இராமன் தேடிய கண்கள்

By Gayathrisivak

22.3K 1K 102

காத்திருக்க கற்றுக்கொள்...நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்க... More

தேடல்-1
தேடல்-2
தேடல்-3
தேடல்-4
தேடல்-5
தேடல்-6
தேடல்-7
தேடல் -8
தேடல்-9
தேடல்-10
தேடல்-11
தேடல்-12
தேடல் -13
தேடல்-14
தேடல்-15
தேடல்-16
தேடல்-17
தேடல்-18
தேடல்-19
தேடல் -20
தேடல் -21
தேடல் -22
தேடல் -23
தேடல் -24
தேடல்-25
தேடல் -26
தேடல் -27
தேடல் -28
தேடல் -29
தேடல் -30
தேடல் -31
தேடல்-32
தேடல் -33
தேடல்-34
தேடல்-35
தேடல் -36
தேடல்-37
தேடல்-38
தேடல்-39
தேடல்-40
தேடல் -41
தேடல் -42
தேடல் -43
தேடல் - 44
தேடல்-45
தேடல்-46
தேடல்-47
தேடல்-48
தேடல்-49
தேடல்-50
தேடல்-51
தேடல்-52
தேடல் -53
தேடல்-54
தேடல்-55
தேடல்-56
தேடல் -57
தேடல்-58
தேடல்-59
தேடல்-60
தேடல்-62
தேடல்-63
தேடல்-64
தேடல்-65
தேடல்-66
தேடல்-67
தேடல்-68

தேடல்-61

290 14 3
By Gayathrisivak

சத்தம் கேட்டு கண்விழித்தவள் தன்னருகில் ராமன் இல்லாததை உணர்ந்தாள்.ஷோபாவில் அமர்ந்திருந்த கிரணிடம்,"கிரண் !! நீங்க எங்போ வந்தீங்க!!?அவரு எங்க!?"

கிரண் வந்த சிரிப்பை கட்டுபடுத்தியபடி,"நான் இப்போதான் வந்தேன்.அண்ண நான் வந்ததும் கிளம்பி போயிட்டாரு..... "அண்ணி"...".என்று கூற சட்டென நிமிர்ந்தாள் அமிர்தா.

அம்ரூ,"இப்போ என்ன சொன்னீங்க!!?"

கிரண்,"அண்ண கிளம்பி போயிட்டாருன்னு சொன்னேன்!!"

அம்ரூ ,"அப்புறம் ஏதோ சொன்னீங்களே!!"

கிரண்,"அப்புறம் ...ஒன்னும் சொல்லலியே!!"

அம்ரூ தான் தூக்க கலக்கத்தில் இருப்பதாய் எண்ணி பாத்ரூம்மிற்கு செல்ல !!,வெளியே வந்து தண்ணீர் அருந்தியவளிடம் "சாப்பிடறீங்களா... அண்ணி!! நர்ஸ் நீங்க எழுந்ததும் கூப்பிட சொன்னாங்களே!!"என்றான்.

திடுக்கிட்டு திரும்பியவளுக்கு புரையேறி போக அருகில் சென்று தலையை தட்டியவன்,"பார்த்து அண்ணி !!மெல்ல மெல்ல !!எனவும் குழம்பினாள் அம்ரூ.

தன்னிலை வந்தவள்,"கிரண்!!என்னைய என்னனு கூப்பிடுறீங்க!!"

கிரண்,"அண்ணி னு தான்!!" என்று சாதரணமாக தோள்களை குலுக்கினான்.

அதிர்ந்த அம்ரூ,"ஏன் கிரண்!? என்ன இது தீடீருன்னு ...! புதுசா!!?"

கிரண்,"அதாவது அண்ணி!!அதான முறை!!நான் தான் ஞாபகம் இல்லாம பெயர் சொல்லி கூப்பிட்டனா!!நீங்களாது சொல்லியிருக்க வேணாமா!!?" என்றான் புன்னகை பூக்க

அம்ரூ,"கிரண் !!சும்மா விளையாடாதீங்க !!என்னைய எப்படி கூப்பிட்டீங்களோ .....அப்படியே கூப்பிடுங்க ....இப்படி புதுசாலாம் வேணாமே...ப்ளீஸ்!!"

கிரண்,"அதெல்லாம் சரி வராது ...,அண்ணி!!அப்புறம் ராம் எப்படி நீ பெயர் சொல்லி கூப்பிடலானு கேட்டாலும் கேட்பான் !!ராம் சொல்லுறதுக்கு முன்னாடியே நான் கூப்பிடறது தான் சரி !!அதனால இனிமே "அண்ணி"..தான்!!"

