🔱யின்... ❤Kகாதல்...Cசித்திரம்❤
(07/06/21)
❤சித்திரம்... 8️⃣
🌹சத்ரியன் என்கிற சக்தியை முல்லை காலேஜில் விட்டவள்.....பொடி நடையாக நடந்து ஒரு திருமண மண்டபத்திற்கு போக........ அங்கே ஓனர் 🌹
owner : வாமா...என்ன இவ்வளவு நேரம் எத்தனை மணிக்கு வர சொன்னா எத்தனை மணிக் கு வந்து இருக்க...
முல்லை : இல்ல சார் நடந்து வர லேட்டாயிடுச்சு
owner : சரிமா உள்ள தான் சமையலறை இருக்கு....போ போய் உனக்கு தேவையான பொருளை எடுத்துகிட்டு முதலில் சாம்பிளுக்கு கொஞ்சம் லட்டு செய்து கொடு.....நல்லா இருந்தால் நான் உன்கிட்டயே ஆர்டர் கொடுக்கிறேன்....
முல்லை : ஓகே சார் கண்டிப்பா...
🌹என்று சொன்ன முல்லை..... சாமியைக் கும்பிட்டு அடுப்பை பத்த வைத்தவள்... அரைமணி நேரத்தில் லட்டை செய்து முடிக்க......முதலில் அங்கே வெளியே நின்றிருந்த ஒரு வயது முதிர்ந்த பாட்டியிடம் லட்டை கொடுத்து...காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய பிறகு மீதி லட்டுவை owner இடம்
கொடுக்க...🌹
owner : அடுத்த வாரம் இங்க பெரிய ஆளின் மகனுக்கு கல்யாணம் பண்ண போறவங்க தான் இந்த லட்டுவை சாப்பிட்டுப் பார்த்து முடிவ சொல்லணும் புரியுதா
🌹என்று சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில்....வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை போட்டுக்கொண்டு கருப்பு உருவத்தில் கரிகாலன் என்ற பெயரோடு அந்த ஊரு xmla உள்ளே வர...... அவன் பார்வையில் முல்லை முழுவதுமாக ஆக்கிரமித்து இருக்க.....🌹
கரிகாலன் : யார் இந்த அழகி.....
ஓனர் : ஐயா நம்ப மண்டபத்தில் sweet செய்யற மாஸ்டர் உடைய பொண்டாட்டி தவறிட்டா....அதான் அவன் ஊருக்குப் போய் இருக்கான்....அதனால தான் உங்க பையன் கல்யாணத்துக்கு sweet செய்யும் ஆர்டரை இவங்ககிட்ட கொடுக்கலாம்ன்னு
கரிகாலன் : இந்த அழகி யாரு நான் இதுவரை பார்த்ததே இல்லையே....
owner : நம்ப சிபிஐ ஆபீஸ்ல ஒரு பொண்ணு லாஸ்லியா இருக்காங்களே அவங்க ரெகமெண்டேஷன்.....
கரிகாலன் : ம்.....லட்டு நல்லா தான் இருக்கும் போல
🌹 என்று அவன் பேசும் பேச்சில் ஒரு சூட்சமம் தெரிந்தாலும்........
முல்லை தன் வாழ்க்கையில் பணம் சேர்ப்பதை குறிக்கோளாக வைத்திருக்கும் எண்ணத்தில்..... இதை எதுவும் கண்டு கொள்ளாமல் அமைதியாக நின்றிருக்க🌹
கரிகாலன் : நல்லாதான் இருக்கு.... அப்போ இனிமே வர ஆர்டர் எல்லாம் இந்த பொண்ணுகிட்ட கொடுத்துடுங்க...
முல்லை : ரொ.... ரொ....ரொம்ப தேங்க்ஸ்ங்க
கரிகாலன் : அப்புறம் நான் எப்ப கூப்பிட்டாலும் வந்து எல்லாத்தையும் செஞ்சு கொடுக்கணும் புரியுதா
முல்லை : புரியல sir...
கரிகாலன் : இல்ல லட்டு.... நான் எப்ப கேட்டாலும் கொடுக்கனும்ன்னு சொன்னேன்.....
