத்தை ஏந்தி தன் முகத்தை பார்க்க செய்தவன்....
தீரன் - சொல்லு தியா... என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா..
தியா - நீங்க கோடிஸ்வரன் எல்லாம் இல்லைன்னு சொன்னால் நான் உங்கள கல்யாணம் பண்ணிக்குறேன்...
தீரன் - நான் கோடிஸ்வரன் எல்லாம் இல்ல... பட் நான் அதிர்ஷ்டக்காரன்.... அதனால தான் என் அம்மா ஆசை படியே... நீ எனக்கு பொண்டாட்டியா வர போற.... I 💛U தியா...
தியா - thanks தீரா.... நானும் உங்கள மனசார நேசிக்கிறேன்.... ஆனா இனி நம்ம ரெண்டு பேருமே...எந்த ஒரு ஒளிவு மறைவும் இல்லாமல் நம்ம எதிர் கால வாழ்க்கையை சந்தோசமா வாழணும்..
தீரன் - கண்டிப்பா வாழுவோம்....
என்றவன் மீண்டும் தியாழினியை தன் அறைக்குள் அழைத்து சென்றவன்....தன்னோடு இறுக்கமாக அவளை அணைத்து கொண்டு .... அவளை கட்டிலில் அமர வைத்து அவள் மடியில் தலை வைத்து படுத்து கொண்டான்....
தீரத்தனின் தலை முடியை வருடிய தியாழினி.... பல கதைகளை அவனிடம் பேசி கொண்டு இருந்தாள்...
பதிலுக்கு தீரத்தனும் அவனின் அம்மாவை பற்றியும்... அவர்களின் அன்பை பற்றியும்.. கமலேஷ்க்கும் இவனுக்கும் உண்டான உறவையும் நெகிழ்ச்சியுடன் சொல்லி கொண்டு இருந்தான்...
ஏன் தீரா... அப்போ நீங்க என்கிட்ட bet கட்டுன விஷயம் எல்லாம் இந்த காமினிக்கு தெரியும் ல...... ஹம்... என்கிட்ட எவ்ளோ பொய் சொல்லி இருக்காள் பாருங்க.... ரத்தன் கமலேஷாம்... தீரத்தன் நீங்களாம்... எப்பா என்ன ஒரு பொய்யு... என்றவள் செல்லமாக தீரன் கன்னத்தை கிள்ளியதும்... அவள் மடியில் படுத்து இருந்தவன்.... தன் வலது கையை கொண்டு அவள் கழுத்தை வளைத்து ... அவள் எதிர் பாராத வண்ணம்... அவள் இதழ்களில் தன் இதழ் பதித்தான்..
சில நொடிகள் நடந்த முத்த வேட்டையில் இருவரும் மூச்சு வாங்கிக்கொள்ள தன் இதழ்களை விடுவித்து கொண்டவன்...
All is far in love and war... என்றவன்.... மீண்டும் கண்கள் மூடி தியா மடியில் நல்ல பிள்ளையை போல தலை சாய்ந்து கொண்டான்...
தீரா...
ம்....
....
என்ன தியா...
வெளிய போகலாமா..
எங்க போகணும்...
ஹால் க்கு ...
ஏன்... இந்த ரூம் பிடிக்கலையா...
ஐயோ அப்படி இல்ல.... வீட்ல யாரும் இல்லாத போது நம்ம இங்க இப்படி..
எப்படி..
நீங்க என் மடியில...
ஓ.... சரி... நான் உன் மடியில படுக்கல... என்றவன் சட்டென்று அவள் மடியில் இருந்து எழுந்தவன்..அதே சமயம் தியாவின் இடையை வளைத்து தன் மடியில் படுக்க வைத்து கொண்டவனின் செயலில் கண்கள் கலங்கினாள் தியாழினி...
ஏய் என்ன... ஏன் அழற... சரி வா வெளிய போகலாமா...
ஐயோ இல்ல தீரா....என் அப்பா மடியில நான் எப்பவும் இப்படி தான் படுத்துப்பேன்... அவரு போன பின்னாடி நான் அவரை ரொம்ப மிஸ் பண்ணேன்.... என் தம்பியை என்கூடவே வச்சுக்கணும்னு ஆசை பட்டேன்... ஆனா உங்கள பார்க்க இந்த ஊருக்கு வரணும்னு தான் நான் அவனை ஹாஸ்டல்ல சேர்த்து விட்டேன்...என்றவளின் கண்களில் கண்ணீர் கசிந்தது...தீரன்..... தியாவின் கண்ணீரை துடைத்தவன்....