அம்ரூ,"அச்சோ கிரண்!!விடுங்க ப்ளீஸ்!!நீங்க நர்ஸையே கூப்பிடுங்க!!"என்றாள் காதை பொத்தியபடி.

உள்ளூர சிரித்து கொண்டவன் நர்ஸ் நுழையவும் அடக்கி கொண்டான்.

அம்ரூ,"எனக்கு சாப்பிடற மாறி இல்ல !!குடிக்கற மாறி ஜுஸ்.. ஓட்ஸ்.. மாறி தருகிறீங்களா!!?"

மீரா,"மேடம்..! நாளைக்கெல்லாம் சுத்தமா எதுமே சாப்பிட கூடாது !!லைட்டா இட்லியாது சாப்பிடறீங்களா..!?"

அம்ரூ,"இல்லங்க ..!எனக்கு பசிக்கவே இல்ல !!வாமிட் வரமாறி இருக்கு!!,மதியம் வேணா சாப்பிடறேன் !!இப்போதைக்கு ஜுஸ் கொடுங்க போதும்!!?"

மீரா,"சரி!!நான் டிரிப்ஸீம் இன்ஜெக்ஷனும் போடுறேன்!!ஜுஸ் சாப்பிட்டு இந்த டெப்லெட்ஸ் எலாம் போடலாம்"என்றபடி பணிகளை தொடங்க அருகே வந்த கிரண் நெற்றியில் கை வைத்தபடி,"ஃபிரவர் லாம் இல்லையே !!வேற எதாவது பண்ணுதா!!?"என்று வினவ ஆச்சரியமாக பார்த்தார் மீரா.

அம்ரூ,"இல்ல கிரண்!!டையர்டா.. இருக்கு !!சாப்பிட்டா ... வாமிட் வரும் போல இருக்கு!!?"

கிரண்,"ராம் கிட்ட சொன்னீங்களா!!?"

அம்ரூ,"இல்ல!!இப்போதான் இப்படி இருக்கு!!நைட்லாம் நல்லாதான் பேசிட்டு இருந்தேன்"

கிரண் திரும்பி,"மீரா...!!பிரகர் வந்துட்டாரா!!?"

மீரா,"தெரியல சார்!!நான் பார்த்தவரையும் வரலை!!நான் டிரிப்ஸ் போட்டேன் !!பயப்பட வேணாம் சார்!!நான் போயி பாத்துட்டு,ஜூஸ் கொண்டு வரேன்!!" என்று செல்ல கிரண் ,"நான் ராமுக்கு போன் பண்ணவா அண்ணி!!"என்றான்.

அம்ரூ,"கிரண்...!ஏன் இப்படி ஓட்டறீங்க...!!விடுங்க தயவுசெஞ்சு!!,அவரு பொறுமையவே வரட்டும் ...ரொம்ப முடியலன சொல்லுறேன்!!"

கிரண்,"சரி நீங்க படுத்துகோங்க!!!" என்றவன் சற்று நகர

"அண்ணி...!! நான் வந்துட்டேன்..!!" எனவும் முறைத்தபடி கிரணை பார்த்தவளிடம் கிரண் சைகையால் நான் இல்லை அங்கே.... என கையை நீட்ட குரல் வந்த திசையில் நின்றிருந்தாள் தீபி.

ஆச்சரியமடைந்த அம்ரூ,"தீபி நீயா!!?" என்றபடி எழுந்து அமர

அருகே வந்த தீபி,"அண்ணி!!எப்படி இருக்கீங்க!!?

அம்ரூ,"நான் நல்லாருக்கேன்!
சரி ...நீ எப்படி வந்த..?".

தீபி,"நான் மட்டும் வரலை அண்ணி!!அம்மாவும் வந்துருக்காங்க!!"என்றபடி வாயிலை சென்று எட்டி பார்த்தாள்.

மீரா ஜீஸுடன் உள்ளே நுழைந்தார்.

மீரா ,"மேடம் இதை குடிங்க ,நான் மாத்திரையெல்லாம் எடுக்குறேன்!!"

அம்ரூ,"சரி அவங்க வரட்டும் இங்க வா !! உட்காரு!!எப்படி போகுது காலேஜ்லாம்!!"

தீபி ,"அது போகுது அண்ணி !!இப்போதான் எக்ஸாம் முடிஞ்சுது !! அது இருக்கட்டும், நீங்க சரியாகி சீக்கிரம் வீட்டுக்கு வாங்க!!உங்ககிட்ட நிறைய பேச வேண்டி இருக்கு!!"

