👩❤️💋👨நீ தீயாய் இரு💜எனை திரியாய் தொடு 👩❤️💋👨
🤗 பகுதி 15
தியாழினி சிறு அச்சதுடன் வாசல் கதவை திறக்க..... அங்கே பொம்மியும் தீரத்தன்னும் நின்று இருந்தனர்..... அவர்களை பார்த்ததும்..... தியாவின் கண்கள் மகிழ்ச்சியில் மிளிர்ந்தது.....
என்ன தியா... நான் தனியா வராம பொம்மி அம்மாகூட தானே வந்து இருக்கேன்... இப்போ நீ என்னை வீட்டுக்குள்ள விடுவ இல்ல..... என்று தீரன் கேட்டதும்.....
நான் பேசுனத நீங்க தப்பா எடுத்துகிட்டீங்க போல..... பரவாயில்ல விடுங்க.... அம்மா உள்ள வாங்க... நீங்களும் உள்ள வாங்க தீரா... என்று தியா அழைத்தாள் ....
என்னமா தியா, ஆபீஸ் வேலை எல்லாம் உனக்கு பிடிச்சிருக்கா.... என்று கேட்டுக்கொண்டே பொம்மி வீட்டுக்குள் நுழைந்தார்....
ஹாங் ரொம்ப பிடிச்சி இருக்குமா....என்றவள் வாசலில் நின்று இருக்கும் தீரனை பார்க்க... அவனோ அங்கேயே நின்றப்படி...
அம்மா.... நீங்க இன்னைக்கு நைட் தியா கூட stay பண்ணுங்க.... நான் காலையில வந்து உங்கள பிக் up பண்ணிக்கிறேன்....என்றவனை..
தீரா.. உள்ள வாங்க... வந்து dinner சாப்பிட்டு போங்க.... என்று தியா கெஞ்சளாக அழைக்க....
its ok தியா.... நான் எங்க வீட்டுல போய் சாப்பிடுக்குறேன்... நீ இங்க தனியா இருப்பியேன்னு தான் அம்மாவை உனக்கு துணைக்கு அழைச்சிட்டு வந்தேன்...நீங்க சாப்பிட்டு தூங்குங்க.... நாளைக்கு நானே உன்னை வந்து ஆபீஸ்க்கு அழைச்சிட்டு போறேன்.... உனக்கு அதுவும் சரி வராதுன்னு feel பண்ணினா... நம்ம ஆபீஸ் cab ல கூட நீ வரலாம்.... எல்லாமே உன்னோட wish தான்... என்றவன்... வாசலில் நின்றப்படியே பேசினான்...
தம்பி.... தியா தான் உள்ள வர சொல்லுதே, வாயேன் பா.... வந்து உக்காந்துட்டு கொஞ்ச நேரம் பேசிட்டு போகலாம் இல்ல... இப்போ சீக்கிரமா வீட்டுக்கு போய் என்ன பண்ண போற... அந்த கமலேஷ் பையலும் வீட்டுல இல்ல... அருணும் வருணும் கூட திடிர்னு அவங்க அம்மா அப்பாவை பார்க்க துபாய்க்கு கிளம்பி போயிட்டாங்க...எப்படியா இருந்தாலும் நீ தனியா தானே இருக்க போற...
என்று பொம்மி தீரத்தனை வீட்டுக்குள் அழைக்கும் விதமாக சொன்னதும்... சில நொடிகள் யோசித்த தீரன் வீட்டுக்குள் வந்து சோபாவில் அமர்ந்தான்...
அம்மா.... இன்னும் கொஞ்ச நேரத்துல dinner ரெடி ஆகிடும்... நீங்க பேசிகிட்டு இருங்க.. நான் இதோ வந்துடுறேன்... என்றவள் சமையலறையை நோக்கி ஓட.... தீரன்னுக்கு ஏனோ ஒரு வித இறுக்கமான மனநிலை இருப்பது போல தோன்றியது..