தீரன் - அழாத தியா... நடந்த விஷயங்களை நம்மனால மாற்ற முடியாது இனி நடக்க போறது எல்லாமே நல்லபடியா நடக்க...நம்ம என்ன பண்ணனுமோ அத பண்ணலாம்...
முதல் வேலையா நம்ம ரெண்டு பேரும் போயி உன் தம்பியை ஹாஸ்டல்ல இருந்து நேரா இங்க அழைச்சிட்டு வந்திடலாம்...
அவன் இங்க இருந்தே படிக்கட்டும்.... நீயும் இங்க இருந்தே உன் படிப்புக்கு ஏற்ற மாதிரி என் friend கிளினிக்ல வேலைக்கு போகலாம்...
நான் நம்ம கம்பெனியை பார்த்துக்குறேன்...
நம்ம எல்லோரும் ஒரே குடும்பமா என் அம்மா வாழ்ந்த இந்த வீட்டுலேயே இருக்கலாம்...
நமக்கு எல்லாமுமா பொம்மி அம்மா இருப்பாங்க...என்று தீரத்தன் தியாழினியின் கூந்தலை வருடிக் கொண்டே அவளிடம் தன் மனதில் உள்ள கருத்துக்களை தெரிவிக்க....
தயக்கத்துடன் அவன் மடியில் இருந்து எழுந்த தியாழினி...... பாவமாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தவளை பார்த்து....
என்ன தியா ஏதாவது சொல்லணுமா என்று தீரத்தன் கேட்க.....
ம்..... என்றாள் அதே தயக்கத்துடன்..
என்ன.. என்றவன் அவளை குறுகுறு என்று பார்க்க...
இல்ல தீரா.... நீங்க என்னை தப்பா நினைச்சாலும் பரவாயில்ல.. க... கல்யாணத்துக்கு முன்னதாக நான் உங்க கூட தங்க மாட்டேன்... என்றவள் அவன் கண்களை பார்க்காமல் தரையை பார்த்தப்படி அமர்ந்து இருக்க...
உன்னை நான் கல்யாணத்துக்கு முன்னாடி இங்க தங்குனு சொல்லவே இல்லையே... எப்போ நீ எனக்காக தான் இந்த ஊருக்கு வந்தேன்னு எனக்கு தெரிந்ததோ... அப்பவே உனக்கும் எனக்கும் அடுத்த முகூர்த்ததுலயே கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டேன்...என்றவன்.... அவள் கன்னத்தை அன்பாக பற்றியவனின் கரங்களில் இதழ் பதித்தாள் தியாழினி.....
இவர்கள் இருவரும் மனமுருகி பேசிக்கொண்டு இருக்க.... நேரம் வேகமாக கடந்தது.... கோவிலுக்கு சென்ற பொம்மியும் திரும்பி வந்தவர்... அவர் எடுத்து வந்த விபூதியை தீரன் தியாவுக்கு அவர் கையாலேயே கொடுக்க... தீரனின் பார்வை வாசலில் இருந்து அகலாமல் இருந்தது...
என்ன தீரா.... கமலேஷ் இன்னும் வரலையே...அங்க எதாவது பிரச்சனை ஆகி இருக்குமா...என்று தியா பயத்துடன் கேக்க...
தீரன் - எனக்கும் ஒண்ணும் தெரியல... சரி.. நான் எதுக்கும் அவன் வீடு வரை போய்ட்டு வரேன்... என்றவன்... தன் உடைகளை மாற்றி கொள்வதற்காக அவன் அறைக்குள் நுழைந்தவன் சில நொடிகளில் வேறு ஆடையில் வெளியே வர.... அதே சமயம் காமினி இங்கே நடந்த எந்த விஷயமும் தெரியாமல் வீட்டுக்குள் நுழைந்தவள் சோர்வாக சோபாவில் அமர்ந்தாள்...
**********************************************
👩❤️💋👨நீ தீயாய் இரு💜எனை திரியாய் தொடு 👩❤️💋👨
🤗 பகுதி 23
ஏய் காமு... எங்க போன நீ... நீ இங்க இல்லாத நேரத்துல என்ன எல்லாம் நடந்தது தெரியுமா...
என்று கேட்ட தியாழினி... எல்லா கதைகளையும் மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள்...
என்னடி சொல்லுற... ஐயோ... உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே...
