என்ன வாழ்க்கை இது?...
வெறுப்பு வந்தது.....
மனித மனங்களின் மீதும்....!
குணங்களின் மீதும்....!
இனத்தின் மீதும்.....!இயற்கையிடம் தஞ்சம் கேட்கலாம்...!
காற்றிடம் சென்று கேட்டேன்..
தென்றலாய் என்னை தாலாட்டுவாயா?
நான் புயலாய் மாறி அடிப்பேன்
என்றது காற்று...!!!
வேண்டாம் வேண்டாம்....!!!!!!!கடலிடம் சென்று வேண்டினேன்...
அலையாய் என்னை அள்ளிக் கொள்வாயா??
ஆழிப்பேரலையாய் அதகளம் செய்வேன் என்றது கடல்....!!!
இல்லை இல்லை...!!!!!ஒளியிடம் சென்று வினவினேன்...
விளக்காய் என்னை வழிநடத்துவாயா?
நெருப்பாய் தகிக்கவும் செய்வேன் என்றது ஒளி....!!!
கஷ்டம் கஷ்டம்..!!!!!நிலத்திடம் சென்று மண்டியிட்டேன்...
மடியில் என்னை ஏந்திக் கொள்வாயா?
நடுங்கி உன்னை நசுக்கி விடுவேன் என்றது நிலம்...!!!
வேண்டவே வேண்டாம்..!!!!!!!!இயற்கையிலையே இயற்கையாய்
இருக்கும் இயற்கைக்கே இத்தனை
முகமென்றால்....!!
இயற்கை படைத்த மனிதனுக்கு
பல முகம் இருப்பதில் வியப்பில்லை.!!!!நான் இயற்கையை படைத்த இறைவனிடமே செல்கிறேன்....
இறைவா என்னை இரட்சிப்பாயா???
"எல்லாம் விதிப்படி மகளே" என்றார் இறைவர்..!!!!!!!!எட்டிப் போட்டேன் நடையை என்
வீட்டை நோக்கி...!!!!!!!!!