தியா நான் எதாவது உதவி செய்ய வரவா... என்று பொம்மி ஹாலில் அமர்ந்தப்படியே கேக்க....
வேணா மா... நான் முடிச்சிட்டேன்... என்று பதில் தந்தவள்... வேகமாக இரவு உணவை தயார் செய்து கொண்டு இருந்தாள்...
இவர்கள் இருவரின் உரையாடலை காதில் வாங்காமல் தீரன் தன் செல் போனின் game விளையாடி கொண்டு இருக்க.... பொம்மிக்கு அவரின் சொந்தகார பெண்ணிடம் இருந்து கைபேசி மூலம் அழைப்பு வர... தன் போனை எடுத்து கொண்டு பால்கனி பக்கம் சென்றார் பொம்மி....
சில நொடிகள் கடந்த நிலையில் சமையல் அறையில் இருந்து வந்த தியா.... "தீரா சாப்பிடலாமா.." என்று கேக்க... அவள் முகத்தை பார்த்தவன்....
அம்மா போன் பேசிகிட்டு இருக்காங்க... வந்ததும் சாப்பிடலாம்.. நீ வந்து இப்படி Fan ல உக்காரு...என்றவன் மீண்டும் தன் விளையாடில் கவனம் செலுத்தினான்...
தீரா... நீங்க என் மேல கோவமா இருக்கீங்களா... என்று தியா தயக்கத்துடன் கேக்க..
தன் கையில் இருந்த போனை மேசை மேல் வைத்தவன்.. "ம்.. கோவமா இல்ல... பட் வருத்தமா இருக்கேன்"..என்றவன் மேற்கொண்டு ஏதும் பேசாமல் அமைதி காத்தான்...
ம்... நான் நினைச்சேன்... கண்டிப்பா நீங்க என் மேல கோவமாகவோ வருத்தமாகவோ இருப்பிங்கன்னு நான் முன்னதாகவே நினைச்சேன்.... என்றவள் மேலும் வார்த்தையை வளர்க்காமல் அமைதி காத்தாள்...
ஓஹோ.... அப்போ நான் வருத்தமா நினைப்பேன்னு தெரிந்து தான் நீ அப்படி என்னை insult பண்ற மாதிரி பேசுனியா.... என்று தீரன் கேக்க.....
என்ன.. நான் உங்கள insult பன்னென்னா... இது எப்போ... என்று சிரித்து கொண்டே கேட்டாள் தியா ...
பின்ன.. நான் உன்கூட stay பண்ணனும்னு நானா முடிவு பண்ணி உன்கிட்ட சொல்லல... காமினி தான் சொல்ல சொன்னாள்... ஆனா நீ என்னை இன்சல்ட் பண்ற மாதிரி பேசிட்ட... என்றவன்... சிறு பிள்ளையை போல இவளிடம் கோவித்து கொள்ள....
நான் அந்த மாதிரி எண்ணத்தோடு உங்ககிட்ட அப்படி சொல்லல தீரா.... ஆனா நான் பேசுனது உங்க மனசு கஷ்டப்படுற மாதிரி உங்களுக்கு தோணுச்சுனா... இன்னும் உங்களுக்கு நான் சொன்னது புரியலைன்னு தான் அர்த்தம்..
என்றவள்... மறந்தும் தன்னிடம் மன்னிப்பு கேட்காததை கண்டு அவளின் தன் மானத்தை எண்ணி தீரனும் பெருமை கொண்டான்...
சில நொடிகள் அங்கே அமைதி நிலவ.... பொம்மி கையில் போன்னுடன் உள்ளே வந்தவர்.... "ரொம்ப நேரம் பேசிட்டேன் போல.... என்ன தியா சமையல் ரெடியா .... வாசனை ஆளை தூக்குற மாதிரி இருக்கு"... என்று பொம்மி... தியாவின் சமையலை சாப்பிடும் முன்பே பாராட்டினாள்..
