மனிதர்கள் மொழி கலாச்சராம் என்று மொத்தமும் வேறு பட்ட நாடான அமைரிக்கா அவனுக்கு ஏனோ அந்நியமா தோன்றவில்லை காரணம் அந்த பெயர் பெற்ற யுனிவர்ஸிடியில் தமிழர்கள் நின்றமை தான்.
திலீபன் என்ற சென்னையை சேர்ந்த ப்ரபஸரும் இருந்தார்.
பாலக்காட்டை சேர்ந்த மலையால பெண் ஒருத்தியும் தன்னுடனே படிக்க வந்து இருந்ததால் சிவாவுக்கு 'இது போதும்' என்று தான் ஆகி போனது
"ஹாய் நீங்க இந்தியா தானே?" என்று சிரித்த முகமாக கேட்டதும் தலையாட்டியவள் கை கொடுத்து "ஐயம் தாரினி ப்ரொம் பால்காட் யூ?" என்று விட்டு அவனை கேள்வியாக பார்த்தாள்.
"ஐயம் சிவப்ரஷாத் க்ருஷ்ணா ப்ரொம் தமிழ்நாடு"
"சென்னையே?" என்று கேட்டாள் மீண்டும் கேள்வி பார்வையோடு "ஹம் நீங்க மலையாளமா?" என்று அவனும் கேட்டதும்
"அம்மா சென்னை அப்பா பால்காட் ஸோ எனக்கு தமிழ் நல்லாவே தெரியும்" என்றாள் புன்னகைப்போடு
"வாவ் பிஸினஸ் பற்றி படிக்கிறீங்க பெமிலி பிஸினஸ் இருக்கா?" என்று கேட்டான்
தலையாட்டி விட்டு
"இல்லா இல்லா எனக்கு பிஸினஸ் பிடிக்கும் அவ்வளவு தான்" என்றாள் புன்னகைப்போடு
அந்த தாரணியின் இந்த அளவுக்கு மீறிய அழகுக்கு காரணமே புன்னகைப்போடு பேசுவது தான்.
"வெரி குட் அப்பறம் ஸ்கொலர்ஷிப்ல வந்தீங்களா?"
"ஹான் ஆமா நீங்க?"
"நானும்" என்று விட்டு புன்னகைத்தான்.
"இங்க எத்தனை வருஷமா படிக்குறீங்க?" என்று தாரணி கேட்டதும் சிரிப்போடு "கிட்ட தட்ட இரண்டு இயர்ஸ்க்கு மேல இந்தியால படிச்சிட்டேன் மீதமுள்ள இரண்டு இயர்ஸ் தான் இங்க படிக்கனும்" என்றான் தெளிவாக
பின்பு அவனே "நீங்க எங்க பெட்ஜா?" என்று கேட்டதும் "நோ நோ நான் ஐந்து இயர்ஸ் படிக்க வந்தேன் இது என் பெஸ்ட் இயர்" என்றாள் புன்னகைப்புக்கு பாதிப்பின்றி
"அப்போ நீங்க என் வயசு இல்லயா?" என்று ஒரு மாதிரி கேட்டான் சிவா
"என்ன பார்த்தா அப்டியா தோன்றுது?" என்று கேட்டதும் "நோ நோ பட் நினைச்சேன் சாரி" என்றதும் அவள் புன்னகைப்போடு அவனை பார்த்து விட்டு எழுந்து சென்று விட்டாள்.
'ஓஹ் என்னை விட மூன்று வயசு சின்னவங்களா' என்று கேட்டு கொண்டே நாக்கை கடித்தவன் பின்பு எழுந்து ஆபிஸ் ரூம் சென்று எதையோ பேசிவிட்டு வெளி வந்து தன் ரூம் சென்றான்.
இந்த ஒரு மாதத்தில் கண்ணில் சிக்காத அந்த தாரணி அந்த சந்திப்பின் பின்பு பல முறை சந்திக்க நேர்ந்தனர்
ஒரு தடவை அவனுக்கு ஷ்ருதி கால் செய்த போது பேசி கொண்டு இருந்தான் அப்போது அவ்விடம் வந்த தாரணி அவனுடன் பேசுவதற்காக காத்திருந்தாள்.