என்று காமினி பயந்த நிலையில் கேக்க..
இல்ல இல்ல.. அதுக்குள்ள தீரனும் கமலேஷும் அந்த வாசுதேவன் சார் கிட்ட சண்டை போட்டு... தீரன் என்னை இங்க அழைச்சிட்டு வந்துட்டாரு... என்று தியாழினி சொல்ல...
வா டி... எங்க போன நீ....சரி... நீங்க இருங்க.. நான் கமலேஷ் வீடு வரைக்கும் போய்ட்டு வரேன்... என்றவன் வாசலை நோக்கி செல்லும் முன்பு...கமலேஷ் வேகமாக வீட்டுக்குள் நுழைந்தவன் எதிரில் காமினி நின்று இருப்பதை பார்த்தவன், அவளை பார்க்காதது போல சோபாவில் அமர்ந்தான்...
தீரன் - டேய் என்னடா... ஏன் இவ்ளோ நேரம்... அப்பா எங்க... அவரை என்ன பண்ண...
கமலேஷ் - உங்க அப்பாவை நான் என்ன பண்ண போறேன்..
தீரன் - ப்ச்... போதும் டா.... இங்க இருக்குற எல்லோருக்கும் நீ யாருனு நல்லாவே தெரியும்...
கமலேஷ் - ஓஹோ..
பொம்மி - தம்பி...
தீரன் - சொல்லுங்க ம்மா...
பொம்மி - உன்னை இல்ல ப்பா.... கமலேஷ் தம்பியை கூப்பிட்டேன்..
கமலேஷ் - என்ன..?தம்பி கம்பினு பாசமா கூப்பிடுறிங்க...
என்ன விஷயம்...
பொம்மி - நீங்களும் வாசுதேவன் ஐயாவோட மகன்னு எனக்கு தெரியாது பா...நான் உங்கள மரியாதை இல்லாம பேசுனத எல்லாம் மனசுல வச்சிக்காதிங்க
கமலேஷ் - ப்ச்... இந்த நடிப்பு எல்லாம் உங்களுக்கு செட் ஆகல..... போங்க..போய்... காலண்டர் எடுத்து நாளைக்கு நல்லா நாளா ன்னு பாருங்க..
காமினி - 🤔
பொம்மி - எனக்கே தெரியும் ப்பா... நாளைக்கு நல்ல நாள் தான்...
கமலேஷ் - டேய் ரத்தா... நீயும் தியாவும், பொம்மு கூட .. கடைக்கு போய், உனக்கும் தியாவுக்கும் புது துணி தாலி எல்லாம் வாங்கிட்டு வாங்க... நாளைக்கு உங்களுக்கு முருகன் கோவில்ல கல்யாணத்தை முடிச்சிடலாம்..
தியா - என்ன கல்யாணமா..
கமலேஷ் - ஏன்... living too gether ல வாழ போறியா..
தியா - ஐயோ இல்ல இல்ல...
கமலேஷ் - பின்ன என்ன....நாளைக்கே உங்களுக்கு கல்யாணம்...டேய் ரத்தா.... நீ என்ன சொல்லுற..
காமினி - 😲
தீரன் - எனக்கு ok தான்.... அம்மா நீங்க என்ன சொல்றிங்க.
பொம்மி - உங்க அண்ணன் சொன்னா நல்லதுக்கு தானே ப்பா இருக்கும்
கமலேஷ் - பாருடா.. ஹ்ம்...பின்ன என்ன, நாளைக்கு உங்க mrge ok வா
தியா - ஆனா என் தம்பி இல்லாம எப்படி கல்யாணம்...
கமலேஷ் - ஏன் உன் தம்பி என்ன ஐயரா.. மந்திரம் சொல்லி தாலி எடுத்து தர..
தீரன் - டேய்..
கமலேஷ் - பின்ன என்ன.... இங்க எவ்ளோ பெரிய பிரச்சனை எல்லாம் நடந்து இருக்கு... இப்போ போய் தம்பி இல்ல தும்பி இல்லைன்னு சொன்னால்... அதெல்லாம் உங்க கல்யாணத்தை முடிச்சிட்டு போய் இவங்க தம்பியை அழைச்சிக்கலாம்.... முதல்ல நீ கடைக்கு போய் நாளைக்கு கல்யாணத்துக்கு என்ன வேணுமோ அதை எல்லாம் purchase பண்ணிட்டு வா.... நான் போய் கோவில்ல பணம் கட்டிட்டு.... நம்ம ஆபீஸ்ல work பண்ற Staffs and நம்ம friends கிட்ட விஷயத்தை சொல்லி.... After mrge....நாளைக்கு ஈவினிங் உங்களுக்கு சின்னதா ஒரு party பண்ணிடலாம்..