அச்சோ அம்மா... நான் மிகையா எல்லாம் ஏதும் பண்ணல... ரொம்ப சிம்பிள் dish தான்... சரி வாங்க சாப்பிடலாம்... தீரா நீங்களும் வாங்க.. என்று தியா அழைக்க.... பொம்மியும் தீரனும் dinning டேபிளில் வந்து அமர்ந்ததும்... தியா இவர்களுக்கு உணவை பரிமாறினாள்...
**********************************************
மறுப்பக்கம் காமினியும் கமலேஷும் கட்டிலின் மேல் கதகளி ஆடி முடித்து ஒருவரை ஒருவர் அணைத்தப்படி படுத்து கொண்டு இருக்க... அந்த அறை முழுதும் அமைதி நிலவியது...
காமினி - என்னடா.... என்ன யோசனையா இருக்க... என்று காமினி கேட்டவள்.... அவன் மார்பில் தலை சாய்ந்து படுத்து இருக்க..
கமலேஷ் - ப்ச்... தள்ளி படு டி.... நல்லா இருக்குற பையனை என்னென்னமோ பண்ண வச்சிட்டு இப்போ கேள்வி வேற கேக்குற... என்றவன்..அருகில் இருந்த துண்டை எடுத்து தன் இடுப்பில் கட்டிக்கொண்டு கட்டிலில் இருந்து எழ முயன்றவன் துண்டை பிடித்து தன் வசம் இழுத்தாள் காமினி...
கமலேஷ் - ப்ச்... விடு nnu சொல்றேன் இல்ல.... என்னாச்சு உனக்கு.... என்ன.. நான் சிமினி கூட போயிட போறேன்னு உனக்கு பயம் வந்துருச்சா... அன்னைக்கு என்னமோ நமக்கு கல்யாணம் முடிந்தால் தான் நீ என்னை தொட விடுவேன்னு வசனம் எல்லாம் பேசுன... இப்போ என்ன... உன் சபதத்தை வாப்பஸ் வாங்கிட்டியா...
காமினி - இப்பவும் சொல்லுறேன்.... உனக்கும் எனக்கும் சீக்கிரமா mrge நடக்கும் பாரு..
கமலேஷ் - அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்ல... நான் ரத்தன் mrge முடியுற வரை தான் இங்க இருப்பேன்.... எப்போ அவனுக்கு கல்யாணம் முடிய போகுதுன்னு தெரியுதோ அன்னைக்கே நான் கனடா போயிடுவேன்.
காமினி - ok.. no ப்ரோப்லேம்.. நானும் உன் கூட கனடா வரேன்.
கமலேஷ் - உன் தொல்லை இருக்க கூடாதுன்னு தான் நான் கனடாவுக்கே போறேன்..
காமினி - ஒ... எங்க நீ இங்கே இருந்தா.... என் அழகுல மயங்கி என்னை கல்யாணம் பண்ணிக்க போறன்னு பயந்து போய் கனடா போறியா..
கமலேஷ் - நீ எப்படி வேணா நினைச்சுக்கோ... பட்... நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்... உன்னைனு இல்ல... எந்த பொண்ணையும் நான் கட்டிக்க மாட்டேன்..
காமினி - ஒ... அப்போ பையன கட்டிக்க போறியா.
கமலேஷ் - ஏய் ..
காமினி - பின்ன என்ன டா.... knja நேரத்துக்கு முன்னாடி தான் நம்ம Sex வச்சிக்கிட்டோம்... இப்போ என்னமோ என்னை பிடிக்காத மாதிரி பேசுறது மட்டும் இல்லாம,என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு வேற சொல்லுற...
கமலேஷ் - good ஜோக்.... நான் sex வச்சிக்கிற பெண்ணை எல்லாம் கட்டிக்கணும்னு சொன்னால்.... எப்படியும் எண்ணில் அடங்காத ஆளை நான் கல்யாணம் பண்ணனும்..