கொஞ்சம் தள்ளி மிகவும் இங்கிதம் தெரிந்தவளாக எததையோ பார்த்து கொண்டு இருந்த தாரணியை கண்டதும் மொபைலை ஆப் செய்து விட்டு "தாரணி" என்று அழைத்தான். உடனே அவன் அருகில் வந்து "அடுத்த மன்டேய் ஒரு எக்ஸேம் நடக்குமாம் அதுல பார்டிஸிபேட் பன்னா நம்பர்வன் கம்பெனில மனேஜர் போஸ்ட் கொடுப்பாங்களாம் ஸோ உங்க கிட்ட சொல்லலாம்ன்னு வந்தேன்" உடனே "வாவ் வட்ட க்ரேட் ஒபசியுனிடி நீங்க பார்டிஸிபேட் பன்ன போறீங்களா?"
"இல்லங்க நீங்க பார்ஸிபேட் பன்லாமே" என்றதும் அவள் வந்த நோக்கம் புரிந்து "தேங்க்யூ பட் எனக்கு எங்ப்பாவோட தொழில பெரிய லெவல்ல கொண்டு போக தான் ஆசை ஏன் நீங்க பார்டிஸிபேட் பன்லாமே"
"அச்சோ நான்லாம் பார்ஸ் ஆவேன்னு நினைக்குறீங்களா....நோ நோ" என்றாள் சிரித்தமுகமாக
"அது என்ன நம்பிக்கை இல்லாத பேச்சு ஊங்களால முடியும் தாரணி தைரியமாக பார்டிஸிபேட் பன்னுங்களேன்"
"பட்" எனறு எதோ சொல்ல போனவளை தடுத்து "நோ நோ கண்டிப்பா பன்னனும்" என்று விட்டு அவளை அழைத்து சென்று அவள் பெயரை கொடுத்தான்.
"என்ன சிவா இது எனக்கு அவ்ளோ டெலன்ட்லாம் இல்லப்பா நான் எப்டி?" என்று கேட்டு தயக்கத்தோடு நின்றவள் கையில் தன்னிடம் இருந்து புத்தகங்களை கொடுத்து "இதுலாம் எடுத்து படிங்க உங்ஙளால முடியும்" என்று நம்பிக்கை கொடுத்து அனுப்பி வைத்தான்.
அதன் படி ஒரு வாரம் நன்றாக படித்து விட்டு எக்ஸேம் எழுதும் போது எக்ஸேம் நடக்கும் இடம் சிவா வந்தூ இருந்தான்.
"ஆல் த வெரி பெஸ்ட்" என்று அவளை வாழ்த்தினான் "சிவா ஒரு வேளை நான் பார்ஸ் மார்க்ஸ் எடுக்கலைன்னா நான் சொல்ல மாட்டேன் நீங்களும் கேட்க்க கூடாது ஒகேவா..." என்று ஒரு கோட்பாட்டை இட்டாள் உடனே "ப்ரிமிஸ்" என்று கூறி சிரித்தான்.
"எதற்கு சிரிக்குறீங்க?"
"இல்ல நிஜமாகவே உன் டீல் நல்லா இருக்கு சரி அத விடு எதாவது பன்னும் போது நெகடிவா திங்க் பன்றத விட்டுறு ஒகேவா" என்றதும் ஒரு மாதிரி புன்னகைப்போடு எக்ஸேம்க்காக சென்றாள்.
அடுத்த வாரமே ஆவளாகவே ஓடி வந்து அவளும் பார்ஸ் மார்க் தான் என்று கூறி கூத்தாடினாள். "வாவ் கன்ங்ராஜூலேஷன்ஸ்" என்று விட்டு ட்ரீட் கேட்டதும் "கண்டிப்பா டின்னர் போலாமா?" என்று தாராளமாக கேட்டதும் தலையாட்டினான் சிவா
________________________
டின்னரில்
"உங்கப்பாம்மா கிட்ட சொல்டியா தாரணி?" என்று சிவா சந்தோசமாக கேட்டதும் அவள் முகத்தில் புன்னைகை மறைந்து சோகம் படர்ந்து விட்டது உடனே "ஹேய் எதாவது தப்பா கேட்டுடேனா?"
