அன்றைய பொழுது அங்ஙனமே கடக்கும் தருவாயில் ..
ஆதியிடம் பேசி விட்டு இரவு உணவை முடித்து விட்டு தன் அறைக்குள் வந்த கவிக்கு தீடீரென்று ஆதியின் ஞாபகங்கள் ஒவ்வொன்றாக கண் முன்னே வர...
கண்ணீர் தன் வேலையை காட்டவும் அவசர அவசரமாக ஆதியை அழைத்தாள்...
ஆனால் போன் தன் ரிங்டோனை வெளியிட்டதே தவிர ஆதி எடுக்கவில்லை..
ஏதோ ஒரு வேகத்தில் கவி அச்சுவின் அறைக்குள் செல்ல...
அங்கே கவியை எதிர்பார்க்காத அச்சுவோ அதிர்ச்சியாகி நின்றாள்...
அவளின் கோலமும் அவளுடைய அழுது புலம்பிய முகமும் கண்டவள் அதற்கான காரணம் கேட்க...
தன் அண்ணை காண வேண்டி தான் என்று புரிந்து கொண்டாள்..
சட்டென்று கவியை அவள் அறைக்கு போக சொல்லியவள் நேராக சமையலறைக்கு சென்று சுமித்ரா விடம் தன்னுடைய ஒரு புத்தகம் தன் வீட்டில் இருக்கிறது என்றும் அதை எடுத்து வர கவியை அனுப்புமாறுஎன்ற வாயில் வந்த பொய்யை அவிழ்த்து விட...
அவரும் சரி என்று ஒப்பு கொள்ள...
இதை கவியிடம் சொல்லி ரெடியாக சொன்னாள்...கவியும் சந்தோஷமாக ரெடியாக...
அடுத்தகட்ட நடவடிக்கையாக நிஷாந்த்திடம் போய் கேட்க..."சரி"என்று பதில் கூறும் முன் கவி ரெடியாகி வரவும்...
அவனுடைய மிலிட்டரி மூளை ஏதோதோ யோசிக்க தொடங்கியிருந்தது...
பைக்கை ஸ்டார்ட் செய்து வெளியே வரவும்... ஏதேச்சையாக வெளியே வந்த ஷாரிகா அதை காண...
ஓடி வந்து கேட்கும் முன் பைக் கேட்டை தாண்டி விட்டது...
"பெரியம்மா... இந்த நேரத்தில அண்ணாவும் கவியும் எங்க போறாங்க.."என்று ஷாரிகா கேட்க..
"அதுவா... அச்சுவுக்கு நாளைக்கு நடக்க போற ஒரு எக்ஸாமோட புக் அவ வீட்டில இருக்காம்...அதை எடுக்க போறாங்க..."
சட்டென்று திக்கென்றானவள்"அதுக்கு ஏன் கவி போறா... அச்சு போக வேண்டியது தானே..."
STAI LEGGENDO
💘💘💘என்னவனே....நீ எங்கு இருக்கிறாயாடா...!!!💘💘💘💕💓💕
Storie d'amore❤️❤️❤️இது என்னோட இரண்டாவது கதை...❤️ ❤️ முதல் கதைக்கு தந்த ஆதரவை போல இந்த கதைக்கும் நீங்க தரணும்னு ஆசைபடுறேன்.... ❤️ 💘💘💘அப்புறம்.. இந்த கதை கறுப்பாக இருக்கும் முரட்டு நாயகனுக்கும்.... ஜாலியாக இருக்கும் நாயகிக்கும் இடையேயான காதல்.....கதை.....💘💘�...
என்னவன் பகுதி -58
Comincia dall'inizio