காமினி - அதெல்லாம் past டா கமலா.... எப்போ நீ என்னை டச் பண்ணியோ... அன்னையில இருந்து இன்னவரை நீ வேற யார் கூடவும் sex வச்சிக்கல.... அது தான் உண்மை..
கமலேஷ் - ஆமா... நீ எனக்கு விளக்கு பிடிச்சு பார்த்த பாரு..
காமினி - All detials I know டா.
கமலேஷ் - அப்படி எல்லாம் ஒண்ணுமே இல்ல.... நான் உன் முன்னாடியே அந்த சிமினியை கரெக்ட் பண்ணி.... அவ சம்மததோடு அவக்கிட்ட sex வசிக்கிறேன் பாக்குறியா ..
காமினி - ம்... உன்னை காதலிச்ச பாவத்துக்கு நீ அவளை போடுறதை வேற நான் பாக்கணுமா...
கமலேஷ் - 😏
காமினி - சரி....இப்போ முடிவா என்ன சொல்லுற... என்னை நீ கல்யாணம் பண்ணிக்க மாட்ட அப்படி தானே..
கமலேஷ் - நான் எப்போ டி உன்னை கட்டிக்கிறேன்னு சொன்னேன்...இப்போ வேணான்னு சொல்ல....
காமினி படுக்கையில் இருந்து எழுந்தவள்.... தன் ஆடைகளை உடுத்திக்கொண்டு கட்டில் மேல் இருக்கும் போர்வையை மடித்து ஓரம் வைத்தவள்.... அந்த அறையில் இருந்து வெளியேறி...மேசை மேல் இருக்கும் மருந்து மாத்திரையை எடுத்து வந்து கமலேஷிடம் கொடுத்து....
மறுபடியும் உடம்புக்கு முடியலைன்னா நீ இந்த மாத்திரையை போடு... kitchen ல hot box ல dinner இருக்கு... சாப்பிடு.... bye....
என்றவள் கார் சாவியை எடுத்து கொண்டு வாசலை நோக்கி சென்றாள்...
ஏய் இரு இரு.... நீ என் டைரியை படிச்சது...நான் பிளான் பண்ணி ரத்தன்க்கிட்ட bet கட்டுனதை எல்லாம் அவன்கிட்ட சொல்லிடாத.... என்று கண்டிக்கும் விதமாக கமலேஷ் சொல்ல...
ம்... சொல்ல மாட்டேன்.... என்றவள்... எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மீண்டும் வாசலை நோக்கி நடந்தாள்...
இரு ... மணி 10 pm ஆகுது... வேணும்னா நைட் இங்கேயே stay பண்ணு.... என்று கமலேஷ் அக்கறையாக சொல்ல...
அவனை பார்த்து ஏளனமாக சிரித்தவள்...
"இனி நான் உங்களுக்கு எந்த தொல்லையும் தர வேணான்னு முடிவு பண்ணிட்டேன் Mr.கமலேஷ்...
So நீங்க என் மேல இல்லாத அக்கறையை இருக்குற மாதிரி காட்ட Try பண்ணாதிங்க ... Bye... Sry... Good Bye"....
என்றவள்... அவன் கண் இமைக்கும் நொடியில் கமலேஷ் வீட்டில் இருந்து வெளியேறினாள்...
காமினி சென்ற பாதையை கண் இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்த கமலேஷின் இதயம் ஏனோ அவளை அழைக்க நினைத்தாலும்... அவன் மூளை அவளை மட்டும் இல்லாமல் யாரையும் தன் வாழ்க்கையோடு இணைத்து பார்க்க மறுத்தது....
**********************************************
மறுப்பக்கம் காமினி வீட்டில்.... தியாழினி செய்த இரவு உணவை தீரத்தன் ருசித்து சாப்புடுவதை பார்த்து பொம்மியும் தியாவும் மகிழ்ச்சி அடைந்தனர்...
