பொறந்த நாள் மொதலா வொரு சொகமும் கண்டதில்ல- உசுரே
வொரு சொகமு கண்டதில்ல......நோவு வந்து படுக்க கூட நாளு கிழம
பாக்க வேணும்- நீ
நாளு கிழம பாக்க வேணும்.....கால் வவுறு கஞ்சி குடிக்க கால் வலிக்க
நீ நடந்த- கண்ணே
கால் வலிக்க நீ நடந்த.....கண்ணு மூடாம நீ காத்திருக்க விடியலுந்தா வந்தபாடில்ல- வெளக்கே
விடியலுந்தா வந்தபாடில்ல.....எங்க வவுத்துக்கா நீ அழுத அழுக எல்லாம் ஆறா மாறிருச்சோ- வத்தாத
ஆறா மாறிருச்சோ......அசந்து நீ வொறங்கி அம்பது வருசமாச்சு- அம்மா
அம்பது வருசமாச்சி......எங்களுக்கா.....
நீ பாடுன தாலாட்டு பாத மாறிப் போகாது....
நீ அழுத அழுக அர்த்தமில்லாம போகாது....
நீ பட்ட வலியெல்லா வீணாகிப் போகாது....
உங்கஷ்டத்துக்கு காலத்துக்கும்
விடியலாய் நாங்க வருவோம்- உங்கூட
விடியலா நாங்க வருவோம்.....!!!!