சலீமை வரவேற்கும் விதமாய் ஆடல் ஒன்று நாதிராவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ...
சிலைக்கு உயிர் கொடுத்தவளை பார்த்த உடனே மனதை தொலைத்தவன் அவளின் ஆடலில் மொத்தமாய் தன்னை பரிகொடுத்தான் .

முகலாய மன்னரான சலீம் தனக்கு அடிமைபெண்ணான நாதிராவின் மீது காதல் கொண்டு அவனின் மொத்தமாக அவளை மாற்ற பல முயற்சிகளை எடுத்தான் ...

முயற்சி பலனாய் அவன் காதல் கடலில் நீந்த ஆரம்பித்தனர் ...
அடிமை பெண் நாதிராவை முகலாய மன்னன் சலீமின் அனார்கலியாக மாற்றிருந்தான் தன் காதல் மனதினால் ...
காதல் கொண்ட ஜோடி புறாக்கள் தங்கள் உலகத்தில் எந்த வித தடையும் இல்லாமல் சுதந்திரமாக பறந்து காதல் செய்தார்கள் ..

நரம்பும் தசையும் கண்களுக்கு அத்தனை தெளிவாய் தெரியாது ஆனால் மனித உடலினுள் பெறும் பங்கு வகிக்கும் அதுபோல அவன் வாழ்வில் அனார்கலியின் பங்கு பெருமளவில் உணர்ந்தான்  ...

அன்பென்று வந்து விட்டால் அரசனாவது ஆண்டியாவது அனைவரும் இறைவனுக்கு சூட்டப்படும் மாலை போன்று பரிசுத்தமானவர்களே ...
காதல் மனதில் ஆனந்தமாய் திரிந்தவர்களுக்கு பெரும் தடையாக வந்தார் ஜஹாங்கீரின் தந்தை அக்பர் ..

நாதிராவை சிறை வைக்கிறார் அக்பர் ..

அந்த காலத்தில் எல்லாம் நடனம் ஆடுபவர்களை தாழ்ந்த இனம் என்று கருதுபவர்கள் தான் அதிகம்...மாதவி கற்பிற்கு சிறந்த உதாரணம் என்றாலும் ஆடல் நாயகி என்பதால் சிலப்பதிகாரத்தில் அவளுக்கு கிடைத்தது அவமதிப்பு தான்....

அதுபோல நாதிரா  கற்பில் சிறந்தவள் என்றாலும் நாட்டில் உள்ள அனைவராலும் விலைமகள் என்றே அழைக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவள்...
அதனால் அவர்களை பிரித்தே ஆக வேண்டும் என்று குறியாய் இருந்தார் அக்பர் ...

காதல் வந்தால் எறும்பும் யானையாகும் பூனையும் படையெடுக்கும் என்பது பொய்யாக்காமல் தன் காதலை எதிர்த்த தந்தையையே எதிர்க்க துணிந்தான் சலீம் ...
தன்னிடமிருந்த படைகளை திரட்டினான் அவர்களுக்கு எதிராக போர் புரிய முடிவு செய்தான் சலீம் ஜஹாங்கீர் ..
படை வீரங்களில் முகலாய அரசர்கள் சிறந்தவர்களிலும் சிறந்தவர்கள். கலையை கற்றுக்கொடுத்த ஆசானிடமே மாணவன் தன் திறமையை காட்ட எண்ணினால் விளைவு ஆசானிற்கே சாதகமாகும் என்பதை உணர்த்தியது சலீமின் நிகழ்வு ...

சலீமின் அனார்கலி Kde žijí příběhy. Začni objevovat