"நோ சிவா எக்சுவலி எங்க அப்பாம்மா லவ் மெரேஜ் பன்னிக்கிட்டதால எனக்கு சொந்தங்கள் என்று சொல்ல யாருமில்ல அதோட எனக்கு ஞாபகம் தெரியாத வயசுலயே அப்பா இறந்துட்டார் ஸோ அப்பா இல்ல" என்றாள் சோகமாக "ஒகே சாரி தாரணி பட் அம்மா கிட்ட சொல்லி இருக்கலாமே அவங்க சந்தோசப்படுவாங்கல்ல"
மீண்டும் சோகமாக "எனக்கு ஒரு பதினாறு வயசு இருக்கும் அப்போ அம்மா வேறு ஒருத்தங்க கூட போயிட்டாங்க" என்றதும் சிவா தலையிலே அடித்து கொண்டு "அய்யோ சாரிங்க நிஜமாகவே எனக்கே என்னோட நாட்டு பொண்ணு பார்ஸ் ஆனது சந்தோசம்ன்னா அப்பாம்மாக்கு பல மடங்கு மேலன்னு தான் ஆழமாக கேட்டேன் மத்தபடி எதுவுமில்லைங்க" என்றவனது மூடே ஸ்பாயில் ஆகி தான் போயிருந்தது அதை முகம் பார்த்தே புரிந்து கொண்டவள் "ஒகே சியர் அப் சிவா" என்று கூறி கூல் ட்ரிங்ஸை கொடுத்ததும் புரியாத பார்வையோடு வாங்கி கொண்டான். அதையும் புரிந்து கொண்டவள் போன்று "எனக்கு சோகமில்லைன்னுல்லாம் இல்ல சிவா பட் இது ரொம்ப பழைய சோகம் ஸோ நான் பழகிட்டேன்" என்றாள் பழைய புன்னகைப்போடு
"பட் திரும்ப நான் பேசியும் ஹர்ட் ஆகலையா தேங்க் காட்" என்றான் வானத்தை நோக்கி உடனே இல்லை என்று நிதானமாக தலையாட்டி விட்டு "சிலர் பன்ன தவறுகளுக்கு நாம நம்ம சந்தோசத்த அழிச்சிக்குறது முட்டாள் தனம் தானே சிவா" என்றாள் தெளிவாக நிஜமாகவே சிவா அவளை ஒரு படி மேலை வைத்து தான் பார்க்க ஆரம்பித்தான்.....
உடனே அவளிடம் கை நீட்டி "இன்னேல இருந்து ப்ரன்ட்ஸ் ஆயிறலாமா தாரணி" என்று கேட்டான் உடனே அவன் கை பற்றி "அப்போ இப்போ வரை நான் ப்ரன்ட் இல்லயா ஒகே ஒகே" ஒரு மாதிரி கேட்டு விட்டு அவளே "ஷுவர்" என்று கூறி ஹேன்ட் ஷேக் செய்தாள்.
அதன் பிறகு அடுத்த நாள் சந்திப்பிலே ஷ்ருதியை பற்றி சொன்னான்.
"வாவ் நைஸ் கபுல்ஸ்யா" என்றாள் சந்தோசமாக உடனே அவளது போட்டோவை காட்டியதும் "வாவ் நல்ல அழகா இருக்கா சிவா உனக்கு பேர்பக்ட் மெசிங்" என்றாள் திருப்தியாக
"நீ லவ் பன்னலையா... தாரணி" என்று கேட்டதும் அது வரை புன்னகைப்போடு நடந்து கொண்டிருந்த அவள் நின்று விட்டாள்.
அவனை திரும்பி பார்த்து "காதல்.. கல்யாணம் எக்ஸெக்ட்ரா எக்ஸெக்ட்ரா இது எதுவுமே இல்லாத ஒரு வாழ்க்கை வாழ்றது தான் என்னோட நோக்கமே..." என்று விட்டு நடக்க ஆரம்பித்தவளின் பின்னாடியே ஓடி சென்று "ஹேய் ஹேய் லூஸா நீ இது என்ன முட்டாள்தனமான முடிவு..?" என்று கேட்டதும் நடந்தவளாக "எனக்கு அது மேல எல்லாம் நம்பிக்கை இல்ல சிவா"
"பட் இனி வரலாம்ல... "
"வந்தா பார்ப்போம்" என்றாள் ஊதாசீனமாக
"அப்போ உண்மையான ஒரு காதலை கண்டா நீ காதலிப்பியா... கல்யாணம் பன்னிப்பியா ஷுவரா?"
