உன்னை பார்க்கவென்று தோன்றியவுடன்
மற்றதெல்லாம் மறக்க...
உன்னைத் தேடி ஓடி வந்த
என் கால்கள்
உன்னை பார்த்ததும் நிற்க...
அதுவரை மனதில் எண்ணமிட்டவை
எல்லாம்
உன் கண்களை பார்த்ததும் பறக்க...
என்செய்வதென அறியாமல்- உன் முன்னே
உன் முகம் பார்த்து நான் நின்ற தருணம்
என் வாழ்வில் நான் புதிதாய் பிறந்த நிமிடம்......