🌹 என்று கரிகாலன் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில்......கரிகாலனுக்கு போன் வர 🌹
கரிகாலன் : ஹலோ எங்க இருக்க........... அப்படியா....... எந்த இடத்தல்..... ம்... ஓகே இன்னும் பத்து நிமிஷத்துல நான் அங்க வரேன்......
🌹என்று சொன்னபடி கரிகாலன் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாலும்..... அவன் பார்வையில் முழுவதுமாக முல்லை மட்டுமே நிறைந்து இருக்க...... கரிகாலனால் முல்லைக்கு என்ன பிரச்சனை வரப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..... மறுபக்கம் காலேஜில்🌹
சக்தி : இல்ல நான் இனிமே படிக்க வரமாட்டேன்......
இன்னொருவன் : டேய் மச்சான் இதுங்க இந்த மாதிரி எல்லாம் சொன்னா எல்லாம் கேட்காது டா.... வேற மாதிரி சொல்லணும்
🌹என்று சொன்னபடியே அவளின் மேலாடையை பிடித்து ஒருவன் கிழிக்க.... சக்தி அங்கு இருந்து ஓடியவள் ஒருவரின் மேல் போய் மோத......அங்கு நின்று கொண்டு இருந்தது நம் கதிரும் அவனின் தம்பி உதயாவும் ..🌹
உதயா : ஏய் இங்கே என்ன நடக்குது.
ஒருவன் : டேய் யாரோ வந்துட்டாங்க போங்கடா போங்கடா
🌹என்று சொன்னபடி அந்த நால்வரும் அந்த இடத்தில் இருந்து கலைய....சக்தி அழுது கொண்டு இருந்தவளை பார்த்த கதிர்....தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி கொடுக்க....🌹
கதிர் : இந்தா இந்த சட்டையை போடு...
சக்தி : இல்ல எனக்கு வேணாம் நான் போறேன் நான் போறேன்
🌹என்று சொன்னபடி அவள் அங்கிருந்து ஓட முயன்றவளை தடுத்து நிறுத்திய கதிர்🌹
கதிர் : இங்க பாரு...நான் சொல்றதைக் கேளு.... இப்படி எல்லாம் நீ வெளியே போனா வேற மாதிரி தப்பா நினைப்பாங்க முதல் இந்த சட்டைய போடு..
🌹 என்று கதிர் கம்பெல் பண்ணி சட்டையை கொடுக்க..... அந்த சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டவள்...தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தவளை பார்த்த உதயா 🌹
உதயா : சக்தி இங்க பாருங்க நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க இதுக்கு மேற்பட்டு இந்த மாதிரி எல்லாம் நடக்காது
சக்தி : இல்ல எனக்கு எதுவும் வேண்டாம்... நான் போகனும்....நான் வீட்டுக்கு போகணும்.... என் அக்காவை பாக்கணும்.....
உதயா : இல்ல இல்ல இருங்க ஏன் இப்படி அழறீங்க போகலாம் இருங்க...நாங்களே உங்களை விட்ல போய் விடுறோம்..
சக்தி : இல்ல வேணாம் நானே போறேன்....
கதிர் : இந்த நிலைமையில் நீ இப்போ தனியா போக வேணாம்...வா என்கூட..... நான் வீட்டுக்கு தான் போறேன்
சக்தி : நான் வரல நான் தனியா போறேன் நான் உங்கக்கூட வர மாட்டேன்....
கதிர் : ஏய் சொல்றேன்ல வான்னு.
🌹என்று கதிர் சொன்னவன்....
சக்தியை தன் பைக்கில் ஏற சொல்ல🌹
சக்தி : இல்ல நான் வண்டியில எல்லாம் வரமாட்டேன்....நான் நடந்தே வரேன்...
உதயா : ஏன் இப்படி பண்றீங்க...