தலையை மட்டும் ஆட்டினாள் உடனே அவள் கைகளை பிடித்து நிறுத்தி "இத பார் நீ கண்டிப்பா கல்யாணம் பன்னிக்கனும் டா இல்லேன்னா உன் லைப்ல நீ கடைஷி வரை நீ தனியா இருக்க வேண்டி வரும்"
"ஸோ வாட் இருப்பேனே ஏமாற்றம் தரக்கூடிய உறவுகள விட நம்பிக்கையான தனிமை சிறந்தது தானே"
அவள் சொன்னதை புரிந்து கொண்டவன் "ஆமா பட்" என்று ஏதோ சொல்ல போனவனை தடுத்து "நம்பினவங்க துரோகம் பன்னி அநாதையா நின்னு பார்த்தா புரியும் தனிமையோட வலி" என்று கூறியதும் சிவா அவ்விடத்தில் அப்படியே நின்று விட்டான் தாரணி அவளது க்ளாஸ் ரூம் சென்று விடவும் அருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்து ஏதேதோ யோசிக்க ஆரம்பித்தான்...
முதல் முறை ஷ்ருதி தன்னை விட்டு பிரிவதையும் அதன் பின்பு அவனது நிலையையும் யோசித்தவன் கண்களே கலங்க தான் செய்தது உடனே தன்னை ஒரு நிலை படுத்தி கொண்டு படிக்க சென்றான்.
__________________
ஒரு நாள் மாலையில் காலேஜ் விட்டு வரும் வழியிலே ஷ்ருதி கால் செய்து விட இரவு ஏழு முப்பது வரை தன்னை அறியாமலே பேசியபடி கிடந்தவன் திடீர் என்று எக்ஸேம் ஞாபகம் வரவும் "ஷ்ருதிமா நாளைக்கு எனக்கு எக்ஸேம் நான் படிக்கனும் வைக்கட்டுமா?"
"ஹேய் பைத்தியம் என்ன கேள்வி இது ஒகே நீ படி நாம நாளைக்கு பேசுவோம்"
"ஒகே டா"
"ஹேய் தாரணிய கேட்டதாக சொல்லுப்பா" என்றதும் "நாளைக்கு அவள மீட் பன்னா சொல்றேன் டா குட் நைட்" என்று கூறி துண்டித்தான்.
அந்த எங்ஸேமை முடித்து விட்டால் அவன் அமைரிக்கா வந்தூ ஒரு வருட பூர்த்தி தான். எனவே
எக்ஸேம் முடித்து விட்டு ஓர் ஓரமாக அமர்ந்து எக்ஸேமை பற்றி யோசித்து கொண்டு இருந்தான் சிவா
"எப்டி எக்ஸேம் ஒகேவா?" என்று கேட்டு கொண்டே அவ்விடம் வந்தாள் தாரணி மெதுவாக தலை உயர்த்தி யோசனையோடு "ஒகே தான் ஆமா உனக்கு எப்டி?" என்று அவளை விசாரித்தான்
"எனக்கு கொஞ்சம் டபுல் ஒகே தான் சிவா"
"வாவ் குட் ஒகே இன்னைக்கு ஷ்ருதி அமேரிக்கா வர்றாடா என்ன மீட் பன்ன வருவா ஸோ டின்னர் ப்லேன் மன்னிருக்கேன் நீயும் வா" என்றான் கபடமற்றவனாக
"ச்சே ச்சே அது சரிப்பட்டு வராது சிவா அவங்களே வன் இயர்க்கு அப்பறமா உன்ன மீட் பன்ன ஆசை படுறாங்க அதுல நான் எதற்கு நந்தி மாதிரி" என்று சொல்லி முடிக்கும் முன்பே "ச்சே ச்சே லூஸு என்ன இது அவ அப்டிலாம் திங்க் பன்ன மாட்டா" என்றதுமே வெடித்த சிரிப்போடு "ஹாஹா லூஸூ அவ நினைக்கலைன்னா என்ன அவள கண்வடதுமே நீயே என்ன அப்டி தான் நினைப்ப சரி விடு அப்டியே டின்னர் முடிச்சிட்டு என் ரூம் பக்கம் வா மீட் பன்லாம்" என்று விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டாள்.
அன்று ஷ்ருதி வந்து இருந்தாள் எனவே ஓர் அழகான கென்டுல் டின்னர் முடித்து விட்டு தாரணியையும் சந்தித்தனர்...
சில சந்திப்பிற்கான காரணங்கள்
அன்று புரியாது
நிச்சயம் என்றோ புரியும்
-ஸஹ்ரா நஸீர்