பொம்மி - என்ன தம்பி.... சப்பாடு ரொம்ப நல்லா இருக்கு போல....
தீரன் - yes மா.... really spr...தியா... félicitation...
தியா - thanks தீரா..
பொம்மி - பாருடா.... அப்போ நாங்க எல்லாம் இத்தனை நாள் பண்ண சாப்பாடு நல்லா இல்லையா...
தியா - அம்மா.. அவரு சும்மா என்னை பெருமையா சொல்லணும்னு அப்படி சொல்லுறாரு...
தீரன் - hey No No... உண்மைக்கே சாப்பாடு spr...
என்றவன்..ரசித்து சாப்பிட்டு கொண்டு இருந்த தருணம்.... சிரித்து கொண்டே தியா சமையல் அறைக்கு செல்ல...
தீரன் - என் அம்மா கூட இப்படி தான் டின்னர் பண்ணுவாங்க பொம்மி ம்மா.... நான் ஹாஸ்டல்ல இருந்து வந்தா போதும், அம்மா கையாள தான் 6 வேளை சாப்பிடுவேன்... இப்போ கூட அவங்க கையாள சாப்பிட்ட மாதிரி இருக்கு...
பொம்மி - ம் ஆமா தம்பி.... தியா பண்றது மட்டும் இல்ல.... அவ பார்க்க கூட வித்தியா அம்மா மாதிரி தான் இருக்கா..
தீரன் - ம்...
பொம்மி - உனக்கு இன்னும் ஒரு சப்பாத்தி வைக்கவா...
தீரன் - ஒ... no no மா.... already நான் ரொம்ப சாப்பிட்டேன்.... போதும் எனக்கு... நீங்க சாப்பிடுங்க...
என்றவன் dinning டேபிளில் இருந்து எழுந்தான்...
பொம்மியும் தியாவும் அந்த இடத்தை பேசிக்கொண்டே சுத்தம் செய்ய... தீரன் பால்கணியில் நின்று கொண்டு செல் போன் வாயிலாக கமலேஷை அழைத்தான்...
தீரன் - hey கமல் ...
கமலேஷ் - சொல்லு டா ..
தீரன் - என்ன.... காலையில இருந்து ஒரு போன் கூட பண்ணல...
கமலேஷ் - ம் தூங்கிட்டேன்..
தீரன் - ஓஹோ... சரி ... இப்போ நான் எங்க இருக்கேன்னு தெரியுமா..
கமலேஷ் - தெரியாதே...
தீரன் - தியா கூட இருக்கேன்..
கமலேஷ் - ஒ...
தீரன் - என்னடா ஒ போடுற.... இன்னைக்கு நான் தியாவ என்கூட,என் ஆபீஸ் kku அழைச்சிட்டு போனேன்... அது மட்டும் இல்ல.. இப்போ வர நான் தியா கூட தான் இருக்கேன்... தியா எனக்காக dinner எல்லாம் ரெடி பண்ணி தந்தா...
கமலேஷ் - ம்... ரொம்ப ஆடாத டா... அவ என்ன பண்ணாலும்.... உன்னால அவள ஒன்னும் பண்ண முடியாது... நீ அதுக்கு ஆள் இல்ல.... அதனால சும்மா போன் பண்ணி சீன் போடாம... போய் இழுத்து போத்திகிட்டு தூங்கு.... அப்புறம் இன்னோரு முக்கியமான விஷயம்... தியா உன்னை பார்த்து I💙U சொன்னா தான் நீ bet ல win ஆனன்னு அர்த்தம்.... So... அதுக்குள்ள நீயா கற்பனையில் கோட்டை கட்டாத... எப்போ எப்படி வேணா எது வேணாலும் மாறலாம்.... Ok வா.. வை டா போனை...
என்றவன்.. சிரித்துக்கொண்டே மேசை மேல் இருக்கும் தீரத்தன் போட்டோவை கையில் எடுத்து...