கிரண்,"ஏய் வாயாடி!!அவங்களுக்கு உடம்பு சரியில்லாத அப்பவும் விட மாட்டியா!!"

தீபி,"அண்ணா!!உங்க கிட்ட பேசலை அண்ணி கிட்ட தான் ! பேசிட்டு இருக்கேன்!! "

அம்ரூ,"ஏன் !!என்னாச்சு உங்க இரண்டு பேருக்குல எதாவது சண்டையா என்ன!?"

தீபி,"அண்ணி!! அண்ணா கிட்ட நீங்களும் பேசாதீங்க!!?"

கிரண்,"ஆமாம்,இவ சொன்னா அப்படியே எல்லாரும் கேட்டுடனும்!!போடி...! போயி வேற வேலை இருந்தா பாரு!!"

தீபி,"நான் அதை ராம் அண்ணா கிட்ட பேசிக்குறேன்!!அதோட அண்ணி நான் சொன்னா !!கேட்பாங்க !!? இல்ல அண்ணி!!!?" என்று அம்ரூவை பார்த்தாள்.

இவர்கள் இருவர் சண்டைக்கிடையில் மாத்திரைகளை எண்ணி ..எண்ணி ..போட்டு கொண்டிருந்தவள் ஒன்றும் புரியாமல் ஆமாம்..!! என தலையாட்ட
தீபி சந்தோஷத்தில் கிரணுக்கு நக்கல் செய்தாள்!!

கிரண் திரும்பி,"அண்ணி !! அவ சொன்னா கேட்பீங்களா!!? நான் சொன்னா கேட்பீங்களா!!?"

அதிர்ந்து போயினர் தீபியும் மீராவும் திருதிருவென விழித்த அம்ரூ,"உங்க இரண்டு பேருக்கு இடையில இருக்க சண்டையில, என்னைய ஏன் வம்பு பண்ணறீங்க!?"

தீபி,"நான் தான உங்களை முதல அண்ணி கூப்பிட்டேன் !!அதனால நீங்க எனக்கு தான் சப்போர்ட் பண்ணும் "என அருகே சென்று கையை பிடித்து கொண்டாள்.

கிரண்,"அதெல்லாம் முடியாது!!அண்ணிய நான்தான் கூட்டிட்டே வந்தேன் !!அதனால எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க!!!"என்று அந்த கையை பிடித்து கொள்ள

அமிர்தா....!! இங்கதான் இருக்கியா!!?
என்ற குரலை கேட்டு திரும்பியவள் அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

****†**************************†******
கிரண்,"ராம் ...!எங்க தான் இருக்க !!?ஏன் இவ்வளவு நேரம் ஆகுது!"என்று மொபைலில் அலறி கொண்டிருந்தான்.

ராம்,"இங்க! கிட்ட வந்துட்டேன்.மறுபடி டிரபிக்ல தான் மாட்டிக்கிட்டேன் கிரண்.உள்ள வந்துட்டேன் ஐந்து நிமிஷத்துல அங்க இருப்பேன் !!"

பரபரப்பாக வாயிலில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த கிரண் ராமனை பார்த்ததும் பெருமூச்சு விட்டபடி ,"ஏன் இவ்வளவு நேரம் இங்க வரதுக்கு !!?"

ராம்,"சொன்னேல டிரபிக் !!சரி வா !!என் ரூம்ல போயி பேசிக்கலாம்!!"

பின்னயே வந்த ரித்திக் மீட்ங் இருப்பதாக கூற கொஞ்சம் தள்ளி வைக்க சொல்லிய ராமன் கிரணிடம்,"இப்போ சொல்லு தெளிவா !!? என்ன நடந்துச்சின்னு!?"

கிரண்,"காலையில நீ போன அப்புறம் தீபி வந்திருந்தா!!நாங்க பேசிட்டு இருக்க அப்போ ஒரு பொண்ணு உள்ள வந்தா.. யாருன்னு தெரியாமா நாங்க பார்த்தோம், ஆனா அவங்க அமிர்தாக்கு தெரிஞ்சவங்க போல பின்னாடியே நாலு பேரு உள்ள வந்தாங்க !!அப்புறம் தான் தெரிஞ்சுது அவங்க எல்லாம் அமிர்தா வோட பேமிலினு!, அமிர்தாக்கே ஒன்னும் புரியல ,பயங்கரமா அதிர்ச்சி ஆகிட்டாங்க..!! எங்களுக்கும் என்ன பண்ணறதுனே தெரியல !!"