கதிர் : ஏய் விடுடா... ஆட்டோக்கார அண்ணா கொஞ்சம் வரீங்களா
டிரைவர் : என்ன தம்பி
கதிர் : ராஜராஜ சோழன் தெருவிற்கு போனோம்
டிரைவர் : வாபா போகலாம்
🌹என்று டிரைவர் சொல்ல.... கதிரும் சத்ரியன் எனும் சக்தியும் ஆட்டோவில் ஏற......🌹
கதிர் : சக்தி இங்க பாரு.....இப்ப எதுக்கு அழுதுகிட்டு இருக்க... நீ இந்த மாதிரி பிறந்தது உன்னுடைய தவிறில்ல....ஏன் உன்னை பெத்தவங்க தவறும் இல்ல....இது ஒரு ஹார்மோனால் ஏற்படும் மாற்றம் தான்........ இது மத்தவங்களுக்கு புரியலனா பரவால்ல....நீ இப்படி அழுது அழுது உன்னை நீயே தாழ்த்திக்காத புரியுதா
🌹என்று கதிர் சொல்ல..,.சக்தி அவன் முகத்தை கூட பார்க்காமல்...... அவள் முகத்தை கதிர் தனக்கு தந்த அவனின் சட்டையை போர்த்தியபடி அழுது கொண்டே இருக்க 🌹
கதிர் : இப்படியே அழு..,..then நீ போய் உன் அக்காகிட்ட சொல்லி....அக்கா இது தான் பிரச்சனை என்று மறுபடியும் இந்த இடத்தைவிட்டு கிளம்புவா... இப்படி ஓடிக்கொண்டே இருந்தா... உங்க வாழ்க்கைக்கு முடிவே இல்லாமல் போய்விடும்.... நான் சொல்றத கேளு நாளைக்கு நான் அந்த காலேஜில் நடந்த விஷயத்தை பத்தி பெரிய ஆளு கிட்ட பேசுறேன் முதல்ல நீ இந்த மாதிரி அழுவதை நிறுத்து....
ஆட்டோக்காரர் : தம்பி என்னப்பா என்ன ஆச்சு
கதிர் : ஒன்னும் இல்ல அண்ணா காலேஜில் ஒரு சின்ன பிரச்சனை
டிரைவர் : இந்த பசங்க எல்லாம் இப்படித்தான் பா..... படிக்கவும் விட மாட்டானுங்க வாழவும் விட மாட்டானுங்க.....என்ன பண்ண சொல்ற..... பாப்பா நீ அழுவாத
🌹என்று ஆட்டோக்காரர் சொல்ல....இவர்கள் யார் எதை பேசினாலும் சக்தியின் காதில் விழாமல் அவள் அழுது கொண்டே இருக்க....இவர்கள் பயணித்த ஆட்டோ முல்லையின் வீட்டின் வாசலில் நிற்க ...
ஆட்டோவில் வந்து கதிரும் சக்தியும் இறங்கியதைப் பார்த்து வீட்டில் இருந்த லாஸ்லியா பல கேள்விகளோடு வெளியே வந்தவள்🌹
லாஸ்ஸியா : கதிர் என்ன ஆச்சு...சக்தி எப்படி உன் கூட
கதிர் : எல்லாத்தையும் வாசல்ல நின்னு கேப்பியா உள்ளே போ...
லாஸ் : hi உதயா ஹவ் ஆர் யூ மேன்
கதிர் : உதயா ஆட்டோவை கட் பண்ணிட்டு வா
உதயா : அண்ணா இந்தாங்க பணம்
ஆட்டோக்காரர் : தம்பி பணம் எல்லாம் வேண்டாம் எனக்கும் இப்படி ஒரு தம்பி இருக்கான் பா...இந்த பையன் இன்னைக்கு இந்த பொண்ணுகிட்ட பேசிய போது தான் என் இயலாமையை நான் உணர்ந்தேன்.... இன்னையில் இருந்து நானும் என் தம்பியை.... இல்ல இல்ல என் தங்கச்சியை நல்லா பார்த்துப்பேன்.....
கதிர் : அண்ணா உங்க பெயர்
ஆட்டோக்காரர் : மாணிக்கம்.....
கதிர் : சூப்பர் மாணிக்கம் அண்ணா வாழ்த்துக்கள்...
ஆட்டோக்காரர் : தம்பி இவுங்க பேர்...
உதயா : ம்... இவுங்க சக்தி...
மாணிக்கம் : சக்தி இனிமே உனக்கு இந்த ஆட்டோகரன் மாணிக்கமும் ஓரு அண்ணன் தான்.... நான் உன் காலேஜ் எதிரில் தான் இருப்பேன்...என்னை நீ எப்ப வேணும்னாலும் கூப்பிடலாம்...
