மும்பை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது செய்தி சேகரிக்க வந்த முன்னணி பத்திரிகையின் செய்தியாளர் டி-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்திருந்ததற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். மும்பையில் கடந்த வாரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை மும்பை உயர் நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர், நீதிபதி ஜி.எஸ்.குல்கர்னி அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது, நீதிமன்றத்துக்கு செய்தி சேகரிக்க வந்திருந்த முன்னணி தேசிய பத்திரிகையின் செய்தியாளர் ஒருவர் டி-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்திருந்தார். இதனைக் கண்ட தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர், "நீதிமன்றத்தின் மாண்பை மதித்து நடக்க வேண்டும். இது என்ன மும்பை கலாச்சாரமா? நீதிமன்றத்துக்கு டி-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்து வ
1 part