ராம்,"அச்சோ கடவுளே!!அவ எதும் தெரியவேணாம் சொன்னாளே!!அவங்களுக்கு எப்படி தெரிஞ்சுதாம் !!?எப்படி இங்க வந்தாங்களாம்!?"

கிரண்,"அவங்க நேத்தியே டெல்லி வந்துட்டாங்களாம் ராம்!அமிர்தாவோட பிரண்டு தான் கூட்டிட்டு வந்துருக்காங்க!!,அம்ரூ ஒழுங்கா வீட்டுக்கு பேசறது இல்லை போல..!!பேசன அப்போவும் ஏதோமாதிரி பேசிருக்காங்க...,ஒரு நாள் அழுத்துட்டு!! உங்களை யெல்லாம் பாக்கனும் போல இருக்குன்னு வேற சொல்லிருக்காங்க!! அவங்க பிரண்டு,டெல்லி போனவ தகவல் இல்லையேனு விசாரிக்க வீட்டுக்கு வந்தப்போ அமிர்தாவோட அம்மா இதையெல்லாம் சொல்லி புலம்பியிருக்காங்க... !!,அவங்க பிரண்டுக்கு முன்னாடியே விஷயம் தெரியும் போல,பயத்துல எல்லாத்தையும் உளறிட்டாங்க !! உடனே அவங்க அப்பா, இவங்க செக்கப் போன டாக்டரை தேடி போயி.., டெல்லி டாக்டர் பத்தி விசாரிச்சுட்டு, நேத்தியே ....!!அங்க போயிருக்காங்க ,அவருதான் இங்க இருக்காங்கன்னு சொல்லி அனுப்பியிருக்காரு!!வரும்போது அவங்க அப்பா முகத்தை பார்க்கானுமே !!உள்ள வந்து பார்த்ததுமே 'பளார்ன்னு...' அம்ரூ கன்னத்திலே அறைச்சுட்டாரு!! என்ன பண்ணறதுனே புரியலை, அந்த நேரம்!! நல்லவேளையா அம்மாவும் வந்தாங்க, தீபியும் இருந்தா,தீபிதான் அம்ரூ அம்மாகிட்ட பேச்சு கொடுத்தா.., உங்கிட்ட போன் ல பேசினேனு சமாளிச்சா!!அம்மாவும் இது எங்க ஹாஸ்பிடல் தாங்க ...,. எங்களுக்கும் முதல தெரியாதுங்க !!ஏதோ பிரச்சினையா ஹாஸ்பிடல இருக்கானு விஷயம் தெரிஞ்சதும், எங்க ஹாஸ்பிடலுக்கு மாத்தி கூட்டிட்டு வந்துட்டோமுன்னு... சொல்லி சமாளிச்சாங்க!!" என்றான்.

திகைப்புற்ற ராமன் பெருமூச்சு விட்டபடி நாற்காலியில் சென்று அமர

கிரண்,"இப்போ என்ன செய்றது ராம்!?"

ராம்,"எனக்கும் புரியலை !!யோசிச்சிட்டு சொல்லுறேன் !!அவ ஆப்பரேஷன் விஷயமா நானும் பிரகர்கிட்ட வேற பேசனும் ...அதோட வேற நிறைய பிரச்சினையும் இங்க நடக்குது !!நீ மோகன் சித்தாப்பாக்கு போன் பண்ணி இங்க வர சொல்லு ,நான் பிரகர் கிட்ட பேசிட்டு என்ன செய்றதுன்னு பாக்குறேன்!!"

கிரண்,"சரி நான் அப்போ இங்கேயே இருக்கேன்!!அம்மாவும் தீபியும் பேசிட்டு இருந்தாங்க உள்ளே தான்... பார்த்துக்கோ!!"

வேகமாக உள்ளே வந்த ரித்திக் ஹிந்தியில் ,"சார்!எமர்ஜென்சி!! விஐபி ரூம்ல !!உடனே வாங்க எனவும்...!!" ராம் வேகமாக வெளியேறினான்.




Continue Reading

You'll Also Like

106K 4.8K 61
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு...
40.6K 1.9K 45
Love and love only. A refreshing read, guaranteed.
180K 14.9K 63
A GIRL, "KADAVULE INDHA VELAYACHUM ENAKKU SET AAGANUM ADHUKKU MUNNADI INDHA VELA ENAKKU KIDAIKKANU.... NEE UN KULANDHAIYA KOODAVE IRUNDHU KAAPATHIRU...