🌹 என்று ஆட்டோ கார் மாணிக்கம் சொல்ல.....அவரைப் பார்த்து சிறு புன்னகை புரிந்த கதிர்....சக்தியை அழைத்துக்கொண்டு உள்ளே போனவள் அழுதுகொண்டே இருப்பதை பார்த்து லாஸ்ஸியா🌹
லாஸ்லியா : சக்தி என்ன ஆச்சு ஏன் அழுதுகிட்டே இருக்க...இது என்ன இது கதிரோட சட்டை எப்படி உன்கிட்ட.... டேய் உதயா நீயாவது சொல்லித் தொலையேண்டா என்னதான் ஆச்சு சக்திக்கு
உதயா : இல்ல லாஸ்.. காலேஜ் ல ஒரு பிரச்சனை...எப்பயும் போல அந்த பெரிய இடத்து பசங்க சக்தி கிட்ட வம்பு இழுத்துருக்காங்க...நல்ல வேல கதிர் அண்ணா என்னை பாக்க வந்துச்சு... அந்த இடத்தில்தான் சக்தியை பார்த்துச்சு
லாஸ் : ஏய் அவனுங்க திருந்தவே மாட்டாங்களா... ஏன் இவனுங்க இந்த மாதிரி இருக்கிறாங்க..ஏன் கதிர் பேசாம அவனுங்களுக்கு லாடம் கட்ட வேண்டியதுதானே
கதிர் : அவனுங்களுக்கு அப்புறம் கட்டலாம்...முதல்ல இந்த அழுமூஞ்ச என்னன்னு கேளு...இந்த மாதிரி அழுவுற பொண்ணுங்கள பார்த்தாலே எனக்கு எரிச்சலா இருக்கு... இவ என்ன முல்லக்கூடப் பொறந்தவ தான...அவ எவ்வளவு தைரியமா இருக்குறா..இவ ஏன் எதுக்கு எடுத்தாலும் இப்படி அழுது கிட்டு இருக்கா...
உதயா : கோவப்படாத அண்ணா...அங்க இருந்த situation சக்தியை இப்படி அழவைக்கிறது...
கதிர் : டேய்...அந்த situation ல எதிர்க்க இருக்கிறவங்க இவ மேல கை வைக்க வரும் போதே செவில் மேலயே ரெண்டு அடிக்க தெரியாதா....அதைவிட்டுட்டு இப்படி அழுதுகிட்டு உட்காந்துகிட்டு இருக்கா
🌹என்று கதிர் உரிமையோடு சக்தியை மீண்டும் திட்ட..... சக்தி அழுது கொண்டே அவளின் அறைக்குள் சென்றவள் கதவை சாத்திக் கொள்ள🌹
கதிர் : இவ அக்காளுக்கும் இவளுக்கும் இத தவிர வேற எதுவுமே தெரியாதுன்னு நினைக்கிறேன்....
லாஸ் : சரி டா நீ ஏன்டா உணர்ச்சிவசப்படுற...
கதிர் : பின்ன என்ன டி....நமக்கு ஒரு பிரச்சனை வந்தா நாம் தானே எதிர்த்து நின்னு பேசணும்......இதையே தான் அந்த மயிலும் பண்ணா
🌹என்று தன் அக்கா அனிதாவின் பிள்ளை மயிலை நினைத்து உதயா கண்கள் கலங்கியதை பார்த்த லாஸ்லியா🌹
லாஸ் : இப்ப எதுக்குடா மயில் கதையை பேசுற.... இதோ உதயா அழ ஆரம்பிச்சுட்டான்
கதிர் : சாரிடா நான் எதுவும் பேசல
உதயா : பரவாயில்ல அண்ணா விடுங்க
கதிர் : சரி லாஸ்...அந்த பொண்ண என்ன ஏதுன்னு பாரு.. நான் மாடியில் இருக்கிறேன்...அப்புறம் இவ அக்கா அந்த ஊறுகாய் பாட்டில் வந்துச்சுன்னா.... அங்கு நடந்ததெல்லாம் சொல்ல வேணாம்னு சொல்லு.... இதுதான் சாக்குன்னு இருக்குற நாளு ஊறுகா பாட்டிலை எடுத்துகிட்டு அவ ஊரை விட்டு வேற எங்காவது ஓட போறா..... மூணு வருஷம் அவளை தொலைச்சிட்டு நான் படாதபாடு பட்டேன்
🌹என்று சொன்ன கதிர்....உதயாவை அழைத்துக் கொண்டு மேலே போக🌹
உதயா : அண்ணா ஒரு நிமிஷம்... நான் சக்தி கிட்ட பேசிட்டு வரேன்
கதிர் : ஆமா டா நீ பேசி... அப்படியே அவ திருப்பி பதில் சொல்லிட போறா பாரு......
