கண்ணீர் - அத்தியாயம் 27

29 0 0
                                    

"அம்மா..." எனக் கூச்சலிட்டுக் கொண்டு வந்த மகனைத் தூக்கி ஆரத் தழுவி முத்தமிட்டாள் அனுபல்லவி.

அனுபல்லவி, "பிரஜு கண்ணா வந்துட்டீங்களா?" எனக் கேட்டாள் பாசமாக.

அவள் கழுத்தில் மாலையாக கரங்களைக் கோர்த்த பிரஜன், "ஆமா அம்மா... பிரஜுக்கு இங்க பிடிக்கவே இல்ல... நம்ம வீட்டுல இருக்கும் போது நீங்க பிரஜு கூடவே இருப்பீங்க... ஆனா இங்க வந்ததுல இருந்து என்னை கேர் டேக்கர் கிட்ட விடுறீங்க... ஐ மிஸ் யூ மா..." என்றான் மழலைக் குரலில் தேம்பியபடி.

பிரஜன் அவ்வாறு கூறவும் பிரணவ் தன் கடந்த காலம் பற்றி தன்னிடம் கூறியது தான் அவளுக்கு நினைவு வந்து கண்கள் கலங்கின.

"இனிமே அம்மா உன்ன கேர் டேக்கர் கிட்ட விட மாட்டேன்... ஓக்கேயா? நாம இப்போ பெங்களூர் போய்ட்டு அங்க இருந்து சிங்கப்பூர் போயிடுவோம்... திரும்ப இங்க வர மாட்டோம்..." என்றாள் அனுபல்லவி புன்னகையுடன்.

"ஹை... ஜாலி ஜாலி... வீட்டுக்கு போக போறோம்... ஆனா..." என அனுபல்லவியிடம் இருந்து இறங்கி துள்ளிக் குதித்த பிரஜனின் முகம் மறு நொடியே வாடி ஏதோ கூற வர, அதற்குள் பிரதாப் அங்கே வரவும் அவனைக் கண்டு கோபத்தில் முகத்தைத் திருப்பினான் பிரஜன்.

அவனின் கோபத்தைக் கண்டு பிரதாப்பிற்கு தாங்க மாட்டாமல் சிரிப்பு வந்தது.

எங்கு சிரித்தால் தன் செல்லக் குழந்தையின் கோபம் அதிகரித்து விடுமோ என்று சோகமாக இருப்பது போல் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டான் பிரதாப்.

அதனைக் கண்டு உதட்டைச் சுழித்த பிரஜன், "அம்மா... நாம மட்டும் தனியா சிங்கப்பூர் போலாம்... வேற யார் கூடவும் நான் பேச மாட்டேன்..." என மழலை மொழியில் தன் கோபத்தை வெளிப்படுத்திய பிரஜன் பிரதாப்பை முறைத்துக் கொண்டே அங்கிருந்து ஓடி விட்டான்.

இருவரையும் புரியாமல் நோக்கிய அனுபல்லவி, "என்னாச்சு? எதுக்கு பிரஜன் உங்க கூட கோவமா இருக்கான்?" எனக் கேட்டாள்.

"அ..அது... ஒன்னும் இல்ல அனு... சும்மா தான்... அவன் கேட்ட டாய் ஒன்ன வாங்கி கொடுக்கல... அதான் கோவமா இருக்கான்... நான் அவன சமாதானப்படுத்துறேன்..‌." என்றான் பிரதாப் சமாளிப்பாக.

இருளில் கண்ணீரும் எதற்கு? (முடிவுற்றது)Where stories live. Discover now