தீனா தனக்கு மரணம் என்று கூட பயம் கொள்ளவில்லை ஆயுள் முழுதும் கண் கலங்காமல் பார்த்துக்கொள்வேன் என்று வாக்களித்து விட்டு இப்பொழுது தனது காதலை மரண படியில் நிற்க வைத்ததை எண்ணி தான் வெகுவாக கலங்கி போனது.
"தீனா அழுகாத... நம்ம இப்போ ஒன்னா தான இருக்கோம் அப்பறம் ஏன் அழுகற" என்று தீப்தி ஆறுதலாக கூறினாலும் அவள் கண்களும் அழுதுக் கொண்டு தான் இருந்தது.
"இல்ல தீப்தி நீ எவ்வளவு செல்லமா வளர்ந்தவ... சாப்பிட்ற தட்டை கூட உன்னை யாரும் தொட விட்டதில்லை... சின்ன கொசு கடிய கூட உங்க வீட்ல இருக்கவங்க உன்னை அனுபவிக்க விட்றுக்க மாட்டாங்க ஆனா நா உன்னை இப்படி உடம்பு செதறி சாகற இடத்துக்கு கூட்டிட்டு வந்து நிக்கிறனே அத நினைச்சா தான் மனசு ரொம்ப வலிக்குது" என்று தீனா தன் மனதை அழுத்தி பிசைந்துக் கொண்டிருந்த விஷயத்தை அதற்குறியவளிடமே கூறி விட்டான்.
"ஏன் தீனா இப்படி எல்லாம் யோசிக்கிற ... என் மனசையே உன் கிட்ட கொடுத்துட்டன் .... அந்த மனசும் நீ என்ன சொன்னாலும் கேட்கும் .... அப்பறம் உடம்பு மட்டும் எப்படி செதறி போனா என்ன .... இப்பவும் சரி உடம்பு செதறி செத்த பின்னாடியும் சரி உன் கூடவே தான் இருப்பன்" என்று தீப்தி கூற தீனா தீப்தியின் ஆழ்காதலில் நெகிழ்ந்து போனான்.
இருவரும் கடைசியாக ஒருவரை ஒருவர் முழுதாக கண்களால் நிறப்பிக் கொண்டனர். கோர்த்த கையை இறுக்கி பிடித்துக் கொண்டு இருவரும் ஒரே நேரத்தில் பள்ளதாக்கில் குதித்தனர்.
மரம் செடி கற்கள் என்று அனைத்திலும் இருவரும் உருண்டு உடல் முழுக்க சீராய்ப்புகளுடன் பூவி ஈர்ப்பு விசையினால் கீழே அமைந்திருந்த காட்டின் தரையை நோக்கி இழுக்கப்பட்டனர். இவ்வளவு தடங்களுக்கும் இடையில் தீனாவும் தீப்தியும் கோர்த்த கைகளை விடவில்லை. பாதி பள்ளத்திலே இருவரும் மயங்கி போயினர்.
----------------------------------------------------------
மாநகரின் மத்தியில் அமைந்திருந்த அடுக்குமாடி குடியிருப்பில் பத்தாவது தளத்தில் அமைந்திருந்த அவ்வீட்டின் முன்னால் காவல் ஆய்வாளர்களும் மருத்துவ நிபுணர்களும் அதோடு தடயவியல் நிபுணர்கள் கையுறைகளோடு அந்த வீட்டில் வளம் வந்துக் கொண்டிருந்தனர்.
VOCÊ ESTÁ LENDO
சூசைட் (Sucide)
Terrorதற்கொலைகள் பல விதம் அதில் ஒரு பகுதியையே இக்கதையின் கருவாக கற்பனையாக யூகித்து எழுதுகிரேன் ..... முதல் முதல்ல திகில்ல ட்ரை பன்னி இருக்கன் படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க ப்பா....
சூசைட் - 1
Começar do início