உதயா : இல்ல அண்ணா நான் பேசுறேன்
கதிர் : என்னத்தையோ பண்ணு
🌹என்று சொன்ன கதிர் மாடிக்குச் செல்ல.... 🌹
லாஸ்லியா : உதயா நீ பாரு நான் கவினுக்கு ஒரு போன் பண்ணிட்டு வரேன்
🌹என்று சொன்னபடி லாஸ்லியாவும் தோட்டத்திற்கு செல்ல... உதயா கதவை
தட்டியபடி 🌹
உதயா : சக்தி இங்க பாருங்க... நான் சொல்றதைக் கேளுங்க....இப்ப எதுக்கு அழுது கிட்டு இருக்கீங்க...ஒவொரு நாளும் நம்மள சுத்தி எவ்வளவோ பிரச்சனைகள் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கு...முதல்ல தேவையில்லாத விஷயத்துக்கு அழுவத நிறுத்துங்க.... pls தைரியமா இருங்க... then உங்க அக்கா கிட்ட அங்க நடந்த விஷயத்தை பற்றி சொல்லாதீங்க... உங்களுக்காக எது நடந்தாலும் நானும் என் அண்ணனும் இருப்போம்....இந்த ஒரு வார்த்தையை மட்டும் நீங்க உங்க மனசுல வெச்சுக்கோங்க
🌹என்று சொன்னபடி உதயா மாடிக்குச் செல்ல..... சக்திக்கு உதயா யார் என்ற கேள்வி மனதில் தோன்றினாலும்.... அவளின் மனநிலை பாதிக்க பட்டு இருந்த நிலையில் இது எதை பற்றியும் எண்ணத்தில் கொள்ளாத அவள்.....அன்றைய நாள் முழுதும் தன் அறையை விட்டு வெளியே வரவே இல்லை..... அன்றைய இரவு 9 மணி அளவில் முல்லை வீட்டிற்கு வர லாஸ்லியா வாசலிலேயே நின்று இருந்தவள் முல்லையை பார்த்து 🌹
லாஸ் : ஏய் மணி என்ன ஆச்சு ஏன் இவ்வளவு நேரம்
முல்லை : நான் என்னடி பண்றது பஸ் புடிச்சு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆச்சு
லாஸ் : ஏன் ஆட்டோவில் வர வேண்டியதுதானே
முல்லை : ஆட்டோவுல வந்தா 100 ரூபாய் கேட்பாங்க அந்த நூறு ரூபாய் இருந்துச்சுன்னா நான் வேற ஏதாவது வாங்குவேன்...
லாஸ்லியா : நீ ஒரு கஞ்ச பொண்ணு... அப்படி எதுக்கு தான் நீ காசு சேர்க்குறன்னு தெரியல
முல்லை : சரி சரி அத விடு தங்கச்சி வந்துட்டாளா... அவ சாப்பிட்டாளா
லாஸ் : ஏண்டி நான் சாப்பிட்டேனான்னு எல்லாம் கேக்க மாட்டியா
முல்லை : அப்படி இல்ல
லாஸ் : சரி சரி நான் கவின் வீட்டுக்கு கிளம்பனோம்.... உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்
முல்லை : ஏன்டி நீ கிளம்ப வேண்டியது தான...
லாஸ் : உன் தங்கச்சி அப்புறம் தனியா இருப்பா.... நீ அதுக்கு ஒரு பொலம்பு பொலம்புவ...
முல்லை : ஏன்.....அதான் மாடியில குச்சி மிட்டாய் இருக்குது இல்ல அத பாத்துக்க சொல்லிட்டு போக வேண்டியது தானே....
லாஸ் : உனக்கு தான் கதிரை பிடிக்காதே....