உனக்கு ஒரு நல்லது நடக்க இன்னும் நான் என்ன எல்லாம் பண்ணனும்னு தெரியல டா தீரா ....
என்றவனின் சிந்தையில் தீரத்தனின் நினைவு மறந்து சட்டென்று காமினியின் நினைவு உதிக்க...
தன் கைபேசி வாயிலாக காமினியை அழைத்தான்.....
அவளோ இவனது அழைப்புக்கு பதில் தராதவள்.... தன் காரை நேராக தன் வீட்டுக்கு விரட்டினாள்...
**********************************************
இரவு நேரம் காமினி வீட்டில்..தீரன், தியா, பொம்மி என்று மூவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்...
தியா - தீரா.... உங்களுக்கு பால் காச்சி தரவா...
தீரன் - No thanks தியா....
தியா - அம்மா... நீங்க டீ குடிக்கிறிங்களா..
பொம்மி - ஐயோ வேணா வேணா.... நான் நிறையா சாப்புட்டேன் மா...
தீரன் - Ok மா... நான் கிளம்புறேன்... Bye தியா... good n8....
என்றவன்.... வாசலை நோக்கி நடக்க... அதே சமயம் காமினி வீட்டுக்குள் நுழைந்தாள்...
hei.... என்ன நீ... இன்னைக்கு வீட்டுக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டு மிட் நைட் ல இப்படி வந்து நிக்குற.... are u ok.... என்று தீரத்தன் கேட்டதும்...
தன் ஹாண்ட் பேகை ஓரம் வைத்தவள்.. கடமைக்கென்று சிரித்தவள்....
"போன வேலை முடிஞ்சிடிது டா... அதான் வந்துட்டேன்"....என்றவள் குளியல் அறையை நோக்கி செல்லும் முன்பு பொம்மியை பார்த்து முறைத்தாள்...
இப்போ ஏன் டி என்னை முறைக்கிற... என்று பொம்மி கோவமாக கேக்க.... பதில் ஏதும் சொல்லாமல் குளியல் அறைக்குள் நுழைந்து கதவை தாள்ளிட்டு கொண்டாள்..
என்னாச்சு இவளுக்கு.... ஏன் ஒரு மாதிரி இருக்கா.... என்று தியாழினி மனதில் நினைத்த தருணம்...
தம்பி.... அதான் இந்த மேனா மினுக்கி வந்துட்டாளே... அப்புறம் ஏன் நான் தியா kku துணையா இங்க இருக்கனும்...நானும் உன்கூடவே வரேன் பா... என்றார் பொம்மி....
ம்.... ok மா....no ப்ரோப்லேம்... Bye தியா ..... அம்மா.. நான் கார்ல வெயிட் பண்ணுறேன் வாங்க... என்றவன் காமினி வீட்டில் இருந்து வெளியேற.... அதே சமயம் தலையில் தண்ணீரை ஊற்றிக்கொண்டு குளியல் அறையில் இருந்து காமினி வெளியே வந்தவள்...
காமினி - "தியா pls எனக்கு ஒரு டீ போட்டு தரியா"... என்று கேக்க....
தியா - "ம்"... என்று சொன்னவள்... சமையல் அறைக்குள் நுழைந்த அடுத்த நொடி... காமினி பொம்மியின் கன்னத்தை கோவமாக கிள்ளியவள்... பொம்மி கத்தும் முன்பு அவள் வாயை மூட.. அதே சமயம் தன் போனை மறந்து மேசை மேல் வைத்தத்தை நினைவு கூர்ந்தப்படி தீரத்தன் மீண்டும் காமினி வீட்டுக்கு வந்தவன்....நேராக வீட்டுக்குள் நுழைய
"ஏன் டி இப்போ என்னை கிள்ளுன... பாவி".. என்று பொம்மி கண்கள் சிவக்க கர்ஜித்தவளை கொலை காண்டில் பார்த்த காமினியின் கோவத்தை புரிந்து கொள்ளாமல் தீரத்தன் அவளை முறைக்க...