தீரா - டேய்... பட் இதெல்லாம் ஏன் இவ்ளோ சிக்க்ரமா....அப்பா எங்க... நீ அவர என்ன பண்ண..
கமலேஷ் - டேய்.... உன் அப்பன் எங்கன்னு உனக்கு தெரிஞ்சா மட்டும் இப்போ நீ என்ன பண்ண போற... அந்த ஆளு தலைமையில உன் கல்யாணத்தை பண்ண போறியா... இல்லை தானே... போ டா... போய் ஆக வேண்டிய வேலையை பாரு...தியா
உன் friends and உனக்கு இந்த ஊருல சொந்தங்கள் யாராவது இருந்தால் கூட அவங்கள அவங்களோட fmly கூட வந்து உன் கல்யாணத்துல கலந்துக்க சொல்லு....
தியா - ம்
காமினி - 😏
கமலேஷ் - பொம்மு... நாளைக்கு நைட் இங்க தான் party நடக்கும்... so அதுக்கு தேவையான வேலையெல்லாம் நீங்க பார்த்துக்கோங்க... நான் வெளி வேலையை பார்த்துக்குறேன்.... ரத்தா... நம்ம நைட் மீட் பண்ணலாம்... நாளைக்கு கோவில்ல எத்தனை மணிக்கு முகூர்த்தம்னு சொல்லுறாங்கன்னு கேட்டுட்டு உனக்கு நான் மெசேஜ் பண்ணுறேன்
Bye.... நைட் பாப்போம்...
என்றவன்..... வேகமாக அங்கிருந்து சென்றவனின் பார்வை மறந்தும் காமினி பக்கம் திரும்பவில்லை....
பொம்மி - என்ன தம்பி இது...
தியா - அதானே.... ஏன் இவ்ளோ சீக்கிரமா கல்யாணம்...
காமினி - ஏய் அறிவுகெட்டவளே... விரும்புனவங்கள கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு எல்லாம் ஒரு அதிர்ஷ்டம் வேணும்... really you are so லக்கி....
தேவை இல்லாம எதையாவது யோசிக்காம... நாளைக்கு mrge க்கு ரெடி ஆகுற வழியை பாரு..... நான் வரேன்...
தீரன் - ஏய் நீ எங்க போற..
காமினி - கொஞ்சம் வெளிய வேலை இருக்கு டா..... நான் நைட் வரேன்.... Bye... என்றவள்.... அங்கிருந்து சென்றதும்.... தியாழினியை அழைத்து கொண்டு தீரத்தன் ஷாப்பிங் சென்றான்...
தீரன் - உன்னை ஷாப்பிங் அழைச்சிட்டு வரணும்னு நான் எவ்ளோ நாளா பிளான் பண்ணேன்... ஆனா பாரு... First ஷாப்பிங்கே நம்ம நம்மளோட mrge க்கு purchase பண்ண போறோம்...என்றவன்...
நாளை நடக்க இருக்கும் இவர்களின் திருமணத்திற்கு தேவையான எல்லா பொருள்களையும் வாங்கி கொண்டு இருந்தனர்...
மறு பக்கம்.... கோவிலில் பணம் கட்டுவதில் இருந்து.. நண்பர்களை invite பண்றது வரை கமலேஷ் எல்லா வேலைகளையும் செவ்வன செய்து முடித்தான்....
நேரம் இரவு 8pm கடந்த நிலையில் சோர்வாக கமலேஷ்.... தீரத்தன் வீட்டுக்குள் நுழைய... அங்கே சோபாவில் அமர்ந்தப்படி காமினி Elle magazine ஒன்றை வாசித்து கொண்டு இருந்தவளை கண்டு கொள்ளாமல் அவன் அறைக்குள் சென்றவன்.... தன் ஆடைகளை மாற்றி கொண்டு Work out செய்து கொண்டு இருந்தவன் காதில் காமினியின் சிரிப்பு சத்தம் ஒலிக்க.... அவளுடன் சேர்த்து இன்னொரு ஆண் மகனின் குரலும் இவன் செவிகளுக்கு எட்டியது.....