முல்லை : எனக்கு பிடிக்கலைனா என்ன என் தங்கச்சிய பாத்துக்க மாட்டாரா
லாஸ் : ம்...பார்த்துப்பான் பார்த்துப்பான் சரி உன்கிட்ட பேசிகிட்டு இருக்க எனக்கு நேரம் இல்ல நான் கிளம்புறேன்
🌹 என்று சொல்லி லாஸ்லியா கவின் வீட்டிற்கு கிளம்ப....தன் வீட்டிற்குள் நுழைந்த முல்லை.....சக்தியின் அருகில் அமர்ந்தவள் தன் தங்கை சத்ரியன் என்கிற சக்தியின் பெயரை சொல்லி எழுப்ப......சக்தி தூக்கத்தில் இருப்பது போல் நடிக்க.......அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாள் என்று நினைத்துக்கொண்ட முல்லை அவளை எழுப்பாமல் தன் வேலையைப் பார்க்க........ 🌹
முல்லை : ஐயோ மணி பத்தாச்சு...இந்த குச்சி மிட்டாய் வேற பசிக்குது என்று சொல்லி உயிர் எடுக்கும்....சரி மாவு இருக்கு இட்லி ஊத்த வேண்டியது தான்
🌹என்று சொன்னபடி இட்லி ஊத்தியவள்.... அதனுடன் சட்னியை வைத்து மொட்டை மாடிக்கு எடுத்து செல்ல........உதயாவும் கதிரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க....இவள் எதுவும் பேசாமல் சாப்பாட்டை கொண்டு போய் வைத்தவள் மீண்டும் கீழே இறங்கி போக 🌹
கதிர் : ஏய் ஊறுக்கா நில்லு
முல்லை : இங்க பாரு உன் கிட்ட பேசுறதுக்கு என் உடம்புல இப்ப சத்து இல்ல...இந்தா சாப்பிடு நேரம் ஆகுது நான் போய் தூங்கணும்... என் தங்கச்சி வேற இன்னும் சாப்பிடவே இல்ல...
கதிர் : சரி உன் தங்கச்சி அந்த ஓரு ரூபா ஊறுகாய் பொட்டலம் ஏதாவது சொன்னாளா....
முல்லை : ஏய் என்ன... என் தங்கச்சிக்கும் பட்ட பேர் வைக்கிறியா...
கதிர் : இங்க பாரு என்கிட்ட இப்படி எகுறாத அப்புறம் காலையில சாப்பிட்ட டிபன்னை நான் மறுபடியும் கேட்பேன்...
முல்லை : ( அவன் முத்தமிட்டத்தை நினைத்தவள் ) என்ன.... இப்படி எல்லாம் சொன்னா பயந்துடுவாங்களா.... ஆளை பாரு நல்லா பத்து ரூபா மிட்டாய் மாதிரி...
கதிர் : ஏய் சொல்லுடி உன் தங்கச்சி எதாவது சொன்னாளா...
முல்லை : எதுவும் சொல்லலியே.... ஆமா இன்னைக்கு என்ன என் தங்கச்சியை பற்றி இவ்வளவு அக்கறையா கேட்கிற... என்ன வி....... வி.....விஷயம்
கதிர் : ம்.... ஒன்னும் இல்ல... சரி இது என்ன.....
முல்லை : ம்....இட்லி.... நல்லா சாப்பிடு.... நிறைய தான் இருக்கு புதுசா வந்து இருக்கும் இந்த ஐந்து ரூபாய் மிட்டாய்க்கும் தா....
உதயா : அண்ணி எப்படி இருக்கீங்க
முல்லை : என்ன அண்ணியா ஹலோ யார் நீங்க
உதயா : நான் கதிர் அண்ணனுடைய தம்பி.....
முல்லை : ஒ.... அப்போ சின்ன குச்சு மிட்டாயா..... ஹ்ம்..
🌹என்று சொன்னபடி முல்லை கீழே இறங்கிப் போக....🌹
முல்லை : ( மனதிற்குள் ) என்ன நான் வந்து ரெண்டு மணி நேரம் ஆச்சு ஏன் இன்னும் இவ எந்திரிக்கல அப்படி என்ன தூக்கம்......சக்தி சக்திமா.....
என்ன டா ஆச்சு ஏன் இப்படி தூங்குற
சக்தி : அது தலை வலிக்குது க்கா
முல்லை : சரி சாப்டியா...
சக்தி : ம் நான் சாப்பிட்டேன்
முல்லை : இன்னைக்கு காலேஜ் எப்படி போச்சு
சக்தி : நல்லா போச்சு கா...