"ஏன் இப்படி பண்ணீங்க... பாவம் தெரியுமா கமலா.... அவனுக்கு ரொம்ப முடியாம போச்சு"....என்று காமினி... கமலேஷ்க்காக பரிந்து பேசினாள்....
ஒ.... அதக்காக தான் நீ கோவமா இருக்கியா.... இப்போ என்ன... அவன் நல்லா தானே இருக்கான்... என்று பொம்மி கிண்டலாக கேக்க....
காமினி - ப்ச்... பெரியவுங்க மாதிரி பேசுங்க.... பாவம் அவன்....இன்னைக்கு உடம்பு முடியாம ரொம்பவே கஷ்டப்படுட்டான்...
பொம்மி - நல்லா படட்டும்... சும்மா இருக்குற என் மகனை தேவையில்லாம bet கட்டி சிக்க வச்சது அவன் தானே..
காமினி - ஏன் இது வர இவன் bet கட்டுனதே இல்லையா.... இனி bet கட்டி விளையாடாதன்னு நீங்க இவனை கண்டிக்க வேண்டியது தானே..
தீரத்தன் - hey... whats wrong with you.... ஏன் இப்போ பொம்மி அம்மாகிட்ட கத்துற.... இப்போ என்ன ஆச்சு...
காமினி - என்ன ஆச்சா.. டேய் வேணா.. உள்ள தியா இருக்கான்னு பாக்குறேன்... என்ன டா டிசைன் நீ.... உனக்கு எல்லாம் emotion ன்னு ஒன்னு இல்லவே இல்லையா... கமலேஷ் உனக்கு யாருடா.... அவனை உனக்கு எப்போதுல இருந்து தெரியும்.... அவனுக்கும் உனக்கும் 1008 diffrents of opinions இருக்கலாம்...அதுக்காக காலையில இருந்து அவனுக்கு ஒரு போன் பண்ணி கூட அவன் நல்லா இருக்கானான்னு நீ கேக்கல இல்ல.. சரி அவன்கிட்ட கேக்க வேணா.... அடலீஸ்ட் நீ என்கிட்ட கேக்கலாம் இல்ல...
பொம்மி - இப்போ ஏன் நீ என் புள்ளையை திட்டுற....பாவம் என் புள்ள...
காமினி - போதும் நிறுத்துங்க.... சரியான ஜடத்தை வளர்த்து வச்சி இருக்கீங்க..மனுஷனா இவன்...
என்று காமினி அதிக பட்ச கோவத்தில் கத்தியவளின் முன் தியா ஏதும் புரியாதவளாக வந்து நின்றவள்...
தியா - இந்தா காமு டீ....
என்றதும்...
காமினி - thanks... என்றவள் டீயை எடுத்து கொண்டு.... Its embarrassing to say that you are my friend..... என்றவள் தீரத்தனை அருவருப்பாக பார்த்தப்படி தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்...
பொம்மி - என்ன தம்பி இவ... நம்ம மேல ஏன் இப்படி கோவத்தை காட்டுறா..
தீரன் - I don't understand anything மா.... வாங்க நம்ம போகலாம்... bye தியா... என்றவன்.... பொம்மியை அழைத்து கொண்டு அங்கிருந்து சென்றான்....
சில மணி நேரம் கடந்த நிலையில் இரண்டு சப்பாத்தியுடன் காமினி அருகில் சென்ற தியா... அவள் முன் தட்டை நீட்ட..
எனக்கு வேணா தியா.. நீ சாப்பிடு.... என்று சொன்னதும்.... தியா அவள் கையாளயே காமினிக்கு சாப்பாட்டை ஊட்டி விட்டதும்... காமினியின் கண்கள் சட்டென்று கலங்கியது...
அங்கே சில நொடிகள் மௌனம் நிலவ...