தன் அறை கதவை திறந்து கொண்டு கமலேஷ் எட்டி பார்க்க.... அங்கே சோபாவில் அமர்ந்து இருக்கும் காமினியின் அருகில் வேறொரு ஆடவன் அமர்ந்து இருந்தவன்... காமினியின் மீது உரிமையாக கை வைத்து பேசி கொண்டு இருந்தவன் முகத்தை தூரத்தில் இருந்தவாரே கமலேஷ் உற்று பார்க்க... அவன் ஸ்டீபன் என்று தெரிந்து கொண்டவன் மனதில் கையில் இருக்கும் தம்புல்ஸை கொண்டு அவன் முகத்தை உடைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற...
" ச்சீ.... இவ கூட எவன் பேசுனா நமக்கு என்ன...... நம்ம வேலையை நம்ம பார்ப்போம்" என்று தனக்குள் எண்ணியவன்.... வேகமாக உடற்பயிற்சி மேற்கொண்டவனின் காதில் இவர்களின் சிரிப்பு சத்தம் கேட்டப்படியாக இருந்தது....
கமலேஷ் க்கு ஒரு பக்கம் கோவம் தலைக்கேற.. மறுபக்கம் எதையும் கண்டு கொள்ளாதே என்று மூளை எச்சரித்தது....
சில நிமிடங்கள் கடந்த நிலையில் ஹாலில் ஒலித்த சிரிப்பு சத்தம் நின்று இருந்தது.... ஒரு துண்டில் தன் வியர்வை பூத்த மேனியை துடைத்து கொண்டே ஹாலுக்கு வந்த கமலேஷ்... சமையல் அறையின் பிரிட்ஜில் இருக்கும் தண்ணீரை எடுத்து குடித்தவனின் விழிகள் அந்த ஹாலை சுற்றி நோட்டமிட... அங்கே ஆள் நடமாட்டமே இல்லை என்ற போதும் தூரத்தில் மீண்டும் காமினியின் சிரிப்பு ஒலி கேக்க...
பொறுமையாக அடி மேல் அடி வைத்து காமினியின் அறையின் அருகில் சென்ற கமலேஷ்....கொஞ்சமாக திறந்து இருக்கும் அவள் ரூம் கதவை திறந்து பார்க்க... அங்கே அவள் கட்டிலில் ஸ்டீபன் அமர்ந்து இருக்க.... காமினி அவன் அருகில் அமர்ந்து கொண்டு தன் செல்போனில் உள்ள போட்டோஸ் எல்லாம் காட்டியபடி சிரித்து கொண்டு இருந்தவள் தொடை மீது ஸ்டீபன் தட்டி தட்டி பேசி கொண்டு இருக்க.... இந்த காட்சியினை பார்த்த கமலேஷ்...
" ச்சீ...அவ தொடை என்ன சப்பாத்தியா... இந்த தட்டு தட்டுறான்... இவளும் என்னமோ அவன் மசாஜ் பண்ற மாதிரி காட்டிகிட்டு உக்காந்து இருக்காள்... இதெல்லாம் பாக்கணும்னு நமக்கு என்ன தலை எழுத்தா.. " என்று தனக்குள் புலம்பியவன்...அவன் அறையை நோக்கி நடந்தான்...
இரண்டடி எடுத்து வைப்பதற்குள்... காமினி.. அறையின் கதவை பூட்டும் சத்தம் கேட்டு கடுப்பான கமலேஷ்..
"இப்போ ஏன் இவ.. அவனை உள்ள வச்சுக்கிட்டு கதவ lock பண்ணுறா " என்று தனக்குள் எண்ணியவன் காதில்
"ம்.. ம்"... என்று ஒலித்த சத்தம் இம்சையை கூட்ட.... அதற்கு மேல் பொறுக்க முடியாதவன் அதீத கோபத்துடன் காமினி அறையின் கதவை வேகமாக தட்டினான்...
சில நொடிகளில் கதவை திறந்த காமினியின் பின்னே ஸ்டீபன் நின்று இருந்தவன்..
ஸ்டீபன் - yes....என்றான்..
கமலேஷ் அவனை பார்த்து முறைத்தவன்.... காமினியை கோவமாக நெருங்கி அவள் கழுத்தை பிடித்து சுவரோடு சுவராக அழுத்தியவன்....
யாருடி இவன்.. இவன் கூட கதவை சாத்திகிட்டு ரூம்ல என்ன பண்ற...
என்றவன் கோவமாக அவள் கழுத்தை பிடிக்க... அவன் கையை தட்டி விட்டாள் காமினி...