முல்லை : ஏன்டா ஒரு மாதிரி இருக்க
சக்தி : ஒன்னும் இல்லக்கா
முல்லை : இல்லயே.... என்னமோ இருக்கு
சக்தி : உண்மையாவே தலை தான் வலிக்குது நான் மாத்திரை போட்டுக்கிட்டு படுகறேன் நீ சாப்பிடு
முல்லை : m....சரி நீ படு
சக்தி : அக்கா...
முல்லை : என்ன என்னடா
சக்தி : ஒன்னு இல்ல....... நீ நேரத்துக்கு சாப்பிடணும் புரியுதா......
முல்லை : ம்.....நான் சாப்பிடுவேன் மா நீ படு
🌹 என்று முல்லை சொன்னவள் சக்தியின் அறையை விட்டு வெளியே போக.......நேரம் சரியாக இரவு 11 மணிக்கு வீட்டு கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு முல்லை கையில் மிளகாய் பொடியை எடுத்துக் கொண்டு போய் கதவை திறக்க வாசலில் நின்று இருந்தது கதிர்🌹
முல்லை : எனக்கு தெரியும் நீ தான் வந்து இருப்பன்னு.....நீ எதுக்கு வந்த யாரு உன்னை வரச்சொன்னது
கதிர் : ஏய் ஊறுக்கா நகரு டி.....எங்க உன் தங்கச்சி....
முல்லை : எதுக்கு டா நீ அவளை கேக்குற
கதிர் : ஏய் வாயை உடைச்சிடுவேன்
முல்லை : ஏய் குச்சி மிட்டாய்.....என்ன நேரம் கெட்ட நேரத்தில் வந்து கதவைத் தட்டி... எ....... எ......என்கிட்ட வம்பு பண்ணுறியா....நீ இப்படி பண்ணா எங்களை எல்லோரும் என்ன நினைப்பாங்க
உதயா : முல்லை அண்ணி முதலில் உங்க தங்கச்சி எங்கன்னு சொல்லுங்க.....
முல்லை : அவ ரூம்ல தலை வலிக்குதுன்னு படுத்திருக்கிறா
கதிர் : ஒத்து...நான் அவள பாக்கணும்
முல்லை : நீயென் அவளை பாக்கணும்...
உதயா : அண்ணி pls moov பண்ணுங்க....
கதிர் : டேய் உதயா......அந்த ஓரு ரூபா ஊறுக்கா பாக்கெட் (சக்தி) அவ ரூம்ல தான் இருப்பா நீ போய் கதவை தட்டு....
உதயா : சக்தி கதவை திறங்க....ஏன் இப்படி பண்றீங்க....
கதிர் : ஏய் சக்தி கதவை திற.....
முல்லை : என்னாச்சு..... சக்தி மா கதவை திற.....
உதயா : அண்ணா கதவு உள் பக்கம் பூட்டி இருக்கு....
முல்லை : இல்லையே இவ்வளவு நேரம் திறந்து இருந்ததுச்சே
கதிர் : ஏய் இதுக்கு தாண்டி சொன்னேன்....வாசல்ல நின்னுக்கிட்டு உயிரை எடுக்குற...போடி அப்படி
🌹என்று சொன்னபடி கதிர் வேகமாக சக்தியின் அறைகதவை எட்டி உதைக்க...... முல்லை கதிர் உதயா ஆகிய மூவரும்....அறையினுள் இருந்த சக்தியின் நிலைமையைக் கண்டு அதிர்ந்து போய் நிற்க........ சத்ரியன் என்கிற சக்திக்கு என்ன ஆனது விடை
விடை விரைவில் 🌹
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌹போனமுறை கேள்விக்கு
உண்டான பதில்.......
நின்றப்படி தூங்கும் மிருகம் எது..??
விடை : குதிரை....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌹இன்றைய கேள்வி :
🤜உடலில் உள்ள எலும்புகளின் ( bones) எண்ணிக்கை மொத்தம் எத்தனை ...??
a.200
b.205
c.206
🙏கதையின் விடையும்... கேள்வியின் விடையும் நாளை விடியல்லில் சொல்கிறேன்....இப்படிக்கு ...நான் உங்கள் சக்தி..... 🔱