நான் ஏன் உன் தீரன் கிட்ட சண்டை போட்டேன்னு கேக்க மாட்டியா.. என்று காமினி கேட்டாள்...
மீண்டும் ஒரு வாய் சப்பாத்தியை காமினி வாயில் ஊட்டிய தியா....
" நீ சண்டை போட்டது என் தீரன் கிட்ட இல்ல... உன்னோட நண்பன் கிட்ட.... நான் இதுல தலைவிட மாட்டேன்... ஏன்னா இருவர் நட்புக்குள்ள மூன்றாவதா ஒரு ஆள் வந்தா.... அந்த சண்டை இன்னும் அதிகமா தான் ஆகும்... அதான் நான் உன்கிட்ட எதுமே கேக்கல"...என்றவள்.... தட்டை எடுத்து கொண்டு சமையல் அறைக்குள் நுழைய....
காமினி அவளை பின் தொடர்ந்தவள்.... இன்று தீரத்தன் அலுவலகத்தில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் சகஜமாக கேட்டு விசாரித்து... தன் இயல்பு நிலைக்கு மாறியவள்... அன்றைய இரவை தியாழினியுடன் நிம்மதியாக கடந்தாள்..
**********************************************
மறுநாள் காலை... நேற்றைய தினம் போலவே... தீரத்தன்... தியாழினியை தன்னுடன் ஆபீஸ்க்கு அழைத்து செல்ல...இவர்கள் இருவரும் தொடர்ந்து மூன்று நாட்களாகவே அடிக்கடி ஒன்றாக சுற்றுவதை பார்த்த தீரத்தனின் அப்பா MLA வாசு தேவனின் ஆட்கள்...வாசு தேவனிடம் விஷயத்தை பற்ற வைக்க....
அன்றைய தினமே டெல்லியில் இருந்து...தீரத்தன் பங்களாவிற்கு வந்து இறங்கினார் வாசு தேவன்..
பெரிய பெரிய ஆட்களுக்கு பினாமியாக இருக்கும் வாசுதேவனை பார்த்து சில அதிகாரிகளே பயம் கொண்டு தான் இருப்பார்கள்...
வாசு தேவனின் திடிர் வருகையால் பொம்மிக்கு அள்ளு விட்டு போனது ...வாசு தேவனோ தீரத்தன்னுக்காக காத்து இருந்த தருணம்........வாசலில் இருந்து கமலேஷ் கையில் key செயின்னை சுற்றி கொண்டு.. வாயில் chewing gum, tight fit shirt,அதுக்கு ஏற்ற pant என்று அம்சமாக வந்தவன் வாசுதேவன் அருகில் வந்து பந்தாவாக அமர்ந்து கொள்ள......
அவனை பார்த்ததும் வாசு தேவனின் முகம் high flame எண்ணெயில் போட்ட கடுகை போல கருகியது.....
கமலேஷை பார்த்ததும்... வாசுதேவனின் PA சுடலையின் முகமும் பயத்தில் சூழ்ந்து இருந்த தருணம்...
ஏய்.... நீ என்னடா இங்க பண்ற... என்று கேட்ட வாசுதேவன்.. தன் PA விடம் கையை நீட்ட.... சுடலை அவன் பாக்கெட்டில் இருந்த சுருட்டை பற்ற வைத்து வாசு தேவனிடம் தர போக.
அந்த சுருட்டை அவர் கையில் இருந்து பிடுங்கிய கமலேஷ்....
வாசுதேவன் முன் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன்.....
"புகை பழக்கம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கெடு...Imean உன்னை போலவே "....
என்றவன்....
அந்த சுருட்டை தன் அதரங்களின் நடுவில் பதிய வைத்து, அதன் போதையை தனக்குள் இழுத்து....அதில் வரும் புகையை வாசுதேவனின் முகத்தில் ஊதினான்...
Author - 🤔கமலேஷ் யாரென்று .. Any guess....தெரியலைன்னா நானே next part ல சொல்லுறேன்...