கண்ணீர் - அத்தியாயம் 24

26 0 0
                                    

மறுநாள் விடிந்ததுமே பிரணவ் மற்றும் ஆகாஷ் தங்கியிருந்த அறைக் கதவைத் தட்டினாள் அர்ச்சனா.

ஆகாஷ் சலிப்புடன் சென்று கதவைத் திறக்கவும் அவனைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்த அர்ச்சனா அப்போது தான் குளித்து உடை மாற்றி விட்டு வந்த பிரணவ்விடம், "அதான் அந்தப் ப்ராஜெக்ட் யாருக்கு கொடுக்குறாங்கன்னு மீட்டிங் வெச்சி டிசைட் பண்ணுறதா சொல்லிட்டாங்களே... இன்னும் ஏன் நாம இங்கயே இருக்கோம்? கிளம்பலாம் தானே..." என்றாள்.

எங்கு இங்கு இருந்தால் மீண்டும் பிரணவ் அனுபல்லவியை சந்திக்க நேரிட்டு அதனால் பிரணவ்வின் பழைய நினைவுகள் வந்து விடுமோ என்ற பயம் அவளுக்கு.

"யாரும் உன்ன எங்க கூட வான்னு கட்டாயப்படுத்தல... நீயா தான் வந்த... போறதுன்னாலும் தாராளமா போ... ஐ டோன்ட் கேர்..." என்றான் பிரணவ் அழுத்தமாக.

ஆகாஷின் முன் பிரணவ் தன்னை அவமானப்படுத்தியதில் முகம் சிறுத்த அர்ச்சனா அதனை வெளிக்காட்டாது மறைத்தாள்.

பின் போலிப் புன்னகையை முகத்தில் ஏந்தி, "அ...அது இல்ல பிரணவ்... அவங்க எப்படி பேசினாங்கன்னு பார்த்தேல்ல... பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் அளவுக்கு இல்லன்னாலும் நம்ம கம்பனியும் டாப் ஃபைவ்ல தான் இருக்கு... ஆனா அவங்க நம்மள மதிக்காம எப்படி திமிரா பேசினாங்க? நாம எதுக்கு அவங்க கிட்ட அடி பணிஞ்சி போகணும்?" எனக் கேட்டாள் அர்ச்சனா.

"அவ அவனுக்கு அவனவன் கவலை..." என நக்கலாக முணுமுணுத்தான் ஆகாஷ்.

ஆகாஷைத் திரும்பி அர்ச்சனா முறைத்து வைக்க, "இங்க யாரும் திமிரா நடந்துக்கவும் இல்ல... அடி பணிஞ்சி போகவும் இல்ல... இதுக்கு தான் பிஸ்னஸ் மைன்ட் வேணும்ங்குறது... உன்ன எல்லாம் எப்படி தான் வேலைக்கு சேர்த்தேனோ? இதுல காதல் வேறயாம்..." என்றான் பிரணவ் கடுப்பாக.

அர்ச்சனா இடைமறித்து ஏதோ கூற வர, "இங்க பாரு அர்ச்சனா... இந்த ப்ராஜெக்ட் எங்க கம்பனிக்கு ரொம்ப முக்கியமானது... அதுக்காக நான் எந்த எல்லைக்கும் இறங்கி போவேன்... உனக்கு இங்க இருக்க பிடிக்கலனா தயவு செஞ்சி போயிடு... நான் நிம்மதியா இருப்பேன்... ஆகாஷ்... உடனே இவளுக்கு பெங்களூர் கிளம்ப டிக்கெட் புக் பண்ணு..." என உத்தரவிட்டான் பிரணவ்.

இருளில் கண்ணீரும் எதற்கு? (முடிவுற்றது)Where stories live. Discover now