மனதை மயக்கும் மாலைப் பொழுது!!
தமையனின் தலை தடவும் தாயைப் போல
தென்னை மரத்தை வருடும் தென்றல்!
நிலாப் பெண்ணிடம் சண்டையிட்டு
ஆதவன் மலையின் பின்னே ஒளிந்து கொள்ள
காதலன் கோபத்தால் நீலவானிலே
நிதமும் தேய்கிறாள் நிலாமகள்..!!!!மனதை மயக்கும் மாலைப் பொழுது!!
திங்களும் நிலவும் ஊடல் முடித்து
கூடல் கொள்ளும் வேளையில்...
சாட்சியான வானமோ செந்தூரமாய் சிவக்கிறது!!
வானக் கடலில் விண்மீன் முத்துக்களிடையே
வைரமாய் ஜொலிக்கிறாள் நிலாராணிமனதை மயக்கும் மாலைப் பொழுது!!
ஊசியாய் உடலில் இறங்கும் பனிக்காற்று
கருநீல வானம் கார்மேக போர்வை
போர்த்தி உறங்கும் நிசப்தம் ஏகாந்தம்!!
மண்ணை நோக்கி மழைத்துளி வருமுன்
குளிர் காற்றோடு கலக்கிறது மண்வாசம்!!
பனியில் நனைந்து ஏகாந்தமாய் வாசம் நுகர்ந்து!! அடடா
மனதை மயக்கும் மாலைப் பொழுது!!கல்யாண வீட்டின் மேளச்சத்தமும் விளக்குகளும் போல
இடியும் மின்னலுமாய் நீல வானம் நிறைந்திருக்க
சுகமாய் வீசும் தென்றலும் சுழன்று ஆட
வானமெனும் மணமகன் மழை கொண்டு
வாரி அணைத்தான் மண்மகள் எனும் மணமகளை!!
தம்பதியின் கூடலுக்கு அழகான சாட்சியாய்
மண்மகள் சுமந்தாள் இயற்கையெனும் குழந்தையை
மனம் மயக்கும் மாலைப் பொழுது!!!!