ஏய் Man.. நீ யாரு அதெல்லாம் கேக்க.... நீ என்ன அவளோட lovera... just get out.. எங்களுக்கு பிரைவசி வேணும்...
என்று ஸ்டீபன் சொல்ல....
அதான் சொல்லுறாங்க இல்ல... Jst get out from this place.... என்று காமினி வாசலை நோக்கி கையை காட்ட...
கமலேஷ் கோபத்துடன் வெளியே சென்றவன்.... சற்றும் தாமதிக்காமல் மீண்டும் அறைக்குள் நுழைந்து ஸ்டீபன் சட்டை காலரை பிடித்து அவனை அறையின் வெளியே தள்ளி... தன் ஒற்றை காலால் ரூம் கதவை ஓங்கி அடித்து சாத்தியவன்... காமினியை கோவமாக நெருங்கி வந்தான்..
டேய்... இப்போ எதுக்கு நீ இங்க வந்து பிரச்சனை பண்ற... அவன்கூட இன்னைக்கு நான் dating fix பண்ணிருக்கேன்... மேட்டர் பண்ண போற நேரத்துல இம்சை பண்ணாத...நகரு.. நான் போய் அவனை சமாதானம் பண்ணி கூப்பிடனும் நகரு டா... என்றவள்... அறையின் வாசலை நோக்கி செல்லும் முன்பு.. அவள் கையை பிடித்து அவளை கட்டிலில் தள்ளி... தான் அணிந்து இருந்த T ஷர்ட்டை கழட்டி தூரம் வீசியவன்...
கமலேஷ் - இப்போ என்ன உனக்கு மேட்டர் தானே வேணும்...
காமினி - அது உனக்கு...
கமலேஷ் - 😡
காமினி - எனக்கு மேட்டரை விட....என்னோட உணர்வுக்கு மதிப்பு தர ஆம்பள தான் வேணும்.... I mean எனக்கு புருஷன் வேணுமே தவிர.... பால் பாக்கெட் போட வர மாதிரி என்னை போட்டுட்டு போற உன்னை மாதிரி ten மினிட்ஸ் party வேணாம்....
என்றவள்... மீண்டும் எழுந்து வாசலை நோக்கி செல்லும் முன்பு... அவளை தன்னோடு அணைத்தபடி கட்டிலில் விழுந்தவன்..சற்றும் தாமதிக்காமல் அவள் மீது படர்ந்து ....
கமலேஷ் - பத்து நிமிஷம் இல்ல.... இனி பத்து ஜென்மம் எடுத்தாலும் என்னை விட்டுட்டு நீ போக முடியாத அளவுக்கு உன் கழுத்துல மஞ்சள், சிகப்பு, பச்சைனு எத்தனை கயிறு வேணும்னாலும் கட்டுறேன்....Don't ignore me ....
என்றவன்....அவள் கழுத்தில் இதழ் பதித்து அவளை மென்மையாக கடித்து... அவளுடன் சேர்ந்து கட்டிலின் சில நிமிடங்களை கடந்தவன்...
கண்கள் கலங்கிய நிலையில் தன் ஆதிக்கத்தில் சோர்ந்து போன காமினியின் விழிகளை பார்த்து ...
கமலேஷ் - உன்னோட மனசு,உன்னோட உடம்பு, உன்னோட திமிரு, உன்னோட காதல், உன்னோட காமம்,இப்படி உன் சம்மந்தப்பட்ட எல்லாமே இனி என் ஒருவனுக்கு மட்டும் தான்...Because.... I....
என்றவனின் வார்த்தை முற்று பெறும் முன்பு....
காமினி - I hate you... என்றவளின் இதழ்களில் மீண்டும் அழுத்தமாக தன் அதரங்களை பதித்தவன்...
Same too you... என்றவன்.... அடுத்த சுற்றுக்கு தயாரான நிலையில்....
கமலேஷ் காதில்... காமினி ஏதோ சொன்னவளின் சொல்லை கேட்டு கமலேஷ் கண்கள் கலங்கி அவள் வசமிருந்து எழுந்தவன்.... அவளை தன் வெற்றுடல் மேனியில் கட்டிக்கொண்டு கதறி அழுதான்...
Author - ஐயகோ.. கமலேஷ் கண்ணே கலங்குற அளவுக்கு.. காமினி அப்படி என்ன விஷயம் சொல்லி இருப்பாள் ... 🤔
.
.
லீலா